Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

பொய் சொல்வது உன் நியதி என்றால்,யாருக்கு எதைச்

சொன்னாய் என்று தெரியாத பரிதாப நிலையையும் நீ சந்திக்க நேரிடும்.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply

திகதி 19

பொய் சொல்வது உன் நியதி என்றால்,யாருக்கு எதைச்

சொன்னாய் என்று தெரியாத பரிதாப நிலையையும் நீ சந்திக்க நேரிடும்.

முற்றிலும் உண்மை.. தெரிந்தவர்களில் சிலர் இப்படி மாற்றிமாற்றி பொய் சொல்லிவிட்டு முழிப்பதைக் கண்டிருக்கிறேன்..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

பொய் சொல்வது உன் நியதி என்றால்,யாருக்கு எதைச்

சொன்னாய் என்று தெரியாத பரிதாப நிலையையும் நீ சந்திக்க நேரிடும்.

வாயில் வந்த உடன் பொய் சொல்கிறவர்களுக்கு இது எல்லாம் சிம்பிள் பிரச்சனை..சிலர் யோசிச்சு,யோசிச்சு பொய் சொல்லி மற்றவர்களை முட்டாள்கள் ஆக்குவார்கள்.சிலர் பட் என்று பொய் சொல்வார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாயில் வந்த உடன் பொய் சொல்கிறவர்களுக்கு இது எல்லாம் சிம்பிள் பிரச்சனை..சிலர் யோசிச்சு,யோசிச்சு பொய் சொல்லி மற்றவர்களை முட்டாள்கள் ஆக்குவார்கள்.சிலர் பட் என்று பொய் சொல்வார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்..

அதை கண்டுபிடிப்பதில் தான்... உங்கள் கெட்டித்தனத்தை உலகறியும். :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

தொடங்குவதை நன்றாகத் தொடங்கினால்,

அதுவே பாதி வெற்றியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 21

உன் சொற்கள் எப்படியிருக்கிறதோ

அந்தளவிற்கு நீ மதிக்கப்படுவாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

பெண்ணியம் பேசுவோர் கண்ணீரால் கதைக்க கூடாது;

கண்ணீரால் கதைப்போர் பெண்ணியம் பேசக் கூடாது.

கண்ணீரைப்பயன்படுத்தாததால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறோம் என்று எனக்குத்தானே தெரியும்.

ரதி இணைத்த அனைத்துப் பொன் மொழிகளிலும் ஒரு சிலதைத்தவிர பல மொழிகள் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரைப்பயன்படுத்தாததால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறோம் என்று எனக்குத்தானே தெரியும்.

ரதி இணைத்த அனைத்துப் பொன் மொழிகளிலும் ஒரு சிலதைத்தவிர பல மொழிகள் நன்றாக இருக்கிறது.

வருகைக்கு நன்றி அக்கா...விடுமுறையில் நிற்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறையில் நிற்கிறீர்களா?

பாத்தியளே..பொம்பிளையல் சேர்ந்தால்....விடுப்பை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

பணிவாக நடந்து கொள்வது மேலதிகாரிகளிடம் எனில் கடமை;

சமமானவர்களிடம் எனில் பண்பாடு; கீழானவர்களிடம் எனில் பெருந்தன்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

சந்தோசமாகக் கதைத்து தீர்க்க பிரச்சனைகள் தொடர்ந்ததில்லை;

கதைத்து தீர்க்காத பிரச்சனைகள் முடிந்ததில்லை.

Link to comment
Share on other sites

திகதி 23

சந்தோசத்தை கதைத்து தீர்க்க பிரச்சனைகள் தொடர்ந்ததில்லை;

கதைத்து தீர்க்காத பிரச்சனைகள் முடிந்ததில்லை.

ரதி, சந்தேகத்தையா அல்லது சந்தோசத்தையா கதைத்துத் தீர்க்க வேண்டும்? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, சந்தேகத்தையா அல்லது சந்தோசத்தையா கதைத்துத் தீர்க்க வேண்டும்? :unsure:

நன்றி குட்டி சுட்டிக் காட்டியதற்கு அவசரத்தில் பிழையாக எழுதிப் போட்டேன்...இப்பவெல்லாம் ரதிக்கு வேறு ஞாபகங்கள் கூடிப் போச்சு :lol:

Link to comment
Share on other sites

திகதி 23

சந்தோசமாகக் கதைத்து தீர்க்க பிரச்சனைகள் தொடர்ந்ததில்லை;

கதைத்து தீர்க்காத பிரச்சனைகள் முடிந்ததில்லை.

ரதி, சந்தேகத்தையா அல்லது சந்தோசத்தையா கதைத்துத் தீர்க்க வேண்டும்? :unsure:

நான் நினைச்சன் 'சந்தேகத்தைக் கதைத்துத் தீர்க்க பிரச்சனைகள் தொடர்ந்ததில்லை' என்று... ^_^

நன்றி குட்டி சுட்டிக் காட்டியதற்கு அவசரத்தில் பிழையாக எழுதிப் போட்டேன்...இப்பவெல்லாம் ரதிக்கு வேறு ஞாபகங்கள் கூடிப் போச்சு :lol:

ஹிஹி... அது நல்லாவே தெரியுது ரதி... :lol::rolleyes: அந்தப் பக்கம் நிறைய halal இறைச்சிக் கடைகள் திறந்து இருக்கிறார்கள் போல... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 24

பணிந்து வாழ்ந்தால் உயர்ந்து போவாய்;

நிமிர்ந்து திரிந்தால் இறங்கி வருவாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

விரோதி உன் குறைகளை பிறரிடம் சொல்வான்; நண்பன் உன்

குறைகளை உன்னிட‌மே சொல்வான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 26

காதலித்தவளை கல்யாணம் செய்யாமல் விடுவதும் தப்பு;

கல்யாணம் செய்தவளைக் காதலிக்காமல் விடுவதும் தப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

விரோதி உன் குறைகளை பிறரிடம் சொல்வான்; நண்பன் உன்

குறைகளை உன்னிட‌மே சொல்வான்.

அதுதான் நட்பு ,

நட்பு எல்லா உறவுகளிற்கும் மேலானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

உள்ளத்தால் த‌ன்னும் மனிதனாய் வாழ்!

உயர்வுக்கு அது தான் முதற்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

உள்ளத்தால் த‌ன்னும் மனிதனாய் வாழ்!

உயர்வுக்கு அது தான் முதற்படி.

உண்மை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நட்பு ,

நட்பு எல்லா உறவுகளிற்கும் மேலானது

இந்த காலத்தில் உண்மையான நட்பு கிடைப்பது கஸ்ட‌ம் :(

உண்மை...

உண்மை தான் ஆனால் யார் அப்படி இருக்கிறாங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

இளமையின் காதலில் உண்மை இருந்தால்

மரியாதை கொடுக்க வேண்டியது முதுமையின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

தான் பெற்ற செல்வங்களுக்குத் தாமாகவே உணர்ந்து

தாய்ப்பாலை ஊட்டுவதே உண்மையான தாய்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

நல்ல செயல்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டும்;

அவை நம்மை நாடி வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

நல்ல செயல்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டும்;

அவை நம்மை நாடி வராது.

கண்டிப்பாக........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.