Jump to content

படிக்கும் அனுபவ பாட‌ங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரியவும் ஒரு கார்காரர் இருந்தவர், அவருக்கு பிறேமதாசவோ/ பண்டாவோ என்று பெயர். ஒரு பழைய A40 கார் வைத்திருந்தவர், அதில் அவர் குறைந்தது 10 / 15 பிள்ளைகளை ஆவது ஏற்றுவார். என்ன அப்படி போறவர்களும், டாக்டர், உத்தியோகத்தர்மாரின் பிள்ளைகள்தான், நாங்கள் பாட்டா செருப்போடு நடை ராசாதான். அவர் ஒவ்வொரு பிள்ளைகையும் காரில் ஏறுவது ஒருகலை. சிலவேளைகளில் அடியும் விழும். அப்ப சூட்கேசில் புத்தம் கொண்டுதியும் காலம், கார் டிக்கி முழுக்க புத்தகம்தான். பிறகு சில காலத்தில் மினிவான் காலம் வந்து விட்டது. அவருக்கு என்ன நடந்ததும் என்றும் நினைவில்லை.

ரதி தனது கதைகளை பகிந்து கொண்டது பழைய நினைவுகளை தட்டி சென்றது.

மணியனின் இலங்கை பயணம் வாசித்தவர்களுக்கு தெரியும் அந்த காலத்தில் கார் என்றால் என்ன? -அது A40 தான். அதன் வேறு வேறு பயன்கள் என்ன? அவர்ரிகுரிய சிறப்பு பெயர்கள் என்னவென்ன என, திருவிழாகார் சந்தைகார், கலியான கார்,மேளக்கார், ...... ஒரு தொகையான கார்கள், மறந்து போய்விட்டது, ஆனால் அவற்றில் நம்மாளின் பாடசாலைக்கார் இருந்ததாக ஞாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பதிவை பதிந்து விட்டு, திரும்ப வாசிக்கும் போதுதான், என்னைபற்றிய சுயவிம்பம் தெரிகிறது, - வேறு ஆட்கள் சொல்லும் முன் முந்துவேமோ என்கிற பயமோ தெரியவில்லை.

முதல் வரியிலேயே, முரண்பாடுகள் தொடக்கி விட்டது, "பழையகார்" ஏன் அந்த சொல்லை பாவித்தேன் என்று யோசிக்கிறேன். என்னக்கு அந்த காலத்தில் அது ஒரு எட்டாத விடயம், இருந்தும் ஏன் அப்படி சொன்னேன் என்று பார்த்தல்- வெட்கத்தை விட்டால்- எட்டாபழம் புளிக்கும் நிலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவை பதிந்து விட்டு, திரும்ப வாசிக்கும் போதுதான், என்னைபற்றிய சுயவிம்பம் தெரிகிறது, - வேறு ஆட்கள் சொல்லும் முன் முந்துவேமோ என்கிற பயமோ தெரியவில்லை.

முதல் வரியிலேயே, முரண்பாடுகள் தொடக்கி விட்டது, "பழையகார்" ஏன் அந்த சொல்லை பாவித்தேன் என்று யோசிக்கிறேன். என்னக்கு அந்த காலத்தில் அது ஒரு எட்டாத விடயம், இருந்தும் ஏன் அப்படி சொன்னேன் என்று பார்த்தல்- வெட்கத்தை விட்டால்- எட்டாபழம் புளிக்கும் நிலைதான்.

வல்கனோ மனச்சாட்சியோடு பேசுமு; பழக்கம் அதிகம் போல்இருக்கிறது... அதையும் இப்படி வெளிப்படையாக காட்டிக் கொள்வது எல்லோராலும் முடியாது.

Link to comment
Share on other sites

இந்த பதிவை பதிந்து விட்டு, திரும்ப வாசிக்கும் போதுதான், என்னைபற்றிய சுயவிம்பம் தெரிகிறது, - வேறு ஆட்கள் சொல்லும் முன் முந்துவேமோ என்கிற பயமோ தெரியவில்லை.

முதல் வரியிலேயே, முரண்பாடுகள் தொடக்கி விட்டது, "பழையகார்" ஏன் அந்த சொல்லை பாவித்தேன் என்று யோசிக்கிறேன். என்னக்கு அந்த காலத்தில் அது ஒரு எட்டாத விடயம், இருந்தும் ஏன் அப்படி சொன்னேன் என்று பார்த்தல்- வெட்கத்தை விட்டால்- எட்டாபழம் புளிக்கும் நிலைதான்.

A40 அப்பவே பழைய கார்தானே..! :rolleyes: அப்ப 404, 504 தானே பிரபலமா இருந்தது?? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A40 அப்பவே பழைய கார்தானே..! :rolleyes: அப்ப 404, 504 தானே பிரபலமா இருந்தது?? :wub:

எனக்கு பெரிதாக A404 , A504 , வித்தியாசம் தெரியாது. -எனது தாய்வழி/அம்மம்மா வழி (பெயர் போன) மெக்கானிக் குடும்பமாக இருந்தும், சிறியவயதிலேயே அந்த சுழலில் இருந்து விடுபட்டு விட்டோம். அம்மாவிற்கு என்னைவிட இவற்றை பற்றி தெரியும். ஆனால் நான் இருந்த இடத்தில்-அது ஒரு நகரமும் அல்ல கிராமமும் அல்ல, இரண்டும் கலந்த ஊர், A40 கனக்க இருந்தது.

பிறகு கொஞ்சம் வளந்த பிறகும், oxford க்கும் Farina க்கும் வித்தியாசமும் கொஞ்சம் மட்டு மட்டுத்தான். இப்ப இங்கே இருந்து நண்பர்களுடன் கதைக்கும் போது Camry luxuary இல்லை என்று சொன்னால், என்னை கேனையனா பார்க்கிறார்கள்.

என்னை பொறுத்த வரையில், பெரும்பாலான அடிப்படை விடயங்கள் அந்தக்கால கார்களிலும் உண்டு என்று சொல்லுவேன். இது பற்றி அறிந்தவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

"மனச்சாட்சியோடு பேசுமு; பழக்கம் அதிகம் போல்இருக்கிறது"

இது ஒரு வகையான "sick role " எல்லோருக்கும் இருக்கு, பலரும் அதில் குளிர் காய்வது உண்டு. அதில் ஆழமாக செல்ல விருப்பமும் இல்லை, வசதியும் இல்லை. மன சாந்திக்காக புட்டபர்த்தி போவதோ, அல்லது ஓய்வு நேரத்தில் போராட்டம் பற்றி பேசுவது போன்றது. யாரையும் குறையாக சொல்லவில்லை. இதை கௌரவமாக பல பேர் கொண்டு அழைக்கலாம். அண்மையில் ஒருவர் , தான் வளர்த்த செல்லப்பிராணி இறந்தது மாற்றி, பல பேரிடம் சொல்லி திரிந்தார், எனக்கு என்னவோ "அவுட் ஒப் ப்ரோபோசானாய் ரியாக்ட்" பண்ணுவது போல இருந்தது. ஆனால், அது அவவை அந்தளவு தூரதிர்ற்கு பாதித்தும் இருக்கலாம்தானே? அவவுக்கு, எலியோ மூன்சூரோ, ஒரு பொழுதுபோக்கு/ ஒரு இளகிய மனம். அதை வைத்துகொண்டு எப்படி அவாவை ஒரு மிருக கானுன்யன் என்று அழைப்பது சரியோ/ பிழையோ அதே போலத்தான் என் நிலையும் இங்கே. எல்லோருக்கும் இருக்கு, அதை சொல்லும் விதமும், அதை வெளிகாட்ட கிடைக்கும் சந்தர்பங்கள் ஆளுக்கு ஆள் வேறுபாடும், அதை வைத்து நாங்கள் முடிவு செய்ய முடியாது.

ரதி அக்காவை காணவில்லை, லண்டனினும் வேற ஏதும் பக்கத்தாலே ஏறிப்போட்டாவே தெரியவில்லை. ;)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்க்கையை மாற்றிய பயணத்தை பார்க்கும் முன்னர் சின்ன வயதில் நான் படித்த அனுபவ பாடத்தை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறேன்.

எங்கள் சின்ன வயசில அப்பாவுக்கு அனுராதபுரத்தில் வேலை.சிங்கள இடம் என்ட படியாலும்,தனிய இருந்தால் அப்பா காசை குடித்தே அழித்து விடுவார் என்பதாலும் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்ய பாடசாலையில் படித்துக் கொண்டு இருந்ததாலும் என்னையும்,தம்பியையும் அம்மம்மாவுடன் விட்டு,விட்டு அம்மா அப்பாவோடயும்,மற்றத் தம்பியோடயும் அனுராதபுரம் போய் விட்டார்.

அந்த நேரம் நான் நடந்து தான் பள்ளிக் கூடம் போறது அம்மம்மாவின் வீட்டில் இருந்து போறது அவ்வளவு பெரிசாய் தூர‌மில்லை.சில நேரம் தனியாக போறது,சில நேரம் நண்பர்களுடன் பம்பலாய் கதைத்து கொண்டு போறது...எங்கள் பாட‌சாலை பழைய பூங்காவை[ஒல்ட் பார்க்] கட‌ந்து தான் போக வேண்டும் காலையில் பார்க்கில புலி அண்ணாமார் பயிற்சி செய்து கொண்டு இருப்பினம்.அந்த நேர‌ம் அது எங்களுக்கு அதிச‌யமாகவும்,கண் கொள்ளா காட்சியாகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கிறதிற்காகவே காலையில் நேர‌த்தோடு எழும்பி பாட‌சாலைக்குப் போறது.

பாட‌சாலை விட்டு நண்பர்களோடு வீட்டை போகும் போது இல்லாத குளப்படி எல்லாம் செய்கிறது...சில வீடுகளில ஸ்டைலுக்காக கட்டையாக மதிலையும் கட்டி அதோடு சேர்த்து குரோட்டன் வளர்த்து வைத்திருப்பார்கள் எங்களுக்கு வேலை அதை முறிக்கிறது வீட்டுக்கார‌ர் கண்டு துர‌த்திச்சினம் என்டால் நாயை விட‌ விரைவாக ஓடுவது :lol: ,கள்ள மாங்காய் புடுங்குவது,றோட்டில புளிய மர‌த்தில புளியம்பழம்,நாவல் பழம் புடுங்குவது,பள்ளி விட்டால் றோட்டால நட‌ந்து போவதை விட‌ தண்ட வாளத்தில் நட‌ந்து போனதே அதிகம்...ம் அது ஒரு கனாக் காலம் அது திரும்பி வர‌ப் போவதில்லை :)

ஒரு தடவைஅம்மா விடு முறைக்கு வந்திட்டு போகைக்குள்ள எனக்கு கொஞ்ச‌ காசு தந்திட்டு போனவ[அம்மம்மா சரியான ஸ்ரிக்ட் காசே தர மாட்டார்] நான் அதைக் கொண்டு பள்ளிக்கூட‌ம் போற வழியில் உள்ள‌ சொக்லேட் வேண்டுவம் என்டுட்டு போய் நின்டால் கடை துறந்து கிட‌க்குது கடைக்கார‌ரைக் காணவில்லை எவ்வளவு நேர‌ம் தான் நிற்கிறது அவரைப் பார்த்துக் கொண்டு நின்டால் எனக்கு கால் நோகாது :D நான் பின்ன என்ன செய்தன் என்டால் ஒரு சொக்கிலேட்டை தூக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தன்...எனக்கு நினைவு தெரிஞ்சு நான் வெளியில் செய்த முதல் களவு இது தான்.அதுக்கு பிறகு கொஞ்ச‌ நாள் கடைக்கார ஆள் வீட்டை வந்திடுவார் என்ட‌ பயம் இருந்து கொண்டே இருந்தது இத்தனைக்கும் அவர் என்னைக் காணவே இல்லை...நீங்களே சொல்லுங்கள் கடையே திறந்து போட்டு பின்னுக்கு போய் நின்ட‌து ஆற்றை பிழை :lol:

என்னோட‌ படிக்கும் பிள்ளைகள் அநேகமானோர் பாட‌சாலை கன்டினின் தான் பற்றீஸ்,கட்லட் என வேண்டி சாப்பிடுவினம் ஆனால் அம்மம்மா வீட்டை இருந்து சாப்பாடு கட்டி தந்து விடுவா எனக்கு அது பிடிக்கிறதேயில்லை...எனக்கும் கன்டினில் இது எல்லாம் வேண்டி சாப்பிட‌ வேண்டும் என ஆசையாய் இருந்தது ஒரு நாள் என்ன செய்தன் லாட்சிய திறந்து கண்ணை மூடிக் கொண்டு ஒரு காசை தூக்கிட்டன்...கன்டினில் நின்டு கொண்டு காசைப் பார்த்தால் 5 ரூபா குத்தி...நான் நினைக்கவில்லை 5 ரூபா களவெடுத்திருப்பன் என்டு எடுக்கைக்குள்ள‌ சத்தியமாய் அம்பது ச‌தம் அல்லது ஒரு ரூபாயாக இருக்கும் என்டு தான் நினைச்சன் ஆனாலும் என்ன எடுத்திட்டன் அத்தோட‌ எடுத்த காசுக்கு ஆசை தீர‌ சாப்பிட்டன் ஆனாலும் அம்மம்மா கண்டு பிடிச்சுவாவோ என்டு கொஞ்சம் பயமாய்த் தான் இருந்தது...வீட்டை போனதும் அம்மம்மா என்னிடம் ஒன்டும் கேட்கவில்லை நான் பின்னேர‌ம் விளையாடிக் கொண்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு அன்ரி வந்தவ 5 ரூபா குத்தியைக் காணலேல்ல இவள் தான் 5 ரூபா குத்தி என்டு தெரியாமல் எடுத்துக் கொண்டு செலவழித்திட்டாளோ தெரியாது என்று அம்மம்மா அவவிட‌ம் மெல்லமாக குசு,குசுத்துக் கொண்டு இருக்கிறா உடனே அந்த அன்ரி சொல்கிறா இவள் கீதாவும் இவளோட தானே படிக்கிறாள் அவளிட்ட கேட்கட்டே இவள் எதாவது காசு கொண்டு வந்து இன்டைக்கு செலவழிச்சவோளோ என்டு சொல்ல உடனே அம்மம்மா வேண்டாம் இன்டைக்கு விடுவம் இனி மேல் எதாவது காசு காணமல் போனால் பார்ப்போம் என சொல்கிறார்...ஆஹா களவெடுப்பது எவ்வளவு ஆபத்தான விச‌யமும் அவமான விச‌யமும் என அன்று தான் உணர்ந்தேன்.

அன்று அம்மம்மாவிட‌ம் நான் தான் காசை எடுத்தேன் என்னை மன்னித்து கொள்ளுங்கோ என கேட்கவில்லை ஆனால் அதற்கு பிறகு நான் வீட்டில் காசு களவெடுப்பதில்லை ஆனால் அந் நேர‌த்தில் எனது ஒன்று விட்ட தங்கச்சியும் படிப்பதற்காக எங்களோடு வந்து நின்ட‌வள் அவள் சித்திக்கும்,சித்தப்பாவுக்கும் ஒரே மகள் அத்தோடு அவையள் இருவரும் வேலை செய்வதால் நல்ல காசும் வைத்திருந்தவை.ஒரே மகள் என்ட‌ படியால் கேட்டது எல்லாம் உடனே வேண்டிக் கொடுப்பினம்...அன்றும் அப்படித் தான் அவள் கேட்ட உட‌னே புதிசாய் வந்த 24 கலர் பென்சில் பொக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டினம் எனக்கும் அது சித்திர‌த்திற்கு தேவையாய் இருந்தது அம்மம்மாவிடம் கேட்டு ஏன் கரைச்சல் கொடுப்பான் என்டிட்டு அந்த பென்சில் பொக்ஸ்சை தூக்கி என்ட‌ ஸ்கூல் பாக்குள்ள வைச்சிட்டன் :icon_idea: ...அடுத்த நாள் திங்கட்கிழமை சித்தி வேலைக்கு போகைக்கு முதல் மகளை பள்ளிக்கு ரெடி பண்ணும் போது பாக்கைப் பார்த்தால் அவளின்ட‌ கலர் பென்சிலைக் காணேல்ல.எல்லோரும் தேடி கடைசியாய் என்ட‌ ஸ்கூல் பாக்குள்ள இருந்து கண்டு பிடிச்சிட்டினம்.எனக்கு பெரிய அவமானமாய் போய் விட்டது பேசாமல் ஸ்கூல் போயிட்டன்.

அன்று பின்னேர‌ம் வீட்டை வந்த உட‌னே அம்ம‌ம்மா மாவரைக்க மில்லுக்கு போறன் நீயும் வா என்டார் நானும் சரி என்டு பயந்து,பயந்து கூட‌ப் போனன்...போகைக்குள்ள அம்மம்மா மற்றாக்களது பொருட்களுக்கு ஆசைப்பட‌க் கூடாது உனக்கு எதாவது தேவை என்டால் என்னிட‌ம் கேள் நான் வேண்டித் தருவன் அல்லது கொப்பாக்கு,கொம்மாவுக்கு கடிதம் போட்டு கேள் அவையள் வேண்டித் தருவினம் என அமைதியாக,அன்பாக,அடிக்காமல் அம்மம்மா சொன்னது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது...அதற்கு பிறகு அன்றில் இருந்து இன்று வரை அவையளாக விரும்பி தந்தாலே வழிய அவர்களின் பொருளை களவாக எடுத்ததுமில்லை,எனக்கு இது பிடித்திருக்கு எனக்கு த‌ருவீங்களா என ஆசைப் பட்டு கேட்டு மற்றவர் பொருளை வாங்கியதுமில்லை :)

அனுபவம் பாட‌ம் தொட‌ரும்

Link to comment
Share on other sites

நன்றாக எழுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

சிறிய வயதில் பேருந்தில் தனியாகப் பயணிப்பது பற்றி நீங்கள் கூறியதும் எனக்கும் பல ஞாபகங்கள். அதில் ஒன்று யாழ் பேருந்து நிலையத்தில் திரிந்த ஒரு மனநிலை பிறழ்ந்த பெண் சார்ந்தது. சிவனே என்று பள்ளிக்கூட பையைத் தூக்கிக்கொண்டு பேருந்திற்காய் நின்ற எனது கையில் அப்பெண் திடீரென எங்கிருந்தோ தோன்றி கிள்ளிவிட்டுச் சென்றார். மறுநாள் காலை எழுந்தபோது அவர் கிள்ளிய இடத்தில வட்டமாக கடி ஏற்பட்டிருந்தது. ஒரு மாதம் வரை எத்தனையோ மருந்து போட்டும் குணமாகவில்லை. இந்நிலையில் பள்ளியில் இருந்து கசூரைனா பீச்சிற்கு சென்றோம். கடலில் குழித்த மறுநாள் கடியின் அரைவாசி குறைந்து இரண்டு மூன்று நாட்களிற்குள் இருந்த இடம் தெரியாது கடி மறைந்திருந்தது.

புலத்தில் மட்டுமல் ஊரிலும் சிறுவர்கள் தனியே பயணிப்பதில் பல விடயங்கள் சிந்திக்கப்படவேண்டியனவாகவே இருந்தன.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது தொடருங்கள்.

எனது தங்கை முதலாம் வகுப்பில் பாடசாலைக்கு வராமல் விட்டதற்கு காரணம் என்னவென ஆசிரியர் கேட்க "அண்ணாத்துரையின் செத்தவீட்டிற்கு போனதாக சொல்லியிருக்கின்றா ".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியவும் ஒரு கார்காரர் இருந்தவர், அவருக்கு பிறேமதாசவோ/ பண்டாவோ என்று பெயர். ஒரு பழைய A40 கார் வைத்திருந்தவர், அதில் அவர் குறைந்தது 10 / 15 பிள்ளைகளை ஆவது ஏற்றுவார். என்ன அப்படி போறவர்களும், டாக்டர், உத்தியோகத்தர்மாரின் பிள்ளைகள்தான், நாங்கள் பாட்டா செருப்போடு நடை ராசாதான். அவர் ஒவ்வொரு பிள்ளைகையும் காரில் ஏறுவது ஒருகலை. சிலவேளைகளில் அடியும் விழும். அப்ப சூட்கேசில் புத்தம் கொண்டுதியும் காலம், கார் டிக்கி முழுக்க புத்தகம்தான். பிறகு சில காலத்தில் மினிவான் காலம் வந்து விட்டது. அவருக்கு என்ன நடந்ததும் என்றும் நினைவில்லை.

ரதி தனது கதைகளை பகிந்து கொண்டது பழைய நினைவுகளை தட்டி சென்றது.

மணியனின் இலங்கை பயணம் வாசித்தவர்களுக்கு தெரியும் அந்த காலத்தில் கார் என்றால் என்ன? -அது A40 தான். அதன் வேறு வேறு பயன்கள் என்ன? அவர்ரிகுரிய சிறப்பு பெயர்கள் என்னவென்ன என, திருவிழாகார் சந்தைகார், கலியான கார்,மேளக்கார், ...... ஒரு தொகையான கார்கள், மறந்து போய்விட்டது, ஆனால் அவற்றில் நம்மாளின் பாடசாலைக்கார் இருந்ததாக ஞாபகம் இல்லை.

உங்கள் வருகைக்கும்,கருத்திற்கு நன்றி வொல்கனோ...நீங்கள் சொன்னது சரி அந்த டிரைவரின் பெயர் பிரேமதாசா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.போகைக்குள்ள அம்மம்மா மற்றாக்களது பொருட்களுக்கு ஆசைப்பட‌க் கூடாது உனக்கு எதாவது தேவை என்டால் என்னிட‌ம் கேள் நான் வேண்டித் தருவன் அல்லது கொப்பாக்கு,கொம்மாவுக்கு கடிதம் போட்டு கேள் அவையள் வேண்டித் தருவினம் என அமைதியாக,அன்பாக,அடிக்காமல் அம்மம்மா சொன்னது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது...அதற்கு பிறகு அன்றில் இருந்து இன்று வரை அவையளாக விரும்பி தந்தாலே வழிய அவர்களின் பொருளை களவாக எடுத்ததுமில்லை,எனக்கு இது பிடித்திருக்கு எனக்கு த‌ருவீங்களா என ஆசைப் பட்டு கேட்டு மற்றவர் பொருளை வாங்கியதுமில்லை :)

நம்புகின்றோம். இலண்டலிலுள்ள பிரபல கடைகளில் ஒரு தமிழ்ப்பெண் hand bags, necklace, earrings போன்றவற்றைக் காசு கொடுக்காமல் எடுத்துச் செல்லுவதாகச் சொன்னார்கள். அது நீங்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நீங்கள் சும்மா ஒரு பேச்சுக்கு நான் நல்லா எழுதுகிறேன் என சொன்னாலும் அதை உண்மையாகவே பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன் :) ...அர்ஜீன் அண்ணாவுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்புகின்றோம். இலண்டலிலுள்ள பிரபல கடைகளில் ஒரு தமிழ்ப்பெண் hand bags, necklace, earrings போன்றவற்றைக் காசு கொடுக்காமல் எடுத்துச் செல்லுவதாகச் சொன்னார்கள். அது நீங்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது! :icon_mrgreen:

:o:lol:

வழமையை விட இந்த முறை கொஞ்சம் தூக்கலா இருக்கு உங்கட எழுத்து..பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்புகின்றோம். இலண்டலிலுள்ள பிரபல கடைகளில் ஒரு தமிழ்ப்பெண் hand bags, necklace, earrings போன்றவற்றைக் காசு கொடுக்காமல் எடுத்துச் செல்லுவதாகச் சொன்னார்கள். அது நீங்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது! :icon_mrgreen:

நீங்கள் வேற நான் வீட்டில தான் அதற்கு பின்னர் களவெடுக்கவில்லை :D ஆனால் இங்கே கடைகளுக்கு போனால் சின்ன,சின்ன களவு செய்கிறது தான்

[உ+ம்] எனக்கு ஒரு பல்ப் தேவை என்டால் £1 கடைக்கு போனால் அதில 5 பல்ப் £1க்கு இருக்கும் ஆனால் எனக்கு 1 பல்ப் தான் தேவை உட‌னே ஒரு பக்கட்டை உடைத்து ஒன்டை எடுத்திட்டு வாறது ஆனால் நீங்கள் சொல்ற மாதிரி பெரிய,பெரிய திருட்டு செய்கிற அளவிற்கு என்னும் வளர‌வில்லை :lol: ...களவும் கற்று மற என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் :icon_idea:

சுபேஸ் உங்கள் கருத்திற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பின்னேர‌ம் வீட்டை வந்த உட‌னே அம்ம‌ம்மா மாவரைக்க மில்லுக்கு போறன் நீயும் வா என்டார் நானும் சரி என்டு பயந்து,பயந்து கூட‌ப் போனன்...போகைக்குள்ள அம்மம்மா மற்றாக்களது பொருட்களுக்கு ஆசைப்பட‌க் கூடாது உனக்கு எதாவது தேவை என்டால் என்னிட‌ம் கேள் நான் வேண்டித் தருவன் அல்லது கொப்பாக்கு,கொம்மாவுக்கு கடிதம் போட்டு கேள் அவையள் வேண்டித் தருவினம் என அமைதியாக,அன்பாக,அடிக்காமல் அம்மம்மா சொன்னது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது...அதற்கு பிறகு அன்றில் இருந்து இன்று வரை அவையளாக விரும்பி தந்தாலே வழிய அவர்களின் பொருளை களவாக எடுத்ததுமில்லை,எனக்கு இது பிடித்திருக்கு எனக்கு த‌ருவீங்களா என ஆசைப் பட்டு கேட்டு மற்றவர் பொருளை வாங்கியதுமில்லை :)

அனுபவம் பாட‌ம் தொட‌ரும்

உங்கள் அம்மம்மா மிகவும் புத்திசாலி.சொல்ல வேண்டிய முறையில் சொன்னதால் நீங்களும் திருந்திவிட்டீர்கள்.ஒரே ஒரு மின்குமிழைத் திருடுவது கொஞ்சம் அதிகம்   :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அம்மம்மா மிகவும் புத்திசாலி.சொல்ல வேண்டிய முறையில் சொன்னதால் நீங்களும் திருந்திவிட்டீர்கள்.ஒரே ஒரு மின்குமிழைத் திருடுவது கொஞ்சம் அதிகம் :lol:

உங்கள் கருத்திற்கு நன்றி வாத்தியார்...நீங்கள் சொல்வது போல வயசானவர்கள் அதிகம் படிக்கா விட்டாலும் புத்திசாலிகள்

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தை மீண்டும் தொடரலாமே.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.