Jump to content

வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும்
இக்பால் செல்வன்
 
 

628x471.jpg


மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது அதே சமயம் பலவீனமானதும் கூட. மனம் என்பதில் இருந்து தான் இன்றைய உலகின் அனைத்து விடயங்களும் உருவாக்கம் பெற்றன. நாம் அன்றாடம் சுகிக்கும் ஒவ்வொரு பொருள்களும் மனித மனதில் இருந்து தோன்றியவை. ஆனால் உலகில் பெரும்பங்கான மனிதர்களின் மனம் கோணலாகவும், விரிவடையாமலும், சுருங்கியும் கிடக்கின்றன. 
 
மனித இனம் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இனமாகவும் இருக்கின்றது. பல விடயங்களைக் கண்டு அஞ்சும் தன்மையது. குறிப்பாக நாம் அறியாத விடயங்களை எண்ணி கடுமையாக பயப்படுகின்றோம். தெரியாதவற்றை தெரிந்தவைகளை இட்டு நிரப்பி கற்பனை செய்து கொள்கின்றோம். குறிப்பாக துன்பங்கள் ஏற்படும் போது, மனித மனம் தனது இயல்பான சிந்தனை ஆற்றல்களை இழந்து விடுகின்றது. 
 
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் எண்ணற்ற துன்பங்களை சந்திக்கின்றோம், அவற்றில் சிலவற்றை சுயமாகவோ, பிற துணையோடும் கடந்து விடுகின்றோம். சில சமயங்களில் அவற்றை கடக்க கடுமையாக துன்பப் படுகின்றோம், கடுமையாக முயல்கின்றோம். அச் சமயங்களில் மனம் நிதானித்து இருப்பதில்லை, எளிய வழிமுறைகளைத் தேடும். எதைக் குடித்தால் பித்தம் தீரும் என கண்களில் தென்படும் எவ் வகை தீர்வுகளையும் முயற்சி செய்ய யத்தனிப்போம். 
 
வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தவை என பண்டைய சான்றோர்கள் எண்ணினார்கள். அவை மனம் சார்ந்தவை, உடல் சார்ந்தவை என வகைப்படுத்தினார்கள். ஆனால் இத் துன்பங்களை தீர்க்கும் வழிமுறைகளில் தான் ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டைக் தத்தமது அனுபவங்கள் ஊடாக முன்வைத்தனர். உதாரணத்துக்கு புத்தரோ பற்று நிலையே துன்பத்துக்குக் காரணம் என்றார், பற்றுக்களை துறக்க வலியுறுத்தினார். 
 
கிரேக்க தத்துவஞானியான எபிகுருசு துன்பங்களை அகற்றத் தொடங்குவதன் மூலம் இன்பங்களை பெறலாம் எனக் கூறினார். துன்பங்களின் வேர்களைத் தேடி அறிவின் ஊடாக அவற்றை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.   பிரிடரிக் நீட்சே என்ற பிரஞ்சு மெய்யியலாளர் துன்பங்களை மிகவும் நல்லது எனவும், அது வாழ்வினை உறுதிப்படுத்தவும், மன வலிமையை கூட்டவும் பயன்படுகின்றது என முற்றாக மாற்றுக் கருத்தை முன் வைக்கின்றார். 
 
ஆனால் சில மத நிறுவனர்களோ, கடவுளை வணங்குவதால், கடவுளிடம் சரண்டைவதால் துன்பங்களை தீர்க்க இயலும் என்றார்கள். இத்தகைய துன்பமான நிலையில் தான் மூட நம்பிக்கைகள் உள் புகுகின்றன. எளிய மனிதர்களின் துன்பங்களை பயன்படுத்தி நல்ல விளைச்சலை அறுவடை செய்யவே ஒரு ஒருங்கியம் (System) இன்றளவும் செயல்பட்டு வருகின்றது.  
 
இத்தகைய ஒருங்கியங்கள் மதங்கள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், மரபுகள், பாரம்பரியங்கள் என்ற பெயரில் சமூகத்தில் நீடித்து வருகின்றன. விளிம்பு நிலை மனிதர்களும், ஏழை எளியோர்களும், இயலாதோரும் தமது துன்பங்களுக்கு காரணங்கள், காரியங்கள், விடுதலைகள் அனைத்துக்கும் மூட நம்பிக்கைகளில் சரணாகதி அடையச் செய்ய வைக்கப்படுகின்றார்கள். இது வரைக் காலமும் உலகின் துன்பங்களை இத்தகைய மூட நம்பிக்கைகள் சார்ந்த ஒருங்கியத்தின்  (System) ஊடாக தீர்வு கிடைத்ததாக நான் அறிந்திருக்கவில்லை, தற்கால மன அமைதியை வேண்டுமானால் கிடைக்கலாம். அல்லது தீர்வு எட்டப்பட்டதாக போலியாக நம்ப வைக்கப்படலாம். ஆனால் உண்மையான தீர்வை ஒரு போதும் எட்டப்படுவதே இல்லை. 
 
இவ்வாறு தான் அமண்டா பெறி என்ற 16 வயது சிறுமி ஏப்ரல் 21, 2003-ஆம் ஆண்டு காணாமல் போனார். அதன் பின்னர் அவளை அவளது தாயார் லுவானா மில்லர் தேடாத இடமில்லை, வணங்காத தெய்வமில்லை. அவை ஏன் தமது மகள் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதைக் கூட அறியாமல் இறுதியாக ஒரு குறி சொல்லும் சோதிடப் பெண்மணியிடம் சென்றார். சில்வியா பிரவுன் என்ற அந்த குறி சொல்பவளோ, மில்லரின் மகள் உயிரோடு இல்லை எனக் கூறி விட்டாள். அதனைக் கேட்டு மனமுடைந்த மில்லரோ 2006-ஆம் ஆண்டு இறந்து போனார். 
 

Kidnappers-1874966.jpg
காஸ்ற்ரோ சகோதரர்கள்

ஆனால் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா, அமண்டாவையும், மேலும் இரு பெண்களையும் 54 வயதுடைய பெட்ரோ காஸ்ற்ரோ மற்றும் அவரது சகோதரர்கள் ஏரியல் காஸ்ற்ரோ, ஒனில் காஸ்ற்ரோ ஆகியோரும் கடத்தி ஒரு வீட்டில் பத்தாண்டுகளாக அடைத்து வைத்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் அவர்களை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியும், உடல் மற்றும் உள்ளத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளனர். 
 
கடந்த வாரம் இந்த பெண்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த செய்தி அமெரிக்காவின் கிளிவ்லாந்து பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்த மூவரும் சமூகத்தில் நல்ல மனிதர்கள் என்ற முகமூடி இட்டு ஏமாற்றியும் உள்ளனர். சொல்லப் போனால் காணாமல் போன பெண்களை தேடும் பணியிலும், அதற்கு தேவையான பணம் வசூலிக்கும் நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்றுள்ளனர். அதில் அமண்டா பெறிக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது, அக் குழந்தைக்கு ஆறு வயதும் ஆகி உள்ளது என்பது தான் கொடுமை. 
 
சுற்றத்தார் சிலருக்கு இவர்கள் மீது சந்தேகங்கள் இருந்த போதும், யாரும் பெரிதாக சாட்டை செய்யவில்லை. அத்தோடு காவல்துறையினரின் கண்களில் கூட மண் தூவப் பட்டு இத்தனைக் காலமும் இந்த இளம் பெண்களை வீட்டுச் சிறைப் படுத்தி உள்ளனர் இந்த கயவர்கள். 

 

கடவுள் தீமைகளை அழிக்க விரும்பகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா?



அப்படியானால் அவர் வல்லமை அற்றவர்.



அவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா?



அப்படியானால் கடவுள் கருணை அற்றவர்.



விருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா?



அப்படியானால் தீமை எங்கிருந்து வருகின்றது?



வல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா?



பிறகு ஏன் கடவுள் என்று (ஒன்று இருப்பதாக) கூறிக்கொள்ள வேண்டும்?



- எபிகுருசு



உலகில் இவ்வாறான சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, இந்த பெண்களுக்கு துன்பங்கள் ஏற்படாமலோ, துன்பம் ஏற்பட்ட போது காப்பாற்றாமலோ இருந்த கடவுளை இன்னமும் நாம் நம்பத் தான் வேண்டுமா? உயிருடன் துன்பப் பட்ட பெண் இறந்து விட்டாள் எனக் கூறிய சோதிடத்தை என்ன செய்யலாம் ?
 
இவை எல்லாம் கடவுளின் சித்தம் என்றோ, எல்லாம் அவர்களின் தலை விதி என்றோ பிற்போக்குத் தனம் பேசுபவர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த பெண்கள் உங்களின் மகளாகவோ, சகோதரியாகவோ, ஏன் நீங்களாகவோ இருந்தால் கூட இவ்வாறு தான் பேசுவீர்களா ?!!


 
 
http://www.kodangi.com/2013/05/cleveland-kidnap-victims-amanda-berry-and-existence-of-pain-and-god.html
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை  நொந்து  என்ன  பலன்???

 

இந்த மூன்றையும் போடும்  வகையில் மற்றவரெல்லாம் தெளிவாகணும்.............

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று கோயிலுக்குப் போகும் வழியில் திருப்பம் ஒன்றில் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானார்கள். வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அனைவருமே மிகச்சிறிய காயங்களுடன் தப்பிக் கொண்டனர். வாகனம் தீரும்பவும் சேவையில் ஈடுபடுத்த முடியாதபடி சேதமடைந்திருந்தது.

 

வாகனத்தில் இருந்து காயமெதுவுமின்றி தப்பிக்கொண்ட பெரியவர; சொன்ன வசனம் இது நல்ல வேளை கடவுள் புண்ணியத்திலை ஆபத்தில்லாமல் தப்பீட்டம்.

 

என்னுடைய கேள்வி காப்பாற்றியது கடவுளன்றால் மோத வைத்தது யார்?

 


 

Link to comment
Share on other sites

எடுத்த எடுப்பி்ல் மூன்றுபேரையும் போட நினைப்பதற்கு அமரிக்கா ஒன்றும் தமிழ் சிந்தனை முறையை கொண்டிருக்கவில்லை. அதில் இரண்டு சகோதரர்கள் மீது குற்றம் பதிவுசெய்யப்படவில்லை.

 

 

Link to comment
Share on other sites

போட நினைப்பது தமிழ் சிந்தனை முறை என்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் .அது குறிப்பிட்ட ஒரு தமிழ் கூட்டதிற்கு   உரித்தானது மட்டுமே .

Link to comment
Share on other sites

போட நினைப்பது தமிழ் சிந்தனை முறை என்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் .அது குறிப்பிட்ட ஒரு தமிழ் கூட்டதிற்கு   உரித்தானது மட்டுமே .

 

ஏன் ரெலோ பொபி தாஸ் என்று போட்டுத்தள்ளவில்லையா? புளட் உள்ளுக்குள் போட்டுத்தள்ளவில்லையா? இல்லை ஏனைய இயக்கங்கள் தான் மாறி மாறி போட்டுத்தள்ளவி்ல்லையா? கூடுதலாக போட்டுத்தள்ளியவன் தலையில் எல்லாக் குற்றங்களை இனத்தின் காட்டுமிராண்டித்தனத்தை சுமத்த முடியாது. சேர சோழ பாண்டியர்கள் மாறி மாறிப்போட்டுத்தள்ளினதுதான் புறநானுறும் அக நானூறும். பெளத்தரையும் சமணரையும் கழுவேற்றி கரை கண்டதுதான் ஆன்மீகம் சமயம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. வரலாறு முழுக்க காட்டுமிராண்டிகளாகவே கடந்து வந்தவர்கள் இப்பவும் எவன் தலை கிடைக்கும் ஓட்டைபோடலாம் என்றே சிந்திக்கின்றார்கள். இதில கண்டனம் வேறு !!

Link to comment
Share on other sites

http://www.theatlantic.com/national/archive/2012/05/yes-america-we-have-executed-an-innocent-man/257106/

 

 

 

அமெரிக்காவை பற்றி பெருமையாக நினைப்பதும் தன் இனத்தை சிறுமையாக நினைப்பதும் ஒரு அடிமையின் மனப்பாங்கு தான்.
 
இவ்வளவு சட்டம், விஞ்ஞானம் எல்லாம் இருந்தும் நிரபராதி அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளாரே??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.theatlantic.com/national/archive/2012/05/yes-america-we-have-executed-an-innocent-man/257106/

 

 

 

அமெரிக்காவை பற்றி பெருமையாக நினைப்பதும் தன் இனத்தை சிறுமையாக நினைப்பதும் ஒரு அடிமையின் மனப்பாங்கு தான்.
 
இவ்வளவு சட்டம், விஞ்ஞானம் எல்லாம் இருந்தும் நிரபராதி அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளாரே??

 

 

ம்ம்ம்

அமெரிக்காவில் மரணதண்டனை உண்டு என்பதையே  மறந்து பேசுகின்றார்கள்....

Link to comment
Share on other sites

ஏன் ரெலோ பொபி தாஸ் என்று போட்டுத்தள்ளவில்லையா? புளட் உள்ளுக்குள் போட்டுத்தள்ளவில்லையா? இல்லை ஏனைய இயக்கங்கள் தான் மாறி மாறி போட்டுத்தள்ளவி்ல்லையா? கூடுதலாக போட்டுத்தள்ளியவன் தலையில் எல்லாக் குற்றங்களை இனத்தின் காட்டுமிராண்டித்தனத்தை சுமத்த முடியாது. சேர சோழ பாண்டியர்கள் மாறி மாறிப்போட்டுத்தள்ளினதுதான் புறநானுறும் அக நானூறும். பெளத்தரையும் சமணரையும் கழுவேற்றி கரை கண்டதுதான் ஆன்மீகம் சமயம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. வரலாறு முழுக்க காட்டுமிராண்டிகளாகவே கடந்து வந்தவர்கள் இப்பவும் எவன் தலை கிடைக்கும் ஓட்டைபோடலாம் என்றே சிந்திக்கின்றார்கள். இதில கண்டனம் வேறு !!

ஒரு கூட்டம் என்று நான் குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை அல்ல .அப்படியான சிந்தனையில் ஒரு கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனங்களில் மிருகத்தன்மை அதிகரித்து வரும் காலம் இது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, தகாத தொடர்பு,  அடிதடி அராஜகம்

என்பன இன்று அதிகரித்து உள்ளது

 

ஆதிகாலத்தில் மனிதன் மிருகங்களை வேட்டையாடிஉண்டு  வாழ்ந்தான்.

ஏன் மிருகமாகவே வாழ்ந்தான் என்று கூறலாம் .  அன்றும்  இன்றுபோல இந்த பாதகங்கள்   இல்லை எனக் கூறமுடியாது .

ஆதி மனித காலத்திற்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி கண்ட மனித காலத்திற்கும்

அதிக வித்தியாசம் காணப்படவில்லை.

 

ஆனால் இவற்றிற்கு இடப்பட்ட காலத்தில் மனிதன் நாகரீக வளர்ச்சி கண்ட

காலத்தில்இந்தப் பஞ்சமா பாதகச் செயல்கள் அருகியே இருந்தன.

 

விஞ்ஞான வளர்ச்சி மனிதனை மேலும் மிருக உணர்வுள்ளவனாக மாற்றுகின்றதில் 

பெரும் பங்கு வகிக்கின்றது.

சினிமா, கணனிவிளையாட்டுக்கள், வலையுலகில் வழிந்தோடும் பாலியல் காட்சிகள் 

மனிதனை மேலும் மிருக நிலைக்குத் தள்ளிச் செல்லுகின்றன.

 

மது வகைகள் இன்று இளையோர்கள் கைகளில் தாராளமாகப் பழக்கத்தில் உண்டு.

மதுவிற்கு அடிமையானவன் மிருகத்திற்குச் சமனாகின்றான் 

 

இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் சிறுவயதினரையே பாலியல் சம்பந்தமான 

ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கின்றது.

ஆடு மாடு கோழி கௌதாரி எனக் கண்டவற்றையெல்லாம் உணவாக்கி 

மனிதர்களின் மனதினில் ஒருவித மிருக உணர்வுகளைத் தூண்டி விடுகின்றனர்.

 

மொத்தத்தில் விஞ்ஞான வளர்ச்சியும் உணவுப் பழக்க வழக்கங்களுமே

மனிதன் பல பாதகச் செயல்களில் ஈடுபட உதவி நிற்கின்றன.

 

இப்படியான கலிகாலத்தில் கடவுளால் ஒன்றுமே செய்ய முடியாது

 

 

 

Link to comment
Share on other sites

இப்படி பல இடங்களில் நடந்து கொண்டுதானிருக்கு, காவல் துறையும் தங்களால் இயன்றவரை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், அதையும் தாண்டி பல குற்றங்கள் நடைபெறுகின்றன, இவற்றுக்கு காரணம் ஒரு தனி மனிதனின் நடவடிக்கைகளே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.