Jump to content

'இன்ஜினீயரம்மா!'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இன்ஜினீயரம்மா!'
ஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை
 

chennai.jpg'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர்.

 

சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூலி குடும்பம் ஆயிடுச்சு.

p26.jpg

16 வயசுல காஞ்சிபுரத்துல இருந்து சென்னைக்கு வாக்கப்பட்டு வந்தேன். எல்லா பொம்பள புள்ளைங்க மாறிதான் நானும், 'இன்னியோட நம்ம பாரமெல்லாம் போயிடுச்சு’ன்னு என் புருஷன் வீட்டுக்குப் போனேன். ஆனா, அப்புறம்தான் தெரிஞ்சது... அது நல்ல குடித்தனக் குடும்பம் அல்ல, குடிகார குடும்பம்னு. 24 மணி நேரமும் குடியோடும் சீட்டுக்கட்டோடும் குடித்தனம்  செஞ்ச என் புருஷனுக்கு, என் நகையை எல்லாம் அடகு வைக்கற சேட்டு கடையாகவே டாஸ்மாக் கடை மாறிடுச்சு.

அவரு என்னைக்காவது திருந்துவாரு... நாமளும் எல்லாரையும் போல ஒருநாள் நல்லா இருப்போம் என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து விழுந்த அடிதான் ரொம்பவும் படுத்தி எடுத்திடுச்சு'' என்று குரல் உடைந்தார்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் கலங்கிய கண்களுடனே தொடங்கினார். ''என் வீட்டுக்காரருக்கு ரத்தத்துல புற்றுநோய் இருக்கு, அதுவும் ரொம்ப முத்திப்போச்சுன்னு டாக்டர்கள் கையை விரிச்சுட்டாங்க. ஏதாவது பண்ணி அவரைக் காப்பாத்தணும்னு, தெரிஞ்சவங்க கையில கால்ல எல்லாம் விழுந்து பணத்தைப் புரட்டிக்கிட்டு போறதுக்குள்ள அந்தக் காலன் முந்திக்கிட்டான். என் புருஷன என்கிட்ட இருந்து கொண்டுபோயிட்டான்'' என்று நிறுத்தினார்.

அதுவரை வெறும் சித்தாளாக மட்டும் இருந்த ஜெயந்தி, முழு நேர உழைப்பாளியாக மாறிவிட்டார். காலை 5 மணிக்குத் தொடங்கிய அவரது வேலைச் சக்கரம், இரவு 10 மணிக்குதான் வீடு திரும்பியிருக்கிறது. காலை 5 மணிக்கு தன் வீட்டு வேலையை முடித்துவிட்டு, அதற்கு பின் 8 மணி வரை மூன்று வீடுகளில் வீட்டு வேலை, 5 மணி வரைக்கும் சித்தாள் வேலை, பிறகு மீண்டும் 10 மணி வரை நான்கு வீடுகளில் வீட்டு வேலை, சில நாட்களில் இரவு வேளைகளிலும் சித்தாள் வேலை... எனப் பம்பரமாகச் சுழன்றிருக்கிறார்.

இப்படிச் சுற்றிச் சுழன்று உழைத்து, அதன் பலனாக தன் முதல் மகன் ராஜேஷை இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.

தன் தாய் படும் கஷ்டத்தைப் பார்த்த ஜெயந்தியின் இரண்டாவது மகன் கதிரவன், ''அம்மா... நானும் வேலைக்குப் போறேம்மா என்று என் 11-வது வயதில் அம்மாவிடம் சொன்னேன். அப்போ என் அம்மா என்கிட்ட, 'அப்பா இல்லாத புள்ள தப்பா போயிட்டான்னு உன்னை யாரும் சொல்லிடக் கூடாது. நீ நல்லா படிச்சு உங்கப்பா மாதிரி யாரும் நோயால சாகாம பாத்துக்க’ன்னு அழுதுகிட்டே சொன்னாங்க. அந்த ஒரு வார்த்தைதான் என்னை இந்த அளவுக்கு கொண்டுவந்திருக்கு'' என்று சொல்லும் கதிரவன், இன்று பி.பார்ம் மாணவர்.

தன் கணவன் இறந்த பிறகு, தானே உழைத்து இன்று சொந்தமாக வீடும் கட்டி, தன் பிள்ளைகளையும் முன்னேற்றிப் பார்த்திருக்கும் இந்தத் தாய் தன் வீட்டுக்குக்கூட தானே சித்தாளாக இறங்கி வேலை பார்த்திருக்கிறார். ''சித்தாள் ஜெயந்தின்னு என்ன கூப்பிட்டவங்களை எல்லாம் 'இன்ஜினீயரம்மா’ன்னு கூப்பிட வெச்சிருக்கான் என் புள்ளை. நான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஆறுதல் தர, இது ஒண்ணே போதும்'' - பெருமிதமாகச் சொல்கிறார் ஜெயந்தி.

அம்மா என்றால் தெய்வம் என்று சும்மாவா சொல்கிறார்கள்!

க.தனலட்சுமி

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96976

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடின வேலை செய்பவர்கள் வாழ்நாள் முழுதும் செய்து கொண்டே இருப்பதுதான் எழுதப் படாத விதி...! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடின வேலை செய்பவர்கள் வாழ்நாள் முழுதும் செய்து கொண்டே இருப்பதுதான் எழுதப் படாத விதி...! :(

 

விதி விலக்கும் இருக்கும் திட்டமிடல் இருந்தால் (அத்துடன் அதிஸட்டமும் இருந்தால்)இந்த அம்மாவும் கடைசிக்காலத்தில் நல்லாய் இருப்பா.இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.