Jump to content

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-1


Recommended Posts

ஆரம்ப உரை;-

முதலிலே சொல்லி விடுகிறேன் நான் எந்த வித அரசியல் கட்சியிலோ அரசியல் இயக்கங்களிலோ அங்கத்தவனாக இருக்கவில்லை.ஆனால் நான் கடந்த வந்த வாழ்வின் பாதையில் சந்தித்த பார்த்த கேட்ட அறிந்த அரசியல் நிகழ்வுகளை தொகுத்து எழுதுவுது தான் நோக்கம் .இதன் நம்பக தன்மை அல்லது சரியானது பிழையானது என்ற விமர்சனம் இருக்குமாயின் அவர் அவர்களின் கருத்து என்று நினைத்து அதை தாண்டி எனக்கு பட்டதை எழுத முனைகிறேன் .பெரும்பாலும் இத் தொடரை புனைவாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது தகவலகளின் தொகுப்பாகவும் எடுத்து கொள்ளலாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு நினைவு தெரிந்து அது ஒரு அரசியல் நிகழ்வாக கணித்து தொடங்கும் காலத்தை எனது பத்தாவது வயதில் இருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.எனது அரசியல் குடும்ப பின்னனி தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்தது .தமிழ் காங்கிரஸ் கட்சி பிரபல சட்டதரணி ஜீஜீ பொன்னம்பலம் தலைமையில் இருந்தது என்று பலருக்கு தெரிந்து இருக்கும் .அந்த கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாரளுமன்றம் சென்று உப சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட உடுப்பிட்டி சிங்கம் என்று பலரால் அழைக்கப்பட்ட சிவசிதம்பரம் அவர்களும் அப்பொழுது உள்ளூராட்சி அமைச்சருமாக இருந்த பிரமதாசாவும் கலந்து கண்ட வைபவத்தினை கண்ட நிகழ்விலிருந்து இந்த கட்டுரையை தொடரலாம் என்று நினைக்கிறேன்.எமது ஊரில் உள்ள கோயில் ஒன்றுக்கு மின்சாரம் வழங்கலை தொடங்கி வைப்பதற்குக்கு இவர்கள் அழைத்து வரும் பொழுது நூல் நாடா வெட்டும் பொழுது பிரமேதாசா ,சிவசிதம்பரம்,எனது உறவினர் ஆகியோரை எடுக்கும் புகைபடத்தில் நானும் ஒரு பத்துவயது சிறுவனாக நான் அகப்பட்டு இருந்தேன்.அது அடுத்த நாள் வீரகேசரி முதல் பக்கத்தில் வந்தது அதில் தெளிவாக எனது முகமும் இருந்தது .

இதன் மூலம் அந்த வயதிலே எனக்கு கிடைத்த அரசியல் அந்தஸ்த்து என்று அக மகிழ்ந்தேன்.உடுப்பிட்டி சிவசிதம்பரம் ஆரம்ப காலங்களில் ஒரு இடதுசாரி சிந்தனை பட்டவராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்றாலும் பின் ஒரு படு வலதுசாரி போக்கு கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சி மூலம் பாரளுமன்றம் சென்றவர் .தமிழ் காங்கிரஸ் கட்சி அப்பொழுது யாழ் மேட்டுகுடிகளின் பலத்த ஆதரவு பெற்ற கட்சியாகவே இருந்தது. அது வட மாகணத்தை தவிர்த்து வேறு தமிழ் பிரேதசங்களில் வெற்றி பெற்று பாரளுமன்ற உறுப்பினர்களை ஒரு பொழுது கொண்டிருக்கவில்லை.ஒப்பீட்டளவில் அன்று தந்தை செல்வா தலைமையில் இருந்த தமிழரசு கட்சியின் போட்டிக் கட்சியாக தோற்றமளித்தாலும் மூன்று இடங்களுக்கு மேல் பாரளுமன்றத்துக்கு தெரிவானதாக எனக்கு ஞாபகமில்லை.

யாழ்ப்பாண தொகுதியில் தெரிவாகி ஜீஜீ பொன்னம்பலமும் உடுப்பிட்டி தொகுதியில் இருந்து மு .சிவசிதம்பரமும் வவுனியா தொகுதியில் இருந்து தா.சிவசிதம்பரமும் மட்டும் தான் நான் பார்த்த காலத்தில் தெரிவாகி இருந்திருந்தார்கள் .இந்த தா .சிவசிதம்பரம் என்பவர் வவுனியாவில் யாழ் பாணத்தவரின் மேலாதிக்கம் அதிகம் இருக்கு என்று சொல்லி முதல் முதலில் யாழ் அகற்று சங்கம் என்று உருவாக்கினவராவார்.60 களில் நடந்த பிரபல சத்தியாக்கிர போராட்டத்தை தமிழரசு கட்சியினர் நடத்திய பொழுது அப்பொழுது ஒரேயொரு எம்பியாக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மு.சிவசிதம்பரம் இணைந்து செயல் பட்டிருந்தார் என்று கேள்விபட்டிருந்தேன் .இதை பிற்கால தமிழ் காங்கிரஸ் அரசியல் மேடையில் சிவசிதம்பரத்தை வைத்து கொண்டு ஜீஜீ இந்த விடயம் பற்றி குத்தி பேசியதை நேரில் கேட்டு இருக்கிறேன்,தமிழரசு கட்சி அதிகமான தொகுதிகளில் வென்றாலும் தமிழ் காங்கிரஸுக்கு குடாநாட்டில் பரவலாக செல்வாக்கு இருந்தது.இந்ந தமிழ் காங்கிரஸ் கட்சி மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பதுக்கு உறுதுணையாக நின்றது குறிப்பாக ஜீஜீயை சாடுவோர் உளர்.அதே நேரத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியினரில் ஜீஜீ புகழ் பாடுவோர் ஜீஜீ இலங்கையின் முதல் மந்திரிசபையில் கைத்தொழில் மந்திரியாக இருந்த காரணத்தினால் அதை பயன்படுத்தி எந்த வித தொழிற்சாலையும் இல்லாத தமிழ் பிரேதசத்தில் மூன்று தொழிறசாலைகள் அமைத்திருந்தார் என்று பெருமை கொள்வர், அந்த மூன்று தொழிற்சாலைகள் அவையாவன காங்கேசன்துறையில் அமைந்த சீமேந்து தொழிற்சாலை ,பரந்தனில் அமைந்த இரசாயன தொழிற்ச்சாலை கிழக்கில் வாழைச்சேனையில் அமைந்த காகித தொழிற்சாலை ஆகும். மேலும் ஜீஜீ பொன்னம்பலமும் பிரபல சட்டத்தரணியாக இருந்தமையால் அவரின் மிக விவேகமான வாதங்களை கதை வடிவில் கூறி பெருமையும் கொள்வர்.

இடம் இருந்து வலமாக மு,.சிவசிதம்பரம், ஜீ ஜீ பொன்னம்பலம், தா.சிவசிதம்பரம் sivasithampuram.jpg

50க்கு 50க்கு என்ற கோசத்துடன் ஜீஜீயின் தமிழ்காங்கிரஸும் .சமஸ்டி அரசியல் என்னும் மாநில சுயாட்சி கோரிக்கையுடன் செல்வாவின் தமிழரசு கட்சியும் அரசியல் நடத்தி கொண்டிருந்தனர் .அதே நேரத்தில் உது ஒன்று சரிவராது தமிழர் சுயாட்சி கழக நவரத்தினம் என்பவர் தனித் தமிழ் நாடு என்ற கோசத்துடனும் இருந்தார் .அவருடைய கட்சியில் சிங்கள தனி சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து இருந்த கோடிஸ்வரன் என்பவரும் இருந்தார்

70 களில் நடைபெற்ற இலங்கை பொது தேர்தல் தான் எனக்கு முதன் முதலாக ஞாபகத்தில் இருந்த தேர்தலாகும் .அந்த தேர்தலில் தமிழர்களின் முக்கிய கட்சிகளான தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் மக்கள் முன் வைத்த கோசம் . தமிழரசு கட்சி தமிழர்களின் தாயகத்தின் தலை நகராகா திருகோணமலையில் பல்கலைகழகம் அமைக்க வழி வகை செய்வோமோனவும் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் யாழ்ப்பாண்த்தில் அமைக்க வழிவகை செய்வோமென தேர்தலில் மேடைகளின் பிரச்சாரம் செய்தனர்.

தமிழரசுகட்சியின் முக்கிய பொறி பறக்கு பேச்சளாராக ஆலாலசுந்தரமும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரகா ஆனந்த சங்கரியும் கொடிகட்டி பறந்தனர் ..70 களில் நடைபெற்ற தேர்தலில் பல முறை வென்ற தனது கோட்டையாக கருதிய உடுப்பிட்டி தொகுதியில் சிவசிதம்பரம் தோல்வியுற்றார் .அதே போல் வட்டுகோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தியாகராஜா என்பவரால் தோல்வி யடைந்தார். காங்கிரஸ் கட்சியில் மேலும் இருவர் தெரிவாகி இருந்தனர் நல்லூர் தொகுதியில் இருந்து அருளம்பலம் என்பவரும் கிளிநொச்சி தொகுதியில் இருந்து ஆனந்தசங்கரியுமாகும் ..70களில் பெரும் சிறிமா தலைமயிலான சுதந்திர கட்சி பெரு வெற்றியீட்டியது அந்த அரசாங்கத்தில் பீட்டர்கெனமென் தலைமையிலான சோவியத் சார்பு கம்னீயூஸ் கட்சி ட்ரொக்சிய கட்சியான என்.எம் பெரேரா வின் தலைமையிலான சமசமாஜகட்சி அங்கம் வகித்து இருந்தனர்

( தொடரும்)

http://www.yarl.com/...ndpost&p=739454 பாகம் -2

http://www.yarl.com/...ndpost&p=739617 பாகம் -3

http://www.yarl.com/...ndpost&p=740096 பாகம்-4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99522&view=findpost&p=741662 பாகம் -5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அரக்கன்....பார்ப்போம் உங்கள் அரசியலையும்...

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-2)

1960_Sirimavo_Bandaranaike.jpg70 களில் சிறிமாவின் ஆட்சி காலம்

சிறிமாவின் அரசாங்கத்தில்அமைச்சர்களாக நிதி மந்திரியாக என்.எம் பெரேராவும் கல்வி அமைச்சராக பதியூதின் முகமத்தும் தபால் தந்தி அமைச்சராக குமாரசூரியர் என்ற தமிழரும் இருந்தார்கள். என் .எம் பெரேரா என்பவர் ட்ரொஸ்கிய சிந்தனை அடிப்படையாக கொண்டவர் .இவரது கட்சியில் இருந்த இன்னொருவரும் அமைச்சராக இருந்தார் அவரின் பெயர் கொல்வின் ஆர் டி சில்வா ..அவர் தான் 1972 ஆம் வருடம் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரைந்தவர் .பிரித்தானிய அரசாங்கத்தால் தமிழருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை இல்லாமால் செய்தவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

1960_Sirimavo_Bandaranaike.jpg

என்.எம் பெரேரா போன்றோர் மேற்கத்தை ய பல்கலை கழகத்தில் படித்து திரும்பியமையால் இடதுசாரி வயப்பட்டு சுதந்திரத்துக்கு முன்பே பல போரட்ட வடிவங்களை முன்னெடுத்தவர் என்று கூறப்படுகிறது.

என்.எம் பெரேரா ,போன்றோர் சுதந்திர போராட்ட காலங்களில் தேடப்பட்ட பொழுது ..எல்லையற்ற காவலை உடைக்க கூடிய துறைமுகமாக இருந்த வல்வெட்டி துறை துறைமுகம் மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது ,இந்த என்.எம் பெரேரோ நிதி மந்திரியாக இருந்த பொழுது நில உச்ச வரம்பு பண உச்ச வரம்பு சட்டங்கள் மற்றும் சீர் திருத்தங்களை கொண்டு வந்து தேசிய பொருளாதார திட்டத்தை கட்டி எழுப்பு நோக்கில் பல திட்டங்களை வகுத்தார்.இவரின் சில திட்டத்தால் மணியோடர் பொருளாதரத்தை நம்பி இருந்த இன்னொரு மாதிரி சொல்ல போனால் குறனோமேர்ந்து உத்தியோகத்தை நம்பி இருந்தவர்கள் மிகவும் கஸ்டப்பட்டார்கள்

..பணவீக்கம் குறைந்திருந்தது ..டச்சு காலத்து பயிரான புகையிலை உற்ப்த்தியால் மட்டுமே விவசாயத்தில் பணத்தை கண்ட யாழ் விவசாயிகள் மிளகாய் வெங்காயம் முதலானவற்றை பயிருட்டு வரலாற்றில் முதன் முறையாக லாபமீட்டினர்..ஏனெனில் இந்தியாவில் இருந்து இறக்குமதியான பம்பாய் வெங்காயம் மிளகாய் போன்றவை நிறுத்தபட்டிருந்தது அல்லது குறைக்க பட்டிருந்தது என்று கொள்ளலாம்.இவை எல்லாம் அன்னியசெலவாணியை குறைக்கும் நோக்கில் என்று சொல்லி கொண்டார்கள் . வன்னி ,மட்டகளப்பில் உற்பத்தியாகும் குறிப்பாக அரிசி யாழ் குடாவிற்க்குள் முற்றும் முழுவதாக வந்து நுகர்வதுக்கு தடை விதிக்கப்பட்டது ...ஆனையிறவு பகுதி ஒரு சுங்க பகுதி போல் தோற்றமளித்தது

..இந்த அரிசி தடைக்கு காரணத்தை அவர்கள் முற்போக்காக வேறு காரணங்களை கூறினாலாம் தமிழர்களுக்கு மேலுள்ள தடை போல் பார்க்கும் பொழுது தோற்றமளித்தது .விவசாயிகளுக்கு ஒரு மரியாதையும் பண வருவாயும் ஒரு தொழிலாக பரிமணிபதை கண்ட வேலையற்ற பட்டதாரிகள் கூட வன்னி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து காடு களை அழித்து விவசாயம் செய்ய தொடங்கி இருந்தனர்.அந்நிய செலவாணியை மட்டுபடுத்து நோக்கில் தமிழ் நாட்டு திரைபடங்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மிகவும் மட்டுபடுத்தப்பட்டளவிலேயே இறக்குமதி செய்யப்பட்டன் ..இவர்கள் நாட்டுக்கு முற்போக்காக செய்வதாக கூறினாலும் பார்க்கும் பொழுது தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையாகவே தோற்றமளித்தது.

கல்வியே நம்பி இருந்த வரண்ட யாழ் குடா மக்கள் மேல் தரப்படுத்தல் என்ற திட்டத்தையும் அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்ததின் மூலம் இனரீதியான அடக்குமுறை செய்திருந்தது ..பிரேதச ரீதியான தரப்படுத்தலை ஓரளவு ஏற்று கொண்டாலும் இனரீதியான தரப்படுத்தல் செய்தமை பேரினவாத அடிப்படையில் செய்வது மாதிரியே இருந்தது

.தமிழ் பிரதேசத்தில் இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களில் பார்க்க சிறிலாங்க சுதந்திர கட்சியினரால் ஒவ்வொரு தொகுதியில் அமைக்கப்பட்ட அமைப்பாளர்கள் பலமும் செல்வாக்கும் உள்ளவர்களாக காணப்பட்டனர். சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களுக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு முன் வேறு கட்சிகளில் இருந்த பிரமுகர்கள் அத்தருணம் கட்சி மாறினார்கள் .பருத்திதுறை தொகுதியில் தமிழரசு கட்சியில் கேட்கும் துரைரத்தினத்துக்கு போட்டியாக பல காலமாக போட்டியாயிருந்த நடராசா என்பவர் ,மற்றும் உடுவில் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் போட்டியிட்ட சிவநேசன் மருமகள் விநோதன் போன்றோர் ,தமிழ் காங்கிரஸில் இருந்து தெரிவான அருளம்பலம் ,தியாகராஜா போன்றோரும் கட்சி தாவினர் ...சிறுபான்மை மகாசபையில் அங்கம் வகித்த எம்.சி சுப்பிரமணியத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி மூலம் நியமன எம்பியாக்கியும் இருந்தனர் ,,சிறிமா அரசாங்கத்தில் ரஸ்சிய சார்பு கம்னீயூஸ் கட்சியும் அங்கம் வகித்தமையால் வட பகுதியில் இருந்த வி.பொன்னம்பலம் போன்றோரின் ஆதரவும் இருந்தது.இலக்கிய வட்டத்தில் கூட முற்போக்கு என்று கூறிக்கொண்டு ..பிரபல இலக்கிய விமர்சர்களான சிவதம்பி ,கைலாசபதி போன்றோரும் சிறி லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டிருந்தனர்.யாழ் மேயராக இருந்த துரையப்பாவும் அப்போதைய அரசாங்கத்தின் சார்பாளராகவே இருந்தார்

ட்ட்லியின் யூன்பி அரசாங்க காலத்தில் சிறிமாவின் அனுசரணையுடன் ரஸ்ய லும்பிம்பா பல்கலை கழகத்தில் படிக்கவோ அரசியல் நோக்கத்துக்கோ அனுப்பி வைக்கப்பட்ட ரோகண விஜீவரா திரும்பி வந்து சேகுவரா என்று இயக்கத்தை கட்டி வளர்த்து கலக புரட்சி செய்தான்,,,தான் பால் ஊட்டி வளர்த்த பாம்பு சிறிமா அரசாங்கத்தை கொத்தியது ...1971 ஆண்டு ஒரு புரட்சியை சிறிமா அரசாங்கம் சந்தித்து

( தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகளையும் சொல்லவேண்டும்தானே.. சுவாரசியமான அரசியல் விடயங்களை அறிவதற்கு "அரக்கன்" (அது என்ன பெயர்!) துணை புரிவார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்...பழைய சம்பவங்கள் பலவற்றை அறியக்கூடியதாக இருக்கும்...பொய்யையும் கற்பனையையும் கலக்காமல் கவனமாக எழுதுங்கள்...வரலாற்றை எழுதும்போது மிகக் கவனமாக இருக்கவேண்டும்..இது கதை எழுதுவது போல அல்ல...எங்கட வரலாற்றை பாடப்புத்தகங்களில் திரித்தெழுதிய சிங்களத்துக்கு அடிக்கத்தான் கோபத்துடன் போராடினனாங்கள்.. எங்கட வரலாற்றை ஆர் திரித்தாலும் வன்மையாக வன்முறையுடன் அடிப்பம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் அரக்கன். உங்கள் எழுத்துக்கள் கடந்தகாலம் பற்றிய விடயத்தில் நம்பிக்கைக்குரியதாக அமையட்டும். ஏனென்றால் எங்களுக்கு முற்பட்ட காலத்தைப்பற்றி நாங்கள் அறிவதற்கு முயன்றால் அவற்றை எமக்குச் சொல்லக்கூடியவர்கள் தமக்காகவே சில விடயங்களையும் தற்பெருமைகளையும் இட்டுக்கட்டி வெறுக்கப்பண்ணிவிடுகிறார்கள். ஏன்டா கதை கேட்க வெளிக்கிட்டோம் என்று வேதனைப்பட வைத்துள்ளார்கள் சிலர்... உங்கள் வழிப்போக்கன் பதிவு அப்படி அமையாது என்று நம்புகிறோம். :)

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-3)

சேகுவரா இயக்கம் என்று புரட்சி 1971 ஆண்டு செய்தற்கு தலைமை தாங்கியவன் ரோகண விஜேவீரா. நன்கு அறியப்பட்ட சீன சார்பு கம்னீயூஸ் கட்சி சண்முகதாசனின் அரசியல் வகுப்பு மாணவனாக ஆரம்பத்தில் இருந்தார் .தமிழர் சுயநிர்ணயமைக்கு எதிரான மற்றும் இந்திய விஸ்திரிப்பு வாதத்தை இங்குள்ள தமிழர்கள் மேல் புகுத்தி பார்த்தவை என்பவற்றினோடாக சண்முகதாசனுடன் முரண்பட்டு கொண்டு தனிய சென்று இயக்கம் கட்டியது தான் அந்த சேகுவரா இயக்கம். அப்பொழுது அரசாங்கத்துக்கு சோவியத் யூனியனும் சீனாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த கால கட்டத்தில் தான் அந்த புரட்சிக்கான முயற்சி நடந்தது . வட கொரியா புரட்சிக்கான முயற்சி நடைபெற்ற சமயத்தில் நடுக்கடலில் இருந்து ஆயுதம் வெடி பொருட்கள் வழங்கினார்கள் என வதந்தி உலாவினாலும் அவர்கள் நவீன ஆயதங்களை பாவித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரம் இல்லாமால் இருந்தது.

apr1971-300x239.jpg

புரட்சி முற்பட்ட காலத்தில் கொழும்பு ஹைட் பார்க்கில் ரோகண விஜவீரா உரையாற்று பொழுது <

தென்மாகண பகுதியில் அநேகமாகன பொலிஸ் நிலையங்களை புரட்சிக்கு முயற்ச்சியின் கைப்பற்றிய பொழுதும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்ட புரட்சிக்கான முயற்சியும் தலைநகரை நோக்கி நகர்த்தப்பட் முயற்சியும் பிசு பிசுத்து போனது . அது பிசுபிசுத்து போனதுக்கு பல புனை கதைகள் மாதிரி பல கதைகள் உலாவி வந்தன. அதன் உண்மை தன்மை எவ்வளவு என்று தெரியாத போதிலும் .அது உண்மை போல உருவாக்க பட்டு இருந்தன. அப்படியான கதைகள் ஒன்று தான் இது.

ஓரே நேரத்தில் நாட்டை பிடிக்கும் நோக்கில் தான் புரட்சிக்கான வேலைத்திட்டம் இருந்தனவாம்.அதுக்கான நேரத்தை பல பாகங்களாக பல இடங்களுக்கு பிரிக்கபட்ட குழுக்களுக்கு தெரியபடுத்துவதுக்கு இப்படி ஒரு முறையை கையாண்டார்களாம். அந்த நேரத்தில் இப்ப இருக்கு மாதிரியான தொடர்பு சாதன வசதி இருக்கவில்லை என்பது தெரிந்ததே. வானொலிக்கு மரண அறிவித்தல் கொடுத்து இருந்தார்களாம் அதில் அடக்கம் செய்யப்படும் நேரத்தை புரட்சிக்கான நேரமாக கை கொள்ளவேணுமெண்டு தீர்மானித்தார்களாம் ..அந்த மரண அறிவித்தல் ஒரு முஸ்லிமினதை கொடுத்திருந்தார்களாம் .அப்பொழுது அறிவிப்பாளராக இருந்த எச்.எப் முகதீன் என்ற அறிவிப்பாளர் அடக்கம் நேரம் இஸ்லாமியர்களின் அடக்கத்துக்கு உகந்த நேரமாக இல்லாத கருத்தில் கொண்டு சிறிது திருத்தம் செய்து வாசித்தாராம் .

அதனால் தலைமை குழுக்குள் புரட்சிக்கான ஒரு நேரத்தையும் நாட்டின் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பட்ட இன்னொரு நேரத்தையும் தெரிவு செய்வதனால் பிசுபிசுத்து போனதாக இப்படியான பல கர்ண பரம்பரை கதைகள் கூறியிருந்தனர். இந்த புரட்சியை மழுங்கடிப்பதுக்கு உடனடியாக குண்டு வீசும் ஹெலிகொப்டரை இந்தியா அனுப்பியது அனுராதபுர மற்றும் காடுகளில் ஒளிந்திருக்கும் போராளிகளை சரண்டையமாறு துண்டு பிரசுரங்களை வீசியும் குண்டுகளை வீசியும் இந்த கலகத்தை அடக்கியது

apr1971-1-300x220+(1).jpg

71 புரட்சியின் பொழுது சரண்டைந்த அல்லது கைது செய்யப்பட்ட சேகுவரா இயக்கத்தவர்

வெறும் ஆர்ப்பாட்டம் தொழிற்சங்க வேலை நிறுத்தம் போன்றவற்றை மட்டுமே அரசுக்கு எதிரான முறையாக அதுவரையும் கண்ட இலங்கை அரசு இப்படியான கலக புரட்சி முதன்முறையாக கண்டமையால் கலக்க முற்றது ,அந்த பய கலக்கத்தில் பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடி பொது மக்கள் கதைப்பது கூட சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க பட்டது மட்டுமன்றி அப்படி நடந்தால் மூர்க்கமாக அடக்கினார்கள். ஊடகங்கள் ,பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் திரைபடங்களில் புரட்சி அது போன்ற சொற்கள் விடயங்கள் பாவனைகள் சொற்பமாக இருப்பது தெரிந்தால் கூட தணிக்கை செய்யப்பட்டது. உதராணத்துக்கு டைரக்டர் சிறீதர் சிவாஜி வைத்து வெளிநாட்டில் எல்லாம் படமாக்கபட்ட சிவந்த மண் படத்தை தடை செய்ய முனைந்தார்கள் .ஏனெனில் அதில் ஜமீன்தாருக்கு எதிராக புரட்சி செய்வது போல காட்சிகள் வருகின்றன என்று. பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு அத்திரைபடம் இலங்கையில் திரைபட பட்டன என்று நினைக்கின்றேன்

இந்த புரட்சி தோற்கவேணும் என்று வட பகுதி தமிழர்கள் தான் அரசாங்கத்தை விட கூட நினைத்து இருப்பார்கள் .அப்படி சேகுவாரா இயக்கத்தை பற்றி தமிழ் அரசியல் தலைமைகள் அப்படி ஒரு பய பீதியை வளர்த்திருந்தார்கள். புரட்சி தோல்வியின் பின் கைது செய்யப்பட்ட ரோகண விஜை வீராவை யாழ்ப்பாண சிறையில் வைத்திருந்தார்கள் . சில நேரத்தில் நிர்வாணமாக கூட....பிற்ப்பட்ட காலங்களில் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் நணபர்களாக மாறினார்கள் என்று உதவினார்கள் என்று அப்பொழுது கதைகள் உலாவின.இந்த காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் பகுதி பங்களாதேஸாக மாறியது முக்திபானி இயக்கங்களின் புரட்சிகர அணுகுமுறை மற்றும் இந்தியாவின் உதவியுடன்

..மூன்று இரண்டு பெருபான்மையாக இருந்த சிறிமாவோ அரசு சிலோன் என்பதை சிறிலங்காவாக மாற்றிக்கொண்டது மட்டுமன்றி உயர் பீடமாக இருந்த பிரித்தானிய ராணியின் சில சட்ட சரத்துக்களில் இருந்து விடுவித்து கொண்டு இலங்கை குடியரசாகிக்கொண்டது .அது மட்டுமன்றி பிரித்தானியாவின் சோல்பரி என்பரானால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை மாற்றி புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி கொண்டது ..தமிழர்கள் அனுபவித்த கொஞ்ச நஞ்ச உரிமைகளும் இந்த சட்டத்தில் இல்லாமாகபட்டன என்று தமிழ் தலைமகள் குரல் கொடுக்க தொடங்கின...அந்த காலகட்டம் 1972ம் ஆண்டு (தொடரும்)

Link to comment
Share on other sites

நல்ல விடயம் அரக்கன்........... உங்கள் முதல் பதிவில் பின் எழுதும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பதிவுகளுக்கான இணைப்புகளையும் வழங்கினால் வாசிக்கும் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஈழப் போராட்டத்தின் இன்னுமொரு 'சாட்சி' யாக உங்கள் தொடர் வெளி வரட்டும். அது இன்னொரு விவாத வெளியைத் தோற்றுவிக்கட்டும்.

உங்கள் தொடர் வெற்றி அடைய நிர்வாகப் பிரிவில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தாரளமாகக் கேளுங்கள்

Link to comment
Share on other sites

நல்ல விடயம் அரக்கன்........... உங்கள் முதல் பதிவில் பின் எழுதும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பதிவுகளுக்கான இணைப்புகளையும் வழங்கினால் வாசிக்கும் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஈழப் போராட்டத்தின் இன்னுமொரு 'சாட்சி' யாக உங்கள் தொடர் வெளி வரட்டும். அது இன்னொரு விவாத வெளியைத் தோற்றுவிக்கட்டும்.

உங்கள் தொடர் வெற்றி அடைய நிர்வாகப் பிரிவில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தாரளமாகக் கேளுங்கள்

நிழலி அவர்கட்கு நன்றி ..நீங்கள் சொல்லும் இணைப்பு கொடுத்தால் நல்லது தான் எப்படி யாழ் இணையத்தில் கொடுப்பது என்று தெரியவில்லை ...உங்களால் அந்த உதவி செய்ய முடியுமானால் செய்யவும் நன்றி

Link to comment
Share on other sites

நிழலி அவர்கட்கு நன்றி ..நீங்கள் சொல்லும் இணைப்பு கொடுத்தால் நல்லது தான் எப்படி யாழ் இணையத்தில் கொடுப்பது என்று தெரியவில்லை ...உங்களால் அந்த உதவி செய்ய முடியுமானால் செய்யவும் நன்றி

ஒரு திரியில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு தொடர் இலக்கம் இருக்கும். உதாரணமாக உங்கள் மூன்றாவது பதிவு 8 ஆவது post ஆக இருக்கு. அந்த 8 என்பது வலப்பக்க மூலையில் தெரியும். அதை அழுத்தினால் (Click பண்ணினால்) ஒரு link சின்ன சாளரத்தில் திறக்கும். அதை copy பண்ணி போடுங்கள்

click-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புரட்சியை மழுங்கடிப்பதுக்கு உடனடியாக குண்டு வீசும் ஹெலிகொப்டரை இந்தியா அனுப்பியது அனுராதபுர மற்றும்

கொழும்பில் இந்தியா படையினர் காவலில் இடுபட்டிருந்தனர் என் கேள்விபட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி

ஆரம்பத்தில் என்ன நடந்தன? தமிழனது வழிகள் எவ்வாறு தடைப்பட்டன? அவன் ஏன் வன்முறையை தெரிவு செய்தான்? போன்றவற்றுக்கு பலரும் தெளிவு தேடும் நேரமிது. அதை தங்களது இத்திரிமூலம் எமது போராட்டம் பற்றிய ஆரம்ப வரலாற்றை அறிய முடியுமாயின் அது வரலாற்றுப்பொக்கிசமாக இருக்கும். தொடருங்கள்.

அதே நேரம் இதே வரலாற்றுடன்தான் நாமும் வளர்ந்தோம். எனவே எமக்குத்தெரிந்தவை வரும்போது நாமும் பெருகூட்டுவோம். அல்லது தெளிவுபத்துவோம்.

தெளிவு படுத்துவோம்

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள் -பாகம் -4

72 இல் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சட்டத்துக்கு பின்

1948 சுதந்திரத்துக்கு கிட்டிய காலத்தில் உருவாக்கப்பட்ட சோல்பரி சட்டத்தின் படி இலங்கையின் அதி உயர் பீடம் இராணிக்கு வழங்கபட்டிருந்தது .சட்ட நீதி போன்றவற்றிலும் ஆக கடைசியான அப்பீல் பிரித்தானியாவிடம் இடம் இருந்தது . இதை மாற்றி சிறிலங்காவிற்க்குள் எல்லாவற்றையும் உயர் பீடமாக்கி கொண்டார்கள் .மாவிட்டபுரம் கோயில் உள் நுழைவு போராட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக அடங்கா தமிழர் சுந்தரலிங்கம் பிரித்தானியாவில் உள்ள ராணியிடம் அப்பீல் செய்ய போவதாக பேசப்பட்டது இதை உடனடியாக இல்லாமால் ஆக்கவேண்டும் நோக்கில் அவசரம் அவசரமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்வோரும் உளர்

.இந்த சட்டத்தின் படி சிறிலங்கா குடியரசு மே மாதம் 22 திகதி உருவானது .இதை சிங்கள தரப்பு கோலகாலமாக கொண்டாடியது .இதில் நடைபெற்ற வைபங்களை தமிழர் பிரநிதிகள் பகிஸ்ரித்ததுடோ மட்டுமல்லாது கரி நாளாக பிரகடப்படுத்தியது. இதற்கு காரணம் இவ்வளவு காலமும் சோல்பரி சட்டத்தில் இருந்த சிறுபான்மையிருக்கு உரித்தான பாதுகாப்பான சரத்துக்கள் நீக்கப்பட்டு இருந்தன. இலங்கை பெளத்த நாடு என பிரகனபடுத்த பட்டிருந்தது

சிறிமா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் ஆதரிக்கும் தமிழர்கள் எவரும் துரோகிகள் என்ற கண்ணோட்டத்துனூடனே தமிழர் தரப்பினரால் பார்க்கபட்டன.அப்போதைய தாபல் தந்தி அமைச்சர் குமாரசூரியர், யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா போன்றரை குறி வைத்து உரும்பிராய் சேர்ந்த யாழ் இந்து கல்லூரி மாணவன் சிவகுமார் இயங்கி கொண்டிருந்தார் ..துரையப்பா ,சந்திரசிறி போன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் ...தாக்குதலில் துரையப்பாவுக்கு எதுவும் சேதம் ஏற்படவில்லை .அவருடைய காருக்கு தான் சேதம் ஏற்பட்டது .இன்ஸ்பக்டர் சந்திரசிறி மீது நடத்திய தாக்குதல் காரணமாக தேட படவேண்டியவராக மாறுகிறார் ...தமிழ் தமிழ் என உசுப்பேத்திய தமிழரசு கட்சியின் எம்பியாக சிவகுமாரின் தொகுதியில் இருந்த கதிரேவற்பிள்ளையிடம் நிதி உதவி கேட்கபட்டதாம் அதற்கு அவரிடம் இருந்து உதவி நிராகரிக்கப்பட்டதாம்

நிதி வளத்துக்காக கோப்பாய் வங்கியை கொள்ளை அடிக்க சென்ற பொழுது பொலிசாரல் மடக்கி பிடிக்க முற்பட்ட பொழுது தப்பியோட முயன்று சயன்ட் அடித்து இறக்கும் நிலை ஏற்பட்டது .சிவகுமாரின் தாய் தந்தையர் கால காலமாக தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர்கள். சிவகுமாரின் இந்த இறப்பு இளைஞர் சமுதாயத்தை உசுப்பேத்தி தமிழரசு கட்சியினர் தமக்கு சாதகமான அரசியலை தொடர்ந்து செய்வதற்க்கு வசதியாக இருந்தது.

முதல் உலக தமிழராட்சி மகாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இரண்டாவது தமிழாரட்சி மகாநாடு சென்னையில் நடைபெற்றது. மூன்றாவது தமிழராட்சி மகாநாடு பிரான்சில் உள்ள பாரிஸில் நடைபெற்றது. நான்காவது தமிழராட்சி மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மகாநாடு குழுவினர் தீர்மானித்து இருந்தனர்.இதற்கு அப்போதைய அரசாங்கம் போதிய ஆதரவு கொடுக்காத்து மட்டுமன்றி பல முட்டுகட்டைகளை நிபந்தனைகளை விதித்தது.விழாவை நடத்துவதில் தனிநாயகம் அடிகள் அண்மை காலத்தில் யாழ் உப வேந்தராக இருந்த வித்தியானந்தன் இருந்தனர்.தமிழ நாட்டில் இருந்து அரசியல் ஆர்வலர்கள் வருவதை கட்டு படுத்தியது .குறிப்பாக அப்போதைய உலக தமிழர் இளைஞர் பேரவை தலைவராக இருந்த ஜனார்த்தனத்துக்கு மகாநாட்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.சென்னையில் நடைபெற்ற தமிழராட்சி மகாநாடு ஊர்திகளின் ஊர்வலத்தை தியேட்டர்களில் திரைபட இடைவேளைகளில் அந்த நேரம் காட்டுவார்கள்.பார்த்திருக்கிறேன் பார்க்கு பொழுது கண்கொள்ள காட்சியாக இருக்கும் .அது போல சென்னை ஊர்திகளின் ஊர்வலத்துக்கு வராவிட்டாலும் மகாநாடு நடைபெறும் கடைசி நாளுக்கு முதல் நாள் ஊர்தி ஊர்வலம் யாழ் நகரை சுற்றி வலம் வந்தது கண் கொள்ள காட்சியாக இருந்தது.மகாநாட்டின் கடைசி நாள் கூட்டம் வீரசிங்க மண்டபத்தில் உள் நடைபெறாமால் வெளியில் நடத்துவதற்க்கு தீர்மானித்து இருக்கவேண்டும் அதற்க்கு பொலிஸ் தரப்பிலோ மாநகரசபை தரப்பிலோ போதிய ஒத்துழைப்பு கொடுக்கபடமால் இருந்திருக்க வேண்டும். அதை விட அனுமதி மறுக்க பட்ட ஜனார்தனம் ஏதோவகையில் தமிழ் நாட்டில் இருந்து இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறார் என்று பொலிஸ் தரப்பு மோப்பம் பிடித்திருக்க வேண்டும்.

கடைசி நாள் வைபவத்தில் ஒரு முஸ்லீம் பேராசிரியர் பேசி கொண்டிருக்க தவறுதலாக அவர் தான் ஜனார்த்தனம் என்று கைது செய்ய முனைந்த பொழுது ஏறப்பட்ட களேபரத்துக்கு பின் ஏற்பட்ட பொலிஸ் தாக்குதலில் சன நெரிசலில் சிக்குண்டு மின்கம்பிகளுக்குள் அகப்பட்டும் மக்கள் இறந்தனர் .அப்பொழுது யாழ் மேயராக இருந்தவர் அல்பிரட் துரையப்பா

CB27_EX_MLC_JANARTH_135137f.jpg

மேலே உள்ள படத்தில் உள்ளவர் தான் அந்த ஜனார்த்தனம்

துரையப்பாவை அரசாங்கத்துக்கு ஆதரவனாவர் என்று தமிழர் தலைமைகளால் துரோக பட்டம் கொடுக்கப் பட்டாலும் யாழ் மாநகரத்துக்குட்பட்டவற்றில் வாழும் உழைக்கும் மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார் எனவும் அவரை கதாநாயகனாக கணிக்கும் பிரிவினர் இருந்து தான் உள்ளார்கள் .யாழ் நகரத்தின் மையத்தில் இன்றும் அமைந்துள்ள நியூ மார்க்கட் கட்டிடத்தை உருவாக்கின பங்கில் துரையப்பா இருப்பதினால் அதை பாரட்டுவோர் சிலர் உள்ளனர்.

துரையப்பா ஒரு ஸ்தீரிலோலன் அவரை விட்டு விட்டு டாக்டரான அவரது மனைவி மலேசியாவுக்கு சென்று விட்டதகாக கூறுவர் .சிறிமாவின் மகன் அநுரா பண்டராநாயக்கா அந்த காலக்கட்டத்தில் இளைஞன் அதோடை ஒரு பிளே போய் அவருக்கு யாழ்ப்பாணம் வரும் போது எல்லாம் தமிழ் பெண்களை ருசி பார்த்தால் என்ன என்று எண்ணம் வரும் போலும் .அந்த நாட்களில் பத்திரிகைகளில் கிசு கிசு செய்திகளாக வந்தது அநுரா குடித்துவிட்டு யாழ் பெரியாஸ்த்பரி அண்மையிலுள்ள தாதி பயிற்சி கல்லூரி மதிலையும் யாழ் பிரபல பெண்கள் கல்லூரி விடுதி மதிலையும் தாண்ட முற்பட்டார் என்று .இதற்க்கு அவசியம ஏற்படாத வகையில் துரையப்பா அநுராவுக்கு மாமா வேலை பார்த்துள்ளார் என்று கூறுவர் .குறிப்பாக இலங்கையில் வெளியான தமிழ திரைபடத்தின் நடித்த தென்னிந்தய நடிகை போல் தோற்றத்தை கொண்ட அவரை அநுராவுக்கு தீனியாக வழங்கினார் துரையப்பா என்று கூறுவோரும் உளர்.ஆனால் இச்செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கியது ஏனெனில் அநுரா ஓரின சேர்க்கை ஆர்வலர் அதனால் அவர் திருமணம் செய்யமாலே கடைசி காலம் மட்டும் இருந்தவர் .இரு பால் சேர்க்கை விருப்பம் உள்ளோரகளும் இருக்கிறார்கள் என்று பின்னர் வாசித்து இருக்கிறேன்

துரையப்பாவை முடிப்பதற்கு அப்பொழுது அங்கு அங்கு சிறு சிறு இளைஞர் குழுக்களில் இருந்தவர்கள் பல முனைகளில் பல பேர் முயன்று கொண்டிருந்தனர்.

பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் வழியில் சுட்டு கொல்லப்பட்டார்... அரியாலையை சேர்ந்த கிருபாகரன் வல்வெட்டித்துறைய சேர்ந்த கலாபதி பொலிஸில் மாட்டி கொண்டதை தொடர்ந்து பிரபாகரன் என்பவர் தான் சுட்டுக் கொண்டார் பொலிஸ் தரப்பு அறிந்து கொண்டது.

அன்று தமிழ் பிரதேசங்களில் போட்டி கட்சிகளாக போட்டி போட்டு கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சி மற்று இதொக போன்றவை இணைந்து வல்வெட்டித்துறையில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர் வீட்டில் தமிழ்ர் விடுதலை கூட்டணி கட்சியை உருவாக்கினார்கள்

வட்டுக்கோட்டை தீர்மான பிரகடனத்தை செய்தார்கள் தமிழர் விடுதலை கூட்டணியர் செய்த ஆண்டு 1976(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பகால அரசியல். அதுகும்... படங்களுடன்.

அவசரப்பட்டு எழுதாமால்..... ஆற அமர யோசித்து, பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து எழுதுங்கள். அரக்கன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு, ஆனால் நீங்கள் மிகவும் வேகமாகப் போகின்றீர்கள் எதோ தெரியாத்தனமாக தொடங்கிற்ரன் முடிச்சுப்போடவேணும் என்பதுபோல்.

மேலும் சிவகுமார் அவர்கள் கோப்பாய் கதிரவேல் அவர்களிடம் உதவி கேட்டது உண்மை, மற்றும் சாவகச்சேரி நவரத்தினம் அவர்களிடமும் உதவியை நாடினார் அதற்கு அவர் கூறுய பதில் இந்தியாவுக்குப் போங்கோ அங்கு நான் ஏதாவது உதவி செய்ய முயர்சிக்கிறேன் என. அவ்வேளைகளில் அல்பிரட் துரையப்பா சிவகுமாரனை மிகவும் அடையாளம் கண்டே இருந்துள்ளர், அதாவது யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள யாழ் வாடிவீட்டுக்கு துரையப்பா மாலை வேளைகளில் வருவது வழக்கம், அங்குதான் சிவகுமாரன் அவரைக் கொலைசெய்ய இடத்தைத் தேர்ந்தெடுத்தார் விடையம் தோல்வியடைந்து உடனடியாக உர்ம்பிராய் திரும்பிய சிவகுமார் தனது மாமனாரை எந்தவிதக் கேள்விமுறையுமோ அல்லது காரணமோ இல்லாது அடித்துள்ளார் அவர் கோவத்தில கோப்பாய் காவற்துரைக்குப் போய் சிவகுமார்மீது முறைப்பாடு கொடுத்துள்ளார், எதிர்காலத்தில் எதாவது சிக்கலாக வருமாகவிருந்தால் வழக்கில் தப்பிக்கொள்ள . மேலும் யாழ் கோவில் வீதியில் அப்போதைய சிங்கள் காவற்துறை அதிகாரி சந்திரசேகரா தங்கியிருந்தார் அதாவது யாழ் கைலாசபிள்ளையார் கோவிலியிருந்து நல்லூர்ப்பக்கமாக ஐந்து அல்லது ஆறாவது வீட்டினில் என நினைவிருக்கின்றது அதுவும் ஒரு மாலைவேளை தாக்குதல் நடந்தது கைக்குண்டுத்தாக்குதலின் பின்பு தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சிவகுமாரன் சுட முயன்றார். அனால் அக்கைத்துப்பாக்கி அவ்வேளையில் வேலைசெய்யவில்லை (பதட்டமோ என்னவோ தெரியாது) அழித்தொழிப்பு முயற்சி தோல்வியடைந்ததும் நேரடியாக வீட்டிற்குபோய் பின்வளவில நிண்டு கைத்துப்பாக்கியை மீண்டும் இயக்கிப்பார்த்திருக்கிறார் முதலாவது கிளிக்கர் தட்டும்போதே குண்டு சீறிப்பாய்தது. சிவகுமாரன் வீட்டிற்குப் போனதும் அவருக்கு எதிர் வந்த அவரது தாயார் முதலில் கேட்டகேள்வி "என்னடாப்பா என்னமாதிரிப் போச்சு" என சந்திரசேகரா மீதான தாக்குதல் திட்டத்தை அவரது தாயார் முதலே அறிந்திருந்தார். அடுத்த நாள் சிவகுமார் தனது நண்பருடன் கைலாசபிள்ளையா கோவிலடிக்குப் போயிருக்கிறார் சம்பவம் நடந்த இடத்தினைப்பார்க்க அந்த இடத்துக்கு இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை சிறிதுனேரத்துக்கு முன்புதான் இரண்டாவது தடவையாக வந்துவிட்டுப் போனவர். பின்பு சிவகுமாரது நண்பன் "முல்லை " கைதின்பின்னதான விசாரணயில் வஸ்தியாம்பிள்ளை முல்லையிடம் கூறியிருக்கிறார். முல்லையைக் கைது செய்தது பஸ்தியாம்பிள்ளை அவருடன் கூஅ இருந்தது ரஞ்சன் எனும் புலனாய்வு அதிகாரி. பூலோகசிங்கம் எனும் ஒருவர் சிங்களத்துக்கு விசுவாசமானவர் கனடா இலங்கைத் தூதரகத்தில் இரண்டாம் நிலை அல்லது முதலாம் நிலை அதிகாரியாக வேலை செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன் அவர் முல்லையின் தய்மாமனாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அரியாலையை சேர்ந்த இன்பமும்
இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....
Link to comment
Share on other sites

//எதோ தெரியாத்தனமாக தொடங்கிற்ரன் முடிச்சுப்போடவேணும் என்பதுபோல்.//

#

நீங்கள் சொல்வது தான் உண்மை போல என் மனகிடங்கு சொல்லுது :lol:...மற்றுமு உங்கள் விவரணமான கருத்துக்கு நன்றி ...நான் என்ன செய்யிறது எனக்கு தெரிந்த அல்லது கேள்விப்ட்டதை தானே சொல்லமுடியும் ....நன்றி

Link to comment
Share on other sites

இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....

நன்றி உங்கள் தகவல் சரி ...அரியாலை சேர்ந்த இன்பம் என்ற இடத்தில் ..அரியாலை சேர்ந்த கிருபாகரன் என்று வர வேண்டும் இப்ப திருத்தி இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....

இன்பம் நவாலி தான்.

Link to comment
Share on other sites

ஆரம்பகால அரசியல். அதுகும்... படங்களுடன்.

அவசரப்பட்டு எழுதாமால்..... ஆற அமர யோசித்து, பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து எழுதுங்கள். அரக்கன்.

நல்ல அறிவுரை சிறி அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் தகவல் சரி ...அரியாலை சேர்ந்த இன்பம் என்ற இடத்தில் ..அரியாலை சேர்ந்த கிருபாகரன் என்று வர வேண்டும் இப்ப திருத்தி இருக்கிறேன்

இன்பத்தை சித்திரவதைமூலம் கொலை செய்து பண்ணைபாலத்திற்க்கு அருகான்மையில் போட்டார்கள்....சிங்கள இராணுவத்தினர்,,,40 வருடங்களின் பின்பும் அதே பாணியை கடைப்பிடித்து தளபதி ரமேசையும் கொலை செய்துள்ளார்கள்.....கொலை செய்தது மட்டுமல்லாமல் அதை படம் பிடித்து பகிரங்கமாக வெளியிடுகிறார்கள்......

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக் கூத்துக்கள்-5

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 ம் ஆண்டு

யூன்பி அரசாங்கத்துடன் ட்ட்லி செல்வா ஒப்பந்தம் என்றும் சிறிலாங்க சுதந்திரகட்சியுடன் பண்டா -செல்வா ஒப்பந்தம் என்றும் செய்து அவை கிழிக்கபட்டு இருந்தன .சமஸ்டி மாநில சுயாட்சி என்ற கோசங்கள் தொடர்ந்து வைத்தாலும் இலங்கை அரசாங்கம் அதற்கு எள்ளவும் மரியாதை கொடுக்கு நிலையில் இருக்கவில்லை ..தமிழ் மக்களுக்கு பேரினவாத அரசாங்கம் செய்யும் பாரபட்சத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக தமிழ் இளைஞர்கள் கிளர்ந்து எழுந்தனர் .அவர்களை திருப்தி படுத்த தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல் தலைமையை தக்கவைக்க ஒன்றிணைந்த கட்சியின் பெயரான தமிழர் கூட்டணியை தமிழர் விடுதலை கூட்டணியாக மாற்றுவதோடு தமிழ் ஈழம் என்ற கோசத்தை கையில் எடுத்தனர்.தமிழ்த்தலைமைகள்

வட்டுக்கோட்டையிலுள்ள அமிர்தலிங்கத்தின் ஊரான பண்ணாகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானம் என தமிழர் தரப்பால் கூறப்படுகின்ற தமிழீழ பிரகடனம் நடைபெற்றது .தமிழ் இளைஞர்களின் ஏகோபித்த ஆரவாவரத்துடன் பிரகடனப்படுத்த பட்டது .

இந்த தமிழீழ பிரகடனத்தை தந்தை செல்வா பிரேரிக்க மு. சிவசிதம்பரம் வழி மொழிந்தார்.வரலாற்று சிறுப்பு மிக்க பிரகடனம் என்று சொல்லபடுகின்ற இந்த பிரகடனத்தில் உள்ளடக்க வாசகங்கள் யாதெனில்

ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.''

வட்டுக்கோட்டை தீர்மானம் அதே காலத்துக்கு கிட்டத்தட்ட தான் புதிய தமிழ் புலிகள் செட்டி என்பவரின் தலைமையில் கீழ் குழுவாக இயங்கி வந்த பிரபாகரனும் மற்றவர்களும் சேர்ந்து தமிழ் ஈழ விடுதலை புலிகள் என்ற இயக்கத்தை தொடக்கினார்கள்.புதிய தமிழ் புலிகள் தலைவராக இருந்த செட்டி பிற்காலத்தில் கொள்ளை போன்ற விடயங்களுக்காக சுட்டு கொல்லப்பட்டதை அறிந்திருக்க கூடியதாயிருந்தது . இந்த செட்டி விடுதலை புலிகளில் இருந்த செல்லக்கிளி டெலோ இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்துக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

தமிழ விடுதலை புலிகளை உருவாக்கியவர்கள் இறுக்கமான கட்டுபாடுகளை சட்டத்திட்டங்களை வகுத்து கொண்டு தமிழ் ஈழ இலட்சியத்துக்காக இயங்க வேண்டுமென்று பிரகடனபடுத்தி கொண்டனராம் .அதற்க்காக மது அருந்துதல் காதல் செய்தல் இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு இயக்கத்துக்கு செல்வது போன்றவற்றிக்கு அதி உட்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று தீர்மானித்து கொண்டார்களாம் .இயக்கத்தை இறுக்கமாக வழிநடத்த மத்திய குழு போன்றவற்றை உருவாக்கி மிக நம்பக தன்மையான லட்சிய வேட்கையுடைய மேலே உள்ள கட்டுபாடுகளை இதய சுத்தியுடன் கடைப்பிடிக்கூடியவர்கள் மட்டுமே உள்வாங்கி மிக குறுகிய எண்ணிகை உடையவர்களாக மட்டுமே இருந்தார்களாம்.வேறு விதமாக சொன்னால் எவரையும் விரைவில் உள் வாங்குவதை தவித்து கொண்டிருந்தார்களாம்.பிற்காலத்தில் இயக்கங்கள் தமிழ் நாட்டில் இருந்த பொழுது ஒரத்த நாட்டில் நடந்த பண்ணையார் கொலையில் சம்பந்த பட்ட விச்சு அண்மையில் புத்தகம் வெளி\யிட்ட ஜயர் ,இலங்கை வானொலியில் பணியாற்றி பிற்கால இயக்களில் ஒன்றான தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவைக்கு ஆலோசகராக இருந்த நாகராசா போன்றவர்கள் அக்காலங்களில் மத்திய குழுவில் இருந்ததாக பேசிக் கொள்வர்.

வட்டுக்கோட்டை பிரகடனம் செய்த தமிழர் விடுதலை கூட்டணியினர் தாங்கள் பிரகடனம் செய்த தமிழ் ஈழம் சம்பந்த மாக யாழ் பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த பொழுது கைது செய்யப்பட்டனர் .துண்டு பிரசுரம் செய்தவர்களில் தந்தை செல்வாவை தவிர மற்றவர்களான சாவகச்சரி நவரத்தினம் ,அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் துரைரத்தினம் போன்றவர்களை தேச துரோகம் செய்ததாக கூறி அவசர கால விதிகள் கீழ் கைது செய்து சிறையில் தள்ளினர் .

TC_KI_T_0210_1.jpgட்ரயல் அற் பார் வழக்கில் மேலே உள்ள படத்தில் குற்றுவாளி கூட்டில் அமிர்தலிங்கத்தை பார்க்கலாம்

இவர்கள் பற்றிய வழக்கு மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் வெளிநாட்டு சட்ட பிரமுகர் பார்வையாளர்ளாக இருக்க ட்ரயல் அற்பார் அடை மொழியொடன் நடை பெற்றது ..அந்த நாட்களில் நடைபெற்ற வழக்குகளில் பிரபலமான வழக்காக கொள்ளப்படுகிறது.இந்த வழக்கில் இவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளாக முன்னாள் உள்ளுராட்சி அமைச்சர் தமிழரசுகட்சி பிரமுகரமான திருச்செல்வம் (நீலன் திருச்செல்வத்தின் தந்தையார்). செல்வநாயகம், ஜீ ஜீ பொன்னம்பலம் வாதிட்டனர் .ட்ரயல் அற்பார் வழக்கின் தீர்ப்பில் அவசர காலவிதி சரியான முறையில் அமைக்கப்படவில்லை அதனால் அதனூடாக அமைக்க பட்ட இந்த ட்ரயல் அற் பார் என்ற வழக்கு மன்றம் செல்லாது என்று சட்ட நுணுக்கத்துடன் வாதாடினது மூலம் கைது செய்ய பட்டவர்கள் விடுவிக்க பட்டதுடன் ஒரு அரசியல் வெற்றியாகவும் தமிழர் தரப்பினால் பார்க்கப் பட்டது.தமிழர் அரசியல் சம்பந்தமாக எந்த விதமான வழக்கில் இதுவரை ஆஜராகாத ஜீஜீ இதில் கடைசி நேரம் ஆஜரானது குறிப்பிடதக்கது.இதே காலகட்டத்தில் தான் கலைஞர் கருணாநிதி செய்த ஊழல் பிரபல வழக்கான சன்சோனி கமிசன் போன்றவற்றில் இருந்து காப்பற்ற ஜீஜீ ஆஜாராகிறார் என்று பத்திரிகைகளில் வெகுவாக பிரபலபடுத்த பட்டிருந்தது

பெரிய தேசிய முற்போக்கு அரசாங்கத்த்தை அமைப்பதில் புரட்சி செய்வதாக பெரிய தம்பட்டம் அடித்து கொண்டு செயல் பாடுகளை செய்த சிறிமா அரசாங்கம் அப்படி அதை நோக்கி போக முடியாத நெருக்கடி ஏற்பட்டது .நிதியமைச்சராக இருந்த என் எம் பெரேரா மாற்றப்பட்டு பீலிக்ஸ் டயஸ் பண்டராநாயக்காவுக்கு வழங்கபட்டு நாட்டின் பொருளாரதிட்டத்தை பழைய பாணிக்கு திருப்பினர் . இது சிறிமா அரசாங்கத்தின் பாரளுமன்ற ஆட்சி காலத்தின் கடைசி காலமாகும் . இந்த காலகட்டத்தில் தான் முற்போக்கு தமிழ் இலக்கிய மகாநாடு ஒன்று நடைபெற்றது .அரசாங்கத்தின் தமிழ் இலக்கிய ஆதரவாளரான இலக்கிய பிரமுகர் பிரேம்ஜி தலைமையில் கைலாசபதி சிவத்தம்பி ஆதரவு இருக்க மிக அரிதாகவே தமிழர்களின் கூட்டம் நடக்கும் மிக இறுக்கமான பண்டராயக்கா சர்வதேச மண்டபத்தில் வெகு கோலாலமாக நடைபெற்றது.இதில் முற்போக்கு இலக்கியவாதிகள் என்று அழைக்கப்ட்டவர்கள் மட்டுமே அழைக்க பட்டு பங்கு பெற்றி இருந்தனர்..

இதே நேரத்தில் தமிழ்ஈழ விடுதலை புலிகள் தலை மறைவு இயக்கத்தை சுதந்திரமாக ஆரம்பித்து இருந்தாலும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையின் ஆலோசனையை கேட்டு நடந்து கொண்டார்கள் என்று கூறுவர் .அப்போதைய எகிப்திய இளம் அதிபர் கடாபி நாடுகளில் நடைபெறும் தேசிய விடுதலை போரட்டங்களில் ஆதரவு வழங்கி கொண்டிருந்தார் . அந்த அடிப்படையில் அமிர்தலிங்கத்துக்கு கடாபிக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறுவர் .அதன் மூலம் தலைமறைவு இயக்கத்துக்கு உதவி செய்ய முனைந்தார் என்றும் கூறுவர்.ஆரம்ப காலங்களில் நடைபெற்றதை பார்க்கும் பொழுது தமிழர் விடுதலை கூட்டணி தலைமை கூறிய ஏவலை நிறைவேற்றவேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. என்றாலும் அக்காலத்தில் தமிழ் விடுதலை புலிகளால் அறிக்கை பரவலாக விநியோகிக்கப்பட்டிருந்தது அதில் ஒரு வாசகம் இருந்தது நிபந்தனையற்ற குறுகிய காலகட்டத்துக்கு அரசியல் தேவை கருத்து கொண்டு தமிழர் விடுதலை கூட்டணிக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்று .துண்டு அறிக்கை வெளியிட்ட காலகட்டங்களில் ஒருசில வெகுஜனத்தினரின் பார்வையில் உப்பிடி ஒரு தலை மறைவு இயக்கம் இல்லை எனவும் வேறு சில பொது மக்களின் பார்வையில் பொடியள் என்று அழைக்கப்பட்டு உச்ச திறமை வாய்ந்த சாகசம் நிறைந்த அதி உயர் மனித நிலையில் வைத்து மகிழ்ந்து மிகைபடுத்தி கொண்டார்கள்.

சிறிமா அரசாங்கம் 47 தமிழ் இளைஞர்களை பல்வேறு காரணங்களை சொல்லி சிறையில் நீண்ட காலம் வைத்திருந்தது .தனது பதவி காலம் முடிவடைய அண்மிக்க இன்னொரு பொது தேர்தல் வர இருக்கும் தருணம் பார்த்து அவ் இளைஞர்களை விடுதலை செய்தது .அதில் காசி ஆனந்தன் மாவை சேனாதிராசா போன்றோரும் அடக்கம் ....1977 பொது தேர்தல் அண்மித்தது ...தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடிக்க தொடங்கின........

[

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"     பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.     "நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம் குழியில் கலாவுகிறாய்- பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும் [இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]   நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்- உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து [வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]   நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்- பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன [இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]   நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்- சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது [இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]   நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் - அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய் [இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]   நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது- நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்" [இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]   அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.   "நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"   மற்றது   "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.   மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.   “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926)   என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,   "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"   என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:   "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"   என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.   "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" -பெரும்பாணாற்றுப்படை(275-281)   அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.   "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]   அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.   ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.   கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.   வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.   பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.   மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.   ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro
    • உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு. அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!
    • https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523  முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.