Jump to content

கால்மேல் கால் போட்டு ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10009297_486249184833880_445635743175060

 

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம்
முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர்,
ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால்
போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை
நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...

இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!

 

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,
மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியும் ஒன்று இருக்கா. இதைத் தெளிவாச் சொல்லியிருந்தா சனம் கேட்டிருக்கும் தானே.

Link to comment
Share on other sites

கைவிட்டு தொலைக்கவேண்டிய எல்லா மூடப்பழக்கங்களுக்கும் பழமைவாதிகள் புதிய அர்த்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல :D ! ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது!  இதை யாராவது இந்த முகநூல் விஞ்ஞானிக்குச் சொல்லி விடுங்கப்பா! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாங்கடா உலகம் ? உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு இவங்க இப்போவும் கால் போடாதை கைபோடாதை சே...திருந்துங்க மக்களே.


எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,
மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

 

சிறியண்ணா இத முதல்ல உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள்.

Link to comment
Share on other sites

என்னாங்கடா உலகம் ? உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு இவங்க இப்போவும் கால் போடாதை கைபோடாதை சே...திருந்துங்க மக்களே.

 

சிறியண்ணா இத முதல்ல உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள்.

 

வீட்டில் இருந்து ஆரம்பிப்பது என்றால் துறவறம் போக  சொல்கின்றீர்களா முதல்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருந்து ஆரம்பிப்பது என்றால் துறவறம் போக  சொல்கின்றீர்களா முதல்வன்.

முயற்சி திருவினையாகுவது என்றால் பக்கத்து வீட்டிலா பரீட்சிக்க முடியும் ?

Link to comment
Share on other sites

காலுக்கு கால் மேல் என்று சொல்ல BASIC INSTINCT தான் நினைவிற்கு வருகின்றது .ssm24-02.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கால்மேல் கால் போட்டிட்டு.. ரெயிலில போற பொம்பிளையளுக்கு அவங்க காலை எங்கட காலால தட்டிவிட்டிட்டு சொறி சொல்லாமலே.. நடந்து போயிருக்கிறம். அவை குந்த ஒரு தொகுதி இடம்.. கால் மேல கால் போட்டிட்டு.. நுனி நீண்ட பாதணியை.. நீட்டிப் புடுச்சுக் கொண்டிருக்க.. ஒரு தொகுதி இடம் என்று பார்த்தால் 3 பேர் அந்த இடத்தை நிரப்பலாம். குறிப்பாக பொதுப்போக்குவரத்து ஊடகங்களில்.. இவர்களால் பெரிய இடர்.

 

வீட்டில ஆபிஸில..எங்கையாவது கால் மேல காலத் தூக்கிப் போட்டிட்டு இருக்கட்டும்.. இல்ல தலையில தூக்கி போட்டிட்டு என்றாலும்.. இருக்கட்டும்.. ரெயில் போன்ற ஒடுக்கமான மக்கள் நடக்க வைக்கப்பட்டுள்ள இடங்களை ஆக்கிரமிச்சு கால் போட்டிட்டு இருக்கிறவையை தடை செய்யனும். அதனால மக்கள் அநாவசிய நெரிசல்களை சந்திப்பதோடு நெரிசல் நேரங்களில் தரிப்பிடங்களில் இறங்க நேரமும் ஆகிறது. இது பல சமயங்களில் மக்கள் சரியான இடத்தில் இறங்காமல் போகவும் அசெளகரியங்களை சந்திக்கவும் செய்கிறது. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அந்த பெண்களது காலால் தடக்குப்பட்டு விழுந்தும் இருக்கிறீங்கள் இல்லையா:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கால்மேல் கால் போட்டிட்டு.. ரெயிலில போற பொம்பிளையளுக்கு அவங்க காலை எங்கட காலால தட்டிவிட்டிட்டு சொறி சொல்லாமலே.. நடந்து போயிருக்கிறம்.

பஸ்ஸில கால்மேல் கால்போட்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் இருந்து அய்போணில் பாட்டுப் பாக்கிறமாதிரி அவர்களின் செவ்வாழைக் கால்களைக் களவாக ரசிச்சிருக்கிறம்!

தெரியுமா கற்பூர வாசனை? :D :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் கற்பூர வாசனையை நல்லா முகர்ந்துபோட்டு இங்கை வந்து பின்னங்காலால் உதைப்பார்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில கால்மேல் கால்போட்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் இருந்து அய்போணில் பாட்டுப் பாக்கிறமாதிரி அவர்களின் செவ்வாழைக் கால்களைக் களவாக ரசிச்சிருக்கிறம்!

தெரியுமா கற்பூர வாசனை? :D :D

 

நாங்க உட்கார்ந்து போவதும் குறைவு. ஏன்னா... பக்கத்தில வந்து உட்காருறதுங்க எப்படிப்பட்ட ஊத்தைன்னு.. யார் அறிவார். உந்த ஊத்தை வழியுற கால்களை எல்லாம் பார்த்து ரசிச்சிட்டு இருக்கிறதில எல்லாம் நமக்கு இஸ்டமில்ல.  எங்களுக்கு போக வேண்டிய இடத்தை சீக்கிரமாப் போகனும்.. இது தான் இலக்கு. :lol::icon_idea:

நெடுக்ஸ் கற்பூர வாசனையை நல்லா முகர்ந்துபோட்டு இங்கை வந்து பின்னங்காலால் உதைப்பார்.. :D

 

கற்பூரம் என்றால் தானே முகரலாம். காலைப் போய் முகர முடியுமா..???! உதைக்கத்தான் செய்யும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் யாராவது கால்மேல் கால்போட்டுப் பொது இடத்திலோ அன்றேல் பொதுப்போக்குவரத்து சாதனங்களிலோ இருந்தால் நான் உடனே தலைக்குமேல் இருக்கும் எனது கருப்புக்கண்ணாடியை எனது கண்களுக்கு நேரே செருகிவிடுவன்.

பிறகென்ன..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிட்டு தொலைக்கவேண்டிய எல்லா மூடப்பழக்கங்களுக்கும் பழமைவாதிகள் புதிய அர்த்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.

 

மூடப்பழக்கங்கள்...மூடப்பழக்கங்கள் என்று சொல்லிச்சொல்லியே  எமது கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும்....ஒருசில உண்மைகளையும் அழித்து விட்டோம்.
 
இதே மூடப்பழக்கங்களை மேலைத்தேயவன் நாகரீகமாக வைத்தியமாக சொல்கிறான்.....நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நாமும் பின் செல்கின்றோம்.
 
அதே போல் யோகாசனம் அன்று எமக்கு அடிப்படலையில் கிடந்த குப்பை! இன்று மேற்குலகில் ஆகா ஓகோ. அதற்கு விலை கொடுத்து நம்மவர்கள் நேர விரயமும் செய்கின்றார்கள்.
 
மனிதனுக்கு எது தேவையோ அதை எமது முன்னோர்கள் செய்தார்கள். :icon_idea:
 
இயற்கையை மட்டும் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்தினார்கள்.சுகபோகமாக வாழ்ந்தார்கள். இன்றும் வாழலாம்.  :icon_idea:
 
முன்னோர்கள் மின்சாரம் இல்லாமல் நூறுவருடம் வாழ்ந்தார்கள். இன்று உங்களால் ஒரு நாள் மின்சாரமில்லாமல் வாழ முடியுமா? <_<
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் ஆண்களை விட பெண்களே அதிகமாக கால் மேல் கால் போடுறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் கூறியது... ஏற்கக் கூடிய கருத்து என்றாலும்,

மேற்கு நாட்டு பெண்கள் முழங்கால் தெரியும் சட்டைகளுடன்... கால்மேல் கால் போட்டு இருப்பதைக் கண்டால், அதே ஆண்களின் கண்கள்... வ‌யது வித்தியாசமில்லாமல், மேலும் ஏதாவது... தெரிகின்றதா? என்று, முழங்கால் பகுதியை... மேய்வதை கண்டுள்ளேன்.

 

இதற்காகத் தன்னும்... பெண்கள் கால் மேல் கால் போடுவதை, தவிர்க்க வேண்டும்.

 

பாவாடை , சாறியளுக்கு உந்த சேட்டையள் சரிவராது கண்டியளோ சிறித்தம்பி.......எனவே எங்கடை பெரிசுகள் வக்கிர புத்தியிலை சொல்லேல்லை எண்டதை நம்பத்தான் வேணும்.. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் ஆண்களை விட பெண்களே அதிகமாக கால் மேல் கால் போடுறாங்க

ஒரு விதமான பாதுகாப்புக்காகத் தான்!  :D

Link to comment
Share on other sites

ஒரு விதமான பாதுகாப்புக்காகத் தான்! :D

காத்து புகாத இடத்திலும் காத்தவராயன் பூந்திடுவான்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதை பார்ப்பதும் ஓர் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவாடை , சாறியளுக்கு உந்த சேட்டையள் சரிவராது கண்டியளோ சிறித்தம்பி.......எனவே எங்கடை பெரிசுகள் வக்கிர புத்தியிலை சொல்லேல்லை எண்டதை நம்பத்தான் வேணும்.. :D  :lol:

 

அதான்... குமாரசாமி அண்ணை. நல்லதை நாங்கள் சொல்லப் போனால்.... அதை மூட நம்பிக்கை என்று சனம் நினைக்குது.

பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு இருந்தால்..... கர்ப்பப்பை பாதிக்கும் எண்டு சொல்லியிருந்தும், அடம் பிடிச்சுக்குக் கொண்டு, காலுக்கு மேல் கால் போடும் ஆட்கள் தான்... பிற்காலத்தில் குழந்தை பிறக்கவில்லை என்று... சாமியாரிடம் குழந்தை வரம் கேட்கப் போய், ஏமாறுகிற ஆக்கள்.

ஹ்ம்ம்.... இந்தக் காலத்திலை, நல்லது சொன்னால்.... எவன் காது கொடுத்துக் கேட்கிறான். :rolleyes:  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல :D ! ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது!  இதை யாராவது இந்த முகநூல் விஞ்ஞானிக்குச் சொல்லி விடுங்கப்பா! :lol:

 

so-ueberzeugt-man-im-job-mit-der-koerper

 

இதென்ன... கரைச்சலா... இருக்கப்பா.... :D 

ஆண்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதென்றால்.... விதைக்கு மேல் இருப்பதில்லை.

அப்படி... ஒரு வினாடி கூட, எவராலும் இருக்க முடியாது. சூட்சுமமாக இருந்தால்... எந்த பாதிப்பும் ஏற்படாது. இதெல்லாம்.... ஒரு வைத்தியருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கே... என்று எனக்கு வெட்கமாக‌ உள்ளது. :lol:

Link to comment
Share on other sites

அதான்... குமாரசாமி அண்ணை. நல்லதை நாங்கள் சொல்லப் போனால்.... அதை மூட நம்பிக்கை என்று சனம் நினைக்குது.

பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு இருந்தால்..... கர்ப்பப்பை பாதிக்கும் எண்டு சொல்லியிருந்தும், அடம் பிடிச்சுக்குக் கொண்டு, காலுக்கு மேல் கால் போடும் ஆட்கள் தான்... பிற்காலத்தில் குழந்தை பிறக்கவில்லை என்று... சாமியாரிடம் குழந்தை வரம் கேட்கப் போய், ஏமாறுகிற ஆக்கள்.

ஹ்ம்ம்.... இந்தக் காலத்திலை, நல்லது சொன்னால்.... எவன் காது கொடுத்துக் கேட்கிறான். :rolleyes::D

தமிழ் சிறி காலுக்கு மேல் கால் போடாமல் விட்டால் குழந்தை எப்படி பிறக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.