Jump to content

'தாயகம் கடந்த தமிழ்' : தமிழ்நாட்டில் ஓர் அனைத்துலக கருத்தரங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Malan.jpg

'தாயகம் கடந்த தமிழ்' எனத் தலைப்பிடப்பட்ட அனைத்துலக கருத்தரங்கம் ஒன்றை 'தமிழ் கலாசாரத்திற்கான மையம்' தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தியுள்ளது. இந்தக் கருத்தரங்கானது ஜனவரி 20-22 வரை இடம்பெறவுள்ளது. இதில் முதன்மையான தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் புலமையாளர்கள் பங்கேற்கின்றனர். தாயகம் கடந்த தமிழ் என்கின்ற இக்கருத்தரங்கில் உலகெங்கும் வாழும் 35 வரையான வல்லுனர்கள் பங்குபற்றுவுள்ளதாக தமிழ் கலாசாரத்திற்கான மையத்தின் நிறுவனரான ஜி.பழனிசுவாமி தெரிவித்துள்ளார். 

மலேசியாவைச் சேர்ந்த ஆர்.கார்த்திகேசு, கனடாவைச் சேர்ந்த சேரன், அ.முத்துலிங்கம், பிரான்சைச் சேர்ந்த நாகரத்னம் கிருஸ்ணா, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எஸ்.பொன்னுத்துரை, மலேசியாவைச் சேர்ந்த சண்முக சிவா மற்றும் முத்து நெடுமாறன், ஜேர்மனியைச் சேர்ந்த உள்றிச் நிக்கோலஸ், சீனாவைச் சேர்ந்த கலைமகள், சிங்கப்பூரைச் சேர்ந்த சீதாலக்சுமி மற்றும் அழகையா பாண்டியன் போன்ற வல்லுனர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக அனைத்துலக கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரான மூத்த ஊடகவியலாளர் மாலன் தெரிவித்துள்ளார். 

இலக்கியம், ஊடகம், தொழினுட்பம், கல்வி போன்ற நான்கு துறைகள் சார்ந்த மூன்று அமர்வுகளும், அடுத்த தலைமுறையினருக்கு தமிழைக் கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக நான்கு அமர்வுகளுமாக மொத்தம் ஏழு அமர்வுகள் இடம்பெறவுள்ளது. 

இந்தக் கருத்தரங்கில் 12 நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்திமான்கள் மற்றும வல்லுனர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக இந்த மையத்தின் காப்பாளர்களில் ஒருவரான சிற்பி பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

இது போன்ற பல்வேறு கருத்தரங்குகளை ஏற்கனவே தமிழ் கலாசாரத்திற்கான மையம் ஒழுங்குபடுத்தியுள்ளதாகவும் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். கொங்கு பிராந்தியத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களை மையப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை தமது மையம் ஒழுங்குபடுத்தியுள்ளதாக பாலசுப்ரமணியம் மேலும் தெரிவித்தார். 

இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் அமெரிக்க இலக்கியம், ஆபிரிக்க இலக்கியம் போன்று தமிழ் இலக்கியத்திற்கான புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட முடியும் என திரு.மாலன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பலர் தாம் தமது சொந்த நாடான சிறிலங்காவில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள் தமது அனுபவங்கள் தொடர்பாக பகிர்ந்து கொள்வதென்பது உண்மையாக உள்ள அதேவேளையில், புலம்பெயர் தமிழ் இலக்கியமானது சிறிலங்காவில் உள்ளவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது என்பது பிழையான கருத்து எனவும் ஊடகவியலாளர் மாலன் குறிப்பிட்டுள்ளார். 

அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளில் வாழும் மக்களால் வெளியிடப்படும் வெளியீடுகள் போன்றன புலம்பெயர் தமிழ் இலக்கியத்திற்குள் உள்ளடங்குகின்றன. புலம்பெயர் தமிழ் மக்களின் அனுபவங்கள் மற்றும் பணிகள் போன்றன மற்றையவர்களை விட வேறுபட்டதாக உள்ளன. இந்தக் கருத்தரங்கில் பெண்ணிய இலக்கியம், பின்நவீன இலக்கிய போன்ற பல்வேறு இலக்கியங்கள் தொடர்பாக ஆராயப்படலாம் என 
மாலன் மேலும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டுக்கு அப்பால் எழுத்தாளர்களின் பணிகள் கொண்டு செல்லப்படுவதுடன், உலகெங்கும் வாழ்வோர் அனைத்து வெளியீடுகளையும் வாசிப்பதற்கு மின்பதிப்பு மிகவும் சிறந்த வழியாக இருக்கும் எனவும் இதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மாலன் தெரிவித்தார். இவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைப்பதை தான் வரவேற்பதாகவும் மாலன் குறிப்பிட்டார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140121109820

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.