Jump to content

இறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன?


Recommended Posts

[size=3][size=4]பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன[/size][/size]

[size=3][size=4]என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும் அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது.

முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக

நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர்.

இன்று இந்த வேலையைத்தானே நமது காவல் துறையும் , நீதித்துறையும் செய்கிறது.

௨ .நல்ல நீதிகளை, போதனைகளை கூறினர்.

நம்மால் இவற்றை கூற முடியாதா? வள்ளுவர் கூறவில்லையா, ஒளவையார் கூறவில்லையா?

௩ . சமூகத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தினார்.

நல்ல சமூக சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்தவில்லையா?

உலகில் அடிமை முறையை எந்த இறைவனாவது இறைத்தூதராவது எதிர்த்தார்களா? ஒழித்தார்களா? . அதை முற்றிலும் ஒழித்தது யார் மனிதர்கள் தானே?

உலக நாடுகள் போர் புரிய கூடாது என்று எந்த இறைவனாவது இறைத்தூதராவது எதிர்த்தார்களா?

மனிதர்கள் தானே அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சதி, பலதார மணம், குழந்தைத்திருமணம், தீண்டாமை, இவற்றை எதிர்த்தது ஒழித்தது யார்? மனிதர்களே.

.

சமூக மாற்றத்தையும் நல்ல போதனையும் தந்தவர்கள் இறைதூதர்கள் என்றால் நல்ல காரியங்கள் பல செய்த இவர்களை என்னவென்று கூறுவது. இவர்களும் இறைவன்கள்தானே இறைத்தூதர்கள் தானே.

பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்தது இறைவனோ இறைதூதர்களோ அல்ல மனிதர்களே.

நான் கூறுவது என்னவெனில் இதுவரை இது இறைவன் செய்தது, இது இறைதூதன் செய்தது என்று எவையெல்லாம் கூறப்படுகிறதோ,அது உண்மையாக செய்யப்பட்டிருப்பின் அவற்றை நம்மாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல இறைவன்களும் இறைதூதர்களும் செய்யாததையும் நம்மால் செய்யமுடியும்.

இறைவனும் இறைதூதர்களும் உண்மை என்று வாதிடுபவர்கள்

முதல் உலகப்போரின் போதோ , இரண்டாம் உலகப்போரின் போதோ, இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையின் போதோ, யூதர்கள் அழிக்கப்பட்ட போதோ, இலங்கையில் தமிழர்கள் அழிக்கபட்டபோதோ ஏன் இறைவன் வரவில்லை? ஏன் இறைத்தூதர்களை அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா?

இதைவிட என்ன பெரிய கொடுமை நடக்கவேண்டும் அவன் வருவதற்கு?. இதுவரை அவன் என்ன

சாதித்து விட்டான் இனி இறைதூதர்களை அனுப்பக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு?

இன்றும் பட்டினியால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், சிசுக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது, நோயால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

இறைவன் இறைவன் என்று சொல்லி அவன்பெயராலும் எத்தனை கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

சற்று சிந்தித்து பாருங்கள் நான் சொல்ல வரும் உண்மை உங்களுக்கு புலப்படும்.

(உங்களில் பலருக்கு இந்த தெளிவு ஏற்க்கனவே இருக்கும் என்பது வேறு விடயம் :) )

இவற்றை பலரும் ஒப்புக்கொண்டாலும் இறைவன்கள், இறைதூதர்கள் என்று

கூறப்படுபவர்கள் செய்த அற்புதங்களை மனிதனால் செய்ய முடியுமா என்ற எண்ணம் சிலபலருக்கும் வரலாம். சில சிந்திக்க தெரிந்த மனிதர்கள் கூட இது கட்டுக்கதை தவறு என்று எண்ணலாம்.(அவற்றில் பல கதைகளும் கலந்து மனிதனுக்கு தீமைகள் விளைந்ததுதான் காரணமோ? ) அற்புதங்களை பற்றி அறிய பகுத்தறிவு போதாது. அதற்கு தேவை அகத்தறிவு.

ஆம் அகத்தறிவு உடையவனே தன்னை உணர்ந்தவன், இறைவனை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை உணர்ந்தவன்.இவனால் பல ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்த முடியும். யோகத்தினால் பெரும் அறிவைத்தான் நான் அகத்தறிவு என்கிறேன். [/size]

[size=4](ஆன்மீக பாதையில் செல்லும் அனைவரும் மக்களுக்கு நன்மை தான் செய்வார்கள் என்பது ஒரு தவறான கருத்து. அரை குறையாக அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு ஆன்மீக பாதையிலிருந்து விலகியவர்களால் வரும் பிரைச்சனை மிகவும் அதிகம்) .[/size]

[size=4]அற்புதத்தை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. அவர்கள் செல்லும் யோக பாதையை பொறுத்து சக்திகள் வேறுபாடும்.(இதுவும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையே என நினைக்கின்றேன் அதற்கு பிறகு ஒருவனால் எல்லாம் செய்ய முடியும். அதே நேரத்தில் அவன் எல்லாமாகவும் மாறிவிடுவான்).

இது உண்மை என்று உணர ஒரு வினாடிதான் தேவை. ஆனால் அந்த ஒரு வினாடி அனைவருக்கும் கிடைப்பதில்லை அல்லது பலர் அந்த உண்மையை உணர எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.

புறத்தறிவு (அறிவியல்) மூலமும் பல விடயங்களை நம்மால் சாதிக்க முடியும். சாதிக்கிறோம். சாதிப்போம். ஆனால் புறத்தறிவை விட அகத்தறிவே மேலானது, சுலபமாக டையக்கூடியது. (தக்க வழிகாட்டியுடன். சரியான வழிகாட்டி இல்லாததால் இது இன்று பொய் என்ற அளவில் உள்ளது )

பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அது நம்மிலும் உள்ளது. நம்மில் என்னென்ன உள்ளதோ அது பிரபஞ்சத்திலும் உள்ளது.இதைத்தான் அன்று அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களோடும், உயிர்களோடும் அனைத்து

உயிர்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதை பயன்படுத்திதான் உண்மையான

ஆன்மீகவாதிகள், சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். இதை நாளை அறியவியல் நன்று விளக்கும்.

ஆம் சொந்தங்களே நம்மாலும் இறைவனாகவும், இறைதூதர்களாகவும் மாறமுடியும். அவர்கள் புரிந்த அற்புதங்களை நல்ல செயல்களை நாமும் புரிய முடியும். அவர்கள் செய்யாத நல்ல விடயங்களையும் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு.

குறிப்பு: மனிதர்களும் இறைவனாகவும் இறைதூதனாகவும் மாற முடியும் என்பது தான் என் நிலைப்பாடு. மற்றபடி இறைவன் அவதாரம் எடுத்தான், இறைதூதனை அனுப்பினான், இனி அனுப்ப மாட்டான்,கடைசியாக இறைவன் அவதரிப்பான் எனபதில் எனக்கு நம்பிக்கை

இல்லை. ஆன்மீகத்தின் படி பார்த்தாலும் இதுவரை பலர் இறைவனை உணர்ந்தார்கள் இனியும் பலர் இறைவனை உணர்வார்கள். (அதாவது இறைவன் என்றால் என்ன? அப்படி ஒன்னு இருக்கிறதா என்ற உண்மையை).

ஏற்கனவே இறைவன் இறைதூதன் என்று கூறப்படுவபவர்களும் ஓரளவிற்காவது இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லது அந்த பாதையில் ஓரளவிற்கு பயணம் செய்திருப்பார்கள் எனபதை மறுப்பதற்கில்லை.

தனக்கு மிஞ்சிய சக்தியை இறைவன் என்று வணங்குவதில் எந்த தவறும் இல்லை. மாறாக இதில் நன்மைகளே உண்டு. பிறருக்கு பிரச்சனை வராமல் இந்த வழிபாடு இருக்க வேண்டும். ஆனால் இவனே உண்மையான இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம், என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது. இறைவனுக்காக சண்டையிடுவதை

விட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எல்லா

உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி வாழாவிட்டாலும், பிற உயிர்களுக்கு முடிந்த வரை துன்பம் விளைவிக்காமல், உண்மையுடனும் , நேர்மையுடனும் வாழவதே இறைவனுக்கு செய்யும் உண்மையான வழிபாடாகும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு வலைப்பூவிற்கு விடுமுறை. வந்தவுடன் இறைவனை பற்றிய, இயற்கையை பற்றிய உண்மையை தொடர்ந்து ஆய்வோம்.

என்னுடைய கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்திலும் அனைவரின் மனம் புண்படாத கருத்துக்களையே எழுதுவேன். இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

மதத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் ஒதுக்காமல் பார்த்தாலும் நமது மூலம்

ஒன்றே. நாம் மனிதர்கள் மனதில் அன்பையும், நல்ல சிந்தனையையும் மட்டும் வளர்ப்போம்.[/size]

http://kelviyumnaane...ey.blogspot.fr/[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.