Jump to content

லண்டனில் சப்பாத்தி கட்டையால் அடித்து மாமியாரை கொன்ற மருமகள்.


nochchi

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சப்பாத்தி கட்டையால் அடித்து மாமியாரை கொன்ற மருமகள்

Published on Saturday, 21 July 2012 12:59

emailButton.png printButton.png

21_killed_motherinlaw.jpg

லண்டனில் மாமியாரை சப்பாத்திக் கட்டையால் 20 முறை அடித்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 121 கி.மீ. தூரத்தில் உள்ளது சவுத்தாம்டன். இங்கு வசிப்பவர் இக்பால் சிங். இவருடைய தாய் பல்ஜித் கவுர் பட்டார் (56), மனைவி ராஜ்வீந்தர் சிங் (36). 2010 ஆகஸ்ட் மாதம் சவுத்தாம்டன் வந்தார் பல்ஜித். மகன், மகளுடன் 6 மாதம் தங்கி செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், வீட்டுக்கு வந்ததில் இருந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 2011 பிப்ரவரி 27 அன்று இந்தியா திரும்ப இருந்தார் பல்ஜித். ஆனால், 25 ஆம் தேதி வீட்டில் இருந்து ஜான் பைக் என்ற டாக்டருக்கு போன் செய்த ராஜ்வீந்தர், மாமியாருக்கு நெஞ்சு வலி, உடனே வாருங்கள் என்று அழைத்தார். அதன்படி வீட்டுக்கு சென்ற போது குளியல் அறையில் பல்ஜித் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது மண்டை உடைந்திருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மருமகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, குளியல் அறையில் வழுக்கி தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்த போது மாமியாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் ராஜ்வீந்தர். வீட்டுக்கு வந்ததில் இருந்து என்னை கேவலமாக திட்டிக் கொண்டே இருந்தார். நான் ஷவரில் குளிக்க சென்ற போது, என்னை வெளியில் இழுத்து போட்டு துடைப்பத்தால் அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து சப்பாத்தி கட்டையால் தலையில் 20 முறை பலமாக அடித்தேன் என்று ராஜ்வீந்தர் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்த வழக்கு வின்செஸ்டர் கிரவுன் கவுன்டி கோர்ட்டில் நடந்தது.

வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி பர்னெட், கொலை செய்தது மட்டுமல்லாமல் தடயங்களை மறைத்துள்ளார் ராஜ்வீந்தர். எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். பரோலில் வெளிவர குறைந்தபட்சம் 11 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

நன்றி - srilankamirror.

http://www.srilankamirror.com/tamil/features-home/485-2012-07-21-07-29-32

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இங்காலே வரமுன்பு செய்தியை தூக்குவின்களா?

புண்ணியமா போகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :D

பாவம் அவர் கோயிலில் படம் பிடித்தபடி நிற்பார்

Link to comment
Share on other sites

>நான் ஷவரில் குளிக்க சென்ற போது, என்னை வெளியில் இழுத்து போட்டு துடைப்பத்தால் அடித்தார்

செத்த மனிசி சாட்சி சொல்ல வரப் போகுதா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் இந்தியர்கள் தங்களுக்குள் அடிபட்டுவிட்டு அவுஸ்திரெலியர்கள் தாக்குகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுவருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இங்காலே வரமுன்பு செய்தியை தூக்குவின்களா?

புண்ணியமா போகும்!

உப்புடியான ஒரு பீதியை கிளப்பிவிட்டு........சிங்கனை சிங்கிளாகவே வைச்சிருங்க

:D:lol::icon_idea:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.