Jump to content

ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு


Recommended Posts

ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு
 

 

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளைவிட அதிகமாக பேசப்பட்ட விஷயம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்-இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடையிலான மோதல் விவகாரம்தான்.

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் மதிய உணவுக்காக இரு அணியினரும் பெவிலியின் திரும்பியபோது ஆண்டர்சனுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஆண்டர்சன், ஜடேஜாவை கீழே தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது.

 

ஐசிசி நடத்தை விதி லெவல்-3 ஐ ஆண்டர்சன் மீறியதாக இந்தியா புகார் அளிக்க, பதிலுக்கு ஆண்டர்சனை மிரட்டியதாக இங்கிலாந்து சார்பில் ஜடேஜா மீது ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், மட் பிரையரிடம் போட்டி நடுவர் டேவிட் பூன் விசாரணை நடத்தினார். அதில், ஆண்டர்சனை நோக்கி பேட்டை உயர்த்தி ஜடேஜா அச்சுறுத்தினார். அப்போது ஆண்டர்சன் தன்னை பாதுகாத்துக் கொள்ள மட்டுமே முயன்றார்.

 

ஜடேஜாதான் முதலில் ஆண்டர்சனை தள்ளினார் என அவர்கள் இருவரும் சாட்சியம் அளிக்க, இந்தியத் தரப்போ அதை முற்றிலும் மறுத்தது. முடிவில் ஜடேஜாவுக்கு அவருடைய போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபாரதமாக விதிக்கப்பட்டது. நியாமற்ற இந்தத் தீர்ப்பால் பொறுமையின் சிகரமான இந்திய கேப்டன் தோனியே கொதித்துப் போனார்.

 

ஏமாற்றமளிக்கும் தீர்ப்பு

இதனிடையே ஆண்டர்சன் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் நிச்சயம் அவருக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸின் தீர்ப்போ அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இருவர் மீதும் தவறில்லை என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஜடேஜா-ஆண்டர்சன் இடையில் மோதல் சம்பவமே நடைபெறவில்லை என்பதைப் போல் கார்டன் லீவிஸின் தீர்ப்பு உப்பு சப்பில்லாததாக அமைந்திருக்கிறது.

இப்படியொரு தீர்ப்பை வழங்குவதற்கு பதிலாக இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு வீரர்களையும் அழைத்து சமாதானம் செய்திருக்கலாமே? அதைவிட்டு ஏன் இப்படியொரு வீடியோ கான்பரன்ஸ் விசாரணை, அதற்கு ஒரு நடுவர் என எல்லோரையும் ஏமாற்ற வேண்டும்? பந்தை சேதப்படுத்துவது, களத்தில் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, நடுவரிடம் முறைப்பது உள்ளிட்ட அற்ப விஷயங்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கும் ஐசிசி, ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தை மட்டும் இவ்வளவு மென்மையாக அணுகியிருப்பது ஏன்?

 

மறைக்கப்பட்ட வீடியோ ஆதாரம்

இதையெல்லாம்விட முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நாட்டிங்காம் மைதானத்தில் பெவிலியன் வாயிலில் இருந்த வீடியோ கேமரா, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் மட்டும் செயல்பாட்டில் இல்லை என நாட்டிங்காம் செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ஒரு மைதானத்தில் போட்டி நடைபெறும்போது பாதுகாப்பு கருதி அங்குள்ள அனைத்து கேமராக்களும் முழு அளவில் செயல்பாட்டில் இருக்கும்.

ஆனால் முக்கியமான பகுதியான பெவிலியன் வாயிலில் இருந்த வீடியோ கேமரா செயல்பாட்டில் இல்லை என்ற நாட்டிங்காம் செய்தித் தொடர்பாளரின் பதிலை வைத்துப் பார்க்கும்போது, வீடியோவில் பதிவான ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் காட்சிகள் மறைக்கப்பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆண்டர்சன் மீது தவறில்லாதபட்சத்தில் அவர்கள் வீடியோ பதிவுகளை மறைக்க வாய்ப்பில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது.

 

காப்பாற்றப்பட்ட ஆண்டர்சன்

ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் சம்பவம் நடந்ததற்கு இரு அணிகளின் வீரர்களைத் தவிர வேறு எந்த சாட்சியமும் இல்லை. அவர்களில் யாரை விசாரித்தாலும், நிச்சயம் உண்மை வெளிவராது. ஆண்டர்சனை காப்பாற்ற இங்கிலாந்து அணி நிர்வாகம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு இப்போது கார்டன் லீவிஸ் தீர்ப்பின் மூலம் பலன் கிடைத்திருக்கிறது.

 

ஆண்டர்சனைக் காப்பாற்ற இங்கிலாந்து கடுமையான முயற்சி மேற்கொண்ட அதேவேளையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏன் ஜடேஜாவுக்கு நியாயம் கிடைக்க குரல்கொடுக்கவில்லை? நடுவரின் முடிவை மறு ஆய்வு செய்யும் முறை (டிஆர்எஸ்) உள்ளிட்ட சிறு விஷயங்களுக்குகூட போர்க்கொடி தூக்கும் செல்வாக்கு படைத்த பிசிசிஐ, ஜடேஜா விஷயத்தில் மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது ஏன்?

 

ஜடேஜா பலிகடா?

கார்டன் லீவிஸ் தீர்ப்பு தொடர்பான பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேலின் பதிலும் மழுப்பலான பதிலாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சக்தி படைத்த இரு அணிகளும் பரஸ்பரம் பேசி தங்களின் வீரர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக் கொண்டதையே கார்டன் லீவிஸின் தீர்ப்பு காட்டுகிறது.

 

அதேநேரத்தில் இந்தத் தீர்ப்பை இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஆண்டர்சனால் கீழே தள்ளிவிடப்பட்ட ஜடேஜாவுக்கு நியாயம் கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஐசிசி நிர்வாகத்தில் கோலோச்சும் பிசிசிஐக்கு இங்கிலாந்தின் ஆதரவும், இங்கிலாந்துக்கு பிசிசிஐயின் ஆதரவும் தேவை என்பதால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட ஜடேஜாவை பலிகடா ஆக்கியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

 

ஆண்டர்சனோ, ஜடேஜாவோ யாராக இருந்தாலும் சரி, செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். செல்வாக்கு படைத்த அணிகளுக்கு ஒரு தீர்ப்பும், எஞ்சிய அணிகளுக்கு ஒரு தீர்ப்பும் வழங்கப்படுவது சரியான அணுகுமுறையல்ல. ஜென்டில்மேன்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் கார்டன் லீவிஸின் தீர்ப்பு மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல!

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6276717.ece

Link to comment
Share on other sites

தனியார் தொலைக்காட்சிக்காரர் எவரும் இதை பதிவு செய்யவில்லையா? ஆதாரம் இல்லா பட்சததில் இந்தத் தீர்ப்பு நியாயமானதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இசை பதிவு செய்த வீடியோவை எடுத்து மறைத்து வைத்து விட்டு இது தான் நீதி என்டால் ஏற்பீர்களா?

Link to comment
Share on other sites

தீர்ப்பு நகல் வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை
 

 

ஜடேஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள கார்டன் லீவிஸ் தீர்ப்பின் நகலை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா-இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜடேஜாவை ஆண்டர்சன் கீழே தள்ளியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜடேஜாவுக்கு அவருடைய போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

 

இதனிடையே இதுதொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஆண்டர்சன், ஜடேஜா இருவர் மீதும் தவறில்லை என ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆண்டர்சன் எவ்வித தண்டனையுமின்றி தப்பினார். ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேலிடம் கேட்டபோது, “கார்டன் லீவிஸ் தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். அது நாளைக்குள் (இன்று) வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு நகலைப் பார்த்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய முடியும். அடுத்தகட்ட நடவடிக்கை முன்னதாக தீர்ப்பு நகலை முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.

 

எங்களுடைய சட்டநிபுணர் குழு தீர்ப்பின் நகலை படித்துவிட்டு எங்களுக்கு ஆலோசனை வழங்கும். இதுபோன்ற பிரச்சினைகளில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகத்துல்லியமாக ஆராய்வது அவசியம். அதற்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவை. அதற்கு முன்னதாக மேல்முறையீடு செய்யப்படுமா என நாங்கள் கூறினால் அது சரியானதாக இருக்காது” என்றார்.

 

இந்த விஷயத்தில் இந்திய அணி அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா என கேட்டபோது, சஞ்சய் பட்டேல் அளித்த பதிலோ, இந்தப் பிரச்சினையை பிசிசிஐ முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது என்பதைக் காட்டுவதாக அமைந்தது. “தீர்ப்பு நகலை பார்க்காமல் இந்த விசாரணை நியாயமற்றது எனக்கூறினால் அது பொருத்தமற்றதாக அமைந்துவிடும்” என்றார் சஞ்சய் பட்டே

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6276718.ece

 

Link to comment
Share on other sites

என்ன இசை பதிவு செய்த வீடியோவை எடுத்து மறைத்து வைத்து விட்டு இது தான் நீதி என்டால் ஏற்பீர்களா?

இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை போலல்லாது நீதி உள்ளது என நம்புகிறேன். ஆகவே காணொளி ஆதாரம் இருந்தால் நிச்சயம் அது முன் கொண்டுவரப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. :huh:

Link to comment
Share on other sites

ஜடேஜாவை தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்ட ஆண்டர்சன்

கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் விவகாரத்தில் ஜடேஜாவை திட்டியதையும், தள்ளிவிட்டதையும் விசாரணையின்போது ஆண்டர்சன் ஒப்புக்கொண்டது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக கிரிக்.இன்போ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டிருந்தது. அதுதொடர்பான விசாரணையின்போது பிசிசிஐ வழக்குரைஞர் ஆண்டர்சனை குறுக்கு விசாரணை செய்துள்ளார்.

அப்போது ஜடேஜாவை திட்டியதையும், அவரை கீழே தள்ளியதையும், கிரிக்கெட் விதிமுறையை மீறியதையும் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜடேஜாவின் பல்லை உடைத்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். ஆண்டர்சன் மீதான விசாரணையின்போது அவரை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் ஜடேஜாவின் மேல் முறையீட்டு விசாரணையின்போது ஆண்டர்சனை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஆண்டர்சன் மேற்கண்டவாறு கூறினார்” என பிசிசிஐ வழக்குரைஞர் தெரிவித்ததாக கிரிக்.இன்போவில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

http://tamil.thehindu.com/sports/ஜடேஜாவை-தள்ளிவிட்டதை-ஒப்புக்கொண்ட-ஆண்டர்சன்/article6277780.ece?homepage=true

Link to comment
Share on other sites

எதிரணி வீரர்களிடம் முறைதவறிப் பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லை: ஹோல்டிங்
 

 

எதிரணி வீரர்களை வசைபாடுவது என்ற அணுகுமுறையில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்று முன்னாள் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

 

ஜடேஜா-ஆண்டர்சன் புயல் ஒருவழியாக ஓய்ந்தாலும் ஜடேஜாவை கீழே தள்ளியதை ஒப்புக் கொண்டுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதுபற்றி விஸ்டன் இதழில் பத்தி எழுதியுள்ள மைக்கேல் ஹோல்டிங் கூறியதாவது:

 

"பொதுவாக ஏதாவது பேசுவது வேறு விஷயம், எதிரணி வீரர்களை இழிவு படுத்தும் விதமாகப்பேசுவதில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை.

அதற்காக இந்தியா பதிலடி கொடுப்பதான பேச்சிலும் எனக்கு நம்பிக்கையில்லை. கிரிக்கெட் என்ன கால்பந்தாட்டமா? அதில்தான் ஒரு வீரரை எதிரணி வீரர் தள்ளி விட்டால் மீண்டும் அவரை இவர் தள்ளிவிடுவது என்பது நடக்கும். இது மேலும் மேலும் பகையை வளர்க்கவே உதவும்.

 

கிரிக்கெட் ஆட்டம் களத்தில் மட்டைக்கும் பந்துக்கும் நடக்கும் போராட்டமாகவே இருக்க வேண்டும்” என்றார்.

இந்திய அணியின் தோல்விக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று பொதுவாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவது குறித்து கூறிய ஹோல்டிங், "தோனி சரியான அணியைத் தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனத்தை முழுதும் ஏற்கிறேன், ஜடேஜா நல்ல ஸ்பின்னர் இல்லை. அஸ்வினைத்தான் அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும்.

இதைத் தவிர இந்தியா மோசமாக விளையாடியது. கேட்ச்களைக் கோட்டைவிட்டனர். ஃபீல்டிங்கில் பந்துகளைத் தவறவிட்டனர். முன்னணி பேட்ஸ்மென்கள் மோசமான ஷாட் தேர்வில் ஆட்டமிழந்தனர். இந்தியா நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை, அதுவே தோல்விக்குக் காரணம்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article6280180.ece

Link to comment
Share on other sites

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம்: மேல்முறையீட்டிற்கு பிசிசிஐ கோரிக்கை
 

 

ஜடேஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் ஆண்டர்சன் மீது தவறில்லை எனக்கூறி அவரை விடுவித்த கார்டன் லீவிஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது பிசிசிஐ.

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது.

 

இந்த விவகாரத்தில் ஆண்டர்சனுக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி விசாரணை நடத்திய ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ், இருவர் மீதும் எந்தத் தவறும் இல்லை எனக்கூறி இருவரையும் விடுவித்தார். இதனால் ஆண்டர்சன் தண்டனையிலிருந்து தப்பினார்.

 

இதைத் தொடர்ந்து கார்டன் லீவிஸ் வழங்கிய தீர்ப்பின் நகல் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது ஐசிசியை நாடியிருக்கிறது பிசிசிஐ. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஐசிசி மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால், ஐசிசியை அணுகியிருக்கிறது பிசிசிஐ.

 

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “கார்டன் லீவிஸின் தீர்ப்பு முற்றிலும் தவறானது என அணி நிர்வாகம் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் கருதுகிறோம். அதனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு திங்கள்கிழமை இரவு இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

 

லீவிஸின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்ய முடியாது. ஐசிசி மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால் ரிச்சர்ட்சனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என நம்புகிறேன்.

ஜடேஜாவை தள்ளிவிட்டதாக ஆண்டர்சனே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியிருக்கையில் அவர் குற்றமற்றவர் என எப்படிக்கூற முடியும். என்னைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன் ஐசிசியின் பல்வேறு விதிமுறைகளை மீறியிருக்கிறார் என்றார் பட்டேல்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6284590.ece

 

Link to comment
Share on other sites

இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு உந்த அடாத்து போக்கிலி தனங்களை கற்பிற்பதே இங்கிலாந்து போன்ற நாடுகள் தான்  .

Link to comment
Share on other sites

முதல் பக்கம்
சரி என்று நினைத்ததை செய்தேன்: கேப்டன் தோனி கோபம்
ஆகஸ்ட் 06, 2014.

மான்செஸ்டர்: ‘‘ஆண்டர்சன் தள்ளு விவகாரத்தில் நான் சரி என்று நினைத்ததை செய்தேன்,’’ என, இந்திய அணியின் கேப்டன் தோனி, கோபத்துடன் தெரிவித்தார்.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில், இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை தள்ளி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இந்தச் சம்பவம் குறித்து ஐ.சி.சி., கமிஷனர் கார்டன் லீவிஸ் விசாரித்தார். இதில், ‘ஜடேஜாவை மிரட்டும் வகையில் பேசியது உண்மை தான்,’ என, ஆண்டர்சன் ஒப்புக் கொண்டார்.

இருப்பினும். இதற்கு போதிய ஆதாரம் இல்லாததால், இருவரையும் கார்டன் லீவிஸ் விடுவித்தார். ஆண்டர்சனுக்கு தடை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இவர் விடுவிக்கப்பட்டது, கேப்டன் தோனிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

 

இதற்கேற்ப, ஐ.சி.சி., தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுப்பிய கடிதத்தில்,‘ ஆண்டர்சன் தவறு செய்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், அவரை விடுவித்தது திருப்தி தரவில்லை. இதை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஐ.சி.சி., மறுப்பு தெரிவித்தது.

தோனி கோபம்:

பி.சி.சி.ஐ., கேட்டுக் கொண்ட பின்பும், ஐ.சி.சி., அப்பீல் செய்ய மறுத்தது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

‘தள்ளு’ சம்பவத்தின் போது, ஒரு சில கடினமான வார்த்தைகள் பேசியிருக்கலாம். ஆனால், இதை நாங்கள் புகாரில் குறிப்பிடவே இல்லை. ஆண்டர்சன், ஜடேஜாவை தள்ளி விட்டார் என்பது தான் முக்கிய குற்றச்சாட்டு.

 

தெரிய வேண்டும்:

இது கிரிக்கெட்டுக்கு மோசமான சம்பவம் என்று கருதினோம். இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பியதால் தான், வெளியில் கொண்டு வந்தோம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சிலர் போதிய ஆதாரம் உள்ளது என்பர். சிலர் ஆதாரம் இல்லை என்பர். இதில் தீர்ப்பு என்பது இரண்டுக்கும் இடைப்பட்ட நுாலில் தான் உள்ளது.

நல்ல விஷயம்:

இதில் ஜடேஜாவுக்கு மட்டும் அபராதம் விதித்தனர். அப்போதே, இவர் மீது ஒரு சதவீதம் கூட தவறு இல்லை எனத் தெரிவித்தேன். கடைசியில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுவித்தது நல்ல விஷயம்.

இதில், ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் பார்வையில், ஜடேஜாவின் செயல் தவறாக பட்டதால், 50 சதவீதம் அபராதம் விதித்தார். இது ஐ.சி.சி.,க்கு தெரியாதது சற்று வித்தியாசமாகத் தான் உள்ளது.

 

தவறு தான்:

என்னைப் பொறுத்தவரையில் தவறு செய்தால், அது யாராக இருந்தாலும் எதிராகத்தான் இருப்பேன். எனது சக வீரர் எல்லை மீறாத நிலையில், அபராதம் விதிக்கப்பட்டால், எப்படியும் அவருக்கு ஆதரவாகத்தான் இருப்பேன்.

நினைத்ததை செய்தேன்:

அதேநேரம், அவர் எல்லை மீறி இருந்தால், கண்டுகொள்ள மாட்டேன். அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும். எது சரி, எது தவறு என்று எனக்குத் தெரியும். ஜடேஜா விஷயத்தில் சரி என்று பட்டதை செய்தேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/08/1407344771/dhoniindiacricket.html

 

Link to comment
Share on other sites

கிரிக்கெட்டில் தவறான வார்த்தை பிரயோகம் சரி?: டிராவிட்
வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 23:47

கிரிக்கெட்டில் தவறான வார்த்தை பிரயோகங்கள் சரியானது என்ற முடிவை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளது என்ற அதிருப்தியான கருத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா, ஜேம்ஸ் அன்டர்சனின் மோதலின் இறுதி தீர்ப்பு இப்படியான ஒரு தகவலையே வழங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

போட்டி நடுவர் ப்ரூஸ் ஒக்ஸ்பன்போர்ட் இன் அறிக்கையின் படி ஜேம்ஸ் அன்டர்சன் மோசமான தகாத வார்த்தை பிரயோகத்தை பாவித்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் அந்த மோசமான வார்த்தைப் பிரயோகத்தைப் பற்றி யாரும் பெரிதுபடுத்தவில்லை. அவர் ஏதோ கூறினார். ஜடேஜா ஆக்ரோஷமாக பார்த்தார். தன்னை பாதுகாக்க அன்டேர்சன் அவரை தள்ளி விட்டார். இவை தீர்ப்பின் படி சரி என்றாலும் வார்த்தைப் பிரயோகம் என்பதற்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

சிலர் இதை விட்டு நகருங்கள் என்று கூறுகின்றனர். இங்கே இவர்கள் இரண்டு வார்தைகளுக்கிடையிலான வித்தியாசத்தை உணரவில்லை. சிலெஜிங்க் வேறு அபியூஸ் வேறு என்பதை புரிந்து கொள்ளவில்லை. வீரர்களை வெறுப்பேற்ற செய்வது சிலெஜிங்க். ஒரு வீரரை மோசமான வார்த்தைகளால் திட்டுவது அபியூஸ். ஜேம்ஸ் அன்டேர்சன் செய்தது இரண்டாவது ரகம். இதை விட்டு விலக முடியாது. அவர் எல்லையை இங்கே தாண்டி விட்டார். காட்டாயம் தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும் என ராகுல் டிராவிட் மேலும் கூறியுள்ளார்

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/121136-2014-08-07-18-18-52.html

Link to comment
Share on other sites

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் பதவிக்காக கோழையானார் சீனிவாசன்: ஆதித்ய வர்மா கடும் குற்றச்சாட்டு
 

 

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் ஐசிசி தலைவர் சீனிவாசன் தன் பதவிக்காக கோழைத்தனமாகச் செயல்பட்டார் என்று பிஹார் கிரிக்கெட் சங்கச் செயலர் ஆதித்ய வர்மா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெறும் பொம்மையாக சீனிவாசன் செயல்பட்டதால் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம் கையாளப்பட வேண்டிய விதத்தில் கையாளப்படவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட்டை நோக்கி உலகம் சிரிக்கும்படியாக ஆகிவிட்டது, காரணம் சீனிவாசன் தனது பதவிக்காக கோழையாக நடந்து கொண்டதுதான்.

 

சீனிவாசன் ஏன் இப்படி தைரியமில்லாது நடந்து கொண்டார் என்பது ஆச்சரியாமாக உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்களின் உதவியுடன் ஐசிசி தலைவர் பதவி கிடைத்ததால் அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லையா? இதனால் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்ததோடு, ஐசிசியை தன்னிச்சையாக செயல்பட விடுத்து அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானதும் நடந்தது

ஆண்டர்சனே தனது தவற்றை ஒப்புக் கொண்ட பிறகு ஐசிசி அவரை தண்டிக்காமல் விட்டது. ஐசிசி-யில் சீனிவாசன் முதன்மைப் பதவியில் இருக்கும்போது இது நடந்துள்ளது. இவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் ரகசிய புரிதல் இருக்கிறதோ, அதனால் ஆண்டர்சன் தண்டனையிலிருந்து தப்பிவிக்கபப்ட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 

மேலும் சரத் பவார் அல்லது ஜக்மோகன் டால்மியா தாமாகவே முன்வந்து இந்திய கிரிக்கேட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் காப்பாற்ற வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article6299134.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.