Jump to content

தமிழின் அடையாளச் சின்னமாக முள்ளிவாய்க்கால் முற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ்நாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பதற்கு அயராது உழைத்தவர்களில் ஒருவரும் தமிழின உணர்வாளருமான முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் கடந்த 19.01.2014 அன்று பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, ஊடக இல்லம் ஆகியன இணைந்து செவரோன் மாநகரத்தில் நடாத்திய தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் எழுதிய முள்ளிவாய்க்கால் (குருதிதோய்ந்த குறிப்புகள்), உயிருக்கு நேர் (தமிழ்மொழிப்போர் பின்புலத்துடன்) என்ற இரண்டு புத்தகங்களும், தமிழீழம் என்ற வீடியோ ஆவணப்படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன்போது ஊடக இல்லத்திற்கும் வருகைதந்திருந்த முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஊடக இல்லம்:- சரித்திர நிகழ்வான தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற திறப்பு நிகழ்வின் பின் பிரான்சுக்கு வருகை தந்துள்ளீர்கள். அதன் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

nada%20mut%201.jpg

நடராசன்:- முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஒரு கரு ஐயா நெடுமாறன் அவர்களின் மனதிலே எழுந்தபோது, அதனை எப்படி உருவாக்குவது என்ற ஒரு திட்டத்தை என்னிடம் கொடுத்தார்கள். ஓவியர் சந்தானம் அவர்கள் வரைந்த ஓவியங்கள் இருபதுக்கு இருபது அடி, இருபதுக்கு முப்பது அடி, இருபதுக்கு பதினைந்து அடி ஆகிய அளவுகளில் ஸ்தூபிகளாக நிறுவி, சிறீலங்கா அரசு தமிழர்களை அழிக்கப் பயன்படுத்திய டாங்கி ஒன்றை வைத்து தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதைச் சித்தரித்து ஸ்தூபியாக நிறுவியிருந்தார்கள்.

இதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின்போது, வைகோ, ஐயா நெடுமாறன், நல்லக்கண்ணு மற்றும் நான் இணைந்து ஆரம்பித்துவைத்தோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2010 யூன் 5 அன்று இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வைச் செய்தோம். அதனோட திட்டம் அவ்வளவுதான். எனக்கு அந்தப் படத்தில் உடன்பாடு இல்லாமல் மெல்ல மெல்ல அதனை மாற்றி அமைத்து, முத்துக்குமார் உட்பட ஈழத்தமிழர்களின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை மாய்த்துக்கொண்ட இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பேர்களுக்கு கருங்கல்லினால் ஆன சிற்பங்களை உருவாக்கினோம். மிகவும் சிரமப்பட்டுத்தான் அதை எடுத்துவந்தோம். 26 ரயர்கள் பூட்டிய பெரிய வாகனத்தில் அதனை எடுத்துவந்து, 3 பாரம் தூக்கிகள் மூலம்தான் அதனை இறக்கி வைத்தோம். 80 தொன் உள்ள ஒரே கல்லை வடித்து 50 தொன்னாகக் குறைத்து தமிழ்த்தாய் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்தில் 20 பேர் அடங்கிய சிற்பங்கள் ஒரே கல்லாக வைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் தமிழ் மக்கள் மீது இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டு, பனைமரங்கள் எல்லாம் எரிந்து சரிந்து வீழும் காட்சி மற்றும் மக்கள் தலைசிதறுண்டு படுகொலை செய்யப்பட்ட கோரக் காட்சி தத்ருபமான சிற்பமாகக் கல்லிலே வடிக்கப்பட்டு அங்கு அமைத்துள்ளோம். முள்ளிவாய்க்கால் அழிவு, இந்தியாவில் தமிழர்கள் மடிந்தமை என இரண்டு பக்கமும் அமைத்துள்ளோம். இவற்றைப் பார்த்து அந்தத் தமிழ்த்தாய் கண்ணீர் வடிப்பது போன்ற தோற்றம் உள்ளது.

தமிழ்த்தாய் சிலைக்கு அடிப்பகுதியிலே முள்ளிவாய்க்காலில் குருதிதோய்ந்த வீரமண் அங்குவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்தில் மாவீரனைப் பெற்ற அன்னையின் சாம்பலும் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு புனிதமான இடமாகக் கருதி மக்கள் பார்வையிட்டுவருகிறார்கள். அதனை முடிக்கின்ற போது, திறப்புவிழாவிற்கு முன்னதாக மத்திய அரசும் மாநில அரசும் அதாவது மத்திய அரசை சிறீலங்கா தூண்டி, மாநில அரசை மத்திய அரசு தூண்டி, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டால் தமிழகத்தின் எதிர்ப்பு இன்னும் அதிகமாகும். எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் சொல்ல, அதேபோல இந்திய அரசும் தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் தேர்தல்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் இறையாண்மைக்கு இது சவாலாக அமையும் என்றெல்லாம் அவர்கள் சொல்ல, மாநில அரசும் வேறுவழியின்றி அதனை ஏற்றுத் தடங்கல் விளைவிக்க வந்தபோது, நாங்கள் அந்தத் தடங்கலை வெற்றிகரமாக முறியடித்து, உயர்நீதிமன்றத்தின் நேர்மையான மாண்புமிகு நீதியரசர்களின் உத்தரவைப்பெற்று, நாங்கள் அதன் தொடக்க விழாவைச் சொன்னோம். 8 ஆம் திகதி திறக்கவேண்டியதை முன்னதாகவே 6 ஆம் திகதி திறந்துவிட்டோம். உயர்நீதிமன்றத்தின் முடிவைவைத்துக்கொண்டே திறந்துவிட்டோம். காரணம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு சாதகமாக அமையாவிட்டாலும் பரவாயில்லை என்பதைக் கருதியே அவ்வாறு செய்தோம். ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அப்படித்தான் இந்த நெருக்கடிகளை எல்லாம் மிகவும் சாதுரியமாக பெரிய பொருட்செலவில் எதிர்கொண்டோம். மூன்று நாட்களில் இரண்டு பெரிய வழக்குகளையும் சந்தித்து 6 ஆம் nada%20mut%202.jpgதிகதி திறந்து, பின்னர் திட்டமிட்டபடி 8 ஆம் 9 ஆம் திகதிகளில் அழைக்கப்பட்ட அத்தனை பெரிய அறிஞர்கள் தலைவர்களை வைத்து அந்தக் கூட்டத்தை நடத்தினோம். ஒரு தனி அரசியல் கட்சி நடத்தமுடியாத அளவிற்கு மிகப்பெரிய ஒரு மாநாட்டுத்திடலை அமைத்து அங்கு நடத்தி முடித்தோம்.

ஐயா திட்டம்போட்டது, முள்ளிவாய்க்கால் முற்றத்தினைத் திறந்துவிட்டு, தஞ்சையிலே தமிழரசி மண்டபத்திலே கூட்டத்தை வைப்போம் என்று சொன்னார்கள். நாம் இங்கிருந்து அங்கு போவதும் வருவதும் மிகச்சிரமம் என்ற காரணத்தால் அருகிலேயே ஏழு ஏக்கர் நிலத்தை வாங்கி 15 ஆயிரம் கதிரைகளைப் போட்டு, 20 ஆயிரம் பேர் நிற்பதற்குமான மண்டபத்தை அமைத்து அந்த இடத்திலே கூட்டமேடையை அமைத்தோம். தடைகளையும் தாண்டித் தொடங்கிவிட்டோம். தொடங்கிய பின்னர் மூன்று நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, முதல் நாள் நிகழ்வில் பேசிய தலைவர்கள், நேரம் கடந்து பேசியதனால் சில சிக்கல்களை எதிர்கொண்டோம். 

ஊடக இல்லம்:- முள்ளிவாய்க்கால் முற்றம் உடைக்கப்பட்டதாக செய்திவந்தபோது உலகத் தமிழ் மக்களின் மனங்களும் உடைந்து போனது அதுபற்றி?

நடராசன்:- அதற்கு அரசாங்கத்தை மட்டும் குறைசொல்லுவது தவறு, நம்மிடத்தே உள்ள குறைபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள். 10 மணிக்கு முடிக்கவேண்டிய உத்தரவு இருக்கின்றது பார்த்துக்கொள்ளுங்கள் என்று நான் சொன்னேன். ஆனால் எல்லோரும் மீறிவிட்டார்கள். அதனால்தான் சில சிக்கல்கள் எழுந்தன. அரசாங்கம் நம்மை மீறிச் செய்கிறார்கள் என்று தடங்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. பேசியவர்கள் சில வரைமுறைகளைத்தாண்டி வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக அதாவது, உடைப்பீர்களா உடைத்தால் இடுப்பை உடைப்போம் என்று எல்லாம் பேசியது, அரசாங்கத்திற்கு ஆத்திரத்தை உண்டுபண்ணி, முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பாதுகாப்புச் சுவரை அதாவது அவர்களின் பகுதிக்குள் இருந்த சுவரை உடைத்தார்கள். கடந்த பொங்கல் விழாவில் நான் கலந்துகொண்டபோது, ஒரு தாயார் கேட்டார், எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துவிடுவார்களோ என்று. இது எனக்கு மிகவும் கலக்கமாக இருந்தது. அதற்கு நான்சொன்னேன், `யாரும் இடிக்க முடியாது, இது நம்முடைய இடம். நாம் கஸ்டப்பட்டு வாங்கிக் கட்டிய இடம். இதை யாராலும் இடிக்கமுடியாது. கவலைப்படாமல் இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று.

அந்தளவிற்கு கஸ்டப்பட்டு அதைச் செய்தோம். இதில்  பலரது ஒத்துழைப்பு இருந்தது. வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பு நாங்கள் வேண்டாம் என்று சொல்லியும் சிலர் தாமாகவே முன்வந்து செய்துள்ளனர். பாரிசில் இருந்தும் கனடாவில் இருந்தும் ஏனைய பகுதிகளில் இருந்தும் கொடுத்துள்ளதாக செவிவழிச் செய்தியாக எனக்குக் கிடைத்தது. அதைவிட நாம் உள்ளநாட்டிலேயே எல்லாக் கஸ்டங்களையும் பட்டு செய்துமுடித்து விட்டோம். ஒரு நூறு பேரை வைத்துக்கொண்டு முற்றத்தைத் திறந்துவைத்தபோது, ஒரு சுகப்பிரசவம் இடம்பெற்றதைப்போன்ற ஒரு நிலையைத்தான் நான் உணர்ந்தேன். ஒரு நல்ல பிரசவம் நிகழ்ந்ததும் ஒரு தாய் பல நாள் சுமந்து கஸ்டப்பட்டுத் தாங்கிய குழந்தையை பெற்றெடுக்கின்றபோது, என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வுதான் எனக்கும் ஐயா நெடுமாறனுக்கும் ஏற்பட்டது.

அதன்பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் எமக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்கள். அப்படிச்செய்துவிட்டார்களே, இப்படிச்செய்துவிட்டார்களே என்று விமர்சித்தார்கள். அதுபற்றியே எந்த அக்கறையும் இல்லாமல் நாங்கள் அந்தப் பிரச்சினைகளை எல்லாம் மிக இலாவகமாக சந்தித்தோம். அதற்குப்பிற்பாடு ஐயா நெடுமாறன் அவர்கள் 8 நாட்களும் நான் 82 நாட்களும் சிறையில் இருந்தோம். நான் விளையாட்டாக `ஐயா 8 நாட்கள், நான் 82 நாட்கள், மீதி 10 நாட்கள் நீ உள்ளே இருந்திட்டு வா’ என்று சீமானைப் பார்த்து சொன்னேன். அந்தளவிற்கு நாங்கள் அவற்றை எளிமையாக எடுத்துக்கொண்டோம். ஏனென்றால் நோக்கம் நிறைவேற்றிவிட்டோம். அதிலே எனக்கு கஸ்டம் வந்திருக்கலாம். ஐயாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. திறப்பு விழாவரைக்கும் தாங்குவாரோ என்ற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டது. அந்தளவிற்கு கஸ்டப்பட்டு அவர் இராப் பகலாக அங்கேயே தங்கியிருந்தார். நான் வெளியெல்லாம் சுற்றி அதை இதை என்று வாங்கிவருவதும், அவர் அங்கேயே இருந்து ஒவ்வொரு படங்களையும் எங்கே வைப்பது. படம் வரைவது என முழுப்பொறுப்பையும் அவரே எடுத்துக்கொண்டார். எந்தெந்தத் தலைவர்கள், மாவீரர்கள் படங்கள் என்று எவற்றையும் விடாது வைக்கவேண்டும் என்று கவனமாக இருந்தார். இவ்வளவு செய்தபின்னரும் காமராயரை வைக்கவில்லை, பெரியாரை வைக்கவில்லை என்றெல்லாம் சொல்றாங்க.

மிகவும் அற்புதமான ஒரு வரலாற்றுச் சின்னம். இன்னும் சொல்லப்போனால் தமிழின் அடையாளச் சின்னமாக முள்ளிவாய்க்கால் இப்பொழுது அமைக்கப்பட்டுள்ளது. அதிலே எங்களுடைய பணி முடிந்துவிட்டது. நாம் மக்களுக்கு ஒப்படைத்துவிட்டோம். வருங்கால சமூகத்துக்கு ஒப்படைத்துவிட்டோம். அவர்களின் கையில் இதனுடைய பாதுகாப்பும் இதனைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தொடர் நடவடிக்கைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் சமர்ப்பணம் செய்துவிட்டோம் என்று ஐயா சொன்னார்கள் அதுதான் உண்மை. அத்தோடு எங்கள் பணி முடிந்துவிட்டது என்பதல்ல. அந்தப் பொறுப்புகளை இளைஞர்கள் வருங்கால சமூகத்தினர் ஏற்று நடத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது. மெல்ல மெல்ல மக்கள் வந்து பார்வையிட்டுச்செல்லும் மதிப்பும் மரியாதைக்கும் உரிய இடமாக அது மாற்றப்பட்டுள்ளது.

அங்கு வருகின்ற சின்னக் குழந்தைகள் கூட எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பாலச்சந்திரனின் சிலையைப் பார்த்து அழுதுவிடுகிறார்கள். அங்குசென்று அழாதவர்கள் யாருமில்லை. பார்த்துவிட்டு வெளியில் வருபவர்களின் மனதில் ஏற்படும் விம்மல்கள் சொல்லமுடியாதவை. கதவை செய்த தச்சுத்தொழிலாளி, அதில் பொறிக்கப்படவேண்டிய படத்தைக் காட்டியதும், தனக்கு இரவு முழுதும் தூக்கமில்லை என்று குறிப்பிட்டார். பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்த உணர்வுதான். வெளிநாட்டில் இருந்து வந்த டாக்டர் இந்துமதி, இலங்கையில் இருந்து வந்த ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர் அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு, கண்கலங்கினர். ‘நீங்கள் அங்கேயே இருந்து பிரபாகரன் பக்கத்தில் இருந்து போர் நடவடிக்கை எல்லாம் பாரத்தவர்கள், நீங்கள் கண்கலங்கலாமா’ என்று கேட்டேன்.

‘இல்லை நான் தொலைதூரத்தில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் நிறைய வேறுபாடு உள்ளது’ என்றுகூறும் அளவிற்கு இது ஒரு பெரிய நிகழ்வாக தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தப்போகின்ற நிகழ்வாக அமைந்துவிட்டது. அந்தத் திருப்புமுனை எந்த உருவத்தில், எக்காலத்தில், யாரால், எப்படி வெடிக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியாது.

(தொடரும்)

சந்திப்பு: கந்தரதன்  

படங்கள்: சுபன், சோழ.கரிகாலன்

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் அருமை. முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைத்தற்கு நன்றி. ஆனால் அது மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (15.02.2014) நடந்த திமுக வின் மாநில மாநாடு 250 ஏக்கரில் அமைக்கப்பட்ட மாபெரும் கொட்டகையில் நடைபெற்றது. அதுபோன்று நடராஜன் ஒரு பெரிய இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைத்திருக்கலாம். அதனால் தமிழ் தேசிய கட்சிகளின் ஒரு கூட்டம் நடைபெறும் இடமாகவும் இதனை வடிவமைத்திருக்கலாம். அதனை விட்டு ஒரு சிறிய இடத்தில் அமைத்து விட்டு நான் அமைத்தேன் என விளம்பரம் செய்வது நேர்த்தி இல்லையே. வடிவமைத்தவர்களை பாராட்டி ஒரு பெயர் பட்டியல் அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையே ஏன்??? நடராஜன் ஒரு கருவி, நெடுமாறன் ஒரு கருவி, சந்தானம் ஒரு கருவி மற்றவர்கள் .....யாரும் இல்லையோ? ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு இப்பொதிருப்பது நலம். இன்னும் விரிந்த பார்வை வேண்டும். பழங்கால கோயில்களை பாருங்கள். ராசராசனின் தஞ்சை பெரிய கோயில் ஒரு எடுத்துக்காட்டு. தமிழர் உழைப்பான திருமலை திருப்பதியைப் பாருங்கள், தமிழனின் காளகஸ்தியைப் பாருங்கள் புரியும்......

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.