Jump to content

ரவீந்திர ஜடேஜாவைக் கேள்விக்குறியாக்கிய தோனி


Recommended Posts

ரவீந்திர ஜடேஜாவைக் கேள்விக்குறியாக்கிய தோனி
 

 

 

ரவீந்திர ஜடேஜாவை ஆல்ரவுண்டர் என்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் கூறலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக அயல்நாடுகளில் அவரது பந்து வீச்சு கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

 

இதில் 2 விதமான பார்வை உள்ளது. ஒன்று தோனி அவரை வேகப்பந்து வீச்சிற்கு ஆதரவான ஆட்டக்களங்கள் அல்லது முழுதும் பேட்டிங் சாதக ஆட்டக் களங்களில் ஸ்ட்ரைக் பவுலராக பயன்படுத்தாமல் வெட்டியாக ரன் கட்டுப்படுத்தும் பவுலராக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு கடுமையாக எழுப்பப்பட்டு வருகிறது.

 

இன்னொரு புறம் அவர் ஒரு மெதுவான இடது கை ஸ்பின்னர், கொஞ்சம் பேட்டிங் செய்பவர், எனவே அயல்நாட்டு டெஸ்ட் போட்டி ஆட்டக்களங்களில் அவரது பயன்பாடு மிகவும் குறைவு, அல்லது அவர் திறமை டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப தயாரானது அல்ல என்ற இந்த இரண்டு பார்வைகள் நிலவுகின்றன.

 

இந்த இரண்டு பார்வையையும் தவிர அவருக்குப் பதிலாக அஸ்வினையே களமிறக்கவேண்டும் என்ற ஒரு பார்வையும் இருந்து வருகிறது.

தோனி அவரைப் பயன்படுத்தும் விதம் கேள்விக்குறியது என்ற பார்வையில் உண்மை உள்ளது. ஏனெனில் தோனி என்ன நினைக்கிறார். ஒரு முனையில் வேகப்பந்து வீச்சை முடுக்கி விட்டு இன்னொரு முனையில் ஜடேஜாவை வைத்து ரன்களைக் கட்டுப்படுத்துவது என்று மனக்கோட்டை கட்டிவருகிறார்.

ஆனால் ஜடேஜாவால் ரன்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. நேற்று இயன் பெல், ஜோஸ் பட்லர் என்று ஜடேஜா பந்து வீச்சை புரட்டி எடுத்ததுதான் நிகழ்ந்தது.

 

மேலும், ஒரு முனையில் வேகப்பந்து வீச்சு என்பது குறைந்தது ஒரு பிரெட் லீ-யையோ, மிட்செல் ஜான்சனையோ கோருவது. 130 கிமீ வேகத்தில் வீசினாலும் நம்மிடையே உள்ள ஒரே ஸ்ட்ரைக் பவுலர் இஷாந்த் சர்மாதான். அவரும் அணியில் விளையாட முடியாத நிலையில் ஒரு முனையில் ஜடேஜாவை லெக் திசையில் பந்து வீசச் செய்து, லெக் திசையில் ஃபீல்டர்கலை பேக் செய்வது அறிவுபூர்வமான கேப்டன்சியாகத் தெரியவில்லை.

மொகமட் ஷமி சுத்தமாக ஒரு சாதாரண பவுலராக வீசுகிறார். அவருக்கு என்னவாயிற்று என்பது பற்றி பயிற்சியாளரோ, தோனியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஹஷிம் ஆம்லா போன்ற வீரரையே பவுன்சர் போட்டு வீழ்த்த முடிந்த ஷமி இங்கிலாந்தில் இந்தத் தொடரில் படுமோசமான லைன் மற்றும் லெந்த்தில் வீசி வருகிறார். இஷாந்த் இல்லாத தருணத்தில் ஷமியை ஆக்ரோஷமாக வீசுமாறு தோனி வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் செய்தமாதிரி தெரியவில்லை.

 

புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்கை ஒரு முனையில் பவுன்சர் வீசச் செய்து அவரையும் விரயம் செய்ததுதான் தோனியின் சாதனையாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து வருகிறது.

ஒரு முனையில் ஸ்ட்ரைக் பவுலர் ஒருவர் கூட இல்லாத நிலையில் ஜடேஜாவை வைத்து அட்டாக் செய்திருக்க வேண்டும் தோனி. நெருக்கமாக பீல்டிங்கை நிறுத்தி பேட்ஸ்மென்களை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்திருக்க வேண்டும் தோனி. ஆனால் துளி கூட கற்பனா சக்தியே இல்லாத கேப்டனாக இருக்கிறார் தோனி.

 

அதுவும் ஆட்டம் நம் கையை விட்டுப் போகும் தருணங்களில் அவரது கற்பனை வறட்சி தூக்கலாகத் தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் ஜடேஜா 58 ஓவர்கள் வீசி 138 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் அது டர்பனில் உள்ள வழக்கமான பிட்ச் அல்ல. துணைக் கண்ட பிட்ச் போல் இருந்தது என்ற விமர்சனம் அப்போதும் எழுந்தது. அடுத்ததான நியூசிலாந்து தொடரில் 2 டெஸ்ட்டில் ஜடேஜா வெறும் 3 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். சுமார் 178 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

 

மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் 80 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்தத் தொடரில் சுமார் 158 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அவரை அணியில் வைத்த்திருக்க ஏதாவது நியாயம் உள்ளதா? பேட்டிங் ஆடுகிறாரே என்று கேட்கலாம். அதை அஸ்வினும் செய்ய முடியும்.

 

மேலும் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர் என்றால் இப்போதைக்கு அஸ்வின் மட்டுமே. அவரை தொடர்ந்து அயல்நாடுகளில் உட்கார வைப்பதும் தவறான அணுகுமுறையே.

 

மறுபடியும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அஸ்வின் ஜடேஜாவை விட அயல்நாட்டுப் பிட்ச்களில் சிறந்தவர் என்று கூற வரவில்லை. மாறாக அவரிடம் பல்வேறு விதமான பந்து வீச்சுக்கள் உள்ளன. கேரம் பால், தூஸ்ரா, மற்றும் லைன், லெந்த், பிளைட், டிரிஃப்ட் என்று அவர் கைகளில் வினோதங்கள் உள்ளன.

 

அவரிடம் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் அதிகம். ஜடேஜா மிகவும் ஃபிளாட்டான ஒரு பவுலர். ஆகவே ஜடேஜா என்ற பலவீனத்திலிருந்து தோனி வெளிவருவது அவசியம்.

 

இங்கிலாந்து அணியில் ஒருமுறை கீத் மில்லர் என்ற ஸ்பின்னர் விக்கெட்டுகளை எடுக்காமல் பேட்டிங்கில் சதம் எடுத்தார். ஆனால் சதம் எடுத்ததற்காக அவரை அணியில் இங்கிலாந்து வைத்துக் கொள்ளவில்லை. அடுத்த டெஸ்டில் அவரை அணியிலிருந்து நீக்கியது. ஏனெனில் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னராக அவரை எடுத்தனர் ஆனால் பேட்டிங்கில் சதம் எடுத்தார். அது தேவையில்லை என்று இங்கிலாந்து கருதியது. இதுதான் சிறந்த அணுகுமுறை.

 

கேப்டன்சி கலை என்பது வெறும் வெற்றிகள், தோல்விகளை வைத்து எடைபோடப்படுவதல்ல, கிரிக்கெட் வரலாறு, பாசிடிவ் அணுகுமுறை, சாதுரியம், விஷயங்கள் சாதகமாக இல்லாதபோது சாதகத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்கான உத்திகள் ஆகியவற்றை ஒரு கேப்டன் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பற்றியது.

இந்தப் பகுதிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டியின் முழுமையான சவால்களைச் சந்திக்க தோனி இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது என்பதையே அவரது அணுகுமுறை காட்டுவதாக கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6260722.ece

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.