Jump to content

தீபச்செல்வனின் "ஈழம் மக்களின் கனவு " நூல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

eelammakkalinkanavu.jpg

[size=5]ஈழம் மக்களின் கனவு ஆசிரியர் தீபச்செல்வன்[/size]

வெளியீடு முதற்பதிப்பு 2010 தோழமை வெளியீடு

ஈழம் பிரபாகரனின் கனவு என்று இனவாதிகள் முதல் சமாதானம் பேசியோர்வரை கூறினார்கள், கூறிக்கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் கறுப்பு யூலையை ஒத்த வயதுடைய தீபச்செல்லவன் அவர்களது முகங்களில் 'ஈழம் மக்களின் கனவு' தலைப்பினூடாக அறைந்துள்ளார். கறுப்பு யூலைக்கும் தீபச்செல்வனுக்கும் ஒரே வயதென்பதை சோபாசக்தியுடனான நேர்காணலில் அவரது அறிமுகத்தில் உணரமுடிகிறது.(அவரது அறிமுகத்தில் தீபச்செல்வன் 1983 எனவும் உள்ளது) புனைவுகளற்ற அவலங்களை பதிவுசெய்தல் என்பது அலங்காரங்களற்ற உண்மைகளைப் பேசும் சத்தியமாகும். அதனைப் பொத்தக அமைப்பிலும் காட்டியுள்ளார். வழமைகளுக்கப்பால் பா.செயப்பிரகாசம் அவரகள் 'மீண்டெழுதலின் குரல்' என்ற தலைப்பிலே பொத்தகம் பற்றியதான ஒரு பார்வையுடன் இதழ்கள் விரிகிறது. உள்ளடக்கத்தைக் கடந்தால் 'ஈழத்து மக்களும் அவர்களது கனவுகளுமே எனது ஆதர்சம்' என்ற தலைப்பினூடு சோபாசக்தியுடன் ஒரு கருத்தியல் யுத்தத்தையே நிகழ்த்தியிருக்கிறார்.

இந்த நூலைச் சிலர் வாசித்திருப்பீர்கள். சிலர் படித்திருப்பீர்கள். எனக்கு இதனை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. எங்களைப்பற்றி நாமே, எமது அவலங்களை வாசித்தல் என்பது இயலாது. தமிழரின் அரசு நோக்கிய அரசாட்சி இருந்தகாலத்தில் தாயகம் சென்றோருக்கு அதன் வலிகள் புரியும். ' கிளிநொச்சியின் கதை' வலிகளையும் ' நிலம் வென்ற சனங்களின் கதை ' ஒரு நம்பிக்கையும் எம்முள்ளே விதைத்து நகர்கிறது.

இந்த இடத்திலே துணிவோடு துயரங்களையும் அவலங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துக் கருவாக்கி எமது கைளில் உலவவிட்டுள்ள 'எழுதுகோல் போராளி' தீபச்செல்வனுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலே துணிவோடு துயரங்களையும் அவலங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துக் கருவாக்கி எமது கைளில் உலவவிட்டுள்ள 'எழுதுகோல் போராளி' தீபச்செல்வனுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

[size=4] எங்களைப்பற்றி நாமே, எமது அவலங்களை வாசித்தல் என்பது இயலாது
[/size]உண்மையான வார்த்தைகள்.இவற்றை நாம் வாசிக்கவில்லை என்பதால் எமது மக்களின் அவலத்தை உணராதவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஈழமே மக்களின் கனவு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலே துணிவோடு துயரங்களையும் அவலங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துக் கருவாக்கி எமது கைளில் உலவவிட்டுள்ள 'எழுதுகோல் போராளி' தீபச்செல்வனுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.

நன்றிகள்

உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழலில் உரிமைகள் தொடர்பாக ஒரு குமுகாயவாதியாக நிற்றல் என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[/size]உண்மையான வார்த்தைகள்.இவற்றை நாம் வாசிக்கவில்லை என்பதால் எமது மக்களின் அவலத்தை உணராதவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஈழமே மக்களின் கனவு.

ksssonகருத்துக்கு நன்றிகள்

மக்களின் அவலத்தை உணர்ந்தோரென்பதால்தான் இங்கே யாழில் தமது உள்ளக் குமுறல்களை கவியாக, கதையாக, நகையாக, கருத்தாக எனப் பகிர்ந்து கொள்கின்றார்கள். இதுபோன்ற நூல்களை எம்மவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவிட்டேனன்றி வேறில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.