Jump to content

LIFE IS BEAUTIFUL 1997 – சினிமா விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
LIFE IS BEAUTIFUL 1997 – சினிமா விமர்சனம்
 
 
Life-is-Beautiful-WWII-Movie-starring-Ro
 
 
நம் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை . என்ன செய்வோம் ? அதை எவ்வாறு தீர்ப்பது என்று யோசிப்போம் . அல்லது அதை நினைத்து மனதினை போட்டு குழப்பிக்கொள்வோம் . அந்நேரத்தில் , நமக்குள் இருக்கும் பதற்றத்தைப்பற்றி சொல்லிமாளாது . ஆனால் , அந்த பிரச்சனை முடிந்து ஒரு வருடம் கழித்து அதை யோசித்தால் , நமக்கு சிரிக்கத்தான் தோன்றும் . நாம் எப்படியெல்லாம் இந்த சப்ப மேட்டருக்கு பயந்து ஒடுங்கியிருந்திருக்கிறோம்  அல்லது குழம்பித்தவித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது , நமக்கு மெல்லிய புன்முறுவல் பூக்கும் . ஒருவருடம் கழித்து எதற்கு சிரிக்கவேண்டும் ? அதை அப்போதே சிரித்துவிடு ,  என்று அழகாய் சொல்வதே இத்திரைப்படம் . கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை , ஒவ்வொரு நொடியும் , மகிழ்ந்து வாழவேண்டும் . துன்பம் ஏற்பட்டாலும் , அதை தலையில் வைத்து அழியாமல் , அந்நொடியையும் சந்தோஷமாக வாழவேண்டும் என்று கூறுவதே ‘வாழ்க்கை அழகானது’ எனும் இத்திரைப்படம் .
 
கதை –
 
கதை நிகழும் காலம் 1939 . குய்டோ (GUIDO) எனும் சாதாரண இளைஞன் , பிழைப்பிற்காக , இத்தாலியின் , அரிஸோ எனும் நகருக்கு வருகிறான் . அவனைப்பொறுத்தவரை , பிரச்சனைகளை மூளையில் ஏற்றிக்கொள்ளாமல் , ஒவ்வொரு நொடியும் , மகிழ்ச்சியாக வாழ்பவன் . அப்போது , எதேச்சையாக தான் காணும் டோரா எனும் பெண்ணின் மேல் காதல் கொள்கிறான் . அவளை இம்பரஸ் செய்ய பல தகிடுதத்தங்கள் செய்கிறான். அவன்மேல் டோராவும் காதல் கொள்ள , ஒரு கட்டத்தில் அவள் வேறொருவனுக்கு நிச்சயமாகியிருப்பது , குய்டோவுக்கு தெரிய வருகிறது . பின் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள் . அவர்களுக்கு ஜோஸ்வா எனும் மகன் பிறக்கிறான் . அக்காலகட்டத்தில் , ஹிட்லரின் நாஜிப்படை , இத்தாலியை கைப்பற்ற , அங்கிருக்கும் யூதர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு , ஒரு தொழிற்சாலையில் அடைக்கப்பட்டு வேலைவாங்கப்படுகிறார்கள் . யூதனான , குய்டோவும் , அவனது மகனும் அங்கு அடைக்கப்பட , தன் கணவன் வாழும் இடமே தனக்கு சொர்க்கம் என்று டோராவும் அவர்களுடன் கிளம்பிச்செல்கிறாள் . ஆண்களுக்கு தனி அறை , பெண்களுக்கு தனி அறை . நாள் முழுதும் வேலை . அதே நேரம் , தான் எங்கிருக்கிறோம் என்று வினவும் ஜோஸ்வாவிடம்  , தாங்கள் ஒரு விளையாட்டுக்காக இங்கு வந்திருப்பதாகவும் , விளையாட்டில் ஜெயித்தால் , ராணுவ பீரங்கி பரிசாக கிடைக்கும் என்று நம்பவைக்கிறான் . ஜெர்மானியர்களின் கண்ணில் , தன் மகன் அகப்பட்டால் , அவனை கொன்றுவிடுவார்கள் என்று அறிந்து , எப்போதும் மகனை மறைந்திருக்க சொல்கிறான் . ஒரு கட்டத்தில் , போர் முடிவுக்கு வந்து ஜெர்மன் பின்வாங்கும் நேரம்  , அவர்கள் கண்ணில் தன் மகன் படாமல் ஒரு பெட்டியில் ஒளித்துவிட்டு ,  தன் மனைவியைக்காப்பாற்ற  குய்டோ மாறுவேடமிட்டு செல்கிறான் . அச்சமயம் , ஜெர்மானியர்களிடம் சிக்குகிறான் . குய்டோ என்ன ஆனான் ? தன் மனைவியையும் மகனையும் காப்பாற்றினா ? என்பதே மீதிக்கதை .
 
 
 
இதைப்படம் என்று சொல்வதற்கு பதில் , வாழ்க்கையை எப்போதும் பாஸிட்டிவாகவும் , ஆனந்தமாகவும் வாழவேண்டும் என்று நினைக்கின்ற ஒருவனின் வாழ்க்கை என்று சொல்லலாம் . ஒரு திரைப்படத்தைப்பார்த்து, ஒருநாளாவது இக்கதாபாத்திரம்போல் வாழவேண்டும் என்று எனக்குள் தோன்றவைத்த முதல்படம் , FORREST GUMP . அதை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது . அதற்கடுத்து , என்னுள் இப்படி நினைக்கவைத்த படம் இதுமாத்திரம்தான் .
 
Vitaebella.jpg
 
 
குய்டோவாக ராபர்டோ பெனிக்னி . இவரே தான் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் . படத்தின் டைட்டிலைப்போலவே பல காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கும் . டோராவை இம்பரஸ் செய்ய குய்டோ செய்யும் காட்சிகள் அனைத்தும் காமெடி ரகம் . டோராவுக்கும் வேறொருவனும் நடக்கும்  நிச்சயதார்த்தின்போது , அனைவரும் உணவருந்திக்கொண்டிருக்கும் டேபிளுக்கு அடியில் , டோராவும் குய்டோவும் தங்கள் காதலை சொல்வதும் , அதன்பின் வரும் காட்சியும் , அழகியல் என்றே கூறலாம் . அதேபோல் , ஜெர்மானியர்களின் பிடியில் இருக்கும்போது , யாருக்கும் தெரியாமல் தன் மகன் ஜோஸ்வாவுடன் , பனிமூட்டத்தின் இடையில் கண்தெரியாமல் சென்றுகொண்டேயிருக்க , எதிரில் ஆயிரக்கணக்கான பிணங்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதையும் பார்த்து ஒரு விநாடி மிரளும் குய்டோ , என அந்த காட்சியையும் அருமையாக எடுத்திருப்பார்கள் . கிளைமேக்ஸ் காட்சியின்போது , இன்னும் ஒருநிமிடத்தில் தான் சாகப்போகிறோம் என்று உணரும் குய்டோ , மறைத்துவைக்கப்பட்ட தன் மகன் , தன்னையே பார்ப்பதை கவனிப்பார் . அந்த நிமிடத்தில் கூட ,கோமாளித்தனமான நடை நடந்து , தன் மகனுக்கு சிரிப்பு காட்டுவார் . இதுபோன்று பல காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்  ஜெர்மானியர்கள் பேசுவதை மொழிபெயர்ப்பு செய்யும் காட்சி , மனைவிக்கு அங்கிருந்து சிக்னல்கொடுக்கும் காட்சி , டாக்டரிடம் கடைசிநேரத்தில் தன்னை வெளிப்படுத்தும் காட்சி , தன்மகன் காணவில்லை என்று ஒருநொடி பதறுவது என , காட்சிக்கு காட்சி அட்டகாசப்படுத்தியுள்ளார் , இயக்குனர் கம் நடிகர் .
 
 
இத்தாலிய திரைப்படமான இது (இத்தாலிய மொழியில்  LA VITA E BELLA) , சிறந்த படம் , சிறந்த டைரக்டர் , சிறந்த திரைக்கதை உட்பட 7 பிரிவில் சிபாரிக்கப்பட்டு , சிறந்த நடிகர் , சிறந்த வேற்றுமொழி திரைப்படம் மற்றும் இசை என மூன்று ஆஸ்கார்களை வென்றுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு க்ராண்ட் பிரிக்ஸ் விருதினையும் தட்டிச்சென்றுள்ளது .
 
இன்னும் ,பதிவில் சொல்லாத ஏராளமான காட்சிகள் படத்தில் இருக்கின்றன. நிறைய பேர் , இப்படம் யூதர்களை அழித்த ஜெர்மானியர்களை பற்றி பேசவில்லை , அப்படி இப்படி என்று படத்தைப்பற்றி கமெண்ட் அடித்தார்களாம் . என்னைப்பொறுத்தவரை , இப்படம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ , நமக்கு இரண்டுமணிநேரம் சிரிக்கவைத்து ,பின் அழகாய் சொல்லிவிட்டு செல்லும் பாடம் . யாராவது தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பவர்கள் , இப்படத்தைப்பார்த்த பின்  , தற்கொலை செய்துகொள்ளுங்கள் , உங்களால் முடிந்தால் . ஆஸ்கார் வாங்கிய படம் என்பதால் , மொக்கையாக இருக்கும் என்று நினைத்து பார்க்காமல் விட்டுவிடாதீர்கள் .
 
டிஸ்கி -
இத்திரைப்படத்தின் இயக்குநர் , ராபர்டோவின் தந்தையின் வாழ்க்கையே இப்படம் , என்று கூறப்படுகிறது . அவர் மூன்றாண்டுகாலம் , நாஜிக்களின்பிடியில் இதேபோல் வாழ்ந்ததாகவும் , அவரின் சொந்த வாழ்க்கையையே திரைப்படமாக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது .
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.