Jump to content

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி


Recommended Posts

 

 

இன்று நான் முகப் புத்தகத்தில் எனது நேரத்தை வழக்கம் போலவே வீணாக்கி கொண்டிருந்த நேரம் ஒரு செய்தி!வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி என்று என் கண்களில் காட்சிகளுடன் பட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரின் சாதனையாக இது பதியப்பட்டாலும் இது இங்கு பல வருடங்களாக சுவிசில் நடப்பவை தான். ஆனாலும் இன்று என் நெஞ்சில் இது எதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது.காரணம் இன்று என் நண்பர்களுடன் ஈழ இந்திய அரசியல் பற்றி அதிகமாக பேசியபடியால்  எம் இனம் பற்றி அதிகம் கவலைப் பட்டபடியால் இந்த செய்தி எனக்கு தப்பாக பட்டிருக்கலாம். அதுதான் உடனே இங்கு அதை பதியலாம் என்று முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல. இருந்தாலும் வேறு ஒரு நாட்டில் தமிழனின் சாதனையாக் நடந்த அதே சாதனை நல்லவேளையாக youtube  இல் இருந்த படியால் இதை இணைக்கிறேன். தவறென்றால் மன்னிக்கவும் நண்பர்களே  பொதுவாகவே பொண்ணு வயசுக்கு  வரும் பருவ மாற்றத்தை நம்மவர்கள் கொண்ட்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எங்கள் பெண்களை அவமானப் படுத்துவது போல் இருப்பதாக நினைப்பவன் நான் அது என் தனிப்பட்ட கருத்தே. இருந்தாலும் தாயகத்தில் எம்மினம் அல்லல் படும் இவேலையில் இதுகள் தேவையா? ஆமாம் செய்தி நான் போடுறேன் கருத்தை நீங்க சொல்லுங்க யாழ் உறவுகளே 

 

http://www.youtube.com/watch?v=yafpS5DkPSY

 

 

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் தாயகத்தில் எம்மினம் அல்லல் படும் இவேலையில் இதுகள் தேவையா?

 

நடந்து போனார்கள்

மாடடு வண்டிலில் போனார்கள்

காரில் போனார்கள்

இன்று கெலியில் போகின்றார்கள்..........

 

எல்லாம் சேர்ந்தது தான் மக்கள் கூட்டம்.

இதை விமர்சித்து வெறுத்து ஒதுக்குவதைவிட

அவர்களிடம் சென்றும் கறப்பது தான் உண்மையான தாயக  மக்களுக்கு செய்யும்பணியாக இருக்கமுடியும்.............

Link to comment
Share on other sites

நன்றி ஜீவா இதைத் தான் தேடினேன் 

 

Link to comment
Share on other sites

பொதுத்தளங்களில் இவ்வாறு தரவேற்றும்போது வேண்டாத சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.. சிறுமிகளுக்கும் எண்ணங்கள் பெருத்துவிடுகின்றன.. எனக்குத் தெரிந்து விழாக்கள் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார்கள்..

ஒருவேளை இதனுள் வேறொரு கைங்கரியமும் இருக்கலாம்.. :rolleyes: இவ்வாறான விழாக்களை நடத்தி பிரபலப்படுத்தி விட்டால் தமிழ் மாப்பிளைமார் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது அல்லவா? பலே ஐடியா.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜீவா இதைத் தான் தேடினேன் 

 

ஓரிரு கிழமைக்கு முன்னர் பேஸ்புக்கில் பிரபலமாய் இருந்த வீடியோ இது அன்பு அண்ணா. ஒரு சில இணையத்தளங்களிலும் இதே தலைப்புடன் போட்டிருந்தார்கள். குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேர்த்தவர் என்றும் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் மக்கள் பணத்தைச் சுருட்டி அதில் தான் இப்படி விழாக் கொண்டாடினவர் என்று தான் பேஸ்புக்கில் பின்னூட்டம் எழுதி இருந்தார்கள், எதற்கும் சுவிஸ் வாழ் உறவுகள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு கிழமைக்கு முன்னர் பேஸ்புக்கில் பிரபலமாய் இருந்த வீடியோ இது அன்பு அண்ணா. ஒரு சில இணையத்தளங்களிலும் இதே தலைப்புடன் போட்டிருந்தார்கள். குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேர்த்தவர் என்றும் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் மக்கள் பணத்தைச் சுருட்டி அதில் தான் இப்படி விழாக் கொண்டாடினவர் என்று தான் பேஸ்புக்கில் பின்னூட்டம் எழுதி இருந்தார்கள், எதற்கும் சுவிஸ் வாழ் உறவுகள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.

 

இது உண்மை போல தான் இருக்குது.யாராவது இப்படி கஸ்டப்பட்டு உழைத்த காசை வீணாய் செலவழிப்பார்களே :unsure:
 
இப்படி ஆட‌ம்பர‌மாக செய்தால் அதை தங்களோடு வைத்துக் கொள்வதற்கு எதற்கு ஊர் முழுக்க பிர‌பல்யப்படுத்தினம்.பெட்டைக்கு நல்லா மேக்கப்மும் போட்டு  நடிகை மாதிரித் தான் போஸ் கொடுக்குது.இப்பவே இப்படியான எண்ணங்களை ஊட்டினால் 16 வயதிற்கு முன்னர் வீட்டை விட்டு ஓட‌த் தான் சொல்லும்
 
பெற்றோர் தங்கட‌ பிள்ளைக்கு ஆசையாய் விழாக்கள் செய்வது அவர‌வர் விருப்பம் ஆனால் இது ரொம்ப ஓவர்.
Link to comment
Share on other sites

பொதுத்தளங்களில் இவ்வாறு தரவேற்றும்போது வேண்டாத சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.. சிறுமிகளுக்கும் எண்ணங்கள் பெருத்துவிடுகின்றன.. எனக்குத் தெரிந்து விழாக்கள் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார்கள்..

ஒருவேளை இதனுள் வேறொரு கைங்கரியமும் இருக்கலாம்.. :rolleyes: இவ்வாறான விழாக்களை நடத்தி பிரபலப்படுத்தி விட்டால் தமிழ் மாப்பிளைமார் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது அல்லவா? பலே ஐடியா.. :icon_idea:

 

இதுவென்றால் உண்மைதான். விழக்கொண்டாடுவதும் விடுவதும் அவரவர் விருப்பம் தனிமனித சுதந்திரம். அதில் நாம் தலையிடவேண்டாம். ஆனால் இசை சொன்னதுபோல் இப்படியான செயற்பாடுகளை பிள்ளைகளுக்கு ஊடிவளப்பவர்களால் நல்ல நடத்தை உள்ள பிள்ளைக்ளை உருவாக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். தனிமனித சுதந்திரம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் யதார்த்தத்தை பொதுவில் நடப்பதை பேசுவதில் தப்பில்லைதானே. இப்பவே அந்தப்பிள்ளையின் மனத்தில் படிப்பைவிட வேறு நினைவுகளால்தான் உருவாகி இருக்கும். இதுபோலத்தான் உடைவிடயமும். சின்னவயசிலயே பிள்ளைகளுக்கு செக்ஸியாக உடுத்திவிடுபவர்கள் அவர்கள் வளரவளரவும் அதையே பின்பற்றி அவை பல்வேறு தப்பான் எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இட்டு செல்கிரது. உடுப்பு அவர்வர் சுதந்திரம். ஆனால் அதற்காக முன்னால் நடப்பவற்றை பேசக்குடாது என்று இல்லதானே.பொதுவாக நாம் பார்ப்பவர்களில் அநேகமான தப்பு பண்ணும் பெண்கள் அநேகர் இப்படிபட்டவர்கள்தான்.இப்படிப்பட்ட பெண்களில் யார்தான் நல்ல அமைதியான குடும்ப வாழ்வில் இருக்கிறார்கள்? மிகச்சிலரே.

 

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவ்தும் அன்னை வளர்ப்பினிலே.

 

Link to comment
Share on other sites

பெண் வயசுக்கு வந்ததை ஊரறிய விழா எடுத்து எல்லாருக்கும் அறிவிப்பதற்காக கொண்டாடுவதே கேடு கெட்ட ஒரு பழக்கம். அதிலும் அபரிதமான ஆடம்பரம் என்பது அருவருப்பான ஒன்று.

 

ஒருவரால் யுரியுப் ஒன்றில் ஒரு காணொலி பகிரப்பட்டால், அதன் மீதான public opinio இனை தவிர்க்க முடியாது. தமக்கான private video என்றால் அதனை தமக்குள்ளாகவே பகிர்ந்து இருக்க வேண்டும். அல்லது, தம் கைகளை மீறி இன்னொருவருக்குச் சென்று அவரால் வெளியுலகுக்கு பகிரப்பட்டு இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இதனை இவர்கள் செய்கின்றமாதிரி இல்லை.

 

இந்த குடும்பத்தினர் தம் விலாசத்தினைக் காட்ட மகளது வயசுக்கு வந்த விடயத்தினை விளம்பரப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மிகக் கேவலமான சிந்தனை இது.

 

இந்த பெண் பிள்ளைக்காக மனம் வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கவே இந்த விடையம் பற்றி எழுத நினைத்து விட்டு பின் எதற்கு வேண்டாத வேலை என்று விட்டு திரிந்தேன்..இந்த மாத நடுப்பகுதியில் பெரியபிள்ளையாகி விழா எடுத்த ஒரு விழாவுக்கு போய் இருந்தேன்.பெரிய பிள்ளையாகிய பிள்ளையின் தந்தையின் குடும்ப உறவுகளோடும்,தாயின் உறவுகளோடும் வீண் ஆடம்பரங்களின்றித் தான் நடந்தேறியது. ஒரு விடையம் மட்டும் எனக்கு அறவே பிடிக்கவில்லை..அது தான் இந்த வானுர்தி விழையாட்டு..ஒரு திருமணமான ஜோடிகளை காட்சிப்படுத்திக் காட்டி இருந்தால் அது உண்மையாக பார்பவர்களுக்கு புரிதல் கூடுதலாக இருக்கும்...

 

ஆனால் பெரியபிள்ளையாகி இருக்கும் ஒரு தனித்த சிறுமிக்கு இப்படியான காட்சிப்படுத்தல்கள் தேவை இல்லை என்றோ நினைக்கத் தோன்றுகிறது.வளரும் பிள்ளைகள் சிறுவயதிலயே தவறான பாதைக்கு இட்டு செல்வது இவ்வாறான ஆடம்பரங்களும் தான்..இவள்  ஒரு இடமும் வர மாட்டாள் வந்துட்டு நொட்டை கண்டு பிடிக்கிறதும்,பேசுறதும் தான் வேலை என்று சொல்வார்கள் என்ற காரணத்தினாலயே போற இடங்களில் நடக்கும் கூத்துக்களை பார்த்தும்,பார்க்காதது போல் வர வேண்டிய நிலை.
 

 

 

 

Link to comment
Share on other sites

 பிள்ளைகள் இப்போது 10வயதிற்குள்ளே பருவ வயதை அடைகின்றனர். இந்தப்பிள்ளைகள் மனசால் பெற்றோரின் இத்தகைய எடுப்பு விழாக்களின் தாக்கங்களை விளங்கிக் கொள்வதில்லை. சிறியவர்கள் ஆனால் இந்த விழாவை எமது கலாசார விழுமிய அடையாளமாகவே பெரும்பாலும் பெண்பிள்ளைகள் மனதில்  விதைத்துள்ளது நமது தமிழ் காலசார காப்பாளர்களின் பணியும் இதுவாகவே இருக்கிறது.

கடந்தவருடம் ஒரு பூப்புனித விழா டென்மார்க்கில் நடைபெற்றிருந்தது: அந்த நபர் இங்கு இயங்கிய புனர்வாழ்வுக்கழகத்தின் முக்கிய புள்ளி. பிள்ளையின் பூப்புனித விழாவை முகப்புத்தக நண்பர்களுக்கு நேரடியஞ்சல் செய்திருந்தார்கள். அவர் தனது பிள்ளைக்கு விரும்பி விழாவெடுத்திருந்தார் அது அவரது சுதந்திரம். ஆனால் இதனை சிலர் முகப்புத்தகத்திலும் மேலே ஜீவா குறித்தது போல விமர்சித்திருந்தார்கள்.

பெற்றோரே இவ்விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தனது மகளின் அந்தரங்கத்தை வெளியில் விழாவெடுத்து கொண்டாடி ஒரு காலத்தில் பிள்ளையின் மனசை இவர்களே திசைமாற்ற வழிவகுக்கிறார்கள்.

இவ்விடயத்தில் உறவினர்களுடன் கூட முரண்பட்டுள்ளேன். ஆனால் இந்த விழாவிற்கு உறவினர் அழைத்தால் போக வேண்டிய கட்டாயம். போகாது விட்டால் முறிக்கப்படும் உறவுகளையும் தேவையற்ற விமர்சனங்களையும் தவிர்க் சபையோடு சபையாக போயிருந்து மரக்கிற சோற்றையும் சாப்பிட்டு பல மணித்தியாலங்களையும் செலவிட வேண்டியிருக்கிறது.

புலம்பெயர்ந்ததில் 3பூப்புனித விழாவிற்கு சென்றிருக்கிறேன். 4வதாகவும் ஒன்று அடுத்தமாதம் போக வேண்டியுள்ளது. உறவை முறிக்க முடியாமல் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.கள உறவுகளே உங்களிலும் சிலரை இந்த விழாவில் நான் தரிசிக்கக்கூடும்.

எங்கு போனாலும் எப்ப மகளுக்கு கொண்டாட்டம் என்று கேட்பார்கள். இதெல்லாம் மொக்குத்தனமான செயற்பாடு என கருத்துச் சொல்லி கடந்தமாதமும் 2கணவர் வழி சொந்தங்களில் காட்டத்துக்கு ஆளாகியுள்ளேன். ஊரே ஏற்றுக் கொண்டு கலக்கிற இவ்விழாவை முழுமையாக புறக்கணிக்க முடியாது போனாலும் வீட்டில் எனது மகளுக்கு இவ்விழாவெடுக்கவுமில்லை. பிள்ளையே இப்போது விழாவெடுக்காதமை பற்றி கதைத்தால் அவளே அவர்களுக்கு பதில் சொல்லிவிடுகிறாள்.
 

பிள்ளைக்கு முதல் வெளியாகிய குருதிபடிந்த உள்ளாடையைக்கூட காப்பாற்றுகிறார்கள் இப்போது சிலர். அதுவும் ஞாபகச்சின்னமாம்.

இதையும்விட பிள்ளை 9வயதையடைந்தால் சாறி வாங்கி வைத்துக் கொள்கிற நிலமையும் வருகிறது. எப்ப பிள்ளைக்கு பிறப்புறுப்பிலிருந்து குருதி வெளியேறும் சாறியுடுத்து ஐயரைக்கூப்பிட்டு துடக்கு கழிக்க வேணுமாம். அதற்கு உடனடியாக சாறி வேண்ட முடியாது போகுமென்பதனால் சாறியை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் பிள்ளை கழற்றிப்போட்டுவிட்டுப் போகிற உள்ளாடையை பரிசோதனை செய்கிற அம்மாக்களும் இப்ப கனக்க இருக்கினம்.

 

இந்த விழாவில் மாற்றத்தை கொண்டு வந்து பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை சமூகத்துடனான வாழ்வை கல்வியை ஊட்டுவதே சரியான வழியென்பதனை ஒவ்வொரு பிள்ளையும் உணரக்கூடிய நிலமைக்கு மாற்ற ஒவ்வொரு பெற்றோரும் சுற்றமுமே தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

 

 

Link to comment
Share on other sites

இந்த மாதிரி விழாக்களை நடத்துவதில் முன்னுக்கு நிற்பது தாய்க்குலங்கள்தான்.. :rolleyes: அதுவும் சாமத்தியப்பட்டவுடன் நடத்தாமல் ஓரிரு வருடங்கள் தள்ளி நடத்த ஊக்கம் கொடுக்கிறார்கள்.. காரணம் தெரிந்ததுதான்.. :blink:

 

தாய்க்குலங்கள் ஓகே சொன்னவுடன் தந்தைக்குலங்கள் ஹெலிக்கு ஏற்பாடு செய்கினம்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஒரு பெண்பிள்ளையின் வாழ்வென்பது எப்படியமைய  வேண்டுமென்பதற்கான இன்னொரு சாட்சியாக இன்னொரு பெண்பிள்ளையின் அந்தரங்க மாதவிடாயை எப்படியெல்லாம் செய்கிறார்கள்  என்பதனை இந்த வீடியோவில் பாருங்கோ.

 

Link to comment
Share on other sites

இடம் கனடாபோல் இருக்கு.. :unsure:  கனடாவில் இருந்து ஊருக்குப் போறது கனநேரம் எடுக்கும்தானே.. :D அதுக்குத்தான் மாடு, கோழியை எல்லாம் கனடாவுக்கு கூட்டி வந்திட்டோம்.. :icon_idea:



அது சரி.. பெயர் றெபெக்கா என்று இருக்கு.. கிறித்துவர்களும் இதை செய்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 மேலே ஜீவா குறித்தது போல விமர்சித்திருந்தார்கள்.

 

ஐயோ அக்காச்சி .. இது நான் விமர்சிக்கவில்லை முகப்புத்தகத்தில் சிலரால் எழுதப்பட்டது. அவற்றை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம் இல்லை என்றால் இணைப்பைத் தருகிறேன் பாருங்கள் அக்கா. மற்றும் படிக்கு வேலியிலை போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ளை விட நான் தயாரில்லை அக்கா. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

ஐயோ அக்காச்சி .. இது நான் விமர்சிக்கவில்லை முகப்புத்தகத்தில் சிலரால் எழுதப்பட்டது. அவற்றை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம் இல்லை என்றால் இணைப்பைத் தருகிறேன் பாருங்கள் அக்கா. மற்றும் படிக்கு வேலியிலை போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ளை விட நான் தயாரில்லை அக்கா. :rolleyes::lol:

 

ஐயோ தம்பி நீங்கள் பகிர்ந்த கருத்து போல இருந்தென்றதை குறித்தேன். அது உங்கள் கருத்தில்லை. நான் சொன்ன கடந்தவருட நேரடி பூப்புனிதவிழா காட்சியின் கீழ் நீங்கள் மேற்கோள் காட்டியது போல எழுதப்பட்டிருந்ததென்று சொல்லு வந்தேன். கோதாரி கருத்து மயக்கத்தை தந்துவிட்டது மன்னித்துவிடு ராசா. :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் உலங்குவானூர்தியில்.. சிறிய ரக விமானத்தில்..  ஊரைச் சுற்றுவது ஒன்றும் புதினம் அல்ல. முன்னம் ஊரிலும் பலாலியில் இருந்து இப்படியான சேவைகள் இடம்பெற்றதாக தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 

இந்தப் பொண்ணுங்களுக்கு அந்த வாய்ப்பு இப்படி ஒரு கேளிக்கை வேடிக்கை விநோதக் களியாட்டம் மூலமாவது கிடைச்சுதே என்று சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான். இது நாளை அவர்களை ஒரு விமானியாக அல்லது விமானப் பணிப்பெண்ணாக வரத் தூண்டக் கூடும்.. என்று சொல்லிச் சென்று விட வேண்டியது தான்.

 

நாங்கள் கத்தி சனம் திருந்தப் போறதே இல்லை. இந்தச் சாமத்தியச் சடங்கு பற்றி நான் அறிய 2002 இல் இருந்து யாழில் எத்தனையோ கருத்தாடல்கள்.. பல மணி நேரங்கள்... பல மனித வலுக்களைச் செலவழித்து செய்யப்பட்டும்.. ஆன பயன்??!. அது இப்ப வீட்டில இருந்து கோலுக்கு வந்து.. ஆகாயத்திற்குப் போயிட்டுது..! நாளை விண்ணுக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

அதையும்தாண்டி அதை காசுகொடுத்து கமராமான் வைத்து வீடியோ எடுத்து எடிற்பண்ணி நல்ல பாட்டுக்கள் போட்டு அல்பம் செய்து நெட்டில் விட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

 

"அற்பனுக்கு பவிசு வந்தால்.. அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்" என்று எம் முன்னோர்கள் எம்மவர்களின் இன்றைய இந்தக் கோலத்தை அழகுற அன்றே இனங்கண்டு சொல்லி விட்டுத்தான் சென்றுள்ளனர்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வானூர்தி விடயங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டு, இந்த விழா குறித்து நான் அவதானித்த ஒரு விடயம் பகிர விரும்புகின்றேன்.
 
இந்த விழாக்களை நக்கல் அடித்து, இதுகள் எல்லாம் எண்ட பிள்ளைக்கு செய்ய மாட்டேன் என்று சொன்ன அப்பாகளை, ஒன்று அல்ல பல பேரை பார்த்து இருகின்றேன்.
 

பின்னர் தமது பிள்ளைகளுக்கு விழா எடுத்த அவர்களுடன் பேசிய போது, அவர்களது மனதினை மாற்றிய ஒரே விடயம், அவர்களுக்கு சொல்லப் பட்ட நியாயம்.

 
இந்த ஒரு நிகழ்வு தான், தாய், தகப்பன் முழு உரிமையுடன், முடிவு எடுத்து செய்யக் கூடியது. ஏனெனில் எதிர்காலத்தில், மேற்குலகில் வாழும் ஒரு பிள்ளையின் எதிர்கால வாழ்வு கலியாணமோ, சேர்ந்து வாழ்வதோ, ஓரின வாழ்வோ ஆல்லது தனிமையானதோ என எதிர்வு கூற முடியாதது.
 
அது உண்மையும் கூட தானே!
 
தாயகத்தில், முன்னர் அச்சு தொழிலில் இருப்போர், ஒரு வியாபார தந்திரம் செய்வார்கள். ஒரு துண்டு பிரசுரம் அடித்தி விநயோகிப்பர். ஒரு தெய்வ சம்பவம் குறித்து விபரிக்கும் அந்த பிரசுரத்தினை, பிரதி அடித்து விநியோகித்தால், இன்ன பலன் கிடைக்கும், இல்லாவிடில்.... என் பயமுறுத்தலும் இருக்கும். கீழே அந்த அச்சகத்தின் தொடர்பு விபரம் இருக்கும்.
 
இந்த தாய் தந்தையரின் முழு உரிமை கதை இந்த விளம்பர உத்தியினை, இந்த விழாவிற்கு, பல சேவைகளை வழங்கி பணம் பார்க்கும் வியாபாரிகள் உபயோகிக்கின்றரோ என் தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் ஒரு கலாச்சாரம் என்று வர அதிக நாள் எடுக்காது. ஏன்னெனில் யுத்தத்தால் பாதிக்க பட்ட பெண்களை கூட, ஒதுக்கி வைப்பதுப்பதுதான் கலாச்சாசரம் என்று "நியூ யோர்க்" இருந்து சொல்லுகிற தமிழர் காவலர்கள் உள்ள இடத்தில் இந்தகைய "இறுகிய/கட்டுக்கோப்பு" மிக்க புராதன பண்பாடுகள் வளரத்தான் செய்யும். 

Link to comment
Share on other sites

இந் நிகழ்வு அக் குடும்பத்தின் தனிப்பட்டவிடயம். அதில் இனம் கலாச்சாரம் என்பதினூடாக தலையிட முடியாது. பல இனக் குழுமங்களில் இருந்து பொறுக்கப்பட்ட கலாச்சாரமே கலாச்சாரம் என்ற போர்வையில் பேசப்படுகின்றது. இரவல் கலாச்சாரம். அதற்கும் எந்த வரைமுறையும் கிடையாது. யாரும் ஒருத்தன் வித்தியாசமாகப் பண்ணிவிட்டால் உடனே புலிக்காசில் பண்ணிவிடடான் என்பது பொது வழக்கு. அதனால் அது செல்லாது. அந்தக்காலத்தில் பல்லாக்கு இருந்தது அதில் பவனிபோனார்கள் இந்தக்காலத்தில் உலங்கு வானூர்தி இருக்கின்றது அதில் போகின்றார்கள். அவர்கள் உழைப்பு அவர்கள் காசு அவர்கள் சந்தோசம் அவர்கள் திருப்தி. இதில் கருத்துக்கூற நாம் யார்? பரணி பாடிய தேசீயவாதிகள் இப்போது புறணிபாடும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதை விடுத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

 

Link to comment
Share on other sites

கலை அம்சத்துடன் பார்க்கலாம். வேறு, சரி, பிழை, தேவை, தேவையில்லை பார்ப்பதாயின்.. இதுபோல் பல்லாயிரம் விடயங்கள் உள்ளன. நாங்கள் இணையத்தளத்தில் எழுதுவனவற்றையும் இவ்வாறே வேறோர் ஊடகப்பரப்பில் விமர்சித்து திட்டி தீர்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.