Jump to content

கனடாவில் 12ம் வகுப்பு மாணவனின் உள்ளத்திலிருந்து...........


Recommended Posts

கனடாவில் அறிவகம் எனும் அமைப்பு நகரம் தோறும் தமிழ்பாடசாலைகளை அமைத்து அங்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான புள்ளிகளையும் புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது. சென்ற சனிக்கிழமை அவர்களால் நடத்தபடும் பாரதியார் வளாகத்துக்கு செல்லும் வாய்பு எனக்கு கிடைத்தது.அன்று அவர்களால் வருடம் தோறும் நடத்தப்படும் நிகழ்வு நாற்றுமேடை.அன் நிகழ்வில் மாணவர்களின் திறைமை அடிப்படையில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.அங்கு எனது கண்ணில் மூன்று ஆக்கங்கள் கண்ணில் பட்டன.அதை பன்னிரெண்டாம் தரத்தில் பயிலும் மாணவர்கள் ஆய்வு செய்திருந்தார்கள்.

1,எனது குடும்பம்

2,செம்மொழியாம் தமிழ்மொழி

3,தமிழர்களின் வரலாறு

அதில் என்னை கவர்ந்த ஆக்கத்தை இங்குணைக்கிறேன்.காரணம்.தற்போதைய சூழலில் யதார்த்தமாக தென்பட்டது

p428-full.jpg

எனது குடும்பம்(ஆய்வுக்கட்டுரை)

ஆய்வு செய்தவர் : வருண் ஜெயதேவன்

வகுப்பு நிலை: தரம் 12

ஆசிரியர்: பூங்கோதை பன்னீர்செல்வம்

பாரதியார் வளாகம்

மிஸிசாகா, ஒன்ராறியோ

கனடா.

எனது பெயர் வருண் நான் 12ம் தரத்தில் கல்வி கற்கிறேன். எனது தாய் தந்தையர் இலங்கையிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி, நானும், எனது சகோதரனும் அவர்களின் வாரிசாக அதுவும் கனடிய தமிழராக உதித்துள்ளோம்.இங்கே தான் எமக்கு ஒரு சந்தி உருவாகின்றது.இதை நினைக்கும் போது ஜீரணிக்க முடியவுமில்லை.அதை முடிந்தளவு காலத்தின் கட்டாயமாக ஏற்றுகொள்ள வேண்டியுள்ளது போலவும் உள்ளது.

முதலில் எனது தந்தையின் வழியை எடுத்துகொண்டால் எனது பூட்டனார் யாழ்ப்பாணத்தில் வடமராச்சி பகுதியில் இமையாணன் என்ற பகுதியில் மணியகாரனாகவிருந்துள்ளார்.இவரது பெயர் சுப்பிரமணியமாகும்.பின்னர் எனது பாட்டனாரை எடுத்துகொண்டால் மலேசியாவில் புகையிரத நிலைய அதிபராகவிருந்துள்ளார். (இங்கேயும் புலம் பெயர்ந்துள்ளார்கள் கலாச்சாரம் மொழி என்பன பாதுகாக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)எனது தாத்தா இலங்கையில் பிறந்துள்ளார்.அவர் ஒரு எழுது வினைஞர்.அவர் இலங்கையிலேயே வாழ்ந்துள்ளார். அதேபோலஎனது தந்தையின் தாயின் தாயின் வழித்தோன்றலும் சிங்கபூருக்கு இடம் பெயர்ந்து மீண்டும் இலங்கையில் இணைந்த குடும்பம்.(இவர்கள் தொழிலின் நிமிர்தம் இடம் பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது)எனது அப்பம்மா இலங்கையின் வன்னி பகுதியில் தபாலதிபராக பணியாற்றியுள்ளார் பின்பு எனது தந்தை தனது 26வதுவயதில் புலம் பெயர்ந்துள்ளார்.எனது தந்தையுடன் எமது மொழி கலாச்சார விழுமியங்கள் ஆட்டம் காணுகின்றன.

இப்போ எனது தாயின் வழித்தோன்றலைப்பார்ப்போம். அவரின் தந்தை வழி ஒரு ஆச்சார குடும்பம்.எனது பூட்டனார். யாழ்பாணத்தின் தீவகற்ப பகுதியான வேலணை என்ற சிற்றூரில் ஒரு ஆசிரியர். அவருக்கு இரு பெயர்களுண்டு பேரம்பலம் மற்றும் அப்பாத்துரை ஆசிரியர் என்றழைப்பார்கள்.இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஆலயமும் இருந்ததாக கூறுகிறார்கள்.அவ்வாலயத்தை 'முடி பிள்ளையார் கோவில்' என அழைப்பார்கள்.அதே போல எனது தாத்தாவும் ஒரு ஆசிரியர். அவரை முருகேசபிள்ளை ஆசிரியர் என்றழைப்பார்கள்.இலங்கையை பொறுத்தவரை ஆசிரியர் தொழிலுக்கு பெரிய மதிப்பும் மரியாதையுமிருந்தது.மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றுக்கமைய மதிக்கப்பட்டதாம்.ஆனால் தற்போதுள்ள ஆசிரியர்களின் சில நடத்தைகளால் அந்த நிலை அருகிவருவதாக ஊர் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்கால ஆசிரியர்கள் புதிய மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் போதனைகளைச்செய்வதிலும்,முக்கியமாக இளம் மாணவர்களை கடிவாளமிட்ட குதிரைபோல நேர்வழியில் செல்லவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.ஆனால் தற்போது நாகரீக மோகம் மற்றும் பணம் சம்பாதித்தலே குறியாகவுள்ளது.பாடசாலைக்கு வரும்மாணவர்கள் எல்லோரும் பட்டம் பெறவேண்டும் என்ற நிலை மாறி, நாங்கள் படிப்பிக்கின்றோம். நீங்கள் முடிந்தால் படியுங்கள் என்ற நிலை,தற்போதுள்ள மாணவர்கள் கூட ஆசிரியர்களை மதிப்பதில்லை.இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த அன்னியோன்ய நிலையற்றுப்போய் விட்டது. நாம் படித்து பட்டம் பெற வேண்டும், என்று எல்லா மாணவர்களும் நினைப்பதுமில்லை.

இதேபோல எனது தாயின், தாயின் வழித்தோன்றலை எடுத்துக்கொண்டால் எனதுபூட்டனார் ஒரு பிரபல வியாபாரி.அவர் இலங்கையின் தென் கோடியில் தெனியாய என்ற ஊரில் பிரபல வர்த்தகர்.இவர் பெயர் வேலுப்பிள்ளை.இவரின் பட்டப் பெயர் தெனியாய சின்னப்பர்.இலங்கையின் தென் முனையின் பெரு நகரமாகிய காலியில் இவரால் உருவாக்க பட்ட சிவன் கோவில் உண்டு.இதன் மூலம் எமக்கு தெரிவது; எனது மூதாதையர்கள் மொழி,சமயம், கலாச்சாரம் என்பவற்றை முடிந்தளவுபின்பற்றி பொக்கிசப்படுத்தியுமுள்ளார்கள் .

இனி நாம் என்னசெய்ய வேண்டும்.எப்படி இவற்றை பாதுகாக்க போகிறோம்.தற்போது எமது சமுதாயம் நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றிபார்த்தால்;

என்னுடைய பாடசாலை வாழ்க்கையை இங்கு குறிப்பிடலாம். நான் தற்போது இரு கலாச்சாரத்தில் வாழ வேண்டியுள்ளது.எமது கலாச்சாரம் பாரம்பரியமானதும் கட்டு கோப்பு மிக்கதுமாகும்,அடுத்தது எம்மீது தெரிந்தோ தெரியாமலோ திணிக்கப்படும் பல்லின கலாச்சாரம். இதில் முக்கியமாக கனடிய எதற்கும் சுதந்திரமுள்ள கலாச்சாரம். இது இங்குள்ளவர்களை மிகவும் பாதிக்கின்றது.எம்மவர்களில் சிலர் திறந்துவிட்ட ஆட்டுமந்தயைப்போல நடந்துகொள்கின்றனர்.ஒருசில நேரங்களில் நானும் உணர்கிறேன்.சில வேளைகளில், நாம் கனடாவில் தானே இருக்கிறோம் எதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்றுகூட சிந்திதிருக்கிறேன்.பின்புதான் தமிழ் எமது மொழி அதை அழியவிடக்கூடாது என்பதை உணர்ந்தேன்.அதேபோல போராட்டக்காலங்களில் கவனயீர்பு நிகழ்சிகள் நடைபெற்ற நேரம்,எதற்காக இவர்கள் கவனயீர்பு நடத்துகிறார்கள் என்றெல்லாம் சிந்திப்பேன்.எனது தந்தையை ஒருமுறை அப்பா!எங்களுக்கு சொந்தகாரர்கள் இலங்கையில் இருக்கிறார்களா? என்று கேட்டேன்.அவர் இல்லையென்று பதிலளித்தார்.அப்போ ஏன் நாம் கவனயீர்பு நிகழ்வுக்கு போக வேண்டும் என்று கேட்டேன்.அப்போது அவர் விபரமாக விளக்கமளித்தார்.ஆனால் இதில் வேதனையுடன் கூறும் விடயம்.எனது அன்றைய நிலைக்கு காரணம் எனது பெற்றோர்தான்.இங்கு தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சந்தி உருவாகிறது.

தங்களின் அற்ப சொற்ப ஆசைக்காகவும் சமுதாயத்தில் மற்றவர்களோடு போட்டி போட்டுகொண்டு வருமானத்திற்கு அதிக செலவுகளை ஏற்படுத்தி பணத்திண்டாட்டத்தை ஈடு செய்ய, பெற்ற பிள்ளைகளையும் மறந்து தாயும் தந்தையும் பலமணி நேரமாக பணச்சம்பாதிப்பில் ஈடுபடுவார்கள். அப்படி சில நேரம் கிடைத்தால் கூட அதையும் தொலைக்காட்சியில் செலவழிப்பார்கள்.ஒரு சில இடங்களில் பெற்றோரையே காண முடியாது.பெற்ற பிள்ளைக்கு சமைத்து ஊட்ட வேண்டிய தாய் வியாபார நிலையங்களிலும்,குளிரூட்டியிலுருந்தும் பரிமாறுவாள்.

இங்கே தான் நாம் பெற்றோரையும் அவர்களின் பரிவையும் இழக்கின்றோம்.எங்களுக்கு அவர்கள் மீது பற்று பாசம் இல்லை. அவர்களை ஒரு பாதுகாவலராக உணருகிறோம்.இப்போ எங்களுக்கு தேவையான பற்று பாசம் எங்கு கிடைக்கும் என்று தேடும் போது நல்ல இடங்களும் கெட்ட இடங்களும் கிடைகின்றன. இதனால் எமது வாழ்வும் கலாச்சாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது.இப்படி பெற்றோர்மீதே பாசத்தை இழந்த எமக்கு மொழிப் பற்று சமயப்பற்று நாட்டு பற்று எப்படி உருவாகும்.இந்த நிலை பிற்காலத்தில் ஏற்படாமல் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இதே போல திருமணத்தை எடுத்துகொண்டால் இங்கு பல முறையற்ற மற்றும் கலப்பு திருமணங்களும் நடக்கின்றன.இங்கும் பிரச்சனைகள் உண்டு.கலப்பு திருமணம் செய்தால் பிறக்ககூடிய பிள்ளை எந்த கலாச்சாரத்தில் வளரும்.எந்த சமயத்தில் அந்த பிள்ளை பிரார்தனை செய்யும்.இதற்கு கணவனும் மனைவியும் பல விட்டு கொடுப்புகளை செய்ய வேண்டியிருக்கும்.இல்லையேல் விவாகரத்து தான் தீர்வு.அப்போது அந்த பிள்ளையின் நிலை என்ன?இதற்காகத்தான் கனடிய சமூகம் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் என்ற முறையை வைத்திருக்கிறது.ஏனெனில் கையொப்பமிடுதல் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் பின் விளைவுகள் உண்டு.

அடுத்து பெற்றாரை பராமரித்தல்,இது வெளி நாட்டிலிருக்கும் புலம் பெயர்ந்தவர்களிடையே பாரிய பிரச்சனையாகவுள்ளது.அவர்களால் இயலுமானவரை பெற்றோரை உபயோகப்படுத்திவிட்டு அவர்கள் நோய்வாய்படும் நேரம் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் விடுதல் ஏற்று கொள்ளகூடியதொன்றல்ல.அவர்கள் சுகதேகியாகவிருக்கும் போது அவர்களை சுதந்திரமாக அனுமதித்தால் அவர்கள் தங்கள் கடைசிக்காலங்களை சந்தோசமாக கழிப்பார்கள்.அவர்கள் மனச்சோர்வற்று வாழ்ந்தால் எம்முடன் நீடூழி காலம் வாழ்வார்கள்.

இவற்றையெல்லாம் கண்ணூடாக பார்க்கும் நானும் என்போன்ற சமுதாயமும் வாழ்கையில் வரும் இன்னல்களையெல்லாம் எதிர் நீச்சல் போட்டுஎம்மையும் எமது பிற்கால சமுதாயத்தையும் மொழி சமய காலாச்சார விழுமியங்களோடு வாழவைப்போமாக.

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வு . பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

வருண் ஜெயதேவன் மிக உணர்வாக நன்றாக எழுதியுள்ளார்.

இணைப்பிற்கு நன்றி நீலப் பறவை.

Link to comment
Share on other sites

.

பகிர்ந்தமைக்கு நன்றி BLUE BIRD

நிரந்தரமாகவே தொடர்பற்ற சமுதாயத் துண்டுகளாக மாறுவதற்கு முன் தாயகத்தில் ஒரு சுமூகமான நிலை ஏற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

FACE BOOK ல் முடியாததை யாழ் களம் தீர்த்து வைத்தது.தமிழர்களின் தலைத்தளம் யாழ்

வணக்கம்!

என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியாத உறவுகளை யாழ்களம் சேர்த்துவைத்தது.இன்னும் இன்னும் தொடர்புகொள்கிறார்கள்.உங்களுக்கும் உங்கள் இணையத்திற்கும் நன்றி!

உண்மையுடன்

வருண்.

(from e mail)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பிறந்த, 12ம் வகுப்பு மாணவனின் ஆய்வுக் கட்டுரை நன்றாக இருந்தது.

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை பாராட்டுக்கள்

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு..இணைப்பிற்கு நன்றி

வருண் வாழ்த்துகள் உங்கள் முயற்ச்சிக்கு

Link to comment
Share on other sites

  • 1 year later...

                                                                                                                                                                                                                                                                    

 

சங்கிலிய மன்னன்   (யாழ்ப்பாண இராச்சியம்)

 

13ம் நூற்றாண்டில் ஆரம்பித்த யாழ்ப்பாண இராச்சியத்தில் 17ம் நூற்றாண்டில் ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியன் ஆவார்.இவரது ஆட்சிக்காலம் 1620 வரை இருந்தது என சான்றுகள் உண்டு.ஆனாலும் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிய சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது.இதனால் சரியான தரவுகள் எடுப்பது கடினமாயுள்ளது என ஆராச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.இதற்கான முக்கிய காரணமாக தற்போதுள்ள போட்டி அரசியல் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்திருக்கிறது.அக்காலத்திலிருந்தே நம்பிக்கை மோசடி,பதவி மோகம் மற்றும் காட்டிக்கொடுப்புகள் போன்றவை இருந்திருக்கின்றன.

           யாழ்ப்பாண இராச்சியம் நல்லூருக்கு முன்னதாக சிங்கை நகர் என்ற பெயருடன்  கிழக்கு கரையோரமாக உள்ள வல்லிபுரம் நகரில் உதய மானதாக சான்றுகள் கூறுகின்றது.கல் வெட்டொன்றில் “'பொங்கொலி நீர்ச் சிங்கை நகர்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது கூட வல்லிபுர ஆழ்வார் திருத்தலத்துடன் பெயர் பெற்று விளங்குகின்றது.அதே போலதென்னிலங்கையில் கோட்டகமவில் கண்டெடுத்த கல் வெட்டில் "சிங்கை நகராரியனைச் சேராவனுரேசர்' என்று தொடர் வருகின்றது.யாழ்ப்பாண இராச்சியத்தின்  வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவ மாலை ஒரு ஒல்லாந்து அதிகாரியான "மேக்கறூன்" என்பவரின் வேண்டு கோளுக்கு இணங்க 1736ம் ஆண்டளவில் வாழ்ந்த மயில்வாகனப் புலவரால் வரையப்பட்டதாகும்.அக்காலத்தில் யாழ்ப்பாண அரசின் எல்லை வன்னிப்பகுதியை முழுவதும் உள்ளடக்கி மேற்கு கரையில் புத்தளம் வரை நீண்டிருந்தது.

                                                              யாழ்பாடி  இறந்த பின்  வாரிசு இல்லாத காரணத்தால் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட கூழங்கைச் சக்கரவர்த்தி முதல் ஆரியச்சக்கரவர்த்திகள்  என்று அழைக்கப்பட்ட வம்சம் போர்த்துக்கீசர் கைப்படும் வரை ஆண்டு வந்தது.ஆனாலும் இவர்கள் பரராசசேகரன் செகராசசேகரன் என்ற பட்ட பெயர்களை மாறி மாறி வைத்து கொண்டு ஆண்டு வந்தனர்.

                  கி பி 1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த செண்பகப்பெருமாள் என்ற அரசரிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின் தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன்  இந்தியாவிலிருந்து படை திரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.இதுவரை கிடைத்த தகவல்களின் மூலம் ஈழத்தமிழனின் ஆட்சி ஆரம்பம் முதல் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளமை புலப்படுகின்றது.

                                                 16ம் நூற்றாண்டின் முற் பகுதியில் போத்துக்கீசரின் நடமாட்டம் இலங்கையை அண்டிய பகுதியில் அதிகரித்தது மட்டுமல்லாது இலங்கை அரசியலிலும் தலையிடத்தொடங்கியிருந்தார்கள்.யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதும் அவர்கள் பார்வை விழத்தவறவில்லை.போர்த்துக்கீசரின் செல்வாக்கால் இலங்கையில் கத்தோலிக்க மதம் தலையெடுக்க ஆரம்பித்தது.யாழ்ப்பாண இராச்சியத்திலும் மதமாற்றங்கள் தொடங்கியபோது யாழ்ப்பாண அரசன் தனது ஆளுகைக்குட்பட்ட மன்னாரில் மதம் மாறியோரைச் சிரச் சேதம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

                                                                          இதைச் சாக்காக வைத்து கொண்டு 1560ல் போர்த்துக்கீசத்தளபதியான டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து அதனைக்  கைப்பற்றினான்.எனினும் நாட்டுக்குள்ளேயே இருந்து போக்கு காட்டிய அரசன் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இணங்கினான்.எனினும் அவர்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு இணங்க முடியாத அரசன் தனது சாதுரியத்தால் நாட்டை விட்டு விரட்டினான். ஆனாலும் போர்த்துகீசர் யாழ்ப்பாண அரசுக்கு கீழ்ப்பட்ட மன்னார்த்தீவைத்தாக்கிக் கைப்பற்றி கொண்டனர்.

                    தொடர்ந்து 1591ல் அந்தரே பூர்த்தாடோ எனும் தளபதி தலைமையில் யாழ்ப்பாணம் தாக்கி கைப்பற்றப்பட்டது.இப்போரில் யாழ்ப்பாண அரசன் கொல்லப்பட அவனுடைய மகனுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திஅவனை அரசனாக்கி மீண்டனர்.இதன் பின்னர் 1620வரை போர்த்துக்கீசரின் தயவில் யாழ்ப்பாண மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தனர்.1620ல் இராச்சியத்தில் ஏற்பட்ட பதவிப்போட்டிகளால் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றித் தங்கள் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததின் மூலம் யாழ்ப்பாண மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு சில சான்றுகள் தற்போதும் உள்ளன.

        

 2011ல் புதிதாக அமைக்கப்பட்ட சிலை                  மந்திரிமனை                                                                   

 

        யாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தில் கி.பி. 1350.       யமுனா ஏரி      

 

                            

·         சங்கிலித்தோப்பு                                         நல்லூர் கந்தனின் ஆலயம்                                                                                                                                                                                                                                        .                                                                        (தற்போதைய தோற்றம்)

 

 

                                          சங்கிலியனின் ஆட்சிக்காலமானது முதலாம் சங்கிலியன் இரண்டாம் சங்கிலியன் என கட்டம் கட்டமாக வகுக்கப்பட்டுள்ளது.முதலாம் சங்கிலியன் ஏழாம் செகராசசேகரன் ஆவார்.இவருக்கு முன் சிங்கைப்பரராசசேகரன் ஆகிய 6ம் பரராசசேகரன் ஆட்சி செய்தான்.முதலாம் சங்கிலியின் ஆட்சிக்காலம்1519- 1561 வரை நீடித்தது. இவர் ஈழ நல்லூரில் பிறந்தவர்.இவர்1565ல் இறைபதம் எய்தியதாக குறிப்புகள் கூறுகின்றன.இவரின் பின் புவிராஜபண்டாரம் ஆட்சி செய்துள்ளார்.

                                   இவருக்கு அடுத்தபடியாக  1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். போத்துக்கீசரிடம் தாராளமாக நடந்துகொண்ட அரசன் எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் பாதிரிமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கிறிஸ்தவ மதத்தில் சேர உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும்குவைறோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

 

                                                         ஒன்பதாம் செகராசசேகரன் இவர் தான் இரண்டாம் சங்கிலி. இவரது ஆட்சிக்காலம் 1617- 1619 வரைதான் நீடித்தது.இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சங்கிலி குமாரனை கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளை போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ  ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய  மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது.1974 ஆம் ஆண்டில் இரண்டாம் சங்கிலியனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சிலை வைக்கப்பட்டது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார். 1994 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது இச்சிலை இடித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை 1996-ல் மீண்டும் சிமெந்தினால் செய்து அதே இடத்தில் வைத்தது. 2011 ஆம் ஆண்டில் இச்சிலை யாழ் மாநகரசபையால் உடைக்கப்பட்டு இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆவணி 3 ஆம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

                                                          முற்றும்

 

ரிஷி ஜெயதேவன்

தரம் 10

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.