Jump to content

ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்ப்பது தற்கொலைக்கு ஒப்பானது! -இரா.துரைரத்தினம்.


Recommended Posts

sampanthan-and-ranil1-150x150.jpgஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மேதின ஊர்வலத்தை நடத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் என சொல்வதை விட சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்பில் இருந்து எடுத்த தீர்மானம் என சொல்வதே பொருத்தமானதாகும்.

ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி இத்தீர்மானம் எடுக்கப்படவில்லை. மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கூட இது தொடர்பாக சிலர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் அந்த ஆட்சேபனை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மேதினத்தை ஐ.தே.கவுடன் இணைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கேள்வி எழுப்பபட்ட போது மாவை சேனதிராசா அளித்த பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்தினால் பாதுகாப்பு இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பெரிய கட்சிகளுடன் நடத்தினால்தான் பாதுகாப்பு என்ற மாவை சேனாதிராசாவின் பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இலக்கை விட்டு தடம்மாறி செல்கிறதோ என்ற ஆதங்கம் என்போன்றவர்களுக்கு ஏற்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்ன, அது என்ன நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எந்த ஒரு கட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பேரினவாத கட்சிகளோடு கைகோர்க்க முடியுமா? போன்ற விடயங்களை நாம் ஆராய்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேதினத்தை நடத்த எடுத்திருக்கும் தீர்மானம் தற்கொலைக்கு சமமான முயற்சி என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் மக்களும் கடந்த 60வருடங்களுக்கு மேலாக மாறிமாறி ஆட்சி செய்து வந்த சிறிலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள், இனஅழிப்புக்கள் என்பவற்றை இங்கே பட்டியல் இடுவது நேரவிரயத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த காலகட்டத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்க முடியாது என்பதற்கான சில காரணங்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.

ஐக்கிய தேசியக்கட்சியினால்தான் மிகப்பெரிய வரலாற்று அழிவுகளும், கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டன. தமிழர்களை ஒடுக்குவதற்கும் அழிப்பதற்கும் என்றே கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவந்ததே ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம்தான். இந்த சட்டத்தின் கீழ்தான் ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டன. வகைதொகையின்றி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள். இன்றும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து மேதினத்தை நடத்த நினைக்கும் மாவை அண்ணன் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை இருந்ததும் சித்திரவதை அனுபவித்ததும் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க காலத்தில்தான்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் காணலாம்.

அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் எப்படி கைகோர்க்க முடிகிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன சப்பை கட்டை கட்டினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

1977ஆம் ஆண்டு போரா சமாதானமாக என்ற தமிழ் மக்களுக்கு எதிரான போர்ப்பிரகடனத்தை வெளியிட்டு தமிழினப்படுகொலையை ஆரம்பித்த ஜே.ஆர்.தொடக்கம் இன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரை தமிழின அழிப்புக்களை நான் பட்டியல் இட்டுத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருந்தாலும் படுகொலை விபரங்களை தராவிட்டாலும் எந்த ஆண்டில் எங்கெங்கு படுகொலை நடந்தது என்ற விபரங்களை மட்டும் சுருக்கமாக தருகிறேன்.

இனப்படுகொலைகள் 1977ஆம் ஆண்டு இனப்படுகொலை, 1981ஆம் ஆண்டு இனப்படுகொலை, 1983இனப்படுகொலை, 1990ஆம் ஆண்டு படுகொலைகள் என 91 கிராமங்களில் கூட்டுப்படுகொலைகளை நடத்தி இன அழிப்பை நடத்திய பெருமை ஐக்கிய தேசியக்கட்சியையே சாரும், ஒருபுறத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இனஅழிப்பை செய்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி மறு புறத்தில் மிகப்பெரிய சொத்தான யாழ். நூலகத்தையும் அழித்தது. யாழ். நூலகத்தை அழித்து போன்ற கொடுமைக்கு எந்த காலத்திலும் எந்த விதத்திலும் ஐக்கிய தேசியக்கட்சியால் பரிகாரம் செய்து விட முடியாது.

ஒவ்வொரு தமிழனும் இந்த உலகில் இருக்கும் வரை இந்த கொடுமைகளை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களின் பூர்வீக தாயத்தை சிங்கள தேசமாக மாற்றுவதில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய தேசியக்கட்சிதான்.

1983ஆம் ஆண்டு யூலை 24ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலி படுகொலை, தொடக்கம் சாம்பல்தோட்ட படுகொலை,(1984) சுன்னாகம் சந்தை படுகொலை, (1984) பருத்தித்துறை திக்கம் படுகொலை, (1984) ஓதியமலை படுகொலை, (1984) குழுழமுனை படுகொலை, (1984) செட்டிக்குளம் படுகொலை, (1984) மணலாறு மற்றும் தென்னமரவாடி படுகொலை, (1984) மன்னார் முருங்கன் படுகொலை, (1984) கொக்குளாய் படுகொலை, (1984) வங்காலை தேவாலயப்படுகொலை, (1986) முள்ளியவளை படுகொலை (1985) வட்டக்கண்டல் படுகொலை, (1985) புதுக்குடியிருப்பு ஜயன்கோவிலடிப்படுகொலை, (1985) திருமலை படுகொலை (1985) வல்வெட்டித்துறை படுகொலை( 1985) குமுதினி படகு படுகொலை (1985) கிளிவெட்டி படுகொலை (1985) திரியாய் படுகொலை (1985) சாம்பல்தீவு படுகொலை (1985) நிலாவெளி படுகொலை (1985) பிரமந்தனாறு படுகொலை ( 1985) கந்தளாய் படுகொலை ( 1985) மூதூர் கடற்கரைச்சேனை படுகொலை ( 1985) வயலூர் படுகொலை ( 1985) பெரியபுல்லுமலை படுகொலை ( 1986) கிளிநொச்சி ரயில்நிலைய படுகொலை ( 1986) உடும்பன்குளம் படுகொலை ( 1986) ஈட்டிமுறிச்சான் படுகொலை ( 1986) ஆனந்தபுரம் செல்வீச்சில் நடத்தப்பட்ட படுகொலை ( 1986) மண்டைதீவுக்கடல் படுகொலை (1986) சேருவில் படுகொலை ( 1986) தம்பலகாமம் படுகொலை ( 1986) பரந்தன் விவசாயிகள் படுகொலை ( 1986) பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை ( 1986) தட்டுவான்படுகொலை ( 1986) மூதூர் மணல்சேனை படுகொலை ( 1986) அடம்பன் படுகொலை (1986) பெரிய பண்டிவிரிச்சான் படுகொலை ( 1986) கொக்கட்டிச்சோலை இறால்பண்ணை படுகொலை ( 1987)பட்டித்திடல் படுகொலை (1987) தோணிதாண்டமடு படுகொலை ( 1987) அல்வாய் முத்துமாரி அம்மன் செல்வீச்சு படுகொலை ( 1987)

வீரமுனை படுகொலை ( 1990) கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம்படுகொலை ( 1990) சத்துருக்கொண்டான் படுகொலை ( 1990) சம்மாந்துறை சேவியர்புரம் படுகொலை ( 1990) சித்தாண்டி படுகொலை (1990) பரந்தன் சந்தி படுகொலை ( 1990) பொத்துவில் படுகொலை( 1990) திராய்கேணி படுகொலை ( 1990) கல்முனை படுகொலை ( 1990) துறைநீலாவணை படுகொலை ( 1990) ஏறாவூர் 5ஆம் குறிச்சி படுகொலை (ஓகஸ்ட்,1990) ஏறாவூர் படுகொலை ( ஒக்டோபர் 1990) கோரவெளி ஈச்சையடித்தீவு படுகொலை ( 1990) நெல்லியடி சந்தைப்படுகொலை (1990) நற்பிட்டிமுனை படுகொலை,( 1990) ஒட்டிசுட்டான் படுகொலை ( 1990) புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை ( 1991) கொக்கட்டிச்சோலை படுகொலை( 1991) புல்லுமலை படுகொலை ( 1990) கிண்ணயடி படுகொலை ( 1991) கரப்பொழை முத்துக்கல் படுகொலை ( 1992) தெல்லிப்பளை ஆலயப்படுகொலை ( 1992) மைலந்தனை படுகொலை ( 1992) கிளாலிப்படுகொலை ( 1993) மாத்தளன் படுகொலை ( 1993) கொக்குவில் ஆலயப்படுகொலை ( 1993) குருநகர் தேவாலயப்படுகொலை ( 1993) சுண்டிக்குளம் மீனவர் படுகொலை( 1993)

இதில் உதிரிகளாக படுகொலை செய்யப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை. இதைவிட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், இன்னமும் சிறையில் வாடுவோர் வகைதொகை இல்லை. இந்த படுகொலைகளினால் ஓடிய இரத்தம் வடக்கு கிழக்கில் இன்னமும் காயவில்லை. அந்த இரத்தங்களும் காயங்களும் ஆறுவதற்கு முன்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் எப்படி ஐக்கிய தேசியக்கட்சியுடன் கைகோர்க்க முடிகிறது?

இன்று வடக்கு கிழக்கு பிரிப்பதற்கும், வடக்கு கிழக்கு புவியியல் ரீதியாக இணைந்த தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதை மாற்றும் வகையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி இன்று வடக்கையும் கிழக்கையும் பிரித்திருப்பது ஐக்கிய தேசியக்கட்சிதான். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் மணலாறு பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி அதன் பெயரை வெலிஓயா என பெயர்மாற்றம் செய்து அப்பிரதேசத்தை அனுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது ஐக்கிய தேசியக்கட்சிதான். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வடக்கு கிழக்கு புவியியல் ரீதியாக இப்போது இணைந்ததாக இல்லை. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாறு ( வெலிஓயா) இப்போது அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், எங்களுடைய பிள்ளைகளான போராளிகளையும் முற்றாக அழித்தது மகிந்த தலைமையிலான அரசாக இருக்கலாம். ஆனால் அந்த அழிப்பிற்கு வித்திட்டு பாதை அமைத்து கொடுத்தவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்க்க நினைக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கிழக்கில் ஏற்பட்ட பிளவே அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கியகாரணம் என சொல்லப்படுகிறது. அந்த பிளவை வெற்றிகரமாக செய்து முடித்தவர் ரணில் விக்கிரமசிங்கதான். ரணில் விக்கிரமசிங்காவின் ஆலோசனைப்படி ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களாக இருந்த அலிசாகிர் மௌலானா, ராஜன் சத்தியமூர்த்தி, அப்போது அரசாங்க அதிபராக இருந்த மௌனகுருசாமி உட்பட ஒரு குழுவே திட்டமிட்டு பிளவை ஏற்படுத்தினார்கள். ( இந்த பிளவும் அதன் பின்னால் இருந்த சதியும் பற்றி தனியாக ஆராயப்படவேண்டும்)

இழந்த உரிமைகளை பெறுவதில் தமிழ் கட்சிகள், குழுக்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஆனால் தமிழர்களுக்கு உரிமையை வழங்க கூடாது என்பதில் சிங்கள பேரினவாத கட்சிகள் மிக ஒற்றுமையாகவே உள்ளன. அது சிறிலங்கா சுதந்திரக்கட்சியாகவோ, ஐக்கிய தேசியக்கட்சியாகவோ, ஜே.வி.பியாகவோ அல்லது ஜாதிக கெல உறுமய ஆக இருக்கலாம். அனைத்து சிங்கள கட்சிகளுக்கும் இடையில் ஆட்சியை பிடிப்பதில் போட்டியிருந்தாலும், தமிழர்களுக்கு உரிமையை வழங்க கூடாது என்பதில் அவர்கள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்தும் நோக்கம் என்ன?

தேசியக்கட்சிகள் வடக்கு கிழக்கில் அரசியல் தளங்களை பதிக்க வேண்டும். இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் தேசியக்கட்சிகளின் பலம் இருக்க வேண்டும் என அண்மையில் மகிந்த ராசபக்சவும் பஷில் ராசபக்சவும் கூறியிருந்தனர். அவர்கள் கூறியதற்கு முக்கிய காரணம் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கும் பலத்தை உடைத்து தேசியக் கட்சிகள் என்று அவர்கள் கூறும் சிங்கள பேரினவாத கட்சிகளான சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் வடக்கு கிழக்கில் பலம்பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் இதனை கூறியிருந்தனர். இதன் ஒரு அங்கமாகவே ஐக்கிய தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் மேதினத்தை கொண்டாட முன்வந்தது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தன்னுடன் சேர்த்துக்கொண்டது.

எவ்வாறு டக்ளஸ் தனது கட்சியின் அடையாளத்தை இழந்து வடக்கில் அரசியல் நடத்துவது போல, பிள்ளையானும், கருணாவும் தங்களது சுயத்தை இழந்து அரசியல் நடத்துவது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள பேரினவாத கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தனது சுய அடையாளத்தை இழக்கப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றமும் நோக்கமும்

தேர்தலில் வெற்றிபெற்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சலுகைகளை அனுபவிப்பதற்காக மட்டுமோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வைத்தான் தமிழர்கள் கோர வேண்டும் என பேசித்திரிவதற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்படவில்லை.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் சம்பந்தன் போன்றவர்கள் சந்திரிக்காவின் சீலையை பிடித்துக்கொண்டு திரிந்த காலத்தில்…. தமிழ் மக்களுக்கு உறுதியான ஒரு அரசியல்தலைமை இருக்க வேண்டும் என்ற சிந்தனையே அற்று நீலனும், சம்பந்தனும், ஆனந்தசங்கரியும், சந்திரிக்கா கொடுத்த குண்டு துளைக்காத காரில் பவனி வந்து கொண்டிருந்த காலத்தில் எந்த அரசியல் இலாப நோக்கமும் இன்றி ஒரு சிலர் 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக எடுத்த அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது.

ஆயுதப்போராட்டம் ஒரு புறத்தில் நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட, சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தலைமை ஒன்றின் தேவை கிழக்கு மாகாணத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமும், தமிழர் மறுமலர்ச்சி கழகமும் தொடர்ச்சியாக நடத்தி வந்த கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மூலம் உணரப்பட்டது. இதனைத்தொடர்ந்தே தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின. இதன் தொடர்ச்சியாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. ( இது தொடர்பான முழுமையான வரலாறு எழுதப்படும் போது இதை பலரும் அறிந்து கொள்வர்)

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என்று சொல்லும் சம்பந்தனுக்கோ அல்லது இப்போது இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கைகோர்த்து கொஞ்சிக்குலாவ வேண்டும் என நினைப்பவர்களுக்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை யார் முன் மொழிந்தார்கள் என்றோ அது எங்கே எப்போது நடத்தது என்றோ தெரியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு கிராமத்தில் வாவி ஓரம் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில்தான் 2000ஆம் ஆண்டு மாலை வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் முன்மொழியப்பட்டது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் நண்பர் சிவராம், இப்போது வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம், ஆகியோரே அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு இயங்குவது என்றும் பதிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஆங்கில பதம் ரி.என்.ஏ என அழைப்பதென்றும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. இந்த ரி.என்.ஏ. என்ற பதத்தின் பின்னல் பல விடயங்கள் அப்போது பேசப்பட்டது.

அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமும் அதன் பயணமும் இலட்சியமும் இலக்கும் என்ன என்பவற்றை உள்ளடக்கி அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. அதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது அறிக்கையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என இப்போது அழைத்து கொள்பவர்கள் முதலில் அந்த அறிக்கையை படிக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் தலைமையின் இலக்கு என்ன இலட்சியம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் எது? எதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாருக்கு பின்னாலும் செல்லாது, தனித்துவமாக நின்று ஆயுதப்போராட்டத்தை நடத்தியதால்தான் விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். அதுபோல எந்த ஒரு பேரினவாத கட்சிகளுக்கு பின்னாலும் சலுகைகளுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ செல்லாது உறுதியான தனித்துவமான தமிழ் அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்தார்கள்.

வீதியை போட்டுத்தருவார்கள், வேலைவாங்கித்தருவார்கள், என்ற நோக்கத்தோடு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்யவில்லை.

பேரினவாத கட்சிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும், எங்களை அழித்தவர்களுக்கு வாக்குகளின் மூலம் பதில் சொல்வோம் என்ற உறுதியுடன் தான் கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். தமிழ் மக்களின் இந்த உறுதியையும் உயர்ந்த இலட்சியத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறந்து வேறு திசையில் செல்கிறதோ என்ற ஏக்கமும் வேதனையுமே என்னைப்போன்ற பலரிடமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் மேதினத்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிய ஒரு காரணம். யாழ்ப்பாணத்தில் எங்களால் தனியாக மேதினத்தை நடத்த முடியாது. பாதுகாப்பு இல்லை. ஐக்கிய தேசியக்கட்சி போன்ற பெரிய கட்சிகளுடன் நடத்தினால்தான் பாதுகாப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவித்த கருத்து தமிழ் மக்களை வெட்கித்தலைகுனிய வைப்பதாகவே உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் தனியாக மேதினத்தை நடத்துவதற்கு பாதுகாப்பில்லை. அச்சுறுத்தல் இருக்கிறது என கண்டால் அதை மக்களுக்கு சொல்லிவிட்டு மேதினத்தை நடத்தாமல் இருப்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கௌரவம். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசியல் தலைமை ஒன்றிற்கு சுதந்திரமாக தனது பிரதேசத்தில் மேதின கூட்டத்தை நடத்த முடியாத ஒடுக்குமுறை ஆட்சிதான் உள்ளது என்பதை தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்லிவிட்டு மேதின கொண்டாட்டங்களிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கியிருக்க வேண்டும்.

மிகப்பெரிய படுகொலைகளையும் ஒடுக்குமுறைகளையும் செய்து தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பறித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்க்குமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

உயர்ந்த இலட்சியத்திற்காகவும், தமிழ் மக்களின் விடுதலை என்ற உயரிய இலக்கை நோக்கியும் அமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவறான வழிக்கு கொண்டு சென்றால் அதற்கான தண்டனையை தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வழங்குவார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள நினைத்தால் அதற்கு முதல் ஐக்கிய தேசியக்கட்சி செய்த அத்தனை தமிழின அழிப்புக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்

ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்க்குமாக இருந்தால்……. 1994க்கு பின்னர் தமிழ் மக்களை கொன்றொழித்து வரும் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்திருந்து மகிந்தவின் காலடியில் கிடக்கும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் என்ன வித்தியாசம்?

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவதற்கு ஒரு துளி நியாயத்தை கூட அவர்களால் தமிழ் மக்கள் முன் வைக்கமுடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் எடுத்திருக்கும் தற்கொலை முயற்சியை கட்சியில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் தமிழ் மக்களும் தடுத்து நிறுத்தப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இறுதியாக ஒன்றை சொல்லிவைக்க விரும்புகிறேன்…

தமிழ் மக்கள் வெறும் ஆட்டுமந்தைகள் அல்ல.

இரா.துரைரத்தினம்

www.Thinakathir.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.