Jump to content

பாலியலில் வறண்ட சமூகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியலில் வறண்ட சமூகம்
வா.மணிகண்டன்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு பஞ்சாயத்து போர்ட் தண்ணீர் குழாய் இருக்காது. இரண்டு வீதிகளுக்கு சேர்த்து ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் வரும். அதுவும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் சண்டை நடக்கும். பெண்கள் பின்னியெடுத்துவிடுவார்கள். சண்டை என்றால் சாதாரணச் சண்டை இல்லை. கிட்டத்தட்ட செவி வழிப் புணர்ச்சி- சிறு திருத்தம்- அது செவி வழி வன்புணர்ச்சி. நாறடித்துவிடுவார்கள்.


சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வெறும் ஒரு குடம் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அந்தப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர் பிரச்சினையே இல்லை. ஈகோ சார்ந்த போராட்டம்; யார் பெரியவள் என்ற போட்டி; தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்டக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.


அப்பொழுதெல்லாம் எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதுதான் இருக்கும். அம்மா வீட்டில் இருந்தால் தண்ணீர் வரும் நேரத்தில் அந்தப் பக்கமே விட மாட்டார். கெட்டுப் போய்விடுவேனாம். அப்படியே அந்தப் பக்கம் போனாலும் முக்கியமான வார்த்தைகளைத் தவிர மற்றதெல்லாம் புரியாது. ஆனால் சிலவற்றை விஷூவலைஸ் செய்துவிட முடியும். ‘அறுத்து தோரணம் கட்டிவிடுவேன்’என்ற வசனம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்படியொரு தோரணத்தை நினைத்துக் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடிய பருவம் அது.


வயது கூடக் கூட பெண்களை விட்டு விலகத் துவங்கியிருந்தேன். விடலைப் பருவம் முழுவதும் ஆண்கள் பள்ளியிலேயே கரைந்து போயிற்று. திரும்பிய பக்கமெல்லாம் தண்டுவன்கள்தான். மல்லிகை வாசமே இல்லாத பதின்ம பருவத்தை விடக் கொடுமையான ஒன்று வேறு இருக்க முடியாது. அப்படியே வளர்ந்த பிறகு ‘பெண்களும் கெட்டவார்த்தைகளும்’ என்பது எனக்கு ஃபேன்டஸியான விஷயமாக மாறிப் போயிருந்தது. இது அனேகமாக சிறுவயது விஷூவலைசிங்கின் பாதிப்பாக இருக்கக் கூடும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா?’ என்று தெரிந்து கொள்ள படு ஆர்வமாகத் திரிந்தேன். ஆனால் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை. எந்தப் பெண்ணும் ஆண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு கெட்ட வார்த்தை பேசுவதில்லை. இருபது வருடங்களில் பெண்களின் அகராதியிலிருந்தே கெட்டவார்த்தை அழிந்து போய்விட்டது போலத் தோன்றியது. ஆங்கிலப் படங்களில் ‘Fuck' என்று பெண்ணின் வாயிலிருந்து வந்துவிட்டால் போதும். அதுவே உத்வேகமடைய போதுமானதாக இருந்தது. இந்த உத்வேகத்திற்காகவே கொட்டக் கொட்ட ஆங்கிலச் சேனல்களை வெறித்துக் கொண்டிருந்த காலம் ஞாபகத்தில் இருக்கிறது.


இதே போலத்தான் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக செக்ஸ் கதை படிக்க வேண்டுமென்றாலும் அவ்வளவு எளிதில்லை- பழுப்பு நிறத்தில் மட்டமான தாளில் கிடைத்த சரோஜாதேவி புத்தகத்தை நீளமான கணக்கு நோட்டில் வைத்து மறைத்துத்தான் படிக்க வேண்டும். நம் செளகரியத்துக்கு ஏற்ப வீட்டிற்கு எடுத்துப் போய் படிப்பது ரிஸ்க். அதுவும் இல்லாமல் அரை மணி நேரம்தான் நமக்கு ஒதுக்கப்பட்ட நேரமாக இருக்கும். அதற்குள் வேகமாக படித்துவிட்டு ‘க்யூ’வில் நிற்பவனிடம் கொடுத்தாக வேண்டும். அதனால் வகுப்பறை அல்லது டியூஷனிலேயே பாராயணத்தை நடத்தியாக வேண்டும். நம் நேரம் கெட்டுக் கிடந்து தெரியாத்தனமாக அப்புச்சாமி வாத்தியாரிடமோ, டியூஷன் மாஸ்டர் கர்ணனிடமோ சிக்கிக் கொண்டால் சோலி சுத்தம். குரல்வளையிலேயே கால் வைத்து மிதிப்பார்கள். இத்தனை கட்டுக்காவல்களையும் மீறி நம் அறிவை வளர்த்துக் கொண்ட காலம் அது.


ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியா இருக்கிறது? பாலியல் குறித்த தேடல் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா என்று தெரிந்து கொள்ள விரும்பினால் வெறும் யூடியூப் போதுமானதாக இருக்கிறது. சகட்டு மேனிக்கு பேசுகிறார்கள். அதுவும் தமிழிலேயே வெளுத்துக் கட்டிய ஆடியோக்கள் கிடைக்கின்றன. கேட்டு சலித்துப் போய்விட்டது. இப்பொழுது அது ஃபேன்டஸியாகவும் இல்லை; க்ரேஸியாகவும் இல்லை- நம்மையும் அறியாமல் இதில் அடுத்த படி என்ன என்று மனம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதுவொரு பரிணாம வளர்ச்சி போலிருக்கிறது.


இன்றைக்கு இணையமும், ஸ்மார்ட் ஃபோனும் இவற்றையெல்லாம் மிக எளிதாக மாற்றிவிட்டன. பாலியல் தேடல்கள் எவ்வளவு எளிதாகிவிட்டனவோ அதே அளவிற்கு தொடர்புகளும் எளிதாக மாறிவிட்டன. அந்தக் காலத்தில் ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தார்கள்’. டைப்ரைட்டிங் செண்டரிலோ, வகுப்பறையிலோ, வாய்க்கால் மேட்டிலோ சைகையில் ஆரம்பித்து, சிரிப்புக்கு வந்து பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் வீட்டில் திருமண பேச்சைத் தொடங்கியிருப்பார்கள்.


இப்பொழுதெல்லாம் ஒரு மிஸ்டு கால் போதும். பிறகு அந்த மிஸ்டு கால் நம்மை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும். தகவல் தொடர்பியலில் ஏற்பட்டிருக்கும் இந்த எளிமையாக்கல் சமூகத்தில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சி என்பது சமூகத்தில் இருண்ட மனநிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ‘இருண்ட மனநிலை’ என்பது அடுத்தவருக்கு தெரியாத ‘secret பக்கங்கள்’.


ஒவ்வொரு மனிதனுக்கும் மிக ரகசியமான ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அந்தரங்கங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறன. நாம் உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கும் அந்தரங்கமான உறவுகளைப் பற்றி நமக்கு மிக நெருக்கமான- கணவனுக்கோ, மனைவிக்கோ, அம்மா அப்பாவுக்கோ அல்லது மகன் மகளுக்கோ கூட தெரிவதில்லை-இந்த அந்தரங்கமான தொடர்புகளில் இருப்பவர்களை பார்த்திருக்கக் கூட மாட்டோம். ஆனால் எந்த extreme எல்லைக்கும் சென்றும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்போம். இது பெரிய உணர்வுபூர்வமான உறவு நிலையும் கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் கசந்துவிடும் போது இந்த தொடர்புகளை விட்டுவிட்டு இன்னொரு புதிய தொடர்புகளை கண்டுபிடித்துவிடுகிறோம். அவ்வளவுதான்.


நகரங்களில் நடைபெறும் கொலைகளாகட்டும், தற்கொலைகளாகட்டும்- தொண்ணூறு சதவீத விசாரணை கள்ளக்காதலில்தான் போய் நிற்கின்றன. அதிலும் இந்த குற்றச்செயல்களின் பிண்ணனியை ஆராய்வதற்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் செல்போன்கள்தான் உதவியாக இருக்கின்றன. அவனுக்கு அவள் இத்தனை எஸ்.எம்.எஸ்கள் அனுப்பியிருந்தாள். இவன் அவளோடு இத்தனை முறை ஃபோனில் பேசியிருந்தாள் என்று அறிக்கை விடுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.


எதற்காக இந்த உறவுகள் தேவைப்படுகின்றன? நம்மைச் சுற்றிலும் திரும்பிய திசைகளிலெல்லாம் நமது உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. இந்த தூண்டப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஏதோவொரு விதத்தில் வடிகால்களைத் தேடத் துவங்குகிறது மனம். இந்த தேடியலையும் மனதுக்கு இணையமும் தகவல் தொடர்பியலும் ஏதோவொரு விதத்தில் நமக்கு ‘வெர்ச்சுவல் பார்ட்னராக’ மாறிவிடுகிறது அல்லவா? இதுதான் சிக்கல். உண்மையில் இத்தகைய தொடர்புகள் நமக்குள் கசடுகளை மட்டுமே உருவாக்குகின்றன. நம்மைவிட்டு வெளியேறாத கசடுகள் இவை.


நமக்குத் தெரிகிறது- இவையெல்லாம் கசடுகள் என்று. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் இவற்றிலிருந்து தப்பித்துவிட முடியாது என்று நினைக்கிறேன். மிகப் பெரிய ட்ராப் இது. ஆனால் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.


இரண்டு நாட்களுக்கு முன்பாக அப்பாவின் நெம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. அன்றைக்கு அம்மா எடுத்தார். ‘சுமதிங்களா?’ என்று கேட்டிருக்கிறான். ‘இல்லைங்க சுப்புலட்சுமி’ என்றிருக்கிறார். ‘திண்டுக்கல்லிலா இருக்கறீங்க?’ என்று அடுத்த கேள்விக்கு அம்மாவும் தெரியாத்தனமாக ‘இல்லைங்க பெங்களூரில் இருக்கிறோம்’ என்று உளறியிருக்கிறார்.


அம்மாவின் வாயிலிருந்தே தகவல்களை வாங்கிக் கொண்டவன் ‘நான் அடிக்கடி ஓசூர் பக்கம் வருவேன், நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா சொல்லுங்க’ என்று மூன்றாவது வாக்கியத்திலேயே கேட்டிருக்கிறான். எதிர்முனையில் இருப்பவருக்கு என்ன வயது இருக்கும், எப்படி இருப்பார் என்ற எந்த அக்கறையும் அவனுக்கு இல்லை. அவனுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பெண்ணின் குரல்- அது மட்டும்தான். அம்மா மூர்ச்சையாகாத குறை. அதிர்ச்சியாகிவிட்டார். அதன் பிறகு நான் அழைத்து திட்டிய பிறகு ‘சாரி சார், ராங் நெம்பர்’என்று துண்டித்துவிட்டான். அது ராங் நெம்பர் எல்லாம் இல்லை. வேண்டுமென்றே பேசிய ராங் பேச்சு.


இப்படி கைக்கு வந்த எண்ணிற்கு டயல் செய்து பேசுவது, ஒருவேளை பெண்கள் பேசினால் தூண்டில் வீசிப்பார்ப்பது என்று திரிகிறார்கள்.


பிறகு என் நெம்பரில் இருந்து ‘நான் நித்யா’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். எந்த ஊர்? வயது என்ன? என்ற இரண்டு கேள்விகளுக்கு பிறகு ‘உனக்கு என்ன ரேட்?’ என்று மெசேஜ் அனுப்புகிறான். இவனை எல்லாம் என்ன செய்வது? தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் தனக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறான்.


இவனை போலீஸில் பிடித்துக் கொடுக்கலாம்தான். கொடுத்தால் என்ன நடக்கும்? நாலு சாத்து சாத்துவார்கள். அதனால் இந்த சமூகம் திருந்திவிடுமா என்ன? இவனைப் போல இன்னும் ஏகப்பட்ட பேர்கள் இருப்பார்கள். தனிப்பட்ட ஒருவனை அடித்து திருத்துவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. சமூகத்தின் பெரும்பகுதி இப்படித்தான் சிதைந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது, குடும்பம் நடக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வறண்டு கிடக்கிறான். யாரையாவது தேடுகிறான். இதுதான் பாலியலில் வறண்ட சமூகம் என்பது. எல்லா உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுவிட்டது, ஆனால் இந்த சமூகத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகால்தான் இல்லை. இதை எப்படி தனிமனிதனின் பிரச்சினை என்று ஒதுக்குவது?

http://www.nisaptham.com/2013/10/blog-post_24.html

Link to comment
Share on other sites

ஆதிக்க சக்திகளின் மொழியாடலில் 90% வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள் கொச்சை வார்த்தைகள் என முத்திரை குத்தப்பட்டு விலக்கப்பட்டு வருகிறது என ஆய்வாளர் "அறியப்படாத தமிழ் உலகம்" நூலில் எழுதியிருந்தார். அதுதான் உண்மை நிலையும் கூட. சிறு வயதில் தெருச் சண்டையில் கே(கெ)ட்ட வார்த்தைகள் எல்லாம் அடுத்த கொஞ்ச காலத்தில் தமிழ் அகராதியில் இருந்து பொய் விடும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், கிருபன்!

 

எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு! நல்ல விறுவிறுப்பாக எழுதியுள்ளார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு

இணைப்புக்கு நன்றிகள், கிருபன்!

Link to comment
Share on other sites

சும்மா இருக்கும் மனமே சாத்தானின் உறைவிடம்...  ( யார் சொல்ல அடிக்கடி இதை கேக்கிறனான் எண்டதை விட்டு விடுகிறன்... )   நேரமும் இருந்து வசதியும் இருக்கும் யாராலும் இப்படி தான் நடக்க முடியும்...  

 

உழைத்தான் அடுத்த வேளை சோறு எனும் நிலையில் இருக்கும் ஒருவராலோ இல்லை உழைத்து வைத்து இருப்பதை காப்பாத்த வேண்டும் எண்றால் அதே போல தொடர்ந்து உழைக்க வேண்டும் எனும் நிலையில் இருக்கும் ஒருவராலோ  இப்படி நடந்து கொள்ள முடியாது... 

 

குறைந்த நேரம் வேலை செய்தால் நிறைந்த சம்பளம் கிடைக்கும் ஒருவராலோ , அல்லது   யாராவது உழைக்கை அதை நோகாமல் வாங்கி செலவு செய்யும் ஒருவராலோ இப்படி முடியலாம்...   அது இந்த சமூகத்தின் சிறியதொரு பகுதி... 

 

சமூகத்தில் எல்லாரும் இப்படி இருக்க வேண்டும் எண்று அவசியம் இல்லை... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.