Jump to content

தமிழ்ப்பெயர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்பெயர்கள்

 

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு.
1456134_649511025107349_1358724850_n.jpg

 

Link to comment
Share on other sites

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு சூப்பர் அப்பு. அப்ப வடைக்கு ஆங்கிலத்தில் எப்படி சொல்வது? தமிழ் பாரம்பரிய உணவுகளின் பெயர்கள் தமிழ் சொல்லாகவே உள்ளது. மற்றவர்களின் உணவை அந்த பெயராலேயே அழையுங்கள்.

Link to comment
Share on other sites

கூல் ட்ரிங்ஸ் = குளிர்பானம் என்று நினைத்திருந்தேன். பானம் என்பது தமிழ் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் தமிழர்களுக்கு நாடு ஒன்றை அமைத்துக்கொள்ளுவம் அதற்க்கு பிறகு இந்த தமிழ் பெயர்களைப் பற்றி பார்ப்போம்.
 
இது எனது ஆதங்கம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் ஒத்துக்கொள்கிறேன். தமிழனுக்கு இந்த உலகில் நாடு ஒன்று வேண்டும். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கியம் இன்றைய உலகிற்கு பொருந்தாது. ஆனால் இதுவும் நமக்கு வேண்டும் ஏனெனில் உலகில் உள்ள அத்தனை மொழிகளையும் எடுத்து விட்டாலும் தமிழால் மட்டும்தான் தனியே நிற்க முடியும். தமிழனின் அறிவுச் சொத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. அழிந்தவை போக மீதி. அதை இன்றைக்கு நம்மால் புரிந்து கொள்ளமுடியாததற்கான காரணம் இதுதான். அயல்மொழிச்சொற்களை அப்படியே ஏற்றுக்கொண்டதுதான். 

 

விரைவில் நம் அறிவுச் சொத்துக்களின் ஒரு பகுதி வெளிவர முயற்சி செய்கிறோம். அதென்னவெனில் உலகின் எப்பகுதியிலும் இயற்கையை உணர்வது. அதாவது மழை பெய்வதை குறைந்த பட்சம் 8 நாடகளுக்கு முன்பே தமிழனின் கணிப்பினால் உறுதியாக சொல்ல முடிய்ம். புயல், சூறாவளி, சுனாமி (ஆழி....) போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. எங்களுக்கு தேவை இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிவாளிகள் (Intellectuals). யாரேனும் இருந்தால் இணைப்பில் வரவும். யாழில் வெளியிடப்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...

அது தமிழ் மொழியின் புலமை..

தமிழ் என்ற வார்த்தைக்கு எல்லா மொழியிலும் 'தமிழ்' தான் அது தமிழ் மொழியின் வலிமை..

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும் அழகுதமிழில் அர்த்தம் உண்டு..

அது தமிழ் மொழியின் பெருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு கரு என்பது ஒரு ஆண், பெண் இருவரும் சேர்ந்து உருவாக்குவது.

அதாவது இரண்டு உடல்களும் இரண்டு உயிர்கள் ஒன்றாக கலந்து ஒரு கருவை உருவாக்குகிறது. அது போல தமிழ் மொழியில் கரு என்ற வார்தையை உருவாக்க இரண்டு மெய்யும் (மெய் எழுத்துக்களும்) இரண்டு உயிரும் (உயிர் எழுத்துக்களும்) தேவை படுகிறது. கரு உருவாவதை எழுத்து வடிவத்திலேயே சொல்லும் தமிழின் பெருமையை என்னவென்று சொல்வது.

www.eelavenkai.blogspot.com
1473015_730714513607189_1146103461_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1486679_624546497592472_2127990864_n.jpg

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரிதமான உலகமயமாக்கல்நடைபெறுகையில் நாம் புதிது புதிதாகத் தமிழப்பெயர்களை உருவாக்குவதில் பெரிய பிரயோசனம் வரப்போவதில்லை.  வேற்று நாடுகளுக்கோ வேறு மொழி பேசப்படும் பிரதேசங்களுக்கோ செல்பவர்கள் இத்தகைய பெயர்களை வைத்துக் கொண்டு எதை வாங்கிச் சாப்பிட முடியும்.  வேண்டுமானால் நமது ஊர்களில் இதனைப் பாவிக்கலாம். வாய்ப்பனை யாழ்ப்பாணத்திற்கு வெளியே போனால் கேட்டு வாங்க முடியாது.

மாணவர்களின் விஞ்ஞான, கலைப் பாடங்களுக்கான கல்வியறிவைத் தாய்மொழி மூலப் போதனையின் மூலம் மேம்படுத்தத் தமிழக் கலைச்சொற்களை உருவாக்கினால் அது உதவியாயிருக்கும்.  அதற்கும் ஒரு எல்லை வேண்டும். தற்போது ஜெனிவாப் பெயரீட்டுத் திட்டத்தைச் சர்வதேசம் ஏற்றுக்கொண்டு பல விஞ்ஞானப் பெயர்களைக் குறிப்பாக இரசாயனப்பெயர்களையும், இனப் பாகுபாட்டுப் பெயர்களையும்  எல்லா மொழிகளிலும் ஒன்றாகவே பாவிக்கின்றனர்.

சுவாமி விபுலானந்தர் இந்த விடயத்தில் முயன்று அது தனது அரிய நேரத்தைச்செலவிட்டார்.  ஆனால் அவரது முயற்சி விழலுக்கிறைத்த நீராய்ப் போனது.  உதாரணமாக ஒட்சிசனுக்குத் தீயகமென்றும், நைதரசனுக்குக் காலகமென்றும் பெயரிட்டு நைதரசனீரொட்சைட்டுக்குக் காலகத் தீயதை எனப் பெயரிட்டார்.  இந்த முயற்சி பின்னர் யூனிவேசல் விஞ்ஞானப்பெயர்கள் உருவாக்கப்பட்ட பின்னர் கருத்தற்ற முயற்சியாகிவிட்டது. 

 

இப்படித்தான் விசுக்கோத்துக்குப் பெயர் வைத்தாலும் எதிர்காலத்தில் நடக்கும்.  ஆகவே கண்ணை மூடிக்கொண்டு பெயர்களை உற்பத்தி செய்வதைவிடத் தேவையறிந்து  தமிழ்ப் பெயர்களையுருவாக்குவதே அறிவு பூர்வமானதாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.