Jump to content

மரணங்களை நினைவு கூர்தல்


Recommended Posts

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]இதில் ஒருவரை உடனடியாக தெரிகின்றது. மற்றையவர்கள் யார்? [/size][/size][size=1]

[size=4]இவர்கள் மூவர் மட்டுமா நினைவுகொள்ளப்பட உள்ளார்கள்? [/size][/size]

[size=1]

[size=4]நன்றி. [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]நேற்றோ இல்லை அதற்கு முதல் நாளோ சில நல்ல கருத்துக்கள் முன்வைத்திருந்த்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]அதாவது பழையனவற்றை விட்டு புதிய பாதையில் பயணிக்கவேண்டும் என. அதேவேளை சிலரை 'வியாபாரிகள்' எனவும் முத்திரை குத்தி அவர்கள் ஒதுக்கப்படல்வேண்டும் எனவும் கூறி இருந்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]எனவே இவர்களின் நினைவுகூறல் நிகழ்வானது மேலே உங்களால் கூறப்பட்ட கருத்துகளுடன் முரண்படுகின்றதே?[/size][/size]

Link to comment
Share on other sites

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

Link to comment
Share on other sites

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

[size=4]சரி இவர்களை நினைவு கூ[/size]ரு[size=4]வதற்கும் புதிய பாதையில் பயணிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றே வைப்போம். [/size][size=1]

[size=4]இதை யார் ஒழுங்கு செய்வது? இவர்கள் வேறு என்ன ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை செய்துள்ளார்கள்? [/size]

[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

Link to comment
Share on other sites

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

[size=4]நீங்கள் எதை வைத்து 'அப்படி செய்யாதே' என எழுதியதாக புரிந்துகொண்டீர்கள்? :D[/size]

[size=4]பொதுவாக அர்யுன் அண்ணா ஒரு சில திரிகளில் 'நாம் பழைய நடைமுறைகள் மறந்து, பழைய ஏமாற்றுகாரர்கள் / வியாபாரிகளை விட்டு' புதிய சிந்தனையில் பயணிக்கவேண்டும் என புரட்சிகரமாக எழுதினார். ஆனால், இந்த திரியில் அதற்கு எதிராக செய்வது போன்று இருந்தது. அதனால் அவரின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன என அறிய சில கேள்விகளை கேட்கலாம் எனவும் அதன் மூலம் எல்லோரும் தெளிவுபடலாம் என்ற எண்ணமும் தான். [/size]

[size=1]

[size=4]மற்றும்படி மாற்றுக்கருத்துக்கள் எமது களத்தினதும் சமூகத்தினதும் பலமே ![/size][/size]

Link to comment
Share on other sites

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

இவருக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

இவர் புளோட்டில் இருந்தவர்.தனது இயக்கத்தைப் பற்றி தானே விமர்சித்து எழுதின நூல் தான் புதிய பாதை[நுணா அதை இணைத்திருந்தார்].பிறகு இவர் அதிலிருந்து விலகி தீப்பொறி அமைப்பில் இருந்தார்.கிட்டுவுக்கு குண்டு எறிந்தது தீப்பொறி அமைப்பு அதில் இவருக்கும் சம்மந்தம் இருந்ததோ தெரியாது[குண்டு எறிந்ததில்].இவர் யாரால் கொல்லப்பட்டார் என மறந்து போய் விட்டது அநேகமாக அவர‌து இயக்கத்தாலே கொல்லப்பட்டு இருக்கலாம்...எது எப்படி இருந்தாலும் நல்லதொரு எழுத்தாளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

ஈழத்தமிழர் போராட்டவழியில் தமிழருக்கு ஏதுவாக எதைச்செய்திருந்தாலும் அவர்கள் நினைவு கூரப்படவேண்டியவர்களே.

அந்தவகையில் இதை நீங்கள் இணைக்கமுன்

இதுவரை அதை நீங்கள் இங்கு செய்திருக்கின்றீர்களா என்பதை சரி பார்த்திருப்பின் இக்கேள்விகள் இங்கு எழுந்திரா. :( :( :(

Link to comment
Share on other sites

இந்த மூவரின் எழுத்துக்களும் ஈழத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஆவணங்கள். இவர்கள் என்றும் நினைவுகூரப்படுவார்கள்

Link to comment
Share on other sites

[size=5]இன்று பத்திரிகையாளர் நிமலராஜனின் மரணத்தை நினைவுகூருவோம்[/size]

[size=4]பி. பி. சி பத்திரிகையாளரின் குடும்பம், கொலை நடந்து [size=5]12 [/size]வருடமாகியும் ஸ்ரீ லங்கா காவல் துறையினரால் இன்னும் ஒருவரையும் கைது செய்யமுடியவில்லை.

மயில்வாகனம் நிமலராஜன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் [size=6]19, ஒக்டோபர், 2000 [/size]அன்று அவரது யாழ் வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார். [/size]

[size=4]மனித உரிமை ஆர்வலர்கள் இந்த படுகொலை ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நிமலராஜனின் தந்தை ஜி. மயில்வாகனம் கனடாவில் இருந்து, இன்னும் யாழில் குற்றவாளிகளின் ஆட்சியே கொலோச்சுக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

"இந்த படுகொலையை செய்தவர்கள் இப்போது அரசில் இருக்கிறார்கள். அதனால் அரசும் ஒருத்தரையும் கண்டுபிடிக்காது" என்று கூறினார்.

போரால் சீரழிந்த யாழில் இரண்டாயிரமாம் ஆண்டில் சுதந்திரமான பத்திரிகையாளராக இருந்தவர்களில் ஒருவர் நிமலராஜன். அவர் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி எழுதி பிரபலமானவர். [/size]

[size=4]இரண்டாயிரம் ஆண்டில் யாழில் பதட்ட நிலைமை நிலவினாலும் அவர் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் பற்றியும் அரசியல் குறைபாடுகள் பற்றியும் எழுதினார்.[/size]

Link to comment
Share on other sites

நேற்று இந்த மூவரினதும் நினைவு கூரல் நிகழ்விற்கு போயிருந்தேன் .அங்கு உரையாற்றிய மூவரும் (ஜேம்ஸ் ,சுபமங்களா,சுல்பிகா) நிறைய விடயங்களை சொன்னார்கள் .ஜேம்ஸ் ராஜனியின் வாழ்க்கையையும் அவர் மரணத்தையும் மிக விபரமாக பேசினார் .இவரும் யாழ் பல்கலை கழக மாணவர் ,பின்னர் பிரபல கணித ஆசிரியர் .தன்னிடம் பயின்ற தர்மேந்திராவும் இவர் கொலையில் உளவு பார்த்ததாக சொன்னார் .

சுபமங்களா இவர் பேராசிரியர் கைலாசபதியின் மகள் .இப்போ அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் அண்மையில் கவுன்சிலராக தெரிவுசெய்ய பட்டவர் .இவர் தான் ,செல்வி ,சிவரமணி ,ரஜனி எல்லோருமே யாழ் பல்கலை கழக பெண்கள் அமைப்பில் இருந்தது ,இலக்கியம் ,நாடகம் ,அரசியல் இவற்றில் இவர்களது பங்கு அதற்கு மேலாக மனித உரிமையில் இவர்கள் கொண்டிருந்த அக்கறை பற்றி மிக தெளிவாக பேசினார் .பூரணி பெண்கள் அமைப்பு அதன் செயற்பாடுகள் பற்றி எல்லாம் விபரமாக சொன்னார்.

கோவிந்தனின் புதியதோர் உலகத்தின் இலக்கிய தரத்தை பலரும் மெச்சி அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கவேண்டிய தேவையையும் கூறினார்கள்.

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

நானும் சில குறிப்புகள் சொன்னேன் குறிப்பாக ரஜனி பற்றி .

நினைவு கூரலுக்கு போனதில் மிக திருப்தியாக வீடு திரும்பினேன் .

Link to comment
Share on other sites

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

திருப்பி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

எங்களுக்கு கேள்வி கேட்கவும்

பிரசங்கம் நடாத்தவும் மட்டும்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

[size=4]எந்த இலக்கியவாதியும்; மனித உரிமை ஆர்வலரும்; இனப்பற்று உள்ளவனவும்; நிகழ்காலந்தை உணர்ந்து பழைய வரலாற்றை கற்று எதிர்கால திட்டங்களை போட்டு செயல்படுவதே சமுதாய தேவை.[/size]

[size=4]பழையதை மனத்திருப்திக்காக மட்டுமே அலசுவதில் எனதப்பயனும் இல்லை.[/size]

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

[size=4]நான் அந்த இணைப்பை இணைத்தமைக்கு உங்களின் இந்த கூற்றே காரணம்: [/size]

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

[size=4]இன்று அதே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நாம் என்ன செய்தோம்?, என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவானது.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

யாழ் பல்கலை கழகத்தில் அன்று அதை புடிங்கினோம் எதை புடிங்கினோம் என்று எல்லோரும் ஒன்று கூடி பினாத்தினோம் என்று எழுதினீர்கள்.

இதுக்குள்ள மனித உரிமை பற்றியும் அக்கறையுடன் இருந்தார்களாம்,,,,,,,,,,,,,,

இப்போதைய யாழ் பல்கலை கழக நிலை இப்படி இருக்கிறது.

இதற்கு இந்த மனித உரிமை ஆவலர்களால் எதையாவது புடுங்க முடியாதா?

என்று கேட்டால்.............

ஆடு மாதிரி தெரிந்த அதே இடம்

மாடு மாதிரி தெரியுது...

இதில எது ஆடு எது மாடு?

மனித உரிமை என்ற போர்வைக்குள் ஒரு எருமை மாட்டு கூட்டம் படுத்திருப்பதாகவே பார்பவர்களுக்கு தெரிகிறது.

Link to comment
Share on other sites

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

இது முன்பு நாங்கள் எழுதுறது உங்களுக்கு புரியவில்லை. தக்க தருணத்தில் உங்களுக்கு கொப்பியடிக்க ஆவது உதவி இருக்கிறது.

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

கருணாவும் டக்கிளசும் எமது நாடுக்காகத்தானாம் கஷ்ட படுகிறார்கள். என்று மேடைகளில் பேசுகிறார்கள்.

சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இந்த விடயத்தை நேற்று நினைவு கூற வந்தவர்களுக்கு எடுத்து சொன்னீர்களா?

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.

விட்டா உலக அரசியலில் நான்தான் பல மாற்றங்களை அவப்போது தேவைக்கு ஏற்றால்போல் செய்து வருகிறேன் என்று எழுதுவீர்கள்.

இது என்ன சின்ன பிள்ள தனமாக இருக்கு?

அரசபடைகளால் அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை

இங்கு உள்ள அரசியல் வாதிகள் ...... பலகலை கழக மாணவர்கள் ஆசிரியைர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மனித உரிமையில் அவர்கள் ஊறி வளந்தவர்களாமே? (நீங்கள் எழுதிதானே நாங்களே வாசிச்சோம்) மனித உரிமை அமைப்புக்களின் ஒரு நேரடி கண்காணிப்பை அங்கே நிலை நிறுத்த முயற்சிகள் செய்யலாம்.

அங்கே அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வியை இடை நிறுத்துகிறார்கள் அவர்களுக்கு நேரடியாக உதவலாம். (இறந்து போனவர்களை எமக்கு தெரியும் ஆதலால் எங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று செய்யும் விளம்பரத்திற்கு செலவிடுவதில் கொஞ்சத்தை அதற்கு பயன்படுத்தலாம்)

அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

ஆகா !

அற்புதம் பின்னிடிங்கள்!

பிரச்சனை வருபவர்களே அதை பார்த்துகொள்வார்கள்.

புலிகளால் பிரச்சனைகளை எதிர்கொண்ட அங்கிருக்கும் மக்களே அதை பார்ப்பார்கள் என்று புலிவாந்தி எடுக்கும் போது தெரியவில்லை. மக்களுக்காகவும் மானவர்களுக்காவும் கடந்த முப்பது வருடமாக புல்லு புடுங்குகிறோம் என்று ஒரு வாந்தியை எடுப்பீர்கள். இப்போ வயலை காட்டி அதில் இருக்கும் புல்லையும் காட்டி ஓரணு இரண்டை புடுங்கலாமே? என்றால் அதை அவர்களே செய்யவேண்டும் என்கிறீர்கள்.

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

இனி வாறமாதம் ஊர்மிளா அக்காவின் நினைவுநாள் வருது.

டொரோண்டோ ...

மொன்றியல்..

நியூ யோர்கிலும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்து. புலிகளால்தான் அவர் கொல்லபட்டார் என்று புளிச்சுப்போன அதே வாந்தியையும் எடுத்துவிட்டு அசத்திவிடுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.