Jump to content

படிக்கும் அனுபவ பாட‌ங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ட வாழ்க்கையில் நான் கண்ட,கேட்ட,நடந்த மறக்க முடியாத சம்பவங்களை தொடராக எழுதப் போறேன்.நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சம்பவம் 1:

அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக நாங்கள் அந்த புது ஊருக்கு குடி பெயர்ந்தோம்.அப்பா முதலே அந்த ஊருக்கு வந்து வீடு எல்லாம் இருப்பதற்கு பார்த்து வைத்து விட்டு வந்த படியால் நாங்கள் நேரே அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தோம்.அந்த வீடு நகரத்தின் மையத்தில் இருந்தது.முக்கியமான பாடசாலைகள்,அரச வைத்தியசாலை எல்லாம் பக்கத்தில் இருந்தது.நாங்கள் இருந்த வீதியில் அண்ணாமார் தங்கி படிக்கும் விடுதி இருந்தது.அந்த விடுதியின் இரு வீடுகள் தள்ளி ஒரு அம்மாவும் அவர‌து வயதிற்கு வந்த மகளும் இருந்தார்கள்[அந்த அக்கா அப்போது கா.பொ.த சாதர‌ண தர‌ம் படித்துக் கொண்டு இருந்தார்]தகப்பன் அந் நேர‌ம் வெளி நாட்டில் இருந்தார்.அந்த அக்கா அழகும்,அட‌க்கமும்,அமைதியும் வாய்ந்தவர்.வீடு விட்டால் பாட‌சாலை,பாட‌சாலை விட்டால் வீடு என இருப்பார் ஆனால் அக்காவின் அம்மா மகள் பாட‌சாலைக்குப் போன பிறகு வீதியில் வந்து நின்று கொண்டு ஊரில் உள்ளவர்களை பற்றி உள்ளதையும்,இல்லாததையும்,பொல்லாததையும் கதைப்பது தான் வேலை.பொறுத்துப் பார்த்த அண்ணாமார் அந்த அம்மாவிற்கு பாட‌ம் படிப்பிக்க வெளிக்கிட்டாங்கள்...இர‌ண்டு கிழமையால் பார்த்தால் பாட‌சாலைக்கு போன அவவுடைய மகள் திரும்பி வீட்டுக்கு வர‌வில்லை அவ பதறி அடிச்சுக் கொண்டு தேட‌ வெளிக்கிட‌க்குள்ள தான் விடுதியில் இருந்த ஒரு அண்ணாவோடு அந்த அக்கா வீட்டை விட்டு ஓடி விட்டார் என்ட‌ விசயம் அவ்வுக்கு தெரிய வருகுது.அவவுக்கு பாட‌ம் படிப்பிக்கிறதிற்காக அந்த அண்ணாமார் தங்களுக்கு இருந்த ஒரு அண்ணாவை அந்த அக்கா மீது காதல் வலை வீச‌ வைத்து இழுத்து இட்டு ஓட‌வும் செய்திட்டாங்கள்.என்ன அழுது என்ன பிர‌யோச‌னம் ஓடின மகள் திரும்பி வர‌வில்லை.

பி;கு இத்தால் அறிய தருவது யாது என்டால் ஊரான் வீட்டுப் பிள்ளையைப் பற்றி எதாவது தேவையில்லாமல் கதைத்தால் எங்கட‌ வீட்டுப் பிள்ளைகளுக்கும் இது தான் நட‌க்கும் ^_^

தொட‌ரும்...

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது . தொடர வாழ்துக்கள் . இதை ஓளவையாரும் ஆத்திசூடில சொல்லியிருக்கின்றா என நினைக்கிறன் . ஆனாலும் இந்த ஆத்திசூடி நன்றாக இருக்கின்றது :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், ரதி!

அனுபவங்களின் தொகுப்புத் தானே, வாழ்க்கை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "இர‌ண்டு கிழமையால் பார்த்தால் பாட‌சாலைக்கு போன அவவுடைய மகள் திரும்பி வீட்டுக்கு வர‌வில்லை அவ பதறி அடிச்சுக் கொண்டு தேட‌ வெளிக்கிட‌க்குள்ள தான் விடுதியில் இருந்த ஒரு அண்ணாவோடு அந்த அக்கா வீட்டை விட்டு ஓடி விட்டார் என்ட‌ விசயம் அவ்வுக்கு தெரிய வருகுது.அவவுக்கு பாட‌ம் படிப்பிக்கிறதிற்காக அந்த அண்ணாமார் தங்களுக்கு இருந்த ஒரு அண்ணாவை அந்த அக்கா மீது காதல் வலை வீச‌ வைத்து இழுத்து இட்டு ஓட‌வும் செய்திட்டாங்கள்"

இது காதல் இல்லை இருவரினதும் காமப் பசி, தொடருங்க ரதி

Link to comment
Share on other sites

நல்லா நொந்து நூலாகி தான் இருக்கிறியள் போலிருக்கு ,

இன்னும் என்னவெல்லாம் வரபோகுதோ ?

ம்ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ...தொடருங்கோ...நல்லாய்தான் கதை போகுது

Link to comment
Share on other sites

நாம் வாழ்வில் சந்திக்கின்ற,பார்க்கின்ற சம்பவங்களிலிருந்து நிறையவே பட்டறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றன. அனுபவங்கள் சொல்லித் தரும் பாடங்கள்தான் வாழ்க்கையின் எதிர்காலங்களை தெளிவோடு கடப்பதற்கு வழிகாட்டுகின்றன.

மிக்க நன்றி ரதி அக்கா! தங்களின் ஆக்கங்கள் எங்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்!

வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வு தொடரட்டும் நன்றி ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது கருத்துப் பகிர்வுக்கும்,உற்சாக ஊட்டலுக்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதவம்,உங்கள் அனுபவங்களையும் கேட்பம்.

பிற்குறிப்புடன் எனக்கு உடன்பாடில்லை.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதெல்லாம் இப்போ சரிவராது .இது அனுபவம் தந்த பாடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி பாராட்டுக்கள்

சின்னதாக ஒரு விடயம்.... அந்தத் தாயார் மற்றவர்களைப்பற்றி பொல்லாப்பு கதைப்பதை.... இன்னும் சிறிது மெருகேற்றியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது கருத்துப் பகிர்வுக்கும்,உற்சாக ஊட்டலுக்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.

நானும் உங்களுக்கு உற்சாகமூட்டுகின்றேன்.tea_with_sp.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதவம்,உங்கள் அனுபவங்களையும் கேட்பம்.

பிற்குறிப்புடன் எனக்கு உடன்பாடில்லை.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதெல்லாம் இப்போ சரிவராது .இது அனுபவம் தந்த பாடம்.

ஏன் அண்ணா அப்படி சொல்றீங்கள் இப்ப எல்லாம் உடனே தண்டனை கிடைக்கா விட்டாலும் காலங்கள் சென்ற பிறகாவது தண்டனை கிடைத்தே தீரும் என்பது எனது நம்பிக்கை.

ரதி பாராட்டுக்கள்

சின்னதாக ஒரு விடயம்.... அந்தத் தாயார் மற்றவர்களைப்பற்றி பொல்லாப்பு கதைப்பதை.... இன்னும் சிறிது மெருகேற்றியிருக்கலாம்.

நன்றி சகாரா அக்கா உங்கள் அறிவுரைக்கு நான் எல்லாம் ஒரு கத்துக்குட்டி என்னால் முடிந்த அளவு நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்.

அர்ஜீன் அண்ணா,சகாரா அக்கா,கு.சா அண்ணா உங்கள் ஆதர‌வுக்கும்,வருகைக்கும் நன்றி

Link to comment
Share on other sites

இது நல்ல தலைப்பு ரதி! தொடருங்கள் ரதி. எங்கே ங்கள் யாழ்கள வல்லுனர்கள் சகாரா, சாத்,கோமகன் (ஒ ... இவர் எழுத வெளிக்கிட்டால் ஒரு பந்தி எழுத ஒரு வருடம் எடுக்கும்) மற்றும் அர்ஜுன் வாங்கோ :)

Link to comment
Share on other sites

இது நல்ல தலைப்பு ரதி! தொடருங்கள் ரதி. எங்கே ங்கள் யாழ்கள வல்லுனர்கள் சகாரா, சாத்,கோமகன் (ஒ ... இவர் எழுத வெளிக்கிட்டால் ஒரு பந்தி எழுத ஒரு வருடம் எடுக்கும்) மற்றும் அர்ஜுன் வாங்கோ :)

எல்லோரும் வளர இடம் கொடுக்கவேணும் எண்ட நல்ல நோக்கத்தில , கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறம் ஹி ஹி ஹி ஹி :D :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அனுபவம் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சின்ன வயசில இருந்தே பிரயாணம் பன்றது அதுவும் பேருந்தில்,புகையிரத்தில் பிரயாணம் பண்றது என்டால் ரொம்ப பிடிக்கும்[அந்த வயசில பிளேனில் பிரயாணம் செய்வதை நினைத்துப் பாத்து இருப்போமா என்ன]...நான் சின்ன வயதில் யாழில் இருக்கும் போது வாடகைக் காரிலும்[என்னைப் பள்ளிக்கு கூட்டிட்டு போன வாடகைக் காரின் சொந்தக்காரர் அத்தோடு அவரே ஓட்டுனர் அவரின் பெயரில் ஒரு முன்னால் ஜனாதிபதி இருந்தார்],யாராவது பெரியவர்களின்ட சைக்கிளிலும் தான் பள்ளிக்கூடம் போறது.

ஒரு நாள் என்னைப் பள்ளி முடிய கூட்டிப் போறதற்கு ஒருவரும் வர முடியாததால் அம்மா என்னை பேருந்தில் தனிய வரச் சொல்லி விட்டார் நானும் பேருந்து நிலையத்திற்கு வந்து சரியான பேருந்தைப் பார்த்து ஏறி விட்டேன்.பேருந்து முழுக்க பள்ளி மாணவ,மாணவிகளால் நிரம்பி வழிந்தது நானும் எப்படா வீடு வரும் என வியர்வை வழிய நெருக்குப்பட்டு கொண்டு நிற்கிறன்.நான் இறங்குமிடம் வந்ததும் மணியை அடிக்க,அடிக்க பேருந்து நிற்காமல் போய் கொண்டு இருக்குது என்னடா நடந்தது ஓட்டினருக்கு காது செவிடோ என்று யோசித்துப் போட்டு கண்டக்டருட‌ம் போய் விச‌யத்தை சொன்னால் அவர் சிரித்துப் போட்டு இந்த பேருந்து விரைவுப் பேருந்தும்மா எல்லா இட‌த்திலையும் நிற்காது நீ முன்னுக்குப் போய் ஓட்டுனருக்கு விச‌யத்தை சொல்லு அவர் பேருந்தை நிற்பாட்டுவார் என்டார்.நான் பதறி அடித்துக் கொண்டு கண்டக்டர் மாமா சொன்ன மாதிரி செய்து தான் பேருந்தை விட்டு இறங்கினேன்.இவ்வளவும் நட‌க்கும் போது பேருந்து என்ட‌ வீட்டை தாண்டி கண தூர‌ம் போய் விட்டது.கண்ட‌க்டர் மாமா நான் இறங்கும் போது சொல்லி விட்டார் இறங்கி மற்றப் பக்கம் போய் நின்று விரைவு வண்டி இல்லாத பேருந்தாகப் பார்த்து ஏறு உன்ட வீட்டுக்கு முன்னால் உள்ள நிறுத்தத்தில் நிற்பாட்டும் என்டார் ஆனால் நான் பயத்தில் பேருந்தில் ஏறாமல் நட‌ந்தே வீட்டுக்கு போய் கொண்டு இருக்கும் சித்தப்பா சைக்கிளில் வந்தவர் என்னைப் பார்த்து திகைத்துப் போய் என்னடி பள்ளிக்கூட‌ம் அங்காலப் பக்கம் இருக்குது நீ இங்காலப் பக்கமாய் வாறாய் எங்கேயடி போயிற்று வாறாய் எனக் கேட்டார் எனக்கோ வெட்கமாய்ப் போய் விட்டது அத்தோட‌ தன்மானப் பிர‌ச்ச‌னை வேற நான் என்ட சிநேகிதின்ட‌ வீட்ட போயிட்டு வாறன் என்று பொய் சொன்னேன். உந்த வயசில சிநேகிதியின்ட‌ வீட்ட தனிய போயிட்டு வாறாயோ எனப் பேசிப் போட்டு சரி வா நான் சைக்கிளிலில் கொண்டு போய் விடுறன் என சொல்ல நானோ ரோச‌க்காரியாச்சே சீச்சி வேண்டாம் நீங்கள் போங்கோ நான் நட‌ந்து போறேன் என சொல்லிப் போட்டு விடு,விடுவென நட‌ந்து வீட்டுக்கு வந்தால் அம்மா என்னைப் பார்த்துக் கொண்டு வீதியில் நிற்கிறார்.சித்தப்பா அம்மாவிட‌ம் எப்படியும் வத்தி வைச்சிருப்பார் என எனக்கு தெரியும் அதனால் நான் வீட்டுக்கு வந்தவுட‌னேயே அம்மாவிட‌ம் நட‌ந்த உண்மையினை அப்படியே சொல்லி விட்டேன்.அம்மா உடனே எல்லாம் இப்படித் தான் கொஞ்சம்,கொஞ்சமாகப் பழக வேண்டும் என்றும் அனுபவத்தில் படித்தால் அதை வாழ்க்கையில் மறக்க மாட்டாய் என புத்திமதி சொன்னார் ஆனாலும் இன்றும் கூட எவ்வளவு அனுபவமிருந்தாலும் வாழ்க்கையில் பல விசயங்களில் கோட்டை விட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்து நான் தனிய பேருந்தில் செய்த முதல் பிர‌யாணமே மறக்க முடியாத பிர‌யாணமாகவும் போய் விட்டது...என் வாழ்க்கையை மாற்றிப் போட்ட முதலாவது முக்கிய பிர‌யாணத்தைப் பற்றி அடுத்த தொட‌ரில் எழுதுகின்றேன்.

என் அனுபவத்தை வாசிக்கும் வாச‌கப் பெருமக்களே தயவு செய்து என் எழுத்து தொட‌ர்பாக உண்மையான விமர்சனத்தை முன் வையுங்கள் அதுவே வளரும் என் போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்...நன்றி

Link to comment
Share on other sites

ரதி, உங்களுக்கு எதிர்காலத்தில் ஆக்கங்கள் எழுதும் எண்ணம் இருந்தால், இப்பவே எழுத்து நடையை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் எழுத்து நடை பேச்சு வழக்கில் அமைந்திருக்கிறது. அதோடு, ஆக்கத்தை எழுதிய பின்பு பலமுறை திரும்ப வாசித்துப் பார்த்தால் சம்பவங்களை இன்னும் அழகாக மெருகூட்டலாம். அதோடு, அழகியல் வார்த்தைகளையும் பயன்படுத்த முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உங்களுக்கு எதிர்காலத்தில் ஆக்கங்கள் எழுதும் எண்ணம் இருந்தால், இப்பவே எழுத்து நடையை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் எழுத்து நடை பேச்சு வழக்கில் அமைந்திருக்கிறது. அதோடு, ஆக்கத்தை எழுதிய பின்பு பலமுறை திரும்ப வாசித்துப் பார்த்தால் சம்பவங்களை இன்னும் அழகாக மெருகூட்டலாம். அதோடு, அழகியல் வார்த்தைகளையும் பயன்படுத்த முயற்சியுங்கள்.

தமிழிச்சி தங்களது உண்மையான விமர்சனத்திற்கு நன்றி...நீங்கள் என்னை இனி மேல் எழுத வேண்டாம் என சொல்கிறீர்களா?...மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அலைமகள்,அஸ்வினி,நூணாவிலானுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்கள் அருமை, ரதி!

எங்கள் அனுபவங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை!

எங்களில் எத்தனை பேர் கொழும்புப் பேருந்துகளில், மிச்சக் காசு சிங்களத்தில் கேட்கத் தெரியாமல், எவ்வளவு காசைத் தொலைத்திருப்போம்!

Link to comment
Share on other sites

ரதி, நான் குறிப்பிட்டது, நீங்கள் எதிர்காலத்தில் எழுத்தாளராக வரவிரும்புகிறீர்களா அல்லது யாழில் மட்டும்தான் எழுதப் போகிறீர்களா என்று. தொடர்ந்து எழுத எழுதத்தான் எழுத்துக்கள் மெருகேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நான் குறிப்பிட்டது, நீங்கள் எதிர்காலத்தில் எழுத்தாளராக வரவிரும்புகிறீர்களா அல்லது யாழில் மட்டும்தான் எழுதப் போகிறீர்களா என்று. தொடர்ந்து எழுத எழுதத்தான் எழுத்துக்கள் மெருகேறும்.

நன்றி தமிழிச்சி உங்கள் பதிலுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.