Jump to content

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள் என்ன!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள் என்ன! 

[sunday, 2014-04-06 20:27:38]
Couple-Fighting-angry-200.jpg

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்...

  

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான்.

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது.

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. • ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

http://seithy.com/breifNews.php?newsID=107071&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ....இதில் ஒரு பிரச்சனையுமே எனக்கில்லை. அப்படி இருந்தும் ஏன் பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ....இதில் ஒரு பிரச்சனையுமே எனக்கில்லை. அப்படி இருந்தும் ஏன் பிடிக்கவில்லை.

உங்களில அப்பிடி பிரச்சனை ஓண்டு,ரெண்டாவது இருக்கோணும் அப்பதான் அவங்களுக்கும் பொழுது போகும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயகோ....இதில் ஒரு பிரச்சனையுமே எனக்கில்லை. அப்படி இருந்தும் ஏன் பிடிக்கவில்லை.

Divorce  பண்ணிவிட்டு, இன்னொன்றைக் கட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்துப் பெறுவதற்கும் ஒரு பெண் வேணும் ஐயா...


விவாகரத்துக்குச் சரியான தமிழ் என்ன? மணவிலக்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள் என்ன!
 
 
வாழ்க்கையிலை திருப்திப்படுத்தேலாத ஜீவன்கள் இவர்கள்!!!!.. :D ..நகை நட்டு சாறி எண்டு இவையளுக்கு பின்னாலை எலிப்புளுக்கையாய் அலைஞ்சவன் :( ......நாலு கடையேறி வேர்க்கவிறுவிறுக்க...களைச்சுவிழுந்து கோமா நிலைக்கு வந்தவன் சொல்லுறன் கேளுங்கப்பா?  :(
உவையளை திருப்தி படுத்துறதுக்கு சமன் ஒரு போத்தில் பொலிடோல்.. :icon_idea:  :D  :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவித பொறுப்புணர்வின்றியும், கனிவின்றி திமிராக பேசும் ஆணாதிக்கவாதிகளை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. :lol:

 

மிக முக்கியமாக பிற பெண்களை நோக்கி ஜொள்ளுவது, அச்செயலை  தற்பெருமையுடன் பேசி சிரிப்பது, உதாரணமாக 'உன் தங்கச்சியை வச்சிக்கிறேன், அக்காளை மெச்சிக்கிறேன், செக்ரட்டரியை இச்சிக்கிறேன்' போன்றவை பெண்ணின் மனதில் நிரந்தர வடுக்களை ஏற்படுத்துபவை. :)

 

மொத்தத்தில் ராமனாக, ஆதரவாக, குடும்பப் பொறுப்புணர்வுடன் கனிவாக பேசும் ஆண்மையுள்ள ஆடவர்களையே பெண்களுக்கு மிகவும் பிடிக்குமென்பது பெருந்தகைகளின் வாக்கு! :icon_mrgreen:

 

சார்ந்து வாழுமாறு கட்டமைக்கப்பட்டுள்ள சமூகத்தில், வலுவில்லா பெண்ணினம் பாதுகாப்பான வாழ்க்கையை எதிர்பார்ப்பதில் தவறில்லைதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம்.. கடைக்காரனைக் கேட்டு செருப்பு வாங்கிப் போடுற பழைய காலத்துக்குத்தான் சரி.

 

இப்ப எல்லாம்... ஸ்ரைல் அடிக்கடி மாறுது. நமக்குப் பிடிச்சதை வாங்கிப் போட்டமா.. ஸ்ரைல் மாறேக்க.. அதைக் கழற்றி வீசிட்டு அடுத்தது வாங்கினமா.. போட்டமா என்று போய்க்கிட்டு இருக்கிற காலம்.

 

காலம் மாறிட்டு.. அங்கிள்களா. நீங்க தான் இன்னும் மாறேல்ல. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறிட்டு.. அங்கிள்களா. நீங்க தான் இன்னும் மாறேல்ல. :lol::icon_idea:

 

அதுவும் சரிதான்,  பிறப்பைக் கொடுத்த பெற்றோர் யாரென்றே தெரியாதளவிற்கு சோதனைக் குழாய்களில் பிரசவிக்குமளவிற்கு மனித குடும்பவியல் மாறிவிட்டது.

 

எந்த ஆணும் போய் தன் அனுவை வங்கியில் சேமிக்கலாம், எந்த பெண்ணும் எவனென்றே தெரியாதளவிற்கு அவற்றையும் பெற்று தள்ளலாம்..இனி வாடகை தாயும் தேவை இருக்காது வாடகைக் குழாயே போதுமானது... இருமனமுமும் தேவை இல்லை, திருமணமும் தேவை இல்லை..

 

காலம் முன்னேறிவிட்டது தம்பிகளா.. சந்தோசமாக வாழுங்கள்! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 - 15 இலட்சம் கொடுத்தால்.. பரிசோதனைக் குழாய் குழந்தையை.. வாடகைக் கருப்பையில் தங்க வைச்சு.. பிள்ளையை பெறுவித்து கையில் கொடுக்கிறார்களாம்.. இந்தியாவில் தான் இதுவும் நடக்குது.  ஆதங்கப்பட்டுப் பிரயோசனம் இல்லை. எனி இதுதான் வாழ்க்கை. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 - 15 இலட்சம் கொடுத்தால்.. பரிசோதனைக் குழாய் குழந்தையை.. வாடகைக் கருப்பையில் தங்க வைச்சு.. பிள்ளையை பெறுவித்து கையில் கொடுக்கிறார்களாம்.. இந்தியாவில் தான் இதுவும் நடக்குது.  ஆதங்கப்பட்டுப் பிரயோசனம் இல்லை. எனி இதுதான் வாழ்க்கை. :lol::D

இதுக்கும் இந்தியாதான் உதாரணமா? இலங்கையில் இல்லையா? :rolleyes:

மூன்றாம் உலக நாடுகளில் இதைவிட மோசமாக நடக்கிறதே?

 

"வாடகைத் தாயே" இனி தேவை இல்லை என்ற நிலைதான் வரும். சிலேடையாக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்..

கவலை இல்லை இனி ஒத்துக்கொள்..

இனிவரும் இளசுகளுக்கு இதுவே தாரக மந்திரமாக அமையுமோ? :icon_idea: முன்னேறினால் சரிதான்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் இந்தியாதான் உதாரணமா? இலங்கையில் இல்லையா? :rolleyes:

மூன்றாம் உலக நாடுகளில் இதைவிட மோசமாக நடக்கிறதே?

 

"வாடகைத் தாயே" இனி தேவை இல்லை என்ற நிலைதான் வரும். சிலேடையாக சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்..

கவலை இல்லை இனி ஒத்துக்கொள்..

இனிவரும் இளசுகளுக்கு இதுவே தாரக மந்திரமாக அமையுமோ? :icon_idea: முன்னேறினால் சரிதான்! :lol:

 

வாடகைத்தாய் விடயத்தில் பிரேசில் ஆபிரிக்க நாடுகளை விட இந்தியாவே முன்ணணியில் நிற்பதாக அறிகின்றேன். :(
 
மூன்றாம் உலக நாடுகளில் மோசமென்றால்....?????? இந்தியா எத்தனையாம் உலக தர பட்டியலில் உள்ளது ஐயா? :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாடகைத்தாய் விடயத்தில் பிரேசில் ஆபிரிக்க நாடுகளை விட இந்தியாவே முன்ணணியில் நிற்பதாக அறிகின்றேன். :(
 
மூன்றாம் உலக நாடுகளில் மோசமென்றால்....?????? இந்தியா எத்தனையாம் உலக தர பட்டியலில் உள்ளது ஐயா? :rolleyes:

 

 

 

third_world_map.jpg

 

வதவதவென பெற்றுத் தள்ளுவதில் இந்தியா முன்னணிதான்.

 

தனிநபர் பொருளாதார தர வரிசையில் இந்தியா 68 ம் இடத்திலும் இலங்கை 77ம் இடத்திலும் நிற்கிறது.

 

இலங்கை திறம்தான்.. :lol: 

 

மகிழ்ச்சிதானே ஐயா..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்பிள்ளைகள் என்டால் தைரியமானவர்களாக இருக்க வேண்டும்.தைரியமாக முடிவு எடுக்க வேண்டும்.எதற்கெடுத்தாலும் பெண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்பிள்ளைகள் என்டால் தைரியமானவர்களாக இருக்க வேண்டும்.தைரியமாக முடிவு எடுக்க வேண்டும்.எதற்கெடுத்தாலும் பெண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது

முடிவெடுத்த பிறகு, எதுக்கும் 'அவவிட்டையும்' ஒரு வார்த்தை கேட்டு விடுவது தான் நல்லது! :D

 

இல்லாவிட்டால், 'அதுவும்' பிடிக்காத குணமாய்ப் போயிரும்!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்பிள்ளைகள் என்டால் தைரியமானவர்களாக இருக்க வேண்டும்.தைரியமாக முடிவு எடுக்க வேண்டும்.எதற்கெடுத்தாலும் பெண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது

 

நாங்கள் என்ன மாட்டம் என்றா சொல்லுறம் , சிக்கெடுக்கத்தான் விடுறாங்க , முடிவெடுக்க  எங்க விடுறாங்க...! :huh:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்ன மாட்டம் என்றா சொல்லுறம் , சிக்கெடுக்கத்தான் விடுறாங்க , முடிவெடுக்க  எங்க விடுறாங்க...! :huh:

 

vadivelu.jpg

 

  :o அங்கேயுமாய்யா....? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

vadivelu.jpg

 

  :o அங்கேயுமாய்யா....? :lol:

 

 

 

அழுதிடுவன்......... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஓ........போறபோக்கை பாத்தால் உங்கை கன வீடுவளியை பிரச்சனை எக்கச்சக்கம் போலை.... :lol:
அப்பாடா இண்டைக்கு நான் நிம்மதியாய் நித்திரை கொள்ளுவன்...yahoo_zps06cdbf68.gif
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவாகரத்துப் பெறுவதற்கும் ஒரு பெண் வேணும் ஐயா...

விவாகரத்துக்குச் சரியான தமிழ் என்ன? மணவிலக்கு??

மணமுறிவு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.