Jump to content

பார்த்தீபன் கனவு - தியாகி திலீபன் நினைவுக்கவிதை ( இசைவடிவத்துடன்)


Recommended Posts

 

நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ
கருகிப்போனதோர்...  உன்னத தியாகம்!
பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு...
அன்று,  பாரதம் செய்ததோர்   மகா பாதகம்!!

ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும்  வேலவன் கூட
அவன்  கண்மூடும்வரை...   கண்திறக்கவில்லை !
நல்லூர்க் கந்தனும்    கருணையற்றவனானான் !!
இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி
தியாக தீபமொன்றை  அணைத்தது  விதி
சிந்திய கண்ணீரில்  மூழ்கியதே நல்லூரான் வீதி

அகிம்சையே அறமென்ற இந்திய தேசம்...
ஈழத்தில் செய்த முதல் நாசம் !
பார்த்தீபனின் பட்டினிப்போரால்...
வெளுத்துப்போனது... பாரதத்தின்   அகிம்சை வேஷம்!

'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி...
பார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும்,
கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று !
வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதவன் தியாகம் !!

தியாக சீலன்  திலீபன்
ஈழத்தாய் எல்லோருக்கும் பிள்ளையானவன் ;
இளையவர் அனைவருக்கும்  அண்ணனானவன் ;
மகா யாகத்தின் புனிதம் வென்றவன் ;
தியாகத்தின்  சிகரம் தொட்டவன் ;
ஈழமண்ணுக்கு இலட்சியத் திலகமிட்டவன்!

அவன்  வயிற்றில் பற்றிய தீதான்,
இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...!
அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,
இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!!
இது  அன்று  அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்...!!!

திலீபனின் தியாகம் ஜெயிக்கட்டும்...!
பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்... !!
இதுதான்.... நம் மனதில் என்றும்,
அழியாமல் விதைக்க வேண்டிய இலட்சிய வார்த்தைகள்...!!!

தியாகச் செம்மல் திலீபனின்
பசியையும் தாகத்தையும் எமதாக்குவோம்!
பேருலகே எதிர்த்தாலும் ....
பார்த்திபன் கனவு  ஒருநாள் பலிக்கும்! - அவனது
உன்னத தியாகம் நிச்சயம் ஜெயிக்கும்!!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அவன்  வயிற்றில் பற்றிய தீதான்,
இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...!
அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,
இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்...!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்...!!
இது  அன்று  அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்...!!!
"

Link to comment
Share on other sites

தியாகச் செம்மல் திலீபனின்

பசியையும் தாகத்தையும் எமதாக்குவோம்!

பேருலகே எதிர்த்தாலும் ....

பார்த்திபன் கனவு ஒருநாள் பலிக்கும்! - அவனது

உன்னத தியாகம் நிச்சயம் ஜெயிக்கும்!!

அதுவே தியாக தீபத்திற்கு நாம் செய்து முடிக்க வேண்டிய வரலாற்றுக் கடன்...

Link to comment
Share on other sites

கருத்துரைத்து தங்கள் விருப்பங்களையும் தெரிவித்த உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். :)

 

ஒரு     (காதல்+ஊர்வம்பு+ இன்னோரன்ன...)   'சாதாரண' கவிதைக்கு கிடைக்கும் வரவேற்பு கூட  திலீபனின் நினைவு சுமந்துவரும் இந்த  கவிதைக்கு கிடைக்காது எனத் தெரிந்திருந்தும் இதை எழுதவேண்டும் என்று தூண்டியதே... என் ஐந்து வயதில் எனக்கு 'தியாகம்' என்றால் என்னவென்று உணர்த்திய தியாகி திலீபனின் நினைவுகளே..! எதையும் எதிர்பார்க்காத அந்த தியாகத்துக்கு முன்னால்... நாமெல்லாம் வெறும் கேள்விக் குறிகளாகிறோம்!!!

தியாகங்கள் எல்லாம் வெறும் வேடிக்கையாகிப் போய்விட்டது....! நடந்து முடிந்தவை.... முடிந்தவையாகவே மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.... ! அதை வேறுயாரும் செய்யவில்லை........ நாமே நமக்குள் செய்துகொண்டிருக்கிறோம்! சுயமாகவே எம் அடையாளங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்!

அடுத்த தலைமுறைக்கு 'திலீபன்' என்றால் யாரென்று தெரியாமல்கூட போகலாம்! :(

வாழ்க வளர்க..... நம் ஈழ(ன)த் தமிழினம்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பெண்களின் கைகளிலே வளர்ந்த மகன் பார்த்திருக்க இங்கொரு பார்த்திபன் வளர்த்தான் யாகம் அதைப் பார்த்திருந்தோர் கண்ணில் நீர்த்திவலை பொங்கிப் பாய்ந்தது அன்று நல்லூதில் நேத்திரங்கள் இரண்டும் பூத்திருக்க பசி மாத்திரம்தான் மறந்தான் தியாக தீபம் பாத்திரத்தில் உணவிருந்தும் நீர்ப் பாத்திரத்தை மறந்தான் தமிழ் மைந்தன் நாத்து மேடையிலே நட்ட விதை கருக கூத்துப் பார்த்து நின்றார் கொடும் கோலர் பூத்த விழிகளிலே விடியலின் கனவுடன் மனம் வேர்த்து விதையானான் விடியலின் சிற்பி அத்திவாரமாய் அடிவாரத்தில் உன்னை வைத்து பல அத்தியாயங்கள் எழுதி விட்டாய் வரலாற்றில்; சித்திரமாய் நீ சிரித்திடும் வேளையிலும் வீர முத்திரை பதித்து விட்டாய் வரலாற்றில் வித்தாக நீர் விழுந்திடினும் பெரு விருட்சமாய் எழுந்திடுவீர் ஈழ மண்ணில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.