Jump to content

காதலிக்கும்படி அட்டகாசம் புரிந்தவர்களுக்கு விளக்கமறியல்


Recommended Posts

யாழ்., இணுவில், மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்கு திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார். 

யுவதியின் பெற்றோர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதேயிடத்தினைச் சேர்ந்த 20, 23, 24 மற்றும் 26 வயதுடைய 4 இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.  

தொடர்ந்து, அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார். 

மேற்படி 4 இளைஞர்களில் ஒருவர் மேற்படி யுவதியினைக் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், அதற்கு அந்த யுவதி மறுப்பு தெரிவித்த நிலையில், அவ்விளைஞனைக் காதலிக்க வற்புறுத்தியே மேற்படி இளைஞர்கள் கலாட்டாவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/119194-2014-07-23-05-10-12.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.