Jump to content

3 – திரைவிமர்சனம்


Recommended Posts

ரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன்.

கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது க்ளைமாக்ஸ் வரை. துள்ளுவதோ இளமை படத்தையும் மயக்கம் என்ன படத்தையும் கலந்து கட்டி அடித்தது போல உள்ளது.

முதல் பாதி முழுவதும் இவர்கள் இருவர் பள்ளிக்காதலே வருகிறது முக்கியத்திருப்பங்கள் எதுவுமில்லாமல் நகர்கிறது. தனுஷுக்கு இந்த கதாப்பாத்திரம் சொல்லவே தேவையில்லை அடி தூள் கிளப்புகிறார். இவருக்கு துணை சிவ கார்த்திகேயன், டைமிங் காமெடியில் கலக்குகிறார். அவ்வப்போது சந்தானம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தனுஷும் ஸ்ருதியும் பள்ளி மாணவர்கள் என்பதை எந்தவித சிரமுமில்லாமல் ஏற்க அவர்களது உடல்வாகு உதவுகிறது. ஸ்ருதி கதாப்பாத்திரத்தில் முன்பு வந்தவர் அமலா பால் பின்னர் எதோ கால்ஷீட் பிரச்சனை என்று அவர் இல்லை. அவர் இருந்து இருந்தாலும் பள்ளி சார்ந்த காட்சிகளுக்கு பொருத்தமாக இருந்து இருப்பாரா என்று தெரியவில்லை.

ஸ்ருதியை சைட் அடிக்க தனுஷ் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கும் உடன் சிவ கார்த்திகேயன். இவரை இடைவேளைக்குப் பிறகு கழட்டி விட்டுவிட்டார்கள் ஆனால் இருக்கும் வரை திரையரங்கம் கலகலத்துக்கொண்டே இருந்தது. ஸ்ருதி நண்பியாக ஜோடி நம்பர் 1 ல் ஆடிய நேபாளி பெண் என்று நினைக்கிறேன். பார்த்தால் அவர் மாதிரி தான் இருந்தார். ஸ்ருதி தங்கச்சியாக வரும் சிறுமி செய்யும் கை அசைவுகள் ரசிக்கும் படி இருக்கும்.

உலகத்திலேயே யாருமே செய்து இராத இடத்தில் தனுஷ் ஸ்ருதி திருமணம் நடக்கிறது. இந்தக்காட்சிக்காக எத்தனை பேர் திட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினி பொண்ணு இயக்கம் என்பதால் தலைவருக்கும் சேர்ந்து திட்டு விழப்போகிறது icon_smile.gif ஒய் திஸ் கொலவெறி என்று தெரியவில்லை. ஸ்ருதியின் திருமணத்தை ஏற்க மறுக்கும் அவரது தந்தையிடம் தனுஷ் பேசும் காட்சிகள் அருமை. ரொம்ப எதார்த்தமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. அதே போல அவர்கள் தனுஷ் வீட்டிற்கு வரும் போது தனுஷ் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் அசத்தல் ரகம். ஸ்ருதியின் அம்மாவாக ரோகிணி.

பாடல்கள் எல்லாம் ஏற்கனவே மெகா ஹிட் ஆகி விட்டதால் படத்திலும் பார்க்க நன்றாகவே இருந்தது. கொலவெறி பாடல் எடுக்கப்பட்ட விதம் ரொம்ப சுமாராக இருந்தது. நான் எதிர்பார்த்தது தான்.

தனக்கு இந்தப் நோய் உள்ளது என்று தெரிய வரும் போது அவரது நண்பரிடம் (மயக்கம் என்ன படத்தில் நண்பராக வருபவர்) கூறி அழுவது, தன் நண்பனையே அடித்து விட்டு பின் அதற்காக வருந்துவது என்று தனுஷ் நடிக்க பல வாய்ப்புகள். மச்சான்! நான் பைத்தியமாடா! என்று அப்பாவியாகக் கேட்டு கலங்க வைத்து விடுகிறார். தனுஷுக்கு உள்ள பிரச்னையை அவர் நண்பர் மட்டுமே அறிந்து இருக்கிறார் என்பதை நம்ப சிரமமாக உள்ளது.

தனுஷ் தன்னுடைய பிரச்னையை ஸ்ருதிக்கு தெரியாமலே சமாளிப்பது என்பதும் நம்பும் படி இல்லை. ஸ்ருதி அழுவதைப் பார்க்க கொடுமையாக இருக்கிறது ஆனால் அவரது துரதிர்ஷ்டம் அவருக்கு அது போன்ற காட்சிகள் அதிகம் என்பது தான். அவர் அழும் போது நாம் நெளிய வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளை குறைத்து இருக்கலாம் இந்தக்காட்சிகளுக்கு திரையரங்கில் பலர் பொறுமை இழப்பார்கள்.

தனுஷ் அப்பாவாக பிரபு அம்மாவாக பானுப்ரியா. பிரபு தனுஷிடம் டேய்! நல்லா சாப்பிடுடா உன்னைப் பார்த்தால் யாராவது என்னோட பையன் என்று சொல்லுவாங்களா! என்று நாம் கேட்க நினைத்ததை அவர் கூறி நமக்கு வேலையில்லாமல் செய்து விட்டார் icon_smile.gif

முகத்தில் கோபத்தை டெர்ரராக காட்டுவதில் ரஜினிக்கு பிறகு நான் தனுஷ் ரசிகன் ஆகி விட்டேன். அடேங்கப்பா! என்ன மிரட்டு மிரட்டுகிறார் மயக்கம் என்ன படத்திலேயே கலக்கி இருப்பார் இதிலும் அதே போல் பல வாய்ப்புகள். அதிலும் ஒரு சண்டைக் காட்சியில் அவர் அடிக்கும் அடிகள் காட்டும் முக பாவனைகள் சரவெடி தான். அந்தக் காட்சியில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.

படத்தில் சைக்கலாஜிக்கலாக பல காட்சிகள் வருவதால் அதை எல்லாம் ரசிக்கும் அளவிற்கு நம் மக்களுக்கு பொறுமை இருக்குமா என்பது சந்தேகம் தான். B C சென்டர்களில் ஆதரவு குறைவாகத்தான் இருக்கும். தனுஷ் இது போல ஒரே மாதிரி படங்களாக நடிக்கும் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது நல்லது.

3 என்பதற்கு அர்த்தம் பள்ளி, கல்லூரி, திருமணம் ஆன பிறகு என்று மூன்று காலங்கள் வருவதால் இருக்கும் என்று நானே முடிவு செய்து கொண்டேன். வேறு எதுவும் காரணம் தோன்றவில்லை.

படம் டக்கென்று முடிந்து விட்டது பலர் படம் இன்னும் தொடரும் என்று நினைத்தார்கள் நான் உட்பட. மயக்கம் என்ன கூட அப்படித்தான் முடியும் ஆனால் அதில் ஒரு அழகு இருந்தது அதற்கே பலர் திட்டினார்கள் இதற்கு!!… படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்க மாட்டார்கள். எனவே படம் ஹைப்பால் ஓபனிங்கில் வசூல் பார்க்கலாம் மற்றபடி ஓகே ரகம் தான்.

http://www.giriblog.com/2012/03/3-movie-review.html

Link to comment
Share on other sites

இன்று தான் படம் பார்த்தன். என் விமர்சனத்தையும் இங்கு சேர்க்கிறேன்.

இடைவேளை வரை படம் ரசிக்கும் படி இருக்கு. எனினும் துள்ளுவதோ இளமை படத்தை நினைவு படுத்துகிறது. இடைவேளையின் பின் மெதுவாக திரைக்கதை நகர்கிறது.

ஸ்ருதி காதல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். எனினும் அழும் காட்சிகள் பார்க்கமுடியாதவாறு இருக்கிறது. இடைவேளையின் பின் அவருக்கு முழுக்க அழும் காட்சிகள் தான். ஸ்ருதியின் குரலும், பேசும் விதமும் படத்தை இன்னும் மெதுவாக செல்வது போல் காட்டுகிறது.

தனுஷ் நன்றாக நடித்துள்ள போதும் இடைவேளையின் பின்னர் மயக்கம் என்ன படம் பார்த்தமாதிரி இருந்தது. நெடுக்காலபோவான் அண்ணா சொன்னது போல தனுஷின் repeat action இங்கும் வெளிப்படுகிறது. என்ன செய்வது இனியாவது தனுஷ் மனநோயாளி பாத்திரத்தை தெரிவு செய்யாமல் இருப்பது நல்லது.

தனுஷுக்கு உள்ள வியாதி ஸ்ருதிக்கு தெரியாமல் மறைக்கப்படுவதென்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

தனுஷின் அப்பா, அம்மாவாக பிரபு , பானுப்பிரியாவும் ஸ்ருதியின் அம்மாவாக ரோகிணியும் நடித்துள்ளனர். ஸ்ருதியின் நண்பியாக வருபவர் விஜய் டிவியின் "jodi no 1-season4" இல் வந்தவர். தங்கையாக நடிப்பவரும் "jodi no 1-junior" இல் வந்தவர் போலிருக்கிறது. சரியாக தெரியவில்லை. இவர்களுக்கு காட்சிகள் பெரிதும் இல்லாவிட்டாலும் கொடுக்கப்பட்டதை அழகாக செய்துள்ளார்கள்.

இடைவேளை வரை வரும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் அவருக்கான காட்சிகள் போதாது. இடைவேளையின் பின் தனுஷுடன் மயக்கம் என்ன படத்தில் வரும் சுந்தர் வருகிறார். இவர் இந்த படத்திலும் ஒரு அப்பாவியாக வருகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு இது முதல் படம் என்று கூற முடியாதவாறு படத்தை எடுத்துள்ளார். ஆனால் செல்வராகவனிடம் assistant director ஆக பணிபுரிந்ததன் தாக்கம் பல இடங்களில் தெரிகிறது. எவ்வாறாயினும் தமிழ் சினிமாவில் இன்னொரு நல்ல இயக்குனர் ரெடி.

பாடல்களை பொறுத்தவரை கண்ணழகா பாடல் நன்றாக உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்த "why this kolaveri" பாடலும் "போ நீ போ" பாடலும் கதையுடன் சம்பந்தமில்லாமல் வருகிறது. "why this kolaveri" பாடல் வந்த சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலாக "போ நீ போ" பாடலை போட்டிருந்தால் அப்பாடலாவது கதையுடன் பொருந்தியிருக்கும். கண்ணழகா பாடலை தவிர ஏனைய அனைத்து பாடல்களிலும் இசைக்கும், பாடல் வரிகளுக்கும் தகுந்தபடி movements அமையவில்லை. காட்சியமைப்பில் இன்னும் அழகாக எடுத்திருக்கலாம். இருந்தாலும் ரசிக்கக்கூடியதாக உள்ளது.

படத்தின் ஆரம்பத்திலேயே முடிவு என்ன என்று தெரிந்தாலும் திடீரென்று படத்தை முடித்து விட்டார்கள். ஸ்ருதியின் கட்டத்தில் கொண்டுவந்து முடித்திருந்தாலும் பரவாயில்லை.

படத்திற்கு "3" என பெயரிடப்பட்டதன் காரணம் தெரியவில்லை. தனுஷ், ஸ்ருதிக்கு அடுத்து 3 ஆவதாக வரும் இந்த நோய் படத்தின் முடிவுக்கு காரணமாக இருப்பதால் "3" என்ற பெயர் வந்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

கண்டிப்பாக repeat audience இருக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 - விமர்சனம்

இந்திய சினிமாவின் இரு பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் இணைந்துள்ள படம் 3. ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ், கமல்ஹாஸன் மகள் ஸ்ருதிஹாஸன் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.

23672_1.jpg

ஐஷ்வர்யாவின் முதல் படம் என்பதால் சாதாரணமாக படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் செய்த ஒரு காரியத்தால் இந்த படத்தை இந்தியா முழுவதும் திரும்பிப் பார்த்தது. கொலவெறிப் பாடலை யூ டியூபில் போட்டதன் மூலம் படம் தானாக விளம்பரமானது. இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

ஸ்ருதியும் தனுஷும் பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கிறார்கள். ஸ்ருதியை துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு சின்ஸியரான மாணவராக இருக்கிறார் தனுஷ்.

பள்ளியில் படிக்கும் போதே, இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டு மொட்டைமாடியில் சந்திப்பது, வீட்டில் யாரும் இல்லாதபோது இருவரும் குஜாலாக இருப்பது போன்ற நல்ல காரியங்கள் தொடர்கிறது.

பள்ளிப்படிப்பு முடிந்தபிறகும் காதல் தொடர்கிறது. பல எதிர்ப்புகளைத் தாண்டி திருமணாம் செய்துகொள்கிறார்கள். திருமணாத்திற்கு பின் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கிறது. மகிழ்ச்சியான சூழலில் வாழ்கின்றனர்.

ஆனால், தன் மனைவி ஸ்ருதிஹாசனுக்கும் தெரியாமல் தனுஷுக்கு ஒரு வியாதி இருப்பதாக படத்தின் இரண்டாம் பாதியில் சொல்லப்படுகிறது. அதாவது அதிகமாக கோபப்படுவதும், அதிகமாக சந்தோஷப்படுவதும். சிம்பிளா சொன்னா, ஒருவர் மேல் கோபம் வரும்போது, அவங்க மண்டைய ரெண்டா பொளந்து ரத்தகாயமாக்கிட்டு, அப்புறம், அய்யோ... நானா இப்படி பண்ண, எனக்கு ஏன் தான் இப்படியெல்லாம் தோணுதோ என்று தலைமேல அடிச்சுக்கிட்டு அழுவது!

23667_1.jpg

காதல் கொண்டேன், மயக்கம் என்ன இரண்டு தனுஷையும் ஒன்னா பார்த்தா எப்படி இருக்கும். அதே சைக்கோத் தனமான கேரக்டர். இந்த வியாதி முத்திப்போக, கடைசியில் ஸ்ருதிஹாசனை தனுஷ் கொன்றுவிடுகிறாரா? அல்லது தற்கொலை செய்துகொள்கிறாரா? என்பது படத்தின் முடிவு. ஆனால் அது ரசிகர்களுக்கு கொடுமையான முடிவுதான் எனபதில் எந்த சந்தேகமும் இல்லை.

கதை இதுதான் என்றாலும் அதை திரைக்கதை மூலம் ரொம்ப நல்லாவே குழப்பி இருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்.

முதல் பாதியில் சிவகார்த்திகேயன் சிரிக்க வைக்கிறார். இப்படி ஒரு எதார்த்தமான முதலிரவுக் காட்சியை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது போல. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் அப்படி ஒரு நெருக்கம். தனுஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

குழப்பம் கதையில் மட்டுமே! நடிப்பை பொருத்தவரை இந்த கேரக்டரை தனுஷைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. உண்மையான சைக்கோ மாதிரியே நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், பார்ப்பதற்கு ’கும்’முன்னு இருந்தாலும் பல நேரங்களில் ’கம்’முன்னே இருக்காங்க. ஆனாவொன்னா அழுவது எரிச்சல்!

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானவை தான். பாடல்களின் விஷுவல் காட்சிகளும் ஏமாற்றமில்லாமல் அமைந்திருக்கின்றன. கொலவெறி பாடல் அதிரடியான அலட்டல்கள் இல்லாமல் எதார்த்தமாக இருந்தது ஆறுதல். நீ பார்த்த விழிகள்... இதமான மெலடி.

பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை என பல பரிமாணங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக நிரூபித்தவர் வேல்ராஜ். இந்த படத்தில் சாதாரண காட்சிகளையும் கூட பிரம்மிக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.

தனுஷுக்கு வியாதி என்பதை ஏற்க முடிந்தாலும், அது எதனால் வந்தது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை கதையில் சொல்லி இருந்தால், கொஞ்சம் தெளிவா குழம்பி இருக்கலாம். என்ன காரணம்னு கடைசி வரைக்கும் சொல்லாமல், ஹீரோவோடு சேர்த்து பார்வையாளர்களையும் சாகடிப்பது எந்த விதத்தில் நியாயம்? (எப்படி இருந்தாலும், ஐஸ்வர்யா தனுஷ் செல்வராகவனின் உதவியாளர் என்பதை நிரூபித்துவிட்டார் )

படத்தை எடுத்தவருக்கு பைத்தியமா? படத்தில் நடிப்பவருக்கு பைத்தியமா? இல்ல படத்தை பார்ப்பவர்களுக்கு பைத்தியமான்னு? ஒரு பெரிய கேள்வியே வருகிறது.அடிக்கிற வெயில்ல ஏற்கெனவே தலைவலி, இதுல இதுவேறவா?

3 - மண்ட காயுது! ஒரே தலைவலி, ஏன் இந்த கொலவெறி?

நன்றி:நக்கீரன்.கொம்

இன்று தான் படம் பார்த்தன். என் விமர்சனத்தையும் இங்கு சேர்க்கிறேன்.

கண்டிப்பாக repeat audience இருக்கமாட்டார்கள்.

(உங்கட பெயரைத் தான் உச்சரிக்க கஸ்டமா இருக்கிறது.. காரணம்.. நாங்கள் தீவிர காதல் எதிர்ப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள்... சரி அதைவிட்டிட்டு விசயத்துக்கு வருவம்...)

யாழ் களத்தில் உங்களின் முதலாவது பட விமர்சனம் இது என்று நினைக்கிறேன்.. நான் வாசிச்ச பிற விமர்சனங்களோடு ஒப்பிடும் போது நிச்சயமா படம் பார்க்காத ஒருவர் இந்தப் படத்தை பார்க்கனுமா இல்லையான்னு தீர்மானிக்க உங்கட விமர்சனம் உதுவும் என்றால் மிகையல்ல. பாராட்டுக்கள். இன்னும் எதிர்காலத்திலும் எழுத வாழ்த்துக்கள். நன்றி.. தங்கச்சி..! :)

Link to comment
Share on other sites

(உங்கட பெயரைத் தான் உச்சரிக்க கஸ்டமா இருக்கிறது.. காரணம்.. நாங்கள் தீவிர காதல் எதிர்ப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள்... சரி அதைவிட்டிட்டு விசயத்துக்கு வருவம்...)

யாழ் களத்தில் உங்களின் முதலாவது பட விமர்சனம் இது என்று நினைக்கிறேன்.. நான் வாசிச்ச பிற விமர்சனங்களோடு ஒப்பிடும் போது நிச்சயமா படம் பார்க்காத ஒருவர் இந்தப் படத்தை பார்க்கனுமா இல்லையான்னு தீர்மானிக்க உங்கட விமர்சனம் உதுவும் என்றால் மிகையல்ல. பாராட்டுக்கள். இன்னும் எதிர்காலத்திலும் எழுத வாழ்த்துக்கள். நன்றி.. தங்கச்சி..! :)

என்னை திட்டுறீங்களா பாராட்டுறீங்களா என்று புரியலையே????? :)

எதுவாக இருந்தாலும் என் முன்னேற்றத்திற்கு உதவும்... எனவே நன்றிகள் அண்ணா....

எனக்கு விமர்சனம் எழுதி பழக்கமில்லை. யாழ் களத்தில் மட்டுமல்ல. பிறந்ததுக்கே நான் விமர்சனம் எழுதுவது இது தான் முதல் தரம். ஏதோ என் கருத்தை தான் கூறினேன் - விமர்சனம் என்ற பெயரில்.

அப்புறம்....

வரிக்கு வரி காதல், காதலிக்கிறார்கள், காதலிக்கும் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கும் விமர்சனத்தை நீங்கள் இங்கு இணைக்கும் போது "காதல்" என்ற என் பெயரை இங்கு எழுதுவதால் ஒன்றும் குறைந்து விட மாட்டீர்கள்........... (உச்சரிக்க எல்லாம் தேவையில்லை :) ).

சிலவேளை என் பெயரை உச்சரித்தால் தீவிர காதல் எதிர்ப்பு சங்கத்திலிருந்து தீவிர காதல் ஆதரவு சங்கத்திற்கு மாறிவிடுவீர்களோ என்னவோ? :lol::D

என்ன இருந்தாலும் என் பெயரை மேலே எழுதின பிறகும் இப்பிடியெல்லாம் அடம்பிடிக்க கூடாது. எழுதும் போது மனதுக்குள் உச்சரித்து தான் எழுதியிருப்பீர்கள் :icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரின்கோபா சொகய அமதுறான் sad-crying-smiley-face.gif

நாங்க எல்லாம் வீராப்புக் காட்டி அழிஞ்சது தான் மிச்சம். அவன் பேக்கு மாதிரி நடிச்சு நடிச்சே செம பிகரா மடக்கிக்கிட்டு இருக்கிறான்..! பிகருகளும்.. பேக்குகளிடம் தான் மடியுங்கள். அப்ப தானே ஊரை ஏய்க்கலாம்.. மேய்க்கலாம்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கமுக்க......நாக்கமுக்க மாதிரி ஏன் இந்த கொலைவெறி........எல்லா விளம்பரமும் வியாபாரமாகாது....நான் நினைச்சது நடந்துட்டுது.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.