Jump to content

அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி


Recommended Posts

அப்பாவின் ஈர நினைவுகள்....

 


வேர்களில் இருந்து கசியும்
நீராய் அப்பாவின்
நினைவுகள்
எனக்குள்..

 

 

ஐந்து வயது வரை நடக்கமுடியாது
தவிக்கும் போது
தோள்களில் தூக்கி
திரிந்த காலங்கள்...
பனைவெளிகளின் ஊடாக
சைக்கிள் பாரில் எனை
வைத்து கதை
சொல்லிய பொழுதுகள்....
பெரும் குளக்கட்டின் ஓரம்
தடுக்கி விழாமல் இருக்க
விரல்கள் இறுக்கி
நடந்த நேரங்கள்...
பெரும் மழை சோ என்று கொட்ட
நனைதலின் சுகம் சொல்லித்
தந்த தருணங்கள்...

 


இப்பதான் நடந்ததாய்
தெரியும் பொழுதுகளெல்லாம்
எப்பவும் தொட முடியாத திக்கில்
உறைந்து விட்ட சித்திரங்களாய்...
ஆற்றாத் துயர் அணை மேவினும்
நெருங்க முடியாத தூரங்களாய்....

பசிய இலையொன்றின்
அந்திம காலத்து உதிரும்
தவிப்பில் அப்பாவை கண்ட
இறுதிப் பொழுதுகளில் தான்
வாழ்வின் நிதர்சனம்
எனக்குள் புகுந்து கொண்டது...
பெரும் மரமாய்
சூறைக் காற்றாய்
அலை எழும் கடலாய்
நான் கண்ட அப்பாவின்
உடல் தீயில் உருகிய
தருணங்களி தான்
வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி
'இது விலா எழும்பு
'இது மூட்டெழும்பு' என்று
அவரது
எலும்புகளை பொறுக்கிய
அந்த வினாடிகளில்தான்
வாழ்க்கையின் பரிமாணமும்
பிடிபட்டது..

இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்
ஈரத்தில் அவர் கண்களில்
தெரிந்த ஈரம் எனக்குள்
தெரிகின்றது....

இப்படியான சில
கணங்களில்
நானே அவராக மாறிவிடுவம்
இல்லை அவரே நானாக
ஆகிவிடுவதும்
நடக்கத்தான் செய்கின்றன....

 

மார்ச், 25 2013

 

------------

 

இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,

 

 

Link to comment
Share on other sites

இப்படியான சில

கணங்களில்

நானே அவராக மாறிவிடுவம்

இல்லை அவரே நானாக

ஆகிவிடுவதும்

நடக்கத்தான் செய்கின்றன....

 

காலவெளியில் அப்பா அம்மா என்ற பதவிகள் நிரந்தரமானவை . அவற்றை நிரப்ப மகனும் மகளும் சுழற்சிமுறையில் வந்து கொண்டேயிருப்பார்கள் . அப்பொழுது ஒவ்வொரு சம்பவமுமே தித்திப்பான நினைனைவுகள் தான் . ஆனால் , நவீன உலகியல் ஒழுங்கில் இந்த உணர்வுகளும் அளவிடக்கூடியதோ என்று எண்ண வைக்கின்றது . நினைவுக் கவிதைக்கு எனது பாராட்டுக்கள் நிழல் :) :) .

Link to comment
Share on other sites

இப்படியான சில

கணங்களில்

நானே அவராக மாறிவிடுவம்

இல்லை அவரே நானாக

ஆகிவிடுவதும்

நடக்கத்தான் செய்கின்றன....

 

காலவெளியில் அப்பா அம்மா என்ற பதவிகள் நிரந்தரமானவை . அவற்றை நிரப்ப மகனும் மகளும் சுழற்சிமுறையில் வந்து கொண்டேயிருப்பார்கள் . அப்பொழுது ஒவ்வொரு சம்பவமுமே தித்திப்பான நினைனைவுகள் தான் . ஆனால் , நவீன உலகியல் ஒழுங்கில் இந்த உணர்வுகளும் அளவிடக்கூடியதோ என்று எண்ண வைக்கின்றது . நினைவுக் கவிதைக்கு எனது பாராட்டுக்கள் நிழல் :) :) .

 

நன்றி கோமகன்.

 

நீங்கள் வாசிக்கும் போது இந்தக் கவிதையை முழுமையாக இணைக்க வில்லை. Notepad இல் எழுதி பின் அதில் இருந்து copy and paste செய்யும் போது முதல் பகுதியை கொப்பி பண்ண மறந்து விட்டேன். :(

 

இப்ப முழுமையாக இணைத்துள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் ஒரு தந்தையின் இழப்பு என்பது எதனாலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.

அப்பாவின் மரணத்துக்குப் போகும் பாக்கியம் கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அவர் இல்லாத காலங்களை எல்லாம் நினைத்தால் தந்தை என்ற பாத்திரம் வகிக்கும் பங்கு புரியும்.

இன்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிற்கிறேன்.

எப்பவும் நினைப்பதுண்டு அப்பா இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று.

 

அம்மாவை விட எனக்கு எப்பவும் அப்பாவைத் தான் பிடிக்கும்.

என்னால் இன்னும் நம்ப முடியவில்லை அவரின் இழப்பை. :(

Link to comment
Share on other sites

அப்பாவின் ஈர நினைவுகள்....

என் பிள்ளைகளை காணும் போதும்

அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்

தவறுகளைத் திருத்தும் போதும்

கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்

அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்

மீண்டும் மீண்டும் என் அப்பாவின்

நினைவுகள் எழுகின்றன

அவர்கள் இடும் முத்தத்தின்

ஈரத்தில் அவர் கண்களில்

தெரிந்த ஈரம் எனக்குள்

தெரிகின்றன.

------------

 

இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,

 

பிரிவின் பின்னரே அதன் வலி தெரியும். பெற்றோர் எமக்காக பட்டு துன்பங்கள் எமக்காக இழந்தவற்றை எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் இழக்கிற போதே அதன் பெறுமதி புரியும்.

'பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளைமனம் கல்லு என்பார்   என்ற ஈழத்து மெல்லிசைப் பாட்டில் இப்படி ஒரு வரி வரும்:- அம்மா அப்பா ஆனபின்னே அனுபவம் விளங்கும் சும்மா சொன்னால் புரிவதில்லை இந்த தத்துவம்' இவ்வரி எல்லாப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

அப்பாவின் பிரிவில் அந்த வாழ்வின் பிடிமானத்தை கவிதையாக்கி எனது அப்பாவையும் ஞாபகம் தந்து நிழலிக்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, நானும் உங்களைப்போலவே, இளவயதில் அப்பாவை இழந்தவன் என்ற முறையில், உங்கள் கவிதையை, அந்த உணர்வுகளை,யதார்த்தமாகப் புரிந்து கொள்கிறேன்!

 

காலம் வலியை ஆற்றுகின்றது என்பது உண்மையே எனினும், எனது வாழ்வின் முக்கியமான ஒவ்வொரு கணங்களிலும் அவரது, நினைவு வந்து போகின்றது.!

 

எனது ஆதங்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்!

 

பழமரங்களுக்கு விதைகளை ஊன்றிய ஒருவன், அவற்றைச் செவ்வனே பராமரித்து வளர்த்த ஒருவன், அந்தப் பழமரங்கள் வளர்ந்து, பூக்களும் காய்க்களுமாகப் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே, என்ற ஆதங்கமே அது!

 

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும்,

தெய்வத்துள் வைக்கப்படும்'

 

என்ற வள்ளுவனின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, வாழ்வை, அவர்கள் வாழ்ந்த வழியில் நகர்த்துவதே, நாங்கள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்!

 

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன!

 

பூவரசம் தடியொன்றை முறித்து,

பாவம் பாராமல் அடித்த வரிகள்,

எனது உடலில் கீறிய கோடுகளை விடவும்,

அவரது இதயத்தில் கீறிய கோடுகள்,

அவருக்கு மிகவும் வலித்திருக்கும்! :o ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவின் நினைவு இத்தனை ஆழமாய் உங்களில் வேரூன்றி விட்டதை என்னால் உணர
முடிந்தாலும் அந்த வேதனையை உணர முடியவில்லை ஏனெனில் இதுவரை நான் எதையும்
இழக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிய இலையொன்றின்

அந்திம காலத்து உதிரும்

தவிப்பில் அப்பாவை கண்ட

இறுதிப் பொழுதுகளில் தான்

வாழ்வின் நிதர்சனம்

எனக்குள் புகுந்து கொண்டது...

பெரும் மரமாய்

சூறைக் காற்றாய்

அலை எழும் கடலாய்

நான் கண்ட அப்பாவின்

உடல் தீயில் உருகிய

தருணங்களி தான்

வாழ்வின் வனப்பும் புரிபட்டது..

சாம்பலின் ஊடாக தேடி தேடி

'இது விலா எழும்பு

'இது மூட்டெழும்பு' என்று

அவரது

எலும்புகளை பொறுக்கிய

அந்த வினாடிகளில்தான்

வாழ்க்கையின் பரிமாணமும்

பிடிபட்டது..

 

சோகம் சொல்லி மாளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன//

 

இந்த வலி என்னவென்று மிகச் சிறுவயதிலேயே அறிந்தவன்.

Link to comment
Share on other sites

உங்கள் வலி எனக்கு புரிகின்றது, நானும் என் அப்பாவை நினைக்காத நாளில்லை. முதல் நாள் தொலைபேசியில் கதைத்துவிட்டு மறுநாள் மதியம கதைக்கவென்று காத்திருக்க அப்பாவை தேசத் துரோகிகள் சுட்டுவிட்டார்களாமென செய்தி. மகனாக இருந்து கடைசி காரியங்கள் கூட செய்ய முடியாத கையாறுநிலையில் அவதிப்பட்டேன். இன்னும் அந்த மன அழுத்தத்திலிருந்து மீளவில்லை

Link to comment
Share on other sites

அப்பாவின் பிரிவு துயரை கவிதை மூலம் பகிர்ந்து கொண்ட நிழலிக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பரையும் நினைக்க வைத்து விட்டீர்கள்.கவிதைக்கு பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

பின்னூட்டங்கள் இட்ட உறவுகளுக்கும்,விருப்புகளை தெரிவித்த உறவுகளுக்கும் என் நன்றி.

 

 

உண்மையில் ஒரு தந்தையின் இழப்பு என்பது எதனாலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.

அப்பாவின் மரணத்துக்குப் போகும் பாக்கியம் கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அவர் இல்லாத காலங்களை எல்லாம் நினைத்தால் தந்தை என்ற பாத்திரம் வகிக்கும் பங்கு புரியும்.

இன்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நிற்கிறேன்.

எப்பவும் நினைப்பதுண்டு அப்பா இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று.

 

அம்மாவை விட எனக்கு எப்பவும் அப்பாவைத் தான் பிடிக்கும்.

என்னால் இன்னும் நம்ப முடியவில்லை அவரின் இழப்பை. :(

 

அப்பாவின் நினைவுகள் மெல்ல மெல்ல உணர்வுகளாக பரிமாணம் அடைந்து நினைவுகளை உணர்ச்சிகளாக உணரும் சந்தர்ப்பங்கள்  மகன்களுக்கு ஏற்படும். அது ஒரு அற்புத பரிமாண வளர்ச்சி. உங்களுக்கும் அது வாய்க்கும் ஜீவா. அப்போது இன்னும் இன்னும் அதிகமாக உங்கள் அப்பாவை உங்களுக்குள்ளேயே உணர்வீர்கள்.

 

அம்மாக்களின் அன்பு கரு உருவான கணத்தில் இருந்து பிணைந்து இருப்பது. அப்பாக்களின் அன்பு ஆத்மார்த்தமாக கலந்து இருப்பது. இருக்கும் காலத்தில் பரிபூரண அன்பை அம்மாக்களுக்கு காட்ட கிடைக்கும் சந்தர்ப்பம் போல அப்பாக்கள் மீது காட்ட பெரியளவில் சந்தர்ப்பங்கள் வருவது இல்லை என்று நினைக்கின்றேன்.

 

 

பிரிவின் பின்னரே அதன் வலி தெரியும். பெற்றோர் எமக்காக பட்டு துன்பங்கள் எமக்காக இழந்தவற்றை எங்கள் பிள்ளைகளுக்காக நாங்கள் இழக்கிற போதே அதன் பெறுமதி புரியும்.


'பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளைமனம் கல்லு என்பார்   என்ற ஈழத்து மெல்லிசைப் பாட்டில் இப்படி ஒரு வரி வரும்:- அம்மா அப்பா ஆனபின்னே அனுபவம் விளங்கும் சும்மா சொன்னால் புரிவதில்லை இந்த தத்துவம்' இவ்வரி எல்லாப் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

அப்பாவின் பிரிவில் அந்த வாழ்வின் பிடிமானத்தை கவிதையாக்கி எனது அப்பாவையும் ஞாபகம் தந்து நிழலிக்கு நன்றிகள்.
 

 

எப்போதுமே பெண் பிள்ளைகளுக்கு பிடித்தமான உறவாக அப்பாக்கள் தான் முதலில் இருப்பர். நான் அப்பாவை உணரும் விதமும் என் அக்கா அப்பாவை உணரும் விதமும் வேறு வேறாக இருப்பதை பல தடவைகளில் கண்டிருக்கின்றேன்.  உயிருடன் இருக்கும் போது பருவம் எய்திய பின் தள்ளி நின்று மகளில் அன்பு செலுத்திய உறவாக இருக்கும் அப்பாக்கள் இறந்த பின் குழந்தைக் காலத்தில் நெருக்கமாக இருந்தது போன்றே மீண்டும் நெருங்கி விடுவர்.

 

உண்மைதான், நாங்கல் பிள்ளைகளாக இருக்கும் காலத்தை விட பொறுப்பான பெற்றோரான பின் தான் அவர்களை கிட்டத்தில் வைத்து உணர முடிகின்றது.

 

 

நிழலி, நானும் உங்களைப்போலவே, இளவயதில் அப்பாவை இழந்தவன் என்ற முறையில், உங்கள் கவிதையை, அந்த உணர்வுகளை,யதார்த்தமாகப் புரிந்து கொள்கிறேன்!

 

காலம் வலியை ஆற்றுகின்றது என்பது உண்மையே எனினும், எனது வாழ்வின் முக்கியமான ஒவ்வொரு கணங்களிலும் அவரது, நினைவு வந்து போகின்றது.!

 

எனது ஆதங்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்!

 

பழமரங்களுக்கு விதைகளை ஊன்றிய ஒருவன், அவற்றைச் செவ்வனே பராமரித்து வளர்த்த ஒருவன், அந்தப் பழமரங்கள் வளர்ந்து, பூக்களும் காய்க்களுமாகப் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே, என்ற ஆதங்கமே அது!

 

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும்,

தெய்வத்துள் வைக்கப்படும்'

 

என்ற வள்ளுவனின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, வாழ்வை, அவர்கள் வாழ்ந்த வழியில் நகர்த்துவதே, நாங்கள் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும்!

 

 

பூவரசம் தடியொன்றை முறித்து,

பாவம் பாராமல் அடித்த வரிகள்,

எனது உடலில் கீறிய கோடுகளை விடவும்,

அவரது இதயத்தில் கீறிய கோடுகள்,

அவருக்கு மிகவும் வலித்திருக்கும்! :o ,

 

 

வலிமையான கருத்துகள் புங்கை. நன்றி

 

ஒரு அப்பாவின் நினைவு இத்தனை ஆழமாய் உங்களில் வேரூன்றி விட்டதை என்னால் உணர
முடிந்தாலும் அந்த வேதனையை உணர முடியவில்லை ஏனெனில் இதுவரை நான் எதையும்
இழக்கவில்லை.

 

நன்றி மெசோ அக்கா.

 

இழப்புகள் இல்லா வாழ்க்கை தொடர என் வாழ்த்துகள்.

 

 

சோகம் சொல்லி மாளாது.

 

ம்ம்ம்...

 

அந்த வரிகளை type செய்யும் போது கொஞ்சம் நடுக்கம் வருமளவுக்கு அந்த அனுபவம் உணர்வுகளாக மீண்டும் தாக்கியது எனக்கு.

 

 

//இப்பவெல்லாம் அடிக்கடி
அவர் நினைவுகள் எழுகின்றன
இறந்த நாட்களில் உயிரற்றுக்
கிடந்த அவர் பற்றிய நினைவுகள்
இன்று உதிரம் பாச்சிய
காற்றாக மீண்டும் மீண்டும்
எனக்குள் எழுகின்றன//

 

இந்த வலி என்னவென்று மிகச் சிறுவயதிலேயே அறிந்தவன்.

 

சிறிய வயதில் அப்பாவை இழக்கும் துயரம் கொடியது யாழ்வாலி. நான் அப்பாவை இழந்தது என் 30 இல். நீங்கள் இழந்து இருப்பது சிறு வயதில். கொடிய துயரம்.

 

உங்கள் வலி எனக்கு புரிகின்றது, நானும் என் அப்பாவை நினைக்காத நாளில்லை. முதல் நாள் தொலைபேசியில் கதைத்துவிட்டு மறுநாள் மதியம கதைக்கவென்று காத்திருக்க அப்பாவை தேசத் துரோகிகள் சுட்டுவிட்டார்களாமென செய்தி. மகனாக இருந்து கடைசி காரியங்கள் கூட செய்ய முடியாத கையாறுநிலையில் அவதிப்பட்டேன். இன்னும் அந்த மன அழுத்தத்திலிருந்து மீளவில்லை

 

ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு கவலைகள், இழப்புகள், வலிகள்..... காலம் எல்லாவற்றையும் ஆற்றிக் கொண்டு போகும் வந்தி.

 

 

அப்பாவின் பிரிவு துயரை கவிதை மூலம் பகிர்ந்து கொண்ட நிழலிக்கு நன்றி. 

 

நன்றி நண்பா.

 

எனது அப்பரையும் நினைக்க வைத்து விட்டீர்கள்.கவிதைக்கு பாராட்டுக்கள். :)

 

நன்றி சுவைப்பிரியன்.

Link to comment
Share on other sites

மனதை தொட்டது நிழலி.

சிறுவயதில் அப்பாவின் சைக்கிளில் தான் பாடசாலை செல்வேன் .கரியரில் இருந்து போகும் கதைகள் சொல்லிக்கொண்டே வருவார் .எட்டு மூலை பட்டம் கட்டித்தந்து தோட்டவெளிக்குள் போய் ஏற்றியது இன்னும் நினைவில் நிழலாடுகின்றது .அப்பாவின் துவாயில் முகம் துடைப்பதிலும் ஒரு சந்தோசம் .

இன்றும் பழைய கதைகளை திகதி வாரியாக சொல்லுவார் .ஆனால் ஒரே இழுவை .

நன்றி மீண்டும் பழையவற்றை மீட்க வைத்ததற்கு .

Link to comment
Share on other sites

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

கோடியில் ஒரு வார்த்தை .மாப்பு உங்கள் சிந்தனை திறனுக்கு இது ஒன்றே போதும்.

Link to comment
Share on other sites

மனதை தொட்டது நிழலி.

சிறுவயதில் அப்பாவின் சைக்கிளில் தான் பாடசாலை செல்வேன் .கரியரில் இருந்து போகும் கதைகள் சொல்லிக்கொண்டே வருவார் .எட்டு மூலை பட்டம் கட்டித்தந்து தோட்டவெளிக்குள் போய் ஏற்றியது இன்னும் நினைவில் நிழலாடுகின்றது .அப்பாவின் துவாயில் முகம் துடைப்பதிலும் ஒரு சந்தோசம் .

இன்றும் பழைய கதைகளை திகதி வாரியாக சொல்லுவார் .ஆனால் ஒரே இழுவை .

நன்றி மீண்டும் பழையவற்றை மீட்க வைத்ததற்கு .

 

 

நன்றி அர்ஜுன்!

 

 

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

 

விடை கொடுத்தல்தான் ஒவ்வொருவரின் இழப்பிலும் நிகழ்கின்றது. அனுப்பி வைத்து விட்டு போகக் காத்திருப்பவர்கள் நாம். ஒவ்வொரு இழப்பும் எம் வாழ்வை இன்னும் பிடிப்புக்குள்ளாக்கின்றது. வாழ்ந்து பார்க்கும் அவாவையும் அதிகரிக்கின்றது. சோகங்கள் என்பது இன்பத்தைப் போன்று கூட நிரந்தரமில்லை.

Link to comment
Share on other sites

நானும் அப்பா நினைவுகளில் ஏதும் எழுதலாம் என்று பார்க்கின்றேன். அப்பாவின் நினைவுகளிலான உணர்ச்சிகளின் வெள்ளத்தில் வார்த்தைகள் மூழ்கிப்போய்விட்டன. துயரமான விடயம் : எனது அப்பா உருவமாய் என்னுடன் இல்லை. மகிழ்ச்சியான விடயம் : நானும் நிச்சயம் அப்பா சென்ற இடத்தை - அது சூனியமாயினும் சரி, அல்லது வேறு ஏதாயினும் சரி, அங்கு சென்றடைவேன். எனவே அப்பாவிற்கும், எனக்குமான இந்த இடைவெளி தற்காலிகமானதே.

 

கரும்பு,  மனம் சலமற்று இருக்கும் போது எழுத தொடங்குங்கள்.

Link to comment
Share on other sites

என் பிள்ளைகளை காணும் போதும்
அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும்
தவறுகளைத் திருத்தும் போதும்
கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும்
அமைதியாக அவர்கள் உறங்கும் போதும்
மீண்டும் மீண்டும் என் அப்பாவின்
நினைவுகள் எழுகின்றன//////////////////

 

எனக்கு எனது அப்பாவை ஓடிப்போய் பார்க்கணும் போல இருக்கு.............. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.