Jump to content

பசில் தலைமையிலான மூவரணியுடனான சந்திப்பை திடீரென இடைநிறுத்தியது புதுடெல்லி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Indo-lanka%20flages.jpg

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணியுடன் எதிர்வரும் 24ம் நாள் நடத்தவிருந்த சந்திப்பை இந்திய அரசாங்கம் திடீரென- காரணம் ஏதுமின்றி இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கம் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபரோ அல்லது அமைச்சர்களோ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில் இந்தியாவுடனான சிக்கலைத் தீர்ப்பதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, புதுடெல்லி செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்.

இந்தப் பயணத்தின் போது வடக்கு,கிழக்கு அரசியல் விவகாரம், சிறிலங்கா அரசின் தீர்வு போன்ற விடயங்கள் குறித்து இந்தியாவின் உயர்மட்டத்துடன் கலந்துரையாட அவர் திட்டமிட்டிருந்தார்.

வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள சிறிலங்கா தொடர்பான பூகோள மீளாய்வுக்குப் பொறுப்பாக உள்ள மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், அதற்கு முன்னர், இந்தியாவுடனான உறவுகளை புதுப்பித்துக் கொள்ள சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால் இந்த வேண்டுகோளுக்கு புதுடெல்லி உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

சட்டமன்ற தேர்தல் பரப்புரைகளைக் காரணம் காட்டி, சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாது என்று பசில் ராஜபக்சவுக்கு மிகவும் தாமதமாகவே, இந்தியா பதில் அனுப்பியது.

இது சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

இந்தநிலையில், கடந்தவாரம் இந்திய அரசாங்கம் தமது திடீரென மௌனத்தைக் கலைத்து விட்டு பசில் ராஜபக்சவை சந்திப்பதற்கு ஓகஸ்ட் 24ம் நாள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியது.

இதையடுத்து பசில் ராஜபக்ச தலைமையில், சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் புதுடெல்லி செல்வதற்குத் திட்டமிடப்பட்டது.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வு, போர் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று இந்தியாவிடம் கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்டது.

ஆனால், முன்னைய கலந்துரையாடல்களில் வடக்கு, கிழக்கு பிரச்சினை, அரசியல் தீர்வு, சம்பூர் அனல் மின்திட்டம், மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய இந்தியா இம்முறை சீனா பற்றிய விவகாரத்தையே முன்ன்லைப்படுத்துமாறு கூறியது.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் குறித்தும், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் இராணுவ வீடமைப்புத் தொகுதிகள் குறித்தும் கலந்துரையாட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.

அத்துடன் வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான காலவரம்பை நிர்ணயிப்பது குறித்தும் இந்தியா பேசவிரும்புவதாக தகவல் அனுப்பியது.

இருந்தபோதிலும், கடந்தவாரம் பசில் ராஜபக்ச குழுவினருடனான சந்திப்புகளை திடீரென இந்தியா நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinapp...?20120814106794

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.