Jump to content

ஊரே அம்மணமாக சுற்றும் போது


Recommended Posts

ஊரே அம்மணமாக சுற்றும் போது

வா. மணிகண்டன்
 
அலுவலகத்தில் மதிய உணவை யாரோடும் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்ற அவப்பெயர் எனக்கு உண்டு. வீட்டிலும் அப்படித்தான். தனியாக அமர்ந்து கொட்டிக் கொள்வேன். உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் அதை மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பேன். பள்ளிப்பருவத்திலிருந்தே பழகிய பழக்கம் இது. இப்பொழுது வினையாக போய்விட்டது. அதை வைத்தே திட்டுகிறார்கள். 
 
அலுவலகத்தில் கழண்டு கொள்வதற்கு இன்னொரு அனுபவமும் காரணமாக இருக்கிறது. 
 
முள்ளிவாய்க்கால் சம்பவம் உச்சகட்டத்தில் இருந்த போது யுத்த நிலவரங்களை அலுவலக கேண்டீனில் இருக்கும் டிவியில்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். கூடவே இன்னொரு தமிழ் பையனும், பீஹாரி ஒருவனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மண்டை பிளந்த நிலையில் பிரபாகரன் படத்தைக் சி.என்.என் - ஐ.பி.என்னில் காட்டிய போது ‘Let him die, mother fucker' என்றான் அந்த பீஹாரி. அதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தமிழ் பையன் ஏற்கனவே வெறியேறிக் கிடந்தான். பீஹாரி சொன்னது காதில் விழுந்ததும் ‘did you send your mother?' என்று கேட்டபடியே எச்சில் கையோடு ஓங்கி அறைந்தான். பீஹாரி நாற்காலியோடு சேர்ந்து கீழே விழுந்த்தான். அவனது தட்டில் இருந்த உணவு உடல் முழுவதும் கொட்டி ரசாபாசம் நிகழ்ந்துவிட்டது. இதெல்லாம் சில வினாடிகளில் முடிந்துவிட்டது. செக்யூரிட்டிகள் ஓடி வந்து மூன்று பேரின் பெயரையும் குறித்துக் கொண்டார்கள். அடுத்த நாள் விசாரணைக்கு அழைத்தார்கள். எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். 
 
நண்பர்களிடம் தீவிரமான விஷயங்களை விவாதிப்பது வேறு விஷயம். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கீழே இறங்கலாம். ஆனால் அலுவலகத்தில் அப்படி இருக்க முடியாது அல்லவா? ப்ரொபஷனலிஸம் என்ற பெயரில் சிக்கினால் சிதைத்துவிடுவார்கள். அதனால் பொதுவாகவே மொன்னையான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. ஷில்பா ஷெட்டி பற்றியோ அல்லது அமிதாப்பச்சன் பற்றியோ எதையாவது பேசினால் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் நமது நேரம் கெட்டுக் கிடந்தால் வட இந்தியர்கள் தமிழர்களைப் பற்றி பேசுவார்கள். அதற்கு காது கொடுப்பதுதான் ரொம்பவும் சிரமம். வட இந்தியப் பத்திரிக்கைகள் மட்டுமில்லை- பெரும்பாலான வட இந்தியர்களுக்கும் தமிழர்கள் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதுதான் கொடுமை. இருந்தாலும் பேசுவார்கள். கேட்டுக் கொள்ள வேண்டும். 
 
நண்பர் ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார். அவரது சீனியர்கள் அமைதிப்படையாகச் சென்று ஈழத்தில் தாங்கள் நிகழ்த்திய வீர பிரதாபங்களை வெளிப்படையாகவே பேசுவார்களாம்.  ‘என்ன சார் செய்ய முடியும்? பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். சீனியர்களாக போய்விட்டார்களே’ என்பார். அப்படித்தான் அலுவலகத்திலும். வேறு வழியில்லை.
 
ஈழம் பற்றிய பிரச்சினை என்று இல்லை- மீனவர்கள் பிரச்சினை, கூடங்குளம், தமிழர்களின் ஹிந்திப் புலமை, தமிழ்நாட்டின் அரசியல் என்று எதைப் பற்றி பேசினாலும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில்தான் பேசுகிறார்கள். வட இந்தியா வரைக்கும் போக வேண்டியதில்லை. ஆந்திரா, கர்நாடகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தமிழ்நாடு பற்றிய தெளிவான பார்வை இல்லை என்பதுதான் உண்மை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. நமக்கு எத்தனை பேருக்கு தெலுங்கானா விவகாரம் பற்றி முழுமையாகத் தெரியும்? ஒரிசா, கர்நாடக சுரங்க முறைகேடுகள் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம்? விதர்பா பிரச்சினையில் எவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறோம்?
 
நாம் இந்த நிலைமையில் இருந்து கொண்டு பிறகு எப்படி பெங்காலிக்கு ஈழம் பற்றியும், மராத்திக்கு பெரியார் அணைவிவகாரம் பற்றியும் தெரியவில்லை என்று புலம்ப முடியும்? அதனால் ‘நீ என் பிரச்சினை பற்றியும் நான் உன் பிரச்சினை பற்றியும் கேண்டீனில் பேச வேண்டாம்’ என்பதால்தான் இந்த கழண்டு கொள்ளல்.
 
அப்படியிருந்தும் விதி வலியது.
 
சென்றவாரத்தில் ஒரு நாள் சிக்கிக் கொண்டேன். மொத்தம் பன்னிரெண்டு பேருக்கு ஒரு தயாள பிரபு பிரியாணி வாங்கிக் கொடுத்தார். ட்ரீட். கடைக்கு ஆர்டர் கொடுத்தால் பிரியாணியை பொட்டலம் கட்டிக் கொண்டு வந்து அலுவலகத்திலேயே கொடுத்துவிடுகிறார்கள். ஃபிக்ஸட் பட்ஜெட். இதுவே பன்னிரெண்டு பேரையும் கடைக்கு அழைத்துச் சென்றால் ஒருவர் சில்லி சிக்கன் கேட்பார். இன்னொருவர் மட்டன் சுக்கா கேட்பார். பில் எகிறிவிடும் என்பதால் இந்த ‘ஹோம் டெலிவரி’ ட்ரீட்தான் இப்பொழுது அடிக்கடி நிகழ்கிறது. 
 
அது இருக்கட்டும்.
 
பன்னிரெண்டு பேரில் ஒருவர் ஆரம்பித்தார். அவர் பெங்காலி. அவர் மம்தா பற்றி பேசியிருக்கலாம். கொல்கத்தா பற்றி பேசியிருக்கலாம். அவருக்கு என்னவோ மூக்கில் அரிப்பு. அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாடு பற்றி பேசத் தொடங்கினார். ஏழு பேர் விடுதலையிலிருந்து தமிழர்களின் ஹிந்திப் புலமை வரை இழுத்துக் கொண்டேயிருந்தார். அங்கு நான் மட்டும்தான் தமிழ். கூட இருந்த பத்து பேரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி சமயங்களில் எனக்கு பேச்சு வராது. அதுவும் ஆங்கிலத்தில் என்றால் இன்னமும் சிரமம். தமிழிலிலே ஆங்கிலத்தில் பேச வேண்டியதாகிவிடும். அந்த பெங்காலிக்கு என் மீதுதான் கடுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை எப்படி நிறுத்துவது என்றும் தெரியவில்லை. பிரியாணி உள்ளே செல்ல திணறிக் கொண்டிருந்தது. 
 
சரி பேசித் தொலையட்டும் என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். எல்லோரும் உணவை முடிக்கும் தருணத்தில் ‘டிசிஎஸ் உமாமகேஸ்வரி’ விவகாரத்திற்கு வந்தான். இந்த விஷயத்தில் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ற ரீதியில் இழுத்துக் கொண்டிருந்தான். இது எப்படி இத்தனை நேரம் எனக்கு நினைவுக்கு வராமல் போனது என்று தெரியவில்லை. இந்தக் கொலையில் சிக்கிய நான்கு பேரும் மேற்குவங்கத்துக்காரர்கள்தானே. மாட்டினான் பெங்காலி. ‘நடந்தது என்னவோ தமிழ்நாட்டில்தான் ஆனால் நடத்தியது உங்கள் ஆட்கள்’ என்று சொல்லிவிட்டேன். அதுவரைக்கும் அவனுக்கு இந்த கைது விவகாரம் பற்றித் தெரியவில்லை.  ‘Is it? is it' என்று இரண்டு முறை கேட்டான். ‘Yes it is' என்றேன். இது அவனுக்கு போதுமான பதிலாக இருந்தது.  அடங்கிக் கொண்டான். 
 
நான்கு பேர் வன்புணர்ந்தார்கள் என்பதால் மொத்த பெங்காலிகளும் அப்படித்தான் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வேறு வழி தெரியவில்லை. எத்தனை நேரம்தான் கூட்டத்திற்குள் வழிந்து கொண்டே இருப்பது? அதனால்தான் சாணியடித்துவிட்டேன்.
 
அதை விடுங்கள். 
 
உமா மகேஸ்வரி விவகாரம் என்ன ஆனது? உண்மையிலேயே அந்த நான்கு பையன்களும்தான் குற்றவாளிகளா? இல்லை விவகாரத்தை திசைதிருப்ப சிக்கிய நான்கு பேருக்கு விலங்கு பூட்டிவிட்டார்களா? பெண்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? ஏன் அந்தச் செய்தி பற்றிய ஃபாலோ-அப்  எதுவும் வரவில்லை?  
 
ஆனால் இதுதானே நமது வழக்கம்- புத்தகக் கண்காட்சி வரும் போது ‘நானும் எழுத்தாளன்’ என்று குதிப்போம். தேர்தல் வரும் போது ‘நானும் அரசியல்வாதி’ என்று அலப்பறை செய்வோம். ஒரு வன்புணர்வு நடக்கும் போது ‘நானும் போராளி’ என்று பெண்ணியம் பேசுவோம். அப்புறம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கோச்சடையான் ட்ரெய்லர் பற்றி பேசிக் கொண்டிருப்போம். 
 
ஊரே அம்மணமாக சுற்றும் போது நமக்கு மட்டும் என்ன வந்தது? கோச்சடையான் ட்ரெய்லர் சூப்பர்தானே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""ஈழம் பற்றிய பிரச்சினை என்று இல்லை- மீனவர்கள் பிரச்சினை, கூடங்குளம், தமிழர்களின் ஹிந்திப் புலமை, தமிழ்நாட்டின் அரசியல் என்று எதைப் பற்றி பேசினாலும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில்தான் பேசுகிறார்கள். வட இந்தியா வரைக்கும் போக வேண்டியதில்லை. ஆந்திரா, கர்நாடகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தமிழ்நாடு பற்றிய தெளிவான பார்வை இல்லை என்பதுதான் உண்மை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. நமக்கு எத்தனை பேருக்கு தெலுங்கானா விவகாரம் பற்றி முழுமையாகத் தெரியும்? ஒரிசா, கர்நாடக சுரங்க முறைகேடுகள் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம்? விதர்பா பிரச்சினையில் எவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறோம்?

நாம் இந்த நிலைமையில் இருந்து கொண்டு பிறகு எப்படி பெங்காலிக்கு ஈழம் பற்றியும், மராத்திக்கு பெரியார் அணைவிவகாரம் பற்றியும் தெரியவில்லை என்று புலம்ப முடியும்? அதனால் ‘நீ என் பிரச்சினை பற்றியும் நான் உன் பிரச்சினை பற்றியும் கேண்டீனில் பேச வேண்டாம்’ என்பதால்தான் இந்த கழண்டு கொள்ளல்."""

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.