Jump to content

எனக்குப் பிடித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தது இசைஞானி என்று நினைத்திருந்தேன்...நேற்றுத் தான் தேவேந்திரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று தெரியும்...குட்டி பாடல் வரிகளை எழுதினதிற்கு நன்றி

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

நான் அச்சாப் பிள்ளை அண்ணா :lol: :lol: :D என்ன கதை அண்ணா கேள்விப்பட்டனீங்கள்?

Link to comment
Share on other sites

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

காதல் உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் நன்றி :D

Link to comment
Share on other sites

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

கு.சா. அண்ணா எனக்கும் ஐமிச்சமாகிடக்கு... நீங்கள் குறிப்பிட்ட 'உங்களை' என்பது ஒருமையா? பன்மையா? ^_^:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் படத்திலிருந்து இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்;

http://www.youtube.com/watch?v=xlJBzOKTblU

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கன்னத்தின் முத்தத்தின் ஈர‌ம் அது காயவில்லையே

கண்களில் ஏன் உந்த கண்ணீர் அது யாராலே?

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப் போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதர‌வாய் சாய்ந்து விட்டால் ஆரிவரோ பாடு

ஆரிர‌ரோ...இவர் யார் எவரோ?...பதில் சொல்வார் யாரோ?

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு தாளம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஒசை இசையாகதோ

மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப் பூ வாச‌ம்

ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்...இளம் காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டு

ஆஆஆ...

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா

கள் இருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா

இராப் போது ஆனால் உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட‌ ஆகாத ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே

இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே

நிலாவை நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா

சித்தாடைவே கட்டியே கையில் வந்து முட்டாதா

ஆத்தோர‌ம் நாணல் பூங்காத்தோடு ஆட‌

ஆவார‌ம் பூவில் அது தேவார‌ம் பாட‌

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம் இந்த ஜீவன் நான்

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்டுதா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மந்திரப் புன்னகை என்னும் படத்தில் இருந்து வித்தியாசாகரின் இசையில் மதுபாலக்கிருஸ்ணன்,அனுசியா[அறிமுகப் பாடகி] பாடிய பாடல் இது;

மேகம் வந்து போகும்

தாகம் வந்து போகும்

மோகம் வந்து போகும்

காதல் வந்தால் போகாது....

இப் பாடகிக்கு அருமையான குரல்வளம் :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி,ஜேசுதாஸ்,எஸ்பிபி ஓரே மேடையில்;

http://www.youtube.com/watch?v=6t69lg934HM&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்துபைரவி படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் ஜேசுதாஸ் பாடிய அற்புதமான பாடல் ...இந்தப் படத்தின் எல்லாப் பாட்டும் அருமை...ஜேசுதாசுக்கும்,சித்ராவிக்கு தேசிய விருது இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது...இனிமையான இசைக்காகவும்,ஜேசுதாசின் குரலுக்காகவும் இந்தப் பாட்டை ரசிக்கலாம்.

தொம் தொம் நந்த தொம் தொம் தொம்தநந்த தொம் தொம்(2)

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து,வெந்து உருகும்

வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்

மோகம் என்னும் மாயைப் பேயை நானும் கொன்று போட‌ வேண்டும்

இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்

தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேர‌ம் நேர‌ம்

தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்

மனதில் உனது ஆதிக்கம்...இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்

கிர‌கம் இர‌வை சோதிக்கும்...கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்

ஆசை என்னும் புயல் வீசி விட்டததடி...ஆனி வேர் வரையில் ஆடி விட்டதடி....காப்பாயடி காப்பாயடிடிடி...........

தானந்த தானத் தம்தம் தானந்த தானத் தம்தம் ஆனந்தம்

ஆனந்த தானத் தம்தம் ஆனந்த தானத் தம்தம் ஆனந்தம்

தொம்த தொம்தன தொம்த தொம்தன தொம்ததனதொம்(2)

தொம் தொம் தொம்.......................தொம்தனன தொம் தொம் (2)

ஆ.......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜோடி படத்தில் இருந்து சீனிவாஸ்,சுஜாதா பாடிய பாடல்;

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான் தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்(2)

பூக்கள் உன்னால் சந்தம்

அது மெளனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்ச‌ம்

இதைத் தாங்குமா என் நெஞ்ச‌ம்

உண்மையும்,பொய்மையும் பக்கம் பக்கம் தான்

ரொம்ப பக்கம் பக்கம் தான்

பார்த்தால் இர‌ண்டும் ஒன்று தான்

பாலுக்கும்,கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான்

பார்க்கும் கண்கள் ஒன்று தான்

உண்டால் இர‌ண்டும் வேறு தான்

மிச்சம் எழுத பஞ்சியாய் இருக்குது

Link to comment
Share on other sites

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

மிச்சம் எழுத பஞ்சியாய் இருக்குது

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் சிணுங்கி திரைப் படத்தில் இருந்து என் மனதைக் கொள்ளை கொண்ட பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளி வர இருக்கும் படமான "டேஞ்சரஸ் இஸ்க்" என்னும் படத்தில் இருந்து ஹிமேசின் இசையில் ஹிமேசும்,ஸ்ரேயா கோஸ்ஸால்,ராகட்படஅலிகான் ஆகியோர் பாடிய பாட்டு

http://www.youtube.com/watch?v=S6B9wo1cQDo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்காடித் தெரு திரைப்பட‌த்தில் இருந்து ஜீவி பிர‌காஸ்,விஜய் அன்ர‌னி சேர்ந்து இசையமைத்து[இருவரில் யார் இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது?] பிர‌ச‌ன்னா பாடிய பாட‌ல் இது;

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.[2]

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை...அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை...நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை.

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை...அவள் பொம்மை போல பிறக்கவில்லை.

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை...அந்தக் காற்றில் தொலைந்தேன் மீளவில்லை.

அவள் கைவிர‌ல் மோதிர‌ம் தங்கமில்லை...கை பிடித்திடும் ஆசையில் தூங்கவில்லை.

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...எனக்கு எதுவுமில்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் பட்டுப் புட‌வை என்றும் அணிந்ததில்லை...அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை.

அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை...அந்த அக்கறை போல வேறு இல்லை.

அவள் வாச‌ம் ரோஜா வாச‌மில்லை...அவள் இல்லாமல் சுவாச‌ம் இல்லை.

அவள் சொந்தம்,பந்தம் எதுவுமில்லை...அவள் சொந்தமின்றி எதுவும் இல்லை.

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...எனக்கு எதுவும் இல்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை...அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அமர்க்களம் படத்தில் இருந்து [இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் அஜித் சாலினி காதலித்து கல்யாணம் கட்டினார்கள்...இந்த படம் வரைக்கும் அஜித் நல்ல வடிவு :lol: ] பரத்வாஜின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டு;

http://www.youtube.com/watch?v=2dFfc4JbKtY&feature=related

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றெண்டும் வேகம் கேட்டேன்

ர‌கசியம் இல்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்

உப்பை கண்ணீர் துளியைக் கேட்டேன்

வரிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்

வயதிற்கு சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்

நிலைமை கெடாத மோகம் கேட்டேன்

பறந்து பறந்து நேசம் கேட்டேன்

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்

பூவின் மடியில் படுக்கை கேட்டேன்

தானே உறங்கும் விழியைக் கேட்டேன்

தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்

நீலக்குயிலின் பாடல் கேட்டேன்

நடந்து போக நதிக்கரை கேட்டேன்

கிடந்து உருள புல்வெளி கேட்டேன்

போர்த்துப் படுக்க நிலைவைக் கேட்டேன்

எட்டிப் பறிக்க விண் மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்

தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்

பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்

பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகிற்கெல்லாம் சம மழை கேட்டேன்

ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

வானம் முழுக்க நிலவை கேட்டேன்

வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்

எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்

காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்

சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

உச்சம் தலை மேல் மழையைக் கேட்டேன்

உள்ளம் கால் மேல் நதியைக் கேட்டேன்

பண் கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்

பறவைக் இருக்கும் மானம் கேட்டேன்

நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்

நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்க கேட்டேன்

மழையின் சங்கீதம் ருசிக்க கேட்டேன்

நிலவில் நதியில் குளிக்க கேட்டேன்

நினைவில் சந்தனம் மணக்க கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்

அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏதாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்

எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்

சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்

ராஜ ராஜனின் வாளைக் கேட்டேன்

வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்

பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்

மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்

மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்

தொட்டு கொள்ள பாசம் கேட்டேன்

மழையைப் போன்ற புல்லைக் கேட்டேன்

புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்

இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்

துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்

தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

சொன்னால் தாவும் வேகம் கேட்டேன்

கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் காலைக் கேட்டேன்

சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

சீக்கிரம் ஆறுக் காயம் கேட்டேன்

மூடியில்லாத முகங்கள் கேட்டேன்

போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவளும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்

ஜந்து வயதில் புத்தகம் கேட்டேன்

ஆறாம் விரலாம் பேனா கேட்டேன்

காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையனை வேண்டாம் தாய்மடி கேட்டேன்

கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்

குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இதிலே எதுவும் நடக்கவில்லை

வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று

மரணம் மரணம் மரணம் கேட்டேன்....ஏஏஏ....

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

:D :D

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி துளசி

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qLSICRYOJyo&feature=related

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் பழகி கிட்டால் அது காதலாகுமா?

அது ஆயுள் முழுக்க தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நட‌க்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண்,பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து பூமியைக் கட்டி நீ இருத்து

நட்பு நட்பு தான்,காதல் காதல் தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை

காதலின்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லியதில்லை

நீயும்,நானும் பழகுறமே காதலாகுமா?

இது ஆயுள் முழுக்க தொட‌ர்ந்தாலும் நட்பு மாறுமா?

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நீயும்,நானும் வெகு நேர‌ம் மனம் விட்டு பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுது சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?

புரிதலில் காதல் இல்லையடி,பிரிதலில் காதலை சொல்லி முடி

காதல் காதல் தான்...நட்பு நட்பு தான்

நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதையினை சொல்லும்

பிரியமான காதல் கூட‌ பிரிந்த பின் கணமாய் கொல்லும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவுத் தோழா

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
சமீபத்தில் வந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்."3 பேர் 3 காதல்" படத்தில் இருந்து[ படம் ஒரு சொதப்பல்] யுவனின் இசையில் நேகா பாசின் பாடியுள்ளார்.இவருக்கு அருமையான குரல் ஆனால் உச்சரிப்பு கொஞ்சம் சரியில்லை.
 

http://www.youtube.com/watch?v=yUDUcOaSs_o

 

 

காதல் எந்தன் காதல் என்ன ஆகும் நெஞ்சமே
காணல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கணம் பார்த்ததும் வியர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்(2)
 
காதல் செய்யும் இம்சை போல வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பின் உள்ளே பரமபதம் தான் வாழ்க்கையே
 
ஒருமுறை உந்தன் தோளில் சாய்ந்திட‌ வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கிப் போவேன்
உன் விர‌ல்களை கோர்த்து செல்லும் மர‌ம் கூட‌ போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே செத்துப் போவேன்
 
விரும்பிய உன்னை தொட்டுக் காட்டும் வழியில் தொலையாமல் 
என்னைத் தொடுமோ வாச‌ம் தருமோ
ஜயோ என்ன ஆகுமோ
 
காதல் எந்தன் காதல் என்ன ஆகும் நெஞ்சமே
காணல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கணம் பார்த்ததும் வியர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் நடிகர்கள் இப்படி ஒரு பாட்டுக்கு தன்னும் சேர்ந்து ஆடுவார்களா
 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

"சைவம்" படத்தில் இருந்து ஜி.வி பிரகாஸ்குமாரின் இசையில் உதித்திரா உன்னிக்கிருஸ்ணன் பாடிய அருமையான பாடல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.