Jump to content

பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார்


Recommended Posts

பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார்
 

 

சந்தேகத்திற்கிடமான முறையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசுகிறார் என்று ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி அவர் 21 நாட்களுக்குள் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ஆட்ட அதிகாரிகள் அஜ்மல் வீசிய பல பந்துகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த புகார் அறிக்கையை பாகிஸ்தான் அணி மேலாளர் மொயின் கானுக்கும் அனுப்பியுள்ளனர்.

இது அஜ்மல் மீதான 2வது புகாராகும். முன்னதாக 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது தூஸ்ரா பந்து வீச்சு மீது புகார் எழுப்பப்பட்டு பின்பு அவரது பந்து வீச்சு முறையாக இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6304221.ece

 

Link to comment
Share on other sites

சயீத் அஜ்மல் த்ரோ செய்வதாக எழுந்த புகாரின் பின்னணியில்...
 

 

பாகிஸ்தான் புதிர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீசும் போது கணிசமான பந்துகளை த்ரோ செய்கிறார் என்று புகார் எழுந்துள்ளதன் பின்னணியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இருக்கலாம் என்று செய்தி வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சயீத் அஜ்மல் சிறப்பாக வீசி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 36 விக்கெட்டுகளை 19.61 என்ற சராசரியில் எடுத்துள்ளார் சயீத் அஜ்மல்.

 

மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா அணியை மீண்டும் வெல்ல முடியாத ஒரு அணியாகக் கட்டமைக்க ஆஸ்திரேலியா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலியா அணி துபாய் வருகிறது. ஆகவே அஜ்மல் மீது இந்தத் திடீர் மற்றும் அகாலப் புகாரின் பின்னனியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இருக்கலாம் என்று கிரிக்கெட் ஆட்டத்தின் சில தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சயீத் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழுப்பிய நடுவர்கள் இயன் கோல்ட் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாக இருக்க, புரூஸ் ஆக்ஸென்போர்டு என்ற நடுவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது தற்செயலானதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் கருதுகின்றனர்.

மேலும் இலங்கை வென்ற கால்லே டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் 12 தவறான தீர்ப்புகளை வழங்கினர். காரணம் அவரது கவனம் அஜ்மலை நோட்டம் விடுவதிலேயே இருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் கூட மே மாதம் 21ஆம் தேதி தனது டிவிட்டர் பதிவில் ‘பரிசோதனைச் சாலையில் இவர்கள் சரியாக வீசி விட்டு தங்கள் பந்துவீச்சிற்கு அங்கீகாரம் வாங்கி விட்டு மைதானத்தில் மீண்டும் பழைய முறையிலேயே வீசினால் யாருக்குத் தெரிந்து விடப்போகிறது” என்று அஜ்மல் கவுண்டி போட்டி ஒன்றில் 19/7 என்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதற்கு பிராட் கேலிப் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியதும் நினைவிருக்கலாம்.

அஜ்மல் இதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அதாவது வர்ணனையாளர்கள் ஏதாவது கூறிக்கொண்டிருப்பார்கள், ஆனால் ஆடும் ஒரு வீரர் சக வீரரைப் பற்றி இவ்வாறு கூறலாமா? என்று வருத்தம் தெரிவித்திருந்தார்

 

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இப்போது ஐசிசியின் நிர்வாகப் பொறுப்பை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சு என்ற விஷயம் ஊதிப் பெருக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சேனநாயகே, நியூசிலாந்தின் வில்லியம்சன், தற்போது அஜ்மல் ஆகியோர் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது.

மொயீன் அலி வீசும் லாலிபாப் ஸ்பின்னிற்கே மடிந்து போகும் இந்திய அணி பாகிஸ்தானுடன் சில டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து விளையாடவிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக உலகக் கோப்பை கிரிக்கெட் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

 

இந்த நிலையில் அஜ்மலைக் கொஞ்சம் மனோவியல் ரீதியாக கவலைக்குட்படுத்தினால் அவரை நொய்மையாக்கி விடலாம் என்று மற்ற அணிகள் நினைக்கிறது என்ற விமர்சனங்களையும் முற்றிலும் மறுப்பதற்கில்லை.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6308583.ece

Link to comment
Share on other sites

  • 3 months later...

சைட் அஜ்மலின் பரிசோதனை தோல்வி
ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014

பாகிஸ்தான் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல் உத்தியோகபற்றற்ற பரிசோதனையில் தோல்வியடைந்த்துள்ளார். சைட் அஜ்மல் இங்கிலாந்தில் உத்தியோகபூர்வ பரிசோதனை செய்வதற்கு முன்னர் குறித்த பரிசோதனையை, உயிரியல் இயந்திர தொழில்நுட்பத்தின் மூலம் சைட் அஜ்மல் பரிசோதனை செய்து கொண்டார். ஆனாலும் இந்த பரிசோதனை அவருக்கு தோல்வியை வழங்கியுள்ளது. இந்த அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதனையடுத்து சைட் அஜ்மலை மேலும் ஒரு வார காலம் இங்கிலாந்தில் தங்கி அவருக்கு பயிற்சிகளை வழங்கிய சக்லைன் முஸ்டாகிடம் பயிற்ச்சிகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

குறித்த பரிசோதனையில் சர்வதேசக் கிரிக்கெட் சபைக்காக சோதனைகளை மேற்கொள்ளும் வைத்திய நிபுணர் மார்க் கிங் அவரின் குழுவினருடன் இணைந்து குறித்த சோதனைகளை மேற்கொண்டார். இந்த சோதனையில் 18 வீடியோ படப்பிடிப்பு கருவிகளை வைத்து குறித்த சோதனைகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் மீள பந்துவீச அஜ்மலால் முடியும் என அனைவரும் நம்பி இருந்த போதும். இந்த சோதனையில் அவர் தொல்வியடைந்துள்ளது அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உலகக்கிண்ணத்திற்கு அஜ்மலை தயார் செய்ய முயற்சித்து வருகின்றது. ஆனாலும் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் தோல்வியை ஏற்படுத்தியுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/133562-2014-11-16-06-42-18.html

Link to comment
Share on other sites

இவர் எறிகிறார் என்பதாகவே நானும் உணர்ந்துள்ளேன். பலகாலமாக தப்பிப் பிழைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தனது பந்துவீச்சு பாணி குறித்து சயீட் அஜ்மால் திருப்தி
 

 

தனது பந்துவீச்சு பாணியை சீர்படுத்தும் முறைகள் குறித்து திருப்தி அடைவதாக பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மால் தெரிவித்துள்ளார்.


2015 உலகக் கிண்ணப் போட்டிகளின் மூலம் சர்வதேச அரங்கில் மீள் பிரவேசம் செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் லூபரோவில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பந்துவீச்சு ஆய்வு நிலையத்தில் சீர்படுத்தும் பயிற்சிகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் அஜ்மால் ஈடுபட்டுவந்தார். அவரது முழங்கை 15 பாகைக்கு மேல் வலைகின்றபோதிலும் அவரது பந்துவீச்சுப் பாணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக டொக்டர் மார்க் கிங் தெரிவித்துள்ளார்.


"டொக்டர் மார்க் கிங் எனது பந்துவீச்சு பாணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளமை எனக்கு திருப்தி தருகின்றது. எனது பெரும்பாலான பந்துவீச்சு பாணிகள் குறிப்பிட்ட 15 பாகைக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. எனவே நான் பூரண திருப்தி அடைகின்றேன். பாகிஸ்தான் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் சக்லெய்ன் முஷ்தாக்கின் உதவியுடன் உரிய இலக்கை அடைவேன் என நம்புகின்றேன்|| என அஜ்மால் கூறியுள்ளார்.

ஷஷதூஸ்ரா பந்துவீச்சின்போது மாத்திரமே எனது முழங்கை 15 பாகைக்கு மேல் மடிகின்றது. மற்றைய பந்துவீச்சு பாணிகள் யாவும் உரிய விதிகளின் பிரகாரம் அமைந்துள்ளது'' என்றார் அஜ்மால்.

இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டியின்போது அவரது பந்துவீச்சு பாணி குறித்து மத்தியஸ்தர்களால் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச முடியாதவாறு சயீத் அஜ்மாலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த செப்டெம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7842#sthash.qMGDgD3Y.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.