Jump to content

ஓநாய்களின் பிடிக்குள் பேதலிக்கும் மென்மையான பெண்மை!


Recommended Posts

[size=3]silence.jpg

[size=4]பெண் எனப்படுபவள் பூவினைப்போன்றவள், மென்மையானவள், ஆண்களின் சேவைக்காகவே பிறந்தவள் என்ற எங்கள் எரித்துப்போடவேண்டிய கொள்கைளும், சில இலக்கியங்களும், பாடல்களும், இன்று[/size]ம் பெண்மை [size=4]பேதலித்துப்போய் ஓரிடத்தில் உற்காரவைக்கப்படுவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன போலும்.[/size]

[size=4]ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தால் அந்த குடும்பத்திற்கு அது தேவதையின் பரிசாகவும், தங்கள் குடும்ப குல விளக்காகவுமே பெற்றவர்களும், உறவினர்களும் அந்த பெண்ணை கண்ணும் கருத்துமாக வளர்த்துவருகின்றனர்.[/size]

[size=4]தாய், தந்தை, பெரியதந்தை, சிறிய தந்தை, மாமன், என்ற உறவுகள் அவளின் வளர்ச்சியிலும், அவளின் பாதுகாப்பிலும் பங்குகொண்டு அவளை சீரிய குணங்கள் உடைய ஒரு நற்குணவதியாக சமுகத்திற்கு தர தம்மாலான அத்தனையினையும் அவளுக்கு தந்து அவளை சமுகத்தில் உயர்ந்தவளாக்குகின்றனர்.[/size]

[size=4]முன்பொரு காலத்தில், பாரதி கண்ட புதுமைப்பெண் என்ன? அதைவிட மேலே சென்று புதிய வரலாறுகள் பலவற்றையும் இந்த எம்மினப்பெண்கள் படைத்த வரலாறுகளை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டோமா என்ன?[/size]

[size=4]சில வருடங்களுக்கு முன்னர்கூட நட்டநிசி மட்டுமல்ல நள்ளிரவு தாண்டியும், எம்மினப்பெண்கள் தங்கள் அண்ணன்மார்கள் உள்ளனர் எம் பாதுகாப்புக்கு என்று எங்குமில்லா பெண் விடுதலை கண்டுநின்ற சரித்தரங்களும் அவ்வளவு சீக்கிரமாக மறைந்துபோகினவோ?[/size]

[size=4]ஒரு நாடு முன்னேறுகின்றது என்றால் அந்த நாட்டில் பெண்களின் கல்வித்தரம், பணியிடங்களில் அவர்களின் தலைமைத்துவம், பல்துறைகளிலும் பெண்களின் முன்னேற்றம் என்பனவே பிரதான காரணிகளாக இருக்கும்.[/size]

[size=4]ஆனால் இன்று எம்போன்ற நாடுகளில் இத்தனையினையும் எட்டிப்பிடிக்க பெண்கள் அனுபவிக்கும் வக்கிரகங்கள், கொடுமைகள் எத்தனை! எத்தனை!![/size]

[size=4]முன்னேறத்துடிக்கும் பெண்களுக்கு பெரும் சவாலாக இன்று இருப்பது காமவெறி, சதைப்பசி கொண்ட சில ஓநாய்களின் பாலியல் ரீதியான அதிகார துஸ்பிரயோகமே என்று கூறலாம்.[/size]

[size=4]அன்றாடம் இது பற்றி பல தகவல்கள் வெளிவரும்போது, நெஞ்சம் திடுக்கிடுகின்றது. சமுகத்தில் தம்மை உயர்ந்தவர்களாகவும், வல்லவர்களாகவும் காட்டிக்கொள்ளும் சிலர் கேவலமான தமது காம இச்சைகளுக்காக கீழ்த்தரமாக நடந்துகொள்வது சமுகத்தின்மேல் அக்கறைகொண்டுள்ளவர்களின் நெஞ்சங்களில் பெரும் இடியாகவே விழுகின்றது எனலாம்.[/size]

[size=4]இந்த அதிகாரம், அபிமானங்களை வைத்து கரட்டி ஓணான் பாணியில் பெண்களை வெருட்டி அல்லது ராச்சர் கொடுத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகள் இன்று பரவலாக எல்லா இடங்களிலும் அதிகரித்து சென்றுகொண்டிருக்கின்றது.[/size]

[size=4]கல்விநிலையங்களில் இருந்து பல்கலைக்கழகம் வரையும், சிறிய வியாபாரநிறுவனங்களில் இருந்து பெரிய பெரிய நிறுவனங்கள், திணைக்களங்களிலும் ஒரு சில அதிகாரிகளால் இந்த பெண்கள்மீதான பாலியல் ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.[/size]

[size=4]பெரும்பாலும் இப்படியான காட்சிகளை திரைப்படங்கள், நாடகங்களிலே காணும்போதுகூட மென்மையான மனம் படைத்தவர்களால் அதையே தாங்கமுடியாது உள்ளது. இந்த நிலையில் அந்த நிழல்கள் எம் சமுகத்தில் நிஜமாகவே நடக்கும்போது அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.[/size]

[size=4]எம் சமுகத்தில் இன்று தொழில்புரியும், உயர்கல்வி கற்கும் பெண்களின் ஒரு சில தற்கொலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவை பற்றிய தீரமான விசாரணைகள் முழுமையாக நடத்தப்படுவதில்லை. அந்த தற்கொலைகளின் பின்னால் இது போன்ற சில அதிகாரத்தைப்பயன்படுத்தி பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்ட தகவல்கள் கூடத்தொழில் புரிபவர்கள், அல்லது கூட கல்வி கற்பவர்களால் கதை வழியாக காதுகளை எட்டுகின்றன.[/size]

[size=4]ஆனால் அவற்றுக்கு காரணமானவர்கள் சர்வ சாதாரணமாக வழமைபோலவே பகட்டாக சமுகத்திற்கு தங்கள் அப்பாவி முகத்தை காட்டிக்கொண்டுதான் உள்ளனர்.[/size]

[size=4]இதிலும் பெரும் கேவலாமான விடயம் என்னவென்றால் இப்படி அதிகார ரீதியில் தமது பாலியல் வக்கிரத்தை திணிப்பவர்கள் 45 வயதினை தாண்டியவர்களாக இருப்பதே. அவர்களுக்குகூட பருவமடைந்த பெண் பிள்ளைகள் இருப்பார்கள்.[/size]

[size=4]இந்து சமய முறைப்படி இல்லறம் தாண்டி வனப்பிரஸ்தத்திற்கு செல்லும் வயதில் இவர்களுக்கு இளமை திரும்பி, பாலியல் வக்கரிப்பு ஏற்படுவது ஆச்சரியமாகவும், வேதனையாகவுமே இருக்கின்றன.[/size]

[size=4]இதிலும் ஒரு சில நிறுவனங்கள், வங்கிகளின் மேதிகாரிகளின் நடவடிக்கைகளை பாராட்டியே ஆகவேண்டும், சில நிறுவனங்கள், வங்கிகளில் இப்படியான சில பெண்கள் மீதான அதிகார ரீதியான பாலியல் தொல்லைகள் மேலிடங்களுக்கு அறிவிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.[/size]

[size=4]இவ்வாறான தண்டனைகள் ஒரு முன்னுதாரணமாக இருப்பதுடன், இப்படியாக பாலியல் ரீதியில் அதிகார துஸ்பிரயோகம் செய்பவர்களை மற்றய நிறுவனங்கள், கல்வி நிலையங்களும் கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பதுடன், அவர்கள் சட்டத்தின் முன்னாலும் நிறுத்தப்படவேண்டும்.[/size]

[size=4]இப்படியான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட பெண்கள் தம்மை ஒருபோதும் பலவீனர்களாக காட்டிக்கொள்ளக்கூடாது, துணிந்து நின்று எதிர்க்கவேண்டும், முதல்கட்டமாக சக அலுவர்களிடமோ, அல்லது கூட கல்வி கற்பவர்களிடமோ இது பற்றி கூறிவிடுவது அவர்களின் பாதுகாப்புக்கு முதற்கட்ட அஸ்திவாரமாக இருக்கும்.[/size]

[size=4]அதேபோல குறிப்பிட்ட அதிகாரியின் (அங்கிளின்) பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகரித்தால், அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை ஆதாரபூர்வமானதாக்கி கொள்ளவேண்டும், (தொலைபேசி அழைப்புக்கள், எஸ்.எம்.எஸ்கள், மின்-அஞ்சல்கள்) தற்போது மின் - அஞ்சல், தொலைபேசி வசதிகள் அனைத்து இடத்திலும் உள்ளபடியால் அந்த அங்கிளின் (மேலதிகாரியின்) லொள்ளு அதிகரித்து செல்லும் சந்தர்ப்பத்தில் தலைமை அலுவலகத்திடமோ, டிரக்டரிடமோ, முறைப்பாடாக செய்துவிடலாம்.[/size]

[size=4]இன்றைய நிலையில் நான் அறிந்த மட்டில் புத்திசாலித்தனமாக சில பெண்கள் இவ்வாறான நடவடிக்கைகளை சாதுரியமாக செய்தே இந்த கேவலர்களுக்கான தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.[/size]

[size=4]இதேபோல இப்படியான அதிகாரரீதியான பாலியல் தொந்தரவுக்கு ஒரு பெண் ஆளாகின்றமையினை அவதானித்தால் சக ஊழியர்கள், சுற்றியுள்ள சமுகத்தினர்கள் என்பவர்கள் அவளுக்கு பக்கபலாமாக இருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு தக்கபாடத்தை படிப்பித்தால் நாளை மற்றவர்கள் இதுபோன்ற கேவலமான விடயங்களில் இறங்க பயப்படுவார்கள்.[/size]

[size=4]தமது அதிகாரத்தையும், அபிமானத்தையும் இப்படியான கேவலமான நோக்கத்திற்கு பயன்படுத்த எத்தனிப்பது ஒரு வகையான மனோவியாதி என்று உளவியல் சொல்கின்றது. ஆனால் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் சமுகத்தின் முன்னால் துயிலுரியப்படுவதே இந்த மனோவியாதிக்கு சிறந்த தெரப்பியாக இருக்கும் என்பதே என் எண்ணம்.[/size]

[size=4]http://janavin.blogs...og-post_04.html([/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் ஜனாதிபதி சிலோனுக்கு போனது பெரியண்ணனுக்கு துண்டற பிடிக்கேல்லை எண்டது தெரியுது.🤣 ஈரான்.சீனா,ரஷ்யா எண்டதொரு மிக்ஸர் வெஸ்ரேன் குஞ்சுகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவதை ரசிக்கலாம்😂
    • 1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது  3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும். அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம். இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன். நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.
    • நான் ஆட்சிக்கு வந்தால்  ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற  தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா  இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை?  ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁
    • இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம் பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றம் இல்லை அதேபோல 1988 – 89 ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் கவனத்தை ஈர்த்த காணாமல்போன சம்பவங்கள் குறித்த விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரி வித்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தொடர்புபட்ட 2008 2009 இல் கொழும்பில் 11 தனிநபர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சசாட்டுகளுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமேல்மாகாண ஆளுநர் பதவியிலிருந்து கரணாகொடவை நீக்கினார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023இல் இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகள் சார்பில் எவரும் காணாமல் போகச் செய்யப்பட்டதாக அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அக்டோபர் இறுதிவரை எவரும் காணாமல்போகச்செய்யப்பட்டதாக தனக்கு அறிக்கைகள் எவையும் கிடைக்கவில்லை என காணாமல் போனோர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் கண்மூடித்தனமான அல்லது சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டனர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் தடுப்பில் பல உயிரிழப்புகள் இடம்பெற்றன பல சம்பவங்கள் ஒரேமாதிரியானவையாக காணப்பட்டன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு விசாரணைக்காக சந்தேகநபர்களை பொலிஸார் கொண்டு சென்ற வேளையே பல கொலைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விசாரணையின் போது சந்தேக நபர்கள் தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.ilakku.org/காணாமல்-ஆக்கப்பட்டோா்-வி/?amp ஆடு நனையுதென்று ஓநாய் ஒன்று அழுகிறது.
    • கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.