Jump to content

கனடாவில் 12ம் வகுப்பு மாணவனின் உள்ளத்திலிருந்து...........


Recommended Posts

கனடாவில் அறிவகம் எனும் அமைப்பு நகரம் தோறும் தமிழ்பாடசாலைகளை அமைத்து அங்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான புள்ளிகளையும் புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது. சென்ற சனிக்கிழமை அவர்களால் நடத்தபடும் பாரதியார் வளாகத்துக்கு செல்லும் வாய்பு எனக்கு கிடைத்தது.அன்று அவர்களால் வருடம் தோறும் நடத்தப்படும் நிகழ்வு நாற்றுமேடை.அன் நிகழ்வில் மாணவர்களின் திறைமை அடிப்படையில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.அங்கு எனது கண்ணில் மூன்று ஆக்கங்கள் கண்ணில் பட்டன.அதை பன்னிரெண்டாம் தரத்தில் பயிலும் மாணவர்கள் ஆய்வு செய்திருந்தார்கள்.

1,எனது குடும்பம்

2,செம்மொழியாம் தமிழ்மொழி

3,தமிழர்களின் வரலாறு

அதில் என்னை கவர்ந்த ஆக்கத்தை இங்குணைக்கிறேன்.காரணம்.தற்போதைய சூழலில் யதார்த்தமாக தென்பட்டது

p428-full.jpg

எனது குடும்பம்(ஆய்வுக்கட்டுரை)

ஆய்வு செய்தவர் : வருண் ஜெயதேவன்

வகுப்பு நிலை: தரம் 12

ஆசிரியர்: பூங்கோதை பன்னீர்செல்வம்

பாரதியார் வளாகம்

மிஸிசாகா, ஒன்ராறியோ

கனடா.

எனது பெயர் வருண் நான் 12ம் தரத்தில் கல்வி கற்கிறேன். எனது தாய் தந்தையர் இலங்கையிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி, நானும், எனது சகோதரனும் அவர்களின் வாரிசாக அதுவும் கனடிய தமிழராக உதித்துள்ளோம்.இங்கே தான் எமக்கு ஒரு சந்தி உருவாகின்றது.இதை நினைக்கும் போது ஜீரணிக்க முடியவுமில்லை.அதை முடிந்தளவு காலத்தின் கட்டாயமாக ஏற்றுகொள்ள வேண்டியுள்ளது போலவும் உள்ளது.

முதலில் எனது தந்தையின் வழியை எடுத்துகொண்டால் எனது பூட்டனார் யாழ்ப்பாணத்தில் வடமராச்சி பகுதியில் இமையாணன் என்ற பகுதியில் மணியகாரனாகவிருந்துள்ளார்.இவரது பெயர் சுப்பிரமணியமாகும்.பின்னர் எனது பாட்டனாரை எடுத்துகொண்டால் மலேசியாவில் புகையிரத நிலைய அதிபராகவிருந்துள்ளார். (இங்கேயும் புலம் பெயர்ந்துள்ளார்கள் கலாச்சாரம் மொழி என்பன பாதுகாக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)எனது தாத்தா இலங்கையில் பிறந்துள்ளார்.அவர் ஒரு எழுது வினைஞர்.அவர் இலங்கையிலேயே வாழ்ந்துள்ளார். அதேபோலஎனது தந்தையின் தாயின் தாயின் வழித்தோன்றலும் சிங்கபூருக்கு இடம் பெயர்ந்து மீண்டும் இலங்கையில் இணைந்த குடும்பம்.(இவர்கள் தொழிலின் நிமிர்தம் இடம் பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது)எனது அப்பம்மா இலங்கையின் வன்னி பகுதியில் தபாலதிபராக பணியாற்றியுள்ளார் பின்பு எனது தந்தை தனது 26வதுவயதில் புலம் பெயர்ந்துள்ளார்.எனது தந்தையுடன் எமது மொழி கலாச்சார விழுமியங்கள் ஆட்டம் காணுகின்றன.

இப்போ எனது தாயின் வழித்தோன்றலைப்பார்ப்போம். அவரின் தந்தை வழி ஒரு ஆச்சார குடும்பம்.எனது பூட்டனார். யாழ்பாணத்தின் தீவகற்ப பகுதியான வேலணை என்ற சிற்றூரில் ஒரு ஆசிரியர். அவருக்கு இரு பெயர்களுண்டு பேரம்பலம் மற்றும் அப்பாத்துரை ஆசிரியர் என்றழைப்பார்கள்.இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஆலயமும் இருந்ததாக கூறுகிறார்கள்.அவ்வாலயத்தை 'முடி பிள்ளையார் கோவில்' என அழைப்பார்கள்.அதே போல எனது தாத்தாவும் ஒரு ஆசிரியர். அவரை முருகேசபிள்ளை ஆசிரியர் என்றழைப்பார்கள்.இலங்கையை பொறுத்தவரை ஆசிரியர் தொழிலுக்கு பெரிய மதிப்பும் மரியாதையுமிருந்தது.மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றுக்கமைய மதிக்கப்பட்டதாம்.ஆனால் தற்போதுள்ள ஆசிரியர்களின் சில நடத்தைகளால் அந்த நிலை அருகிவருவதாக ஊர் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்கால ஆசிரியர்கள் புதிய மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் போதனைகளைச்செய்வதிலும்,முக்கியமாக இளம் மாணவர்களை கடிவாளமிட்ட குதிரைபோல நேர்வழியில் செல்லவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.ஆனால் தற்போது நாகரீக மோகம் மற்றும் பணம் சம்பாதித்தலே குறியாகவுள்ளது.பாடசாலைக்கு வரும்மாணவர்கள் எல்லோரும் பட்டம் பெறவேண்டும் என்ற நிலை மாறி, நாங்கள் படிப்பிக்கின்றோம். நீங்கள் முடிந்தால் படியுங்கள் என்ற நிலை,தற்போதுள்ள மாணவர்கள் கூட ஆசிரியர்களை மதிப்பதில்லை.இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த அன்னியோன்ய நிலையற்றுப்போய் விட்டது. நாம் படித்து பட்டம் பெற வேண்டும், என்று எல்லா மாணவர்களும் நினைப்பதுமில்லை.

இதேபோல எனது தாயின், தாயின் வழித்தோன்றலை எடுத்துக்கொண்டால் எனதுபூட்டனார் ஒரு பிரபல வியாபாரி.அவர் இலங்கையின் தென் கோடியில் தெனியாய என்ற ஊரில் பிரபல வர்த்தகர்.இவர் பெயர் வேலுப்பிள்ளை.இவரின் பட்டப் பெயர் தெனியாய சின்னப்பர்.இலங்கையின் தென் முனையின் பெரு நகரமாகிய காலியில் இவரால் உருவாக்க பட்ட சிவன் கோவில் உண்டு.இதன் மூலம் எமக்கு தெரிவது; எனது மூதாதையர்கள் மொழி,சமயம், கலாச்சாரம் என்பவற்றை முடிந்தளவுபின்பற்றி பொக்கிசப்படுத்தியுமுள்ளார்கள் .

இனி நாம் என்னசெய்ய வேண்டும்.எப்படி இவற்றை பாதுகாக்க போகிறோம்.தற்போது எமது சமுதாயம் நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றிபார்த்தால்;

என்னுடைய பாடசாலை வாழ்க்கையை இங்கு குறிப்பிடலாம். நான் தற்போது இரு கலாச்சாரத்தில் வாழ வேண்டியுள்ளது.எமது கலாச்சாரம் பாரம்பரியமானதும் கட்டு கோப்பு மிக்கதுமாகும்,அடுத்தது எம்மீது தெரிந்தோ தெரியாமலோ திணிக்கப்படும் பல்லின கலாச்சாரம். இதில் முக்கியமாக கனடிய எதற்கும் சுதந்திரமுள்ள கலாச்சாரம். இது இங்குள்ளவர்களை மிகவும் பாதிக்கின்றது.எம்மவர்களில் சிலர் திறந்துவிட்ட ஆட்டுமந்தயைப்போல நடந்துகொள்கின்றனர்.ஒருசில நேரங்களில் நானும் உணர்கிறேன்.சில வேளைகளில், நாம் கனடாவில் தானே இருக்கிறோம் எதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்றுகூட சிந்திதிருக்கிறேன்.பின்புதான் தமிழ் எமது மொழி அதை அழியவிடக்கூடாது என்பதை உணர்ந்தேன்.அதேபோல போராட்டக்காலங்களில் கவனயீர்பு நிகழ்சிகள் நடைபெற்ற நேரம்,எதற்காக இவர்கள் கவனயீர்பு நடத்துகிறார்கள் என்றெல்லாம் சிந்திப்பேன்.எனது தந்தையை ஒருமுறை அப்பா!எங்களுக்கு சொந்தகாரர்கள் இலங்கையில் இருக்கிறார்களா? என்று கேட்டேன்.அவர் இல்லையென்று பதிலளித்தார்.அப்போ ஏன் நாம் கவனயீர்பு நிகழ்வுக்கு போக வேண்டும் என்று கேட்டேன்.அப்போது அவர் விபரமாக விளக்கமளித்தார்.ஆனால் இதில் வேதனையுடன் கூறும் விடயம்.எனது அன்றைய நிலைக்கு காரணம் எனது பெற்றோர்தான்.இங்கு தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சந்தி உருவாகிறது.

தங்களின் அற்ப சொற்ப ஆசைக்காகவும் சமுதாயத்தில் மற்றவர்களோடு போட்டி போட்டுகொண்டு வருமானத்திற்கு அதிக செலவுகளை ஏற்படுத்தி பணத்திண்டாட்டத்தை ஈடு செய்ய, பெற்ற பிள்ளைகளையும் மறந்து தாயும் தந்தையும் பலமணி நேரமாக பணச்சம்பாதிப்பில் ஈடுபடுவார்கள். அப்படி சில நேரம் கிடைத்தால் கூட அதையும் தொலைக்காட்சியில் செலவழிப்பார்கள்.ஒரு சில இடங்களில் பெற்றோரையே காண முடியாது.பெற்ற பிள்ளைக்கு சமைத்து ஊட்ட வேண்டிய தாய் வியாபார நிலையங்களிலும்,குளிரூட்டியிலுருந்தும் பரிமாறுவாள்.

இங்கே தான் நாம் பெற்றோரையும் அவர்களின் பரிவையும் இழக்கின்றோம்.எங்களுக்கு அவர்கள் மீது பற்று பாசம் இல்லை. அவர்களை ஒரு பாதுகாவலராக உணருகிறோம்.இப்போ எங்களுக்கு தேவையான பற்று பாசம் எங்கு கிடைக்கும் என்று தேடும் போது நல்ல இடங்களும் கெட்ட இடங்களும் கிடைகின்றன. இதனால் எமது வாழ்வும் கலாச்சாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது.இப்படி பெற்றோர்மீதே பாசத்தை இழந்த எமக்கு மொழிப் பற்று சமயப்பற்று நாட்டு பற்று எப்படி உருவாகும்.இந்த நிலை பிற்காலத்தில் ஏற்படாமல் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இதே போல திருமணத்தை எடுத்துகொண்டால் இங்கு பல முறையற்ற மற்றும் கலப்பு திருமணங்களும் நடக்கின்றன.இங்கும் பிரச்சனைகள் உண்டு.கலப்பு திருமணம் செய்தால் பிறக்ககூடிய பிள்ளை எந்த கலாச்சாரத்தில் வளரும்.எந்த சமயத்தில் அந்த பிள்ளை பிரார்தனை செய்யும்.இதற்கு கணவனும் மனைவியும் பல விட்டு கொடுப்புகளை செய்ய வேண்டியிருக்கும்.இல்லையேல் விவாகரத்து தான் தீர்வு.அப்போது அந்த பிள்ளையின் நிலை என்ன?இதற்காகத்தான் கனடிய சமூகம் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் என்ற முறையை வைத்திருக்கிறது.ஏனெனில் கையொப்பமிடுதல் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் பின் விளைவுகள் உண்டு.

அடுத்து பெற்றாரை பராமரித்தல்,இது வெளி நாட்டிலிருக்கும் புலம் பெயர்ந்தவர்களிடையே பாரிய பிரச்சனையாகவுள்ளது.அவர்களால் இயலுமானவரை பெற்றோரை உபயோகப்படுத்திவிட்டு அவர்கள் நோய்வாய்படும் நேரம் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் விடுதல் ஏற்று கொள்ளகூடியதொன்றல்ல.அவர்கள் சுகதேகியாகவிருக்கும் போது அவர்களை சுதந்திரமாக அனுமதித்தால் அவர்கள் தங்கள் கடைசிக்காலங்களை சந்தோசமாக கழிப்பார்கள்.அவர்கள் மனச்சோர்வற்று வாழ்ந்தால் எம்முடன் நீடூழி காலம் வாழ்வார்கள்.

இவற்றையெல்லாம் கண்ணூடாக பார்க்கும் நானும் என்போன்ற சமுதாயமும் வாழ்கையில் வரும் இன்னல்களையெல்லாம் எதிர் நீச்சல் போட்டுஎம்மையும் எமது பிற்கால சமுதாயத்தையும் மொழி சமய காலாச்சார விழுமியங்களோடு வாழவைப்போமாக.

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வு . பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

வருண் ஜெயதேவன் மிக உணர்வாக நன்றாக எழுதியுள்ளார்.

இணைப்பிற்கு நன்றி நீலப் பறவை.

Link to comment
Share on other sites

.

பகிர்ந்தமைக்கு நன்றி BLUE BIRD

நிரந்தரமாகவே தொடர்பற்ற சமுதாயத் துண்டுகளாக மாறுவதற்கு முன் தாயகத்தில் ஒரு சுமூகமான நிலை ஏற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

FACE BOOK ல் முடியாததை யாழ் களம் தீர்த்து வைத்தது.தமிழர்களின் தலைத்தளம் யாழ்

வணக்கம்!

என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியாத உறவுகளை யாழ்களம் சேர்த்துவைத்தது.இன்னும் இன்னும் தொடர்புகொள்கிறார்கள்.உங்களுக்கும் உங்கள் இணையத்திற்கும் நன்றி!

உண்மையுடன்

வருண்.

(from e mail)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பிறந்த, 12ம் வகுப்பு மாணவனின் ஆய்வுக் கட்டுரை நன்றாக இருந்தது.

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை பாராட்டுக்கள்

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு..இணைப்பிற்கு நன்றி

வருண் வாழ்த்துகள் உங்கள் முயற்ச்சிக்கு

Link to comment
Share on other sites

  • 1 year later...

                                                                                                                                                                                                                                                                    

 

சங்கிலிய மன்னன்   (யாழ்ப்பாண இராச்சியம்)

 

13ம் நூற்றாண்டில் ஆரம்பித்த யாழ்ப்பாண இராச்சியத்தில் 17ம் நூற்றாண்டில் ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியன் ஆவார்.இவரது ஆட்சிக்காலம் 1620 வரை இருந்தது என சான்றுகள் உண்டு.ஆனாலும் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிய சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது.இதனால் சரியான தரவுகள் எடுப்பது கடினமாயுள்ளது என ஆராச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.இதற்கான முக்கிய காரணமாக தற்போதுள்ள போட்டி அரசியல் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்திருக்கிறது.அக்காலத்திலிருந்தே நம்பிக்கை மோசடி,பதவி மோகம் மற்றும் காட்டிக்கொடுப்புகள் போன்றவை இருந்திருக்கின்றன.

           யாழ்ப்பாண இராச்சியம் நல்லூருக்கு முன்னதாக சிங்கை நகர் என்ற பெயருடன்  கிழக்கு கரையோரமாக உள்ள வல்லிபுரம் நகரில் உதய மானதாக சான்றுகள் கூறுகின்றது.கல் வெட்டொன்றில் “'பொங்கொலி நீர்ச் சிங்கை நகர்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது கூட வல்லிபுர ஆழ்வார் திருத்தலத்துடன் பெயர் பெற்று விளங்குகின்றது.அதே போலதென்னிலங்கையில் கோட்டகமவில் கண்டெடுத்த கல் வெட்டில் "சிங்கை நகராரியனைச் சேராவனுரேசர்' என்று தொடர் வருகின்றது.யாழ்ப்பாண இராச்சியத்தின்  வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவ மாலை ஒரு ஒல்லாந்து அதிகாரியான "மேக்கறூன்" என்பவரின் வேண்டு கோளுக்கு இணங்க 1736ம் ஆண்டளவில் வாழ்ந்த மயில்வாகனப் புலவரால் வரையப்பட்டதாகும்.அக்காலத்தில் யாழ்ப்பாண அரசின் எல்லை வன்னிப்பகுதியை முழுவதும் உள்ளடக்கி மேற்கு கரையில் புத்தளம் வரை நீண்டிருந்தது.

                                                              யாழ்பாடி  இறந்த பின்  வாரிசு இல்லாத காரணத்தால் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட கூழங்கைச் சக்கரவர்த்தி முதல் ஆரியச்சக்கரவர்த்திகள்  என்று அழைக்கப்பட்ட வம்சம் போர்த்துக்கீசர் கைப்படும் வரை ஆண்டு வந்தது.ஆனாலும் இவர்கள் பரராசசேகரன் செகராசசேகரன் என்ற பட்ட பெயர்களை மாறி மாறி வைத்து கொண்டு ஆண்டு வந்தனர்.

                  கி பி 1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த செண்பகப்பெருமாள் என்ற அரசரிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின் தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன்  இந்தியாவிலிருந்து படை திரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.இதுவரை கிடைத்த தகவல்களின் மூலம் ஈழத்தமிழனின் ஆட்சி ஆரம்பம் முதல் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளமை புலப்படுகின்றது.

                                                 16ம் நூற்றாண்டின் முற் பகுதியில் போத்துக்கீசரின் நடமாட்டம் இலங்கையை அண்டிய பகுதியில் அதிகரித்தது மட்டுமல்லாது இலங்கை அரசியலிலும் தலையிடத்தொடங்கியிருந்தார்கள்.யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதும் அவர்கள் பார்வை விழத்தவறவில்லை.போர்த்துக்கீசரின் செல்வாக்கால் இலங்கையில் கத்தோலிக்க மதம் தலையெடுக்க ஆரம்பித்தது.யாழ்ப்பாண இராச்சியத்திலும் மதமாற்றங்கள் தொடங்கியபோது யாழ்ப்பாண அரசன் தனது ஆளுகைக்குட்பட்ட மன்னாரில் மதம் மாறியோரைச் சிரச் சேதம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

                                                                          இதைச் சாக்காக வைத்து கொண்டு 1560ல் போர்த்துக்கீசத்தளபதியான டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து அதனைக்  கைப்பற்றினான்.எனினும் நாட்டுக்குள்ளேயே இருந்து போக்கு காட்டிய அரசன் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இணங்கினான்.எனினும் அவர்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு இணங்க முடியாத அரசன் தனது சாதுரியத்தால் நாட்டை விட்டு விரட்டினான். ஆனாலும் போர்த்துகீசர் யாழ்ப்பாண அரசுக்கு கீழ்ப்பட்ட மன்னார்த்தீவைத்தாக்கிக் கைப்பற்றி கொண்டனர்.

                    தொடர்ந்து 1591ல் அந்தரே பூர்த்தாடோ எனும் தளபதி தலைமையில் யாழ்ப்பாணம் தாக்கி கைப்பற்றப்பட்டது.இப்போரில் யாழ்ப்பாண அரசன் கொல்லப்பட அவனுடைய மகனுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திஅவனை அரசனாக்கி மீண்டனர்.இதன் பின்னர் 1620வரை போர்த்துக்கீசரின் தயவில் யாழ்ப்பாண மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தனர்.1620ல் இராச்சியத்தில் ஏற்பட்ட பதவிப்போட்டிகளால் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றித் தங்கள் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததின் மூலம் யாழ்ப்பாண மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு சில சான்றுகள் தற்போதும் உள்ளன.

        

 2011ல் புதிதாக அமைக்கப்பட்ட சிலை                  மந்திரிமனை                                                                   

 

        யாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தில் கி.பி. 1350.       யமுனா ஏரி      

 

                            

·         சங்கிலித்தோப்பு                                         நல்லூர் கந்தனின் ஆலயம்                                                                                                                                                                                                                                        .                                                                        (தற்போதைய தோற்றம்)

 

 

                                          சங்கிலியனின் ஆட்சிக்காலமானது முதலாம் சங்கிலியன் இரண்டாம் சங்கிலியன் என கட்டம் கட்டமாக வகுக்கப்பட்டுள்ளது.முதலாம் சங்கிலியன் ஏழாம் செகராசசேகரன் ஆவார்.இவருக்கு முன் சிங்கைப்பரராசசேகரன் ஆகிய 6ம் பரராசசேகரன் ஆட்சி செய்தான்.முதலாம் சங்கிலியின் ஆட்சிக்காலம்1519- 1561 வரை நீடித்தது. இவர் ஈழ நல்லூரில் பிறந்தவர்.இவர்1565ல் இறைபதம் எய்தியதாக குறிப்புகள் கூறுகின்றன.இவரின் பின் புவிராஜபண்டாரம் ஆட்சி செய்துள்ளார்.

                                   இவருக்கு அடுத்தபடியாக  1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். போத்துக்கீசரிடம் தாராளமாக நடந்துகொண்ட அரசன் எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் பாதிரிமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கிறிஸ்தவ மதத்தில் சேர உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும்குவைறோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

 

                                                         ஒன்பதாம் செகராசசேகரன் இவர் தான் இரண்டாம் சங்கிலி. இவரது ஆட்சிக்காலம் 1617- 1619 வரைதான் நீடித்தது.இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சங்கிலி குமாரனை கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளை போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ  ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய  மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது.1974 ஆம் ஆண்டில் இரண்டாம் சங்கிலியனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சிலை வைக்கப்பட்டது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார். 1994 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது இச்சிலை இடித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை 1996-ல் மீண்டும் சிமெந்தினால் செய்து அதே இடத்தில் வைத்தது. 2011 ஆம் ஆண்டில் இச்சிலை யாழ் மாநகரசபையால் உடைக்கப்பட்டு இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆவணி 3 ஆம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

                                                          முற்றும்

 

ரிஷி ஜெயதேவன்

தரம் 10

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.