Jump to content

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் -


Recommended Posts

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம்
2014-07-18 10:09:03

 

உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை  இதுவே முதல் தடவையாகும்.


முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உருகுவே 6 ஆவது இடத்திலும் உள்ளன.


பிரேஸில் 7 ஆவது இடத்தையே பெற்றுள்ளது. ஸ்பெய்ன் 8 ஆவது இடத்திற்கு கீழிறங்குள்ளது.  சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் ஆகியன முறையே 9 மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ளன.

11 முதல் 20 வரையிலான இடங்களிலுள்ள அணிகளின் விபரம்:
(11) போர்த்துகல், (12) சிலி, (13) கிறீஸ், (14) இத்தாலி, (15, அமெரிக்கா, (16) கொஸ்டாரிக்கா, (17) குரோஷியா, (18) மெக்ஸிகோ, (19) பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா, (20) இங்கிலாந்து
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6218#sthash.siQhgdQF.dpuf

Link to comment
Share on other sites

ஜெர்மனி மீண்டும் நம்பர்–1
ஜூலை 17, 2014.

பாரிஸ்: ‘பிபா’ உலக கால்பந்து ரேங்கிங்கில் (தரவரிசை), ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

சர்வதேச கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, ‘பிபா’ நேற்று வெளியிட்டது. இதில், சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடரின் பைனலில், அர்ஜென்டினாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி அணி, 20 ஆண்டுகளுக்கு பின், ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. கடைசியாக 1994ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

 

பைனல் வரை முன்னேறிய அர்ஜென்டினா அணி, 5வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறியது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், பிரேசிலை வீழ்த்திய நெதர்லாந்து அணி 12 இடங்கள் முன்னேறி, மூன்றாவது இடம் பிடித்தது.

 

பிரேசில் பின்னடைவு:

அரையிறுதியில், ஜெர்மனியிடம் மோசமான தோல்வி கண்ட பிரேசில் அணி, 3வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது.  இதனையடுத்து நான்கு இடங்கள் பின்தங்கிய பிரேசிலுக்கு 7வது இடம் கிடைத்தது. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கி, முதல் சுற்றோடு திரும்பிய ஸ்பெயின் அணி, முதல் இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் ஷூ’ விருது வென்ற ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் இடம் பெற்ற கொலம்பிய அணி, 4 இடங்கள் முன்னேறி 4வது இடம் பிடித்தது. ‘கறுப்பு குதிரை’யாக வலம் வந்த பெல்ஜியம் (5வது இடம்), இங்கிலாந்து, இத்தாலி அணிகளுக்கு ‘சிம்மசொப்பனமாக’ விளங்கிய உருகுவே (6வது இடம்) அணிகளும் முன்னேற்றம் கண்டன. மூன்று இடங்கள் பின்தங்கிய சுவிட்சர்லாந்து அணி 9வது இடத்தை பிடித்தது. ஏழு இடங்கள் முன்னேறிய பிரான்ஸ் அணி, 10வது இடத்தை கைப்பற்றியது.

போர்ச்சுகல் (11வது இடம்), இத்தாலி (14வது இடம்), அமெரிக்கா (15வது இடம்), இங்கிலாந்து (20வது இடம்) அணிகள் பின்னடைவை சந்தித்தன. லீக் சுற்றில், உருகுவே, இத்தாலி அணிகளை வீழ்த்தி, இங்கிலாந்துக்கு எதிராக ‘டிரா’ செய்த கோஸ்டாரிகா அணி, 12 இடங்கள் முன்னேறி 16வது இடம் பிடித்தது.

உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாத இந்திய அணி, 154வது இடத்தில் இருந்து 151வது இடத்துக்கு முன்னேறியது.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1405617075/klosegermany.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.