Jump to content

வடுக்கள் வலிகளாய் - வன்முறையாய்


Recommended Posts

அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல.

ஆதிரை:

என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல.

அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்ற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும்

அவன் நித்திரையே கொள்றேல்ல என்று நினைக்கிறன். மற்ற பெடியங்களைப் போல இல்லாமல் அவன் எப்பவும் ஒரு பெரிய சோகத்தை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறான் என்று நான் அப்பவே நினச்சனான்.

ஆதிரை: ஆமா யாருக்குத்தான் சோகம் இல்லை. எனக்கில்லையா? உனக்க்குத் தானில்லையா?? உனக்குள்ள ஆயிரம் சோகங்களையும் கேள்விகளையும் ஏக்கங்களையும் விருப்பங்களையும் வச்சுக்கொண்டு ஏண்டியிப்பிடி யாற்றயும் பிரச்சனைகளை உன் தலையில போட்டுக்கொண்டு நீயும் மண்டை காஞ்சு கூட இருக்கிறாக்களையும் குழப்புறாய்?

அம்பா: என்ர பிரச்சனைகள் எல்லாமே சின்னச் சின்ன பிரச்சனைகள் இப்ப இல்லாட்டி எப்பவாவது ஒருநாளைக்கு இல்லாமல் போயிடும். ஆனால் தீபன் போன்ற பெடியங்களுக்கு இருக்கிற பிரச்சனைகளோடு ஒப்பிடேக்க எங்கட சின்னச் சின்ன கவலையெல்லாம் ஒன்றுமேயில்ல ஆதிரை.

63319226wk6.jpg

நேற்று நான் volunteer வேலை செய்யுற இடத்துக்கு கடைசியா வந்த file அவன்ரதான். அவன் என்ர ஒரு வகுப்பில இருக்கிறபடியால் அவன் எப்பிடி வகுப்பிலயும் வெளிலயும் நடந்துகொள்றான் என்று அவனுக்குத்தெரியாமல் கவனிக்கச் சொன்னவா என்ர சீனியர்.அவன் 8 வயசில இருந்து 13 வயசு வரைக்கும் அவன்ர அப்பாவால பாலியல் ரீதியில துன்புறுத்தப் பட்டிருக்கிறானாம் . அவன்ர testimony ஐ வாசிச்சு நான் அழுதிட்டன். அவன்ர அப்பா மட்டும் என் கையில கிடைச்சார் அவ்வளவுதான்.

ஆதிரை : முதல் அவன் testimony ல என்ன சொல்லியிருக்கிறான் என்று சொல்லு.

அம்பா : தீபனுக்கு அவன்ர வீட்டில எந்தவிதமான கவனிப்பும் கிடைக்கேல்ல. அப்பா அம்மான்ர தாம்பத்ய வெற்றியை வெளிக்காட்ட பிறந்த அண்ணா மேலதான் எல்லாருக்கும் பாசம். அண்ணாக்கு விளையாட ஒரு பொருளா தன்னை உருவாக்கினது போல அவன் உணர்த்தப்பட்டிருக்கிறான் பல சந்தர்ப்பங்களில்.அம்மான்ர பரிவுக்கும் அப்பான்ர அணைப்புக்கும் ஏங்கி ஏங்கித் தவிப்போடயே அவன் பல நாட்களில் நித்திரை கொண்டிருக்கிறான்.

அவனுக்கு எட்டு வயசிருக்கும்போது அவன்ர மென்மையான வெண் தோல் அவனுடைய தந்தைக்கு அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கு.பொதுவா சிறுவர்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் மனித வல்லூறுகள் தேர்ந்தெடுக்கும் சிறுவர்களின் மெல்லிய தோல் கொண்டவர்களாகவும் ஏதோ ஒன்றை வாழ்வில் இழந்தவர்களாகவும் ; அதாவது அன்பை , பாதுகாப்பை , அழகை , துணிவை , உடல் பலத்தை , மன பலத்தை இழந்தவர்களாகவும் இருப்பார்கள். அப்படி அவர்கள் ஏங்கும் ஒன்றை வழங்குபவராக ஒருவர் அவர்களை நெருங்கும்போது எந்தவிதத் தயக்கம் யோசனை எச்சரிக்கையுணர்வு எதுவுமின்றி இந்தச் சிறுவர்கள் அந்த வல்லூறுகளிடம் ஒட்டிக்கொள்வார்கள்.

இதுதான் தீபனுக்கும் நடந்தது. அன்புக்காக ஏங்கிய அவன் அப்பா தன்னிடம் திடீரென்று அன்பாய் நடந்துகொள்ளத்தொடங்கவும் அப்பாக்கு தன்னில் உண்மையாகவே அன்பு வந்துவிட்டதாக எண்ணி அப்பாவின் சின்ன சின்னத் தொடுதல்களையும் உரசல்களையும் ஏற்றுக்கொண்டான். அப்படித்தான் ஒருநாள் தீபனை மஸாஜ் செய்துவிடும்படி தந்தை கேட்கவும் தீபனும் தயங்காமல் அப்பா வேலைக்குப்போய் விட்டு வந்திருக்கிறார் பாவம் என்று மஸாஜ் செய்துவி்ட்டிருக்கிறான்.அன்

Link to comment
Share on other sites

சித்தி,

கதை வாசிக்க நல்லா இருக்குது எண்டு சொல்லமுடியவில்லை. வழமையாக நாங்கள் சிந்திக்காத சில விசயங்களைபற்றி சிந்திக்ககூடியதாக இருந்திச்சிது.

இப்பிடி கதைகள் எழுதும்போது எதுக்கும் நீங்கள் கொஞ்சம் கவனமா இருங்கோ. ஆங்கிலத்தில் இதுகள்பற்றி தாராளமா எழுதலாம். ஆனா தமிழில எழுதினா உதுகள வாசிச்சபின் சரியாக பிரச்சனைகளை விளங்கிக்கொள்வதற்கு எங்கட சனத்துக்கு மனப்பக்குவம் காணும் எண்டு அல்லது மனப்பக்குவம் இருப்பதாக நான் நினைக்க இல்லை.

எதுக்கும் எங்கட சனத்துக்கு இப்பிடியான விசயங்கள்பற்றி விளக்கம் சொல்லேக்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கோ.

உங்கள் துணிவுக்கு பாராட்டுக்கள்!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி,

கதை வாசிக்க நல்லா இருக்குது எண்டு சொல்லமுடியவில்லை. வழமையாக நாங்கள் சிந்திக்காத சில விசயங்களைபற்றி சிந்திக்ககூடியதாக இருந்திச்சிது.

இப்பிடி கதைகள் எழுதும்போது எதுக்கும் நீங்கள் கொஞ்சம் கவனமா இருங்கோ. ஆங்கிலத்தில் இதுகள்பற்றி தாராளமா எழுதலாம். ஆனா தமிழில எழுதினா உதுகள வாசிச்சபின் சரியாக பிரச்சனைகளை விளங்கிக்கொள்வதற்கு எங்கட சனத்துக்கு மனப்பக்குவம் காணும் எண்டு அல்லது மனப்பக்குவம் இருப்பதாக நான் நினைக்க இல்லை.

எதுக்கும் எங்கட சனத்துக்கு இப்பிடியான விசயங்கள்பற்றி விளக்கம் சொல்லேக்க கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கோ.

உங்கள் துணிவுக்கு பாராட்டுக்கள்!

நன்றி!

கலைஞன் வெள்ளைக்காரன்/காரி மனசைக் கட்டுப்படுத்தி வாழுற வகையில்ல. உணர்ச்சிக்கு அடிபணிந்து வாழுறவன்/ள்.

அவையை நோக்கி பல விசயங்களைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கு.

எங்கட சமூகம் இதையெல்லாம் எப்பவோ அலசி ஆராய்ஞ்சுதான் சில சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து மனங்களைக் கட்டுப்படுத்தி குடும்ப வாழ்க்கையில சந்தோசம் என்றால் எப்படி வரும் என்று வழிகாட்டிச்சினம்..!

ஆனால் இன்றைய சூழலில் புலம்பெயர்ந்துள்ள நம்மவர்களுக்கு எமது சமூகக் கட்டுப்பாட்டின் தார்ப்பரியம் விளங்கல்ல. அதை அவங்க அடக்குமுறை என்று இனங்கண்டு கொண்டு.. உணர்ச்சிக்கு அடிமையாகி வாழப் போய்.. பரிதாபகரமாகிட்டு இருக்கும் நிலையில் தான்.. சிநேகிதி போன்றவைக்கு இப்படி கதை எழுத வேண்டிய தேவை எழுகுது..!

எங்கட சமூகம் இதை உணராமல் இல்லை. அதை எப்பவோ உணர்ந்து அதற்கு தீர்வாகத்தான் சில சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அதை உணராத ஆக்கள் தான்.. எமது சமூகத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில இருக்கினம். அவை மட்டுமன்றி.. எமது சமூகக் கட்டுப்பாட்டின் தார்ப்பரியம் விளங்கி நடக்கிறவையும் குறைவு. ஆளுக்கு ஆள் தான் மதிப்பிடும் அளவுக்கு முன்வைக்கும் அளவுக்கு மிஞ்சிய கட்டுப்பாடுகளும் இப்படியான தார்ப்பரியங்களை உணரச் செய்யாமல் செய்திடுது..! :)

Link to comment
Share on other sites

என்ன நெடுக்கு, ஏதோ சொல்லுங்கோ. நாங்கள்தான் எங்கட கலாச்சாரம், பண்பாடு வெள்ளைகக்காரனிடத விட திறமானது எண்டு சொல்லி குதிச்சுக்கொண்டு இருக்கிறம். ஆனா வெள்ளைக்காரன் எல்லாரும் இப்படி சித்தி சொன்ன கதையில வாழுறமாதிரியோ இல்லாட்டி தமிழர் ஒருவரும் சித்தி சொன்னகதையில வாறமாதிரி வாழாதமாதிரியோ அர்த்தம் இல்லை.

மற்ற ஆக்கள மட்டம் தட்டுறதில எங்கட சனம் வெள்ளைக்காரன விட வலு கெட்டிக்காரர். அதாலதான் நான் சித்திக்கு அப்படி ஒரு அறிவுரை சொன்னனான்.

Link to comment
Share on other sites

வணக்கம் சினேகிதி,

சில விடயங்களை மறைபொருளாகவும் ஒளிபொருளாகவும் பதுக்கி வைத்தலே பாரதூuமான விபரீதங்களை ஏற்படுத்திவிடுகிறது. நமது இனம் மிகவும் தார்ப்பரியம் மிக்கது எனச் சொல்லி வெள்ளையர்களை நளினம் பண்ணியே காலத்தை கழித்துவிடுகின்றனர் பலர். சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு ஆலவட்டம் பிடிக்கவே பலர் தயாராகவுள்ள நிலையில் மூடிவைத்து பண்பாட்டுப் பம்மாத்துப் பேசாமல் எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கற்றலின் வழி கிடைக்கும் விடயங்களை வலைப்பூவிலும் தருகிறீர்கள். துணிவுடன் பல விடயங்களை வெளிப்படையாகவே எழுதுகிறீர்கள். எமது இளையோரைப் பொறுத்தளவில் இதுவொரு நல்ல முன்னேற்றமே.

பேசாப்பொருளைப் பேசத்துணிதல் பெருங்குற்றம் என்றெண்ணாமல் எழுதுங்கள் சினேகிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் அறியாததைப் பேசுறம் என்று போட்டு பேசுங்கள் சிநேகிதி.

உங்களால் அறியக் கூடியதுகளை இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த உலகில் எல்லோரும் அறிவினம். எதையும் மூடி மறைச்சு வைக்க முடியும் என்று இன்னும் கற்பனை செய்திட்டு இருக்கிறவை முதலில அதுக்குள்ள இருந்து வெளியில வாங்க..! :):lol:

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ஒன்றும் பேசாப் பொருள் அல்ல. காலங் காலமாப் பேசப்படும் பொருள் தான். அதுவும் சிறிலங்காவைப் பொறுத்தவரை.. எப்போ அது உல்லாசப் பயணத்துறையைக் கவர வெளிக்கிட்டுது அதோட.. அதுக்கு இதுவும் ஒரு தலையிடியாப் போச்சு. வந்த வெள்ளைக்காரனுக்கு... ஊர்ப்பழக்கம் விட்டுப் போகல்ல...! அதுகளையும் தெளிவா துணிஞ்சு எழுதுங்கோ.. சிநேவுதி..! :lol:

அதுமட்டுமன்றி.. எப்பவும் ஆண்கள் தான் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது போலவும் பொய்த் தோற்றம் காட்டாதீர்கள். பெண்களின் பங்களிப்பையும் எழுதுங்கள்.

இதற்கு மேலதிகமாக.. சிறுவர் தொழிலாளர் பிரச்சனை.. சிறுவர் படையில் சேர்ப்புப் பிரச்சனைகள்.. சிறுவர் போரில் மன நலம் பாதிப்படையும் நிகழ்வுகள்.. இப்படிப் பல விடயங்களை ஆராய வேண்டும். வெறுமனவே பாலியலுக்க மட்டும் நிற்காதேங்கோ. அதுவும் ஆண்களில மட்டும் குறை பிடிக்கிறத்துக்கு என்று..!

http://www.unicef.org/

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் வேற எந்தப் பகுதியில போடுறதென்டு தெரியாததால இங்க போட்டன் அவ்வளவும்தான்.

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருவை அடிப்படையாக வைத்து சிநேகிதி எழுதியுள்ளார்...பெரும்பாலும் குழந்தைகள் அவர்களுக்கு தெரிந்த,அவர்களது உறவினர்களாலேயே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த படுகின்றனர்.ஒரு தாய் தன் குழந்தைகளை மிகவும் கவனமாக அவதானிக்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிநேகிதி நல்லதொரு பகிர்வு. உங்கள் துணிவுக்குப் பாராட்டுக்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள் விழிப்புடன் இருந்தாலே இப்படியான விடயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பெண்களிடமுள்ள ஒருவித பயம் தான் இப்படியான விடயங்கள் தெரிந்தும் தெரியாது இருக்கப் பண்ணுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.