Jump to content

இன்றைய உலகில் தமிழினம் பின் தங்கி இருக்கிறதே...ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலம்பு நீர்படைக்காதை (159 - 179)

 

 

இளங்கோ வேந்தர்

 

இறந்ததற் பின்னர்

 

வளங்கெழு நன்னாட்டு

 

மன்னவன் கொற்றமொடு

 

செங்கோல்தன்மை தீதின்றோ! என

 

எங்கோ வேந்தே! வாழ்க!

 

என்றேத்தி மங்கல மறையோன்

 

மாடலன் உரைக்கும்

 

வெயில் வினங்கு மணிப்பூண்

 

விண்ணவர் வியப்ப

 

எயில் மூன்றெறிந்த இகல்வேல் கொற்றமும்

 

குறுநடைப் புறவின்

 

நெடுந்துயர் தீர எறிதரு பருந்தின்

 

இடும்பை நீங்க அரிந்துடம்பீட்டோன்

 

அறந்தருகோலும்

 

திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?

 

திதோ இல்லை செல்லற்காலையும்

 

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு

 

என்று அருமறை முதல்வன்

 

சொல்லக் கேட்டே

 

பெருமகன் மறையோற் பேணி

 

ஆங்கவற்கு ஆடகப் பெருநிறை

 

ஐயைந்து இரட்டி தோடர் போந்தை

 

வேலோன் தன் நிறை

 

மாடல மறையோன் கொள்க! என்றளித்தாங்கு

 


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ காவேரி பேஷா ஓடறதோன்னோ! நன்னா இருப்பேள் போங்கோன்னுட்டார்.

@ மன்னர் பெருமகன் ஏமாந்தான். புத்தாண்டு உருவாக்கம் தொடர்பான வல்லுநர் மரபறிவு முற்றாகப் புதைக்கப்பட்டது.

@ முக்காலமும் உணர்ந்த இளங்கோவடிகள் புரியும்படி எழுதியிருக்கிறார். இதுவரை புரிந்து கொள்ளத் தவறியது தமிழர் குற்றம். எங்கிருந்து எழும் கொற்றம் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா

 

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீதி தவறாத அரசு நடத்தி கோலோச்சிவந்தார்கள். குமரிக்கடலில் (இன்றைய இந்தியப் பெருங்கடல்) சங்கம் அமைத்து தமிழ் வளர்ச்சியையும் மேற்கொண்டிருந்தார்கள். மூவேந்தர்களும் கணிய, வள்ளுவர்களால் விண்ணியல் கணிப்பு செய்து இயற்கையை ஏறக்குறைய கற்றறிந்தார்கள். அதில் அரச கமுக்கமும் அடக்கம். அதில் ஒன்றுதான் புத்தாண்டு உருவாக்கம். இது வல்லுநர்களால் தெளிவாக முன் மொழியப்பட்டது. அரசனுக்கும் அது தெரியும்.

 

ஆழிப்பேரலை போன்ற அழிவுகள் இவ்வல்லுநர்களால் முன் கூட்டியே முன் மொழியப்பட்டது. அரசனும் தனது கணிப்பைக் கொண்டு கணியர்களின் கூற்றைச் செவ்வனே தெரிந்து கொண்டபின் தான் வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்பாடுகள் தொடர்ந்தன. அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது.

 

பின் வேதியர்கள் வந்து தம் சூழ்ச்சியினால் அரசர்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அரசன் தன் அரசியல் கமுக்கம் தெரியாதவனாக்கப்பட்டான். வேதியர்கள் சொல்வதே வேதவாக்கானது. வள்ளுவ, கணியர்களின் கூற்று வேதியர்களால் நிராகரிக்கப்பட்டது மன்னனும் அறியாமல் வலையில் வீழ்ந்தான். தமிழ் அரசர்களும் தம் அறிவை இழந்தனர். தமிழ் மக்களும் தம் அறிவுத்திறமையை இழந்தனர். இதுதான் தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்.

 

இன்று தமிழர்கள் இவ்வேதியர்களை ஒதுக்கி நம் இழந்த அறிவுச் செல்வங்களை புதுப்பித்து முன்னோர்களின் அறிவு வழியில் தமிழர்கள் தொடர்ந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வு வளம் பெறும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் தலைநிமிர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்வதென்பது மிகவும் கடினமான விடையம். இருந்தும் முன்னேறவேண்டுமாகவிருந்தால், அவர்கள் கடைப்பிடிக்கும் சில்லறைத்தனங்களையெல்லாம் கைவிடல்வேண்டும்.

 

1. தமிழர்களது வரலாறு, கலாச்சாரம், தமிழ்மொழியின் சிறப்புமிகுதன்மை இவைதெரியாத படைப்பளிகளால் நாம் வாழும் தேசங்களெங்கும் கொண்டுவந்து குவிக்கப்படும் படைப்புக்களை விட்டெறிதல் வேண்டும்.

 

2. வீடு கட்டுகிறேன் அல்லது வாங்கிறேன் என்றுகூறி புலம்பெயர்தேசங்களில் பெரும்முதலீடுகளில் மான்சன்கள் வாங்குவதைத் தவிர்த்தல்வேண்டும்.

 

3. இந்தியாவின் குயராத் கடைத்தெருக்களில் விற்கப்படும் ஜிகினா உடைகளை தங்களது விருந்து நிகழ்சிகளில் கட்டுவதை நிறுத்தி, தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய பருத்தி உடைகளை அணிவதற்குக் பழக்கப்படுத்திக்கொள்ளல்வேண்டும்.

 

4. தவிர, விருந்துபசாரங்களிலோ அன்றேல் எமது பண்பாடுசார்ந்த நிகழ்சிகளிலோ கலந்துகொள்ளக்கூடியவர்கள் அணிந்துகொள்ளும், உடைபற்றிய அறிவுறுத்தல் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

 

5. என்னவிதப்பட்டும் வருடமொருமுறை தாயகம் சென்று எமது பிள்ளைகளுக்கு தாயகம்பற்றிய அறிவினைச் சிறுவயதிலிருந்தே புகட்டுதல்வேண்டும்.

 

6. காலப்போக்கில் புலம்பெயர்தேசங்களது கோடைகால விடுமுறைக்கு ஏற்ப தாயகத்தில் தமிழைச் சரியான முறையில் எங்கள் சூழலிலேயே கற்றுணர்ந்துகொள்ள கல்விநிறுவனங்களை உருவாக்குதல்வேண்டும்.

 

7.தாயகத்திற்கும் புலம்பெயர்தேசத்துக்கும்மிடையில் திட்டமிடுதலுடன்கூடிய பொருளாதார ஒத்துளைப்பைப் பேணுதல்வேண்டும்.

 

8. எமது மண்ணையும் மண்ணின் வளங்களையும் காக்கும்வண்ணம் எவ்வகையான இடையூறுகளுக்கு மத்தியிலும் சுற்றுச்சூழல்பற்ரிய விழிப்புணர்வை தாயகத்து மக்கள் மத்தியில் கொண்டுவரும் திட்டமிடுதல்களை மேற்கொண்டு அதனைச் செயற்படுத்தல்வேண்டும்.

 

9. எமது மண்ணின் மாண்புகெடாது எதிர்காலத்திலும் கலாச்சாரம் மற்ரும் பண்பாட்டு விழுமியங்களை பாதிக்காதௌ நவீன தொழில்நுட்பங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தல்வேண்டும்.

 

10. இயற்கை வேளான்மைமூலம் விளைபொருட்களை உற்பத்திசெய்து புலம்பெயர்நாடுகள் எங்கும் இருக்கும் சந்தைவாய்ப்பை தாயக மக்களுக்குச் சாதகமாக ஏற்படுத்திக்கொடுத்தல்வேண்டும்.

Link to comment
Share on other sites

ஐயா

 

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீதி தவறாத அரசு நடத்தி கோலோச்சிவந்தார்கள். குமரிக்கடலில் (இன்றைய இந்தியப் பெருங்கடல்) சங்கம் அமைத்து தமிழ் வளர்ச்சியையும் மேற்கொண்டிருந்தார்கள். மூவேந்தர்களும் கணிய, வள்ளுவர்களால் விண்ணியல் கணிப்பு செய்து இயற்கையை ஏறக்குறைய கற்றறிந்தார்கள். அதில் அரச கமுக்கமும் அடக்கம். அதில் ஒன்றுதான் புத்தாண்டு உருவாக்கம். இது வல்லுநர்களால் தெளிவாக முன் மொழியப்பட்டது. அரசனுக்கும் அது தெரியும்.

 

ஆழிப்பேரலை போன்ற அழிவுகள் இவ்வல்லுநர்களால் முன் கூட்டியே முன் மொழியப்பட்டது. அரசனும் தனது கணிப்பைக் கொண்டு கணியர்களின் கூற்றைச் செவ்வனே தெரிந்து கொண்டபின் தான் வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்பாடுகள் தொடர்ந்தன. அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது.

 

பின் வேதியர்கள் வந்து தம் சூழ்ச்சியினால் அரசர்களின் மனதில் இடம் பிடித்தார்கள். அரசன் தன் அரசியல் கமுக்கம் தெரியாதவனாக்கப்பட்டான். வேதியர்கள் சொல்வதே வேதவாக்கானது. வள்ளுவ, கணியர்களின் கூற்று வேதியர்களால் நிராகரிக்கப்பட்டது மன்னனும் அறியாமல் வலையில் வீழ்ந்தான். தமிழ் அரசர்களும் தம் அறிவை இழந்தனர். தமிழ் மக்களும் தம் அறிவுத்திறமையை இழந்தனர். இதுதான் தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்.

 

இன்று தமிழர்கள் இவ்வேதியர்களை ஒதுக்கி நம் இழந்த அறிவுச் செல்வங்களை புதுப்பித்து முன்னோர்களின் அறிவு வழியில் தமிழர்கள் தொடர்ந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வு வளம் பெறும்.

நன்றி விளக்கியதற்கு.. இன்று வேதியர்களில் முன்னோடியாக சுப்பிரமணிய சாமி உள்ளார்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் முன்னேற்றமே முக்கியம். வேதியர்களை ஒதுக்கி விடுவோம்.

--------------------

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு

 

என்று அருமறை முதல்வன்

 

சொல்லக் கேட்டே

 

பெருமகன் மறையோற் பேணி

 

ஆங்கவற்கு ஆடகப் பெருநிறை

 

ஐயைந்து இரட்டி தோடர் போந்தை

 

வேலோன் தன் நிறை

 

மாடல மறையோன் கொள்க! என்றளித்தாங்கு

-----------

 

@ காவேரி பேஷா ஓடறதோன்னோ! நன்னா இருப்பேள் போங்கோன்னுட்டார்.

 

என்பதற்கு பரிசாக வெகு தங்கம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆக மன்னனே ஏமாந்திருக்கிறான். அறிவு வழியில் வேதியனின் கூற்றை சரி பார்க்காததே - மன்னனின் தவறு.

 

தமிழனுக்கென்று நாடு வரும்போது, அறிவில் சிறந்து உலகிற்கு வாரி வழங்க வேண்டும். அது தான் முக்கியம். இன்னும் சிந்திப்போம். வள்ப்படுத்துவோம்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.