Jump to content

'காவிகளின் பாசிசம்' - சிறிலங்காவை வழிநடத்தும் சிங்கள பெளத்த பேரினவாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Aluthgama-riots-1.jpg

முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். 

இவ்வாறு CNN ஊடகத்திற்காக Tim Hume எழுதியுள்ள கட்டுரையில் குறித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

கடந்த மாதம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் அளுத்கமப் பகுதியில் பௌத்த காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்காக தலைமுடி வெட்டப்பட்ட, கண்ணாடி அணிந்திருந்த ஒரு மனிதன் நின்றிருந்தார். முஸ்லீம் இளைஞர்களுக்கும் பௌத்த காடையர்களுக்கும் இடையில் விவாதம் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊர்வலம் காணொலியில் பதியப்பட்டுள்ளது. 

அளுத்கம ஊர்வலத்தில் உரையாற்றிய குறித்த நபர், சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையினர் சிங்களவர்கள் எனவும், சிறிலங்காவின் 20 மில்லியன் மொத்த சனத்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களே எனவும் குறிப்பிட்டார். பின்னர் இவர் தனது கையை உயர்த்தி தனது குரலை உயர்த்தி முஸ்லீம்கள் எவ்வாறான ஆபத்தைச் சந்திப்பார்கள் என்பதை விபரித்தார். தனியொரு முஸ்லீம் சிங்களவர்கள் மீது கைவைத்தால் அதுவே முஸ்லீம்களுக்கான அழிவாகக் காணப்படும் எனவும் ஆவேசமாகக் கூறினார். இது காணொலியில் பதிவாகியுள்ளது. 

இவ்வாறு ஆவேசமாகக் கூறிய நபர் பௌத்த பிக்குகள் அணியும் காவி உடையுடன் காணப்பட்டதே இங்கு முக்கியமானதாகும். இவர் வேறு யாருமல்லர். இவர் தான் பௌத்த அதிகார சக்தி என நன்கறியப்படும் பொது பல சேனவின் பொதுச் செயலரும் பௌத்த பிக்குவுமான கலகொட அத்தே ஞானசார ஆவார். 

சிறிலங்கா காவற்துறையின் கண்காணிப்பு உள்ள பிரதேசங்களில் பொது பல சேன பல்வேறு தாக்குதல்களை மேற்கொள்வதானது தற்போது பிரச்சினைக்குரிய விடயமாகும். அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போதும் சிறிலங்கா காவற்துறையினர் பிரசன்னமாகியிருந்ததாகப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். "இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. ஆனால் பொது பல சேன இவ்வாறான மீறல்களில் இடம்பெறுவதானது மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும்" என அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டிக்கும் சமூக ஊடகச் செயற்பாட்டாளரும் வர்த்தகருமான மொகமட் ஹிசாம் கூறுகிறார். 

பொது பல சேனவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் தனது உரையை நிறைவு செய்து சிறிது நேரத்தின் பின்னர் அளுத்கமவில் உள்ள முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் பௌத்த காடையர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் மூன்று முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 16 முஸ்லீம்கள் மிக மோசமான காயங்களுக்கு உள்ளாகினர். இரண்டு நாட்கள் இடம்பெற்ற வன்முறைகளில் இவ்வாறான அழிவுகள் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். 

அளுத்கம வன்முறை இடம்பெற்று ஒரு மாத காலம் கடந்த நிலையில், இந்த வன்முறையானது இந்நாட்டில் பல ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளாகக் காணப்படுவதாகவும், இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 135 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் இடம்பெற்ற தினமன்று உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஞானசார தேரர், காவற்துறையிடம் விளக்கமளித்த போதிலும் இதுவரையில் இவருக்கெதிராக எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படவில்லை. அளுத்கம வன்முறைச் சம்பவத்துடன் ஞானசார தேரர் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அளுத்கமவில் இடம்பெற்ற ஊர்வலத்தில் உரையாற்றியதன் மூலம் ஞானசார தேரர், இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கான தூண்டுதலை வழங்கினாரா என்பதை விசாரணை செய்வதாக சிறிலங்கா காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பொது பல சேனவின் தலைவரால் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் ஊர்வலத்தைத் தொடர்வதற்கு அதிகாரிகள் அனுமதித்தாலேயே இவ்வாறான வன்முறைகள் தோன்றியதாக ஹிசாம் தெரிவித்தார். ஆனால் பொது பல சேனவுக்கும் அளுத்கம வன்முறைக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என ஞானசார தேரர் மறுத்துள்ளார். "இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எம்மீது தொடர்ந்தும் பழிசுமத்தப்படுவதுடன் நாங்கள் சிங்களத் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்படுகிறோம். இது நீதியற்றது. பொய்யான குற்றச்சாட்டாகும்" என ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

"இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற போது, முஸ்லீம் இளையோர் குழுவினால் எமது பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டபோது எழுந்த மோதல் நிலையைத் தணிப்பதற்கு பொது பல சேன முயற்சி எடுத்தது. ஆனால் நாங்கள் தான் இந்த வன்முறைகளை மேற்கொண்டதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது" என ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

அளுத்கம சம்பவம் தொடர்பில் பொது பல சேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், பௌத்தமதத்தை அவமதிக்கும் விதமாக செய்திகள் வெளிவந்துள்ளதை எதிர்த்து கடந்த புதன்கிழமை அன்று வெகுசன ஊடகம் மற்றும் தகவற்துறை அமைச்சிடம் முறையீடு செய்யும் முகமாக அமைச்சு பணியகத்திற்குச் சென்ற புத்த பிக்குகளில் ஞானசார தேரரும் ஒருவராவார். 

அளுத்கம சம்பவத்தை அடுத்து ஞானசார தேரரின் அமெரிக்காவுக்கான பயணம் நிறுத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட பொது பல சேனவின் இணையத்தளத்தில், இந்த வன்முறைச் சம்பவத்தை பொது பல சேன வன்மையாகக் கண்டிப்பதாகவும், பொது பல சேனவின் பிரதிநிதிகள் "சிங்கள பௌத்தர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளதாக வலியுறுத்தி உணர்ச்சிகரமான பேச்சுக்களை மேற்கொள்வதாகவும்" இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்படும் முஸ்லீம் எதிர்ப்பு வாதங்கள் வரவேற்கப்படத்தக்கவை அல்ல என அரசியல் விஞ்ஞானியும் சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியுமான டயான் ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். பொது பல சேனவின் அரசியல் செயற்பாடுகள் 'காவிகளின் பாசிசம்' என டயான் ஜெயதிலக விபரித்துள்ளார். 

பொது பல சேனவைச் சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் கொழும்பிலுள்ள வர்த்தக அமைச்சில் காவற்துறை ஒருவருடன் கடந்த ஏப்ரலில் கைகலப்பில் ஈடுபட்டிருந்தார். பௌத்த பிக்குகள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செயற்படும் ஒரு தீவிரவாத அமைப்பே பொது பல சேன என ஜெயதிலக குறிப்பிட்டுள்ளார். 

"அளுத்கமவில் பொது பல சேனவால் பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. இந்த நிலையானது பொது பல சேன அரசாங்கத்தின் மிகப் பலமான ஆதரவைப் பெற்ற ஒரு அமைப்பாகும் என்பதை அறியமுடிகிறது" என சிறிலங்கா மாற்றுக் கொள்கைகள் மையத்தின் நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 

பௌத்த அதிகாரிகளிடமிருந்தும் சிறிலங்கா அரசிடமிருந்தும் பொது பல சேனவின் செயற்பாடுகளைக் கண்டித்து எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டார். "பௌத்தத்தின் பெயரால் பௌத்தத்தின் நியமங்களை மீறி நிற்கின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவின் பொது பல சேனவைப் போன்று மியான்மாரில் முஸ்லீம் எதிர்ப்பு பௌத்த அமைப்பு ஒன்று செயற்படுகிறது. இது 969 அமைப்பு என அழைக்கப்படுகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கைவிடுமாறு தலாய்லாமா தனது பிறந்த நாள் உரையின் மூலமாக பொது பல சேனவிடம் வேண்டுகோள் விடுத்தார். 

"பௌத்த தீவிரவாத ஆயுதக் குழு தோற்றம் பெற்றுள்ளதானது ஆச்சரியப்படத்தக்கதல்ல. பல ஆண்டுகளாக சிங்கள பௌத்தர்களின் மத்தியில் மத வெறி என்பது தீவிரம் பெற்றுள்ளது. 1959ல் அப்போதைய பிரதமராக இருந்த S.W.R.D பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்" என ஜெயதிலக சுட்டிக்காட்டுகிறார். 

பௌத்த பிக்குக்களின் சிங்கள தேசியக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து ஞானசார தேரர் வெளியேறிய பின்னர், 2012ல் சிங்கள பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான பிறிதொரு ஊடகமாக பொது பல சேனவைத் தோற்றுவித்தார். இதற்கு முன்னர் ஞானசார தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் வேட்பாளாராக இருந்தார். இக்கட்சியானது ஆளும் மகிந்த ராஜபக்சவின் கூட்டணிக்கட்சியாகும். பொது பல சேன தோற்றம் பெற்ற பின்னர், மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சிறிலங்கா பௌத்தர்கள் மிகமோசமாக நடாத்தப்படுவதாவும், பங்களாதேசில் இடம்பெற்ற பௌத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் குற்றம் சுமத்தியது. 

ஆனால் பொது பல சேனவின் ஒட்டுமொத்த இலக்காக சிறிலங்கா வாழ் முஸ்லீம் சமூகத்தினராவார். முஸ்லீம்களால் பின்பற்றப்படும் ஹலால் உணவுத் தரக்கட்டுப்பாட்டு முறைமையுடன் பௌத்த எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கியது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009ல் முடிவடைந்த பின்னரே முஸ்லீம் எதிர்ப்பு உணர்வானது பௌத்த பிக்குகள் மத்தியில் தோற்றம் பெற்றதாக ஜெயதிலக கூறுகிறார். 

"போர் முடிவுற்ற பின்னர், சிங்களவர்கள் தமது நிலையை சீர்தூக்கிப் பார்த்த போது, நாட்டின் இரண்டு மிகப் பெரிய சமூகங்கள் போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட போது, முஸ்லீம் சமூகம் எவ்வித சேதங்களுமின்றி சமாதானமாகவும் அமைதியாகவும் நாட்டில் வாழ்வதை அவதானித்தனர். நாட்டில் பல பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், சிறந்த கல்வி வாய்ப்பைப் பெற்ற முஸ்லீம் இளையோர் என முஸ்லீம்கள் வளர்ச்சியுற்றிருப்பதை சிங்களவர்கள் உணர்ந்தனர். இதனால் பௌத்தர்கள், முஸ்லீம் எதிர்ப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்" என்கிறார் ஜெயதிலக. 

முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். 

பொது பல சேனவின் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாகக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இதனைக் கடைப்பிடிக்க அரசாங்கம் தவறிவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச கடந்த ஆண்டு காலியில் பொது பல சேனவுடன் தொடர்புபட்ட கல்லூரி ஒன்றைத் திறந்துவைத்தார். இத்திறப்பு விழாவில் கோத்தபாய, ஞானசார தேரரின் அருகில் நின்றதை ஒளிப்படம் சாட்சிப்படுத்துகிறது. 

ராஜபக்சவுக்கும் பொது பல சேனவுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும், மதிப்பிற்குரிய தேரர் ஒருவரின் அழைப்பிதழைப் புறக்கணிக்க முடியாது கோத்தபாய ராஜபக்ச காலித் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருப்பர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்திக்கான பேச்சாளர் பிரிகேடியர் றுவாண் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த பல பிக்குகளின் மத்தியில் ஞானசாரவும் ஒருவராக இருந்திருப்பார் எனவும் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவானது ஒரு ஜனநாயக நாடு எனவும் இங்கு எந்தவொரு மதமும் சுதந்திரமாகச் செயற்பட முடியும் எனவும் இதனால் கோத்தபாய ராஜபக்சாவால் எதுவும் கூறமுடியாதிருந்திருக்கலாம் எனவும் வணிகசூரிய தெரிவித்தார். 

"கோத்தபாய ராஜபக்ச உட்பட எந்தவொரு அரசாங்க அதிகாரிகளிடமிருந்தும் பொது பல சேனவுக்கு பாதுகாப்போ சிறப்புக் கவனிப்போ வழங்கப்படவில்லை. நாட்டின் சட்டத்தை மீறும் எவரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்" என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கான பேச்சாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்துள்ளார். 

பொது பல சேனவின் பொதுச் செயலர் மீது அளுத்கம சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் விசாரணைகள் தற்போதும் தொடரப்படுவதால் இதன் தீர்வு என்ன என்பதை எதிர்வுகூறமுடியவில்லை எனவும் சமரநாயக்க தெரிவித்தார். பொது பல சேனவானது சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தோ அதிபர் மகிந்த ராஜபக்சவிடமிருந்தோ எவ்வித ஆதரவுகளையும் பெறவில்லை என ஊடகங்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச அரசாங்கத்திற்கு பொது பல சேன அமைப்பானது சில அரசியல் நலன்களை வழங்கியிருந்தாலும் தற்போது இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக ஜெயதிலக கூறுகிறார். அளுத்கமவில் வழங்கிய உரையில் ஞானசார தேரர் சிறிலங்கா அதிபரையும் விமர்சித்திருந்தார். அதாவது சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஆளுமையான தலைமை நாட்டில் காணப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். பொது பல சேன, இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினருடன் நேரடித் தொடர்புகளைப் பேணிவருவதாக ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். 

"தண்டனை வழங்காது சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உரிமையை வழங்குவதானது நாட்டில் மேலும் வன்முறைகளைத் தோற்றுவிக்கும். சட்ட ஆட்சிக்குக் கட்டுப்படும் எந்தவொரு நாடும் அதனை மீறுபவர் எவராயிருந்தாலும் அவர்கள் கள்வர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்" என பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140720110916

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
    • புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.