Jump to content

கனடா : நாளை ஆதரவுப்பேரணி


Recommended Posts

அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தும் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் இடம்பெறுகின்ற ஆதரவுப் பேரணி

மார்ச் 22.2012

அமெரிக்க தீர்மானத்தைஆதரித்தும்சுயாதீனவிசாரணையைவலியுறுத்தியும்இடம்பெறுகின்றஆதரவுப் பேரணி

இன்று 22.மார்ச்.2012 வியாழக்கிழமை ஐ.நா சபையின் 19வது மனிதவுரிமை அமர்வில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர்தேசிய அவை உலக அரங்கிலே எம்மினத்தினுடைய விடிவைநோக்கிய பயணத்தின் முதற்படியாகப்பார்க்கின்றது. இலங்கை அரசு பெருமளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தீர்மானம்தோல்வியுறச் செயற்பட்டபோதும் அமெரிக்க அரசின் பெருமுயற்சியினாலும் நாம் வாழும் நாடாம்கனடாவின் பூரண ஒத்துழைப்பாலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கு ஆதரவு தெரிவிக்குமுகமாகவும் மென்மேலும் சர்வதேச அளவில் எம்மினத்தின் விடிவைநோக்கிய நகர்விற்கு அமெரிக்க அரசு ஆக்கபூர்வமான செயற்பாடுகளைமேற்கொள்ளு முகமாகவும் நாளைய நாள் கனடியத் தமிழர் சமூகத்தாலும் மாணவர் சமூகத்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆதரவுப் பேரணி ஒன்று ரொறன்ரோ மொன்றியல் மாநிலங்களில் உள்ளஅமெரிக்கத் துணைத்தூதரகங்களுக்கு முன்பாக காலை 11.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றமுன்பாகஎதிர்வரும் ஏப்பிரல் 2ந் திகதி திங்கட்கிழமை மாபெரும் மக்கள் பேரணியும் நடைபெறவுள்ளது.

இவ்விரு பேரணிகளிலும் கனடாவாழ் தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டுகனடிய அரசிற்கும் மனிதாபிமானமுறையில் செயற்பட்ட அத்தனை நாடுகளுக்கும் எமதுநன்றியினைத் தெரிவித்துக்கொள்வதுடன் மென்மேலும் உலக அரங்கில் எம்மினத்தின் விடிவைநோக்கிய பயணத்திற்கு உலகநாடுகளின் ஆதரவினைவேண்டி நடைபெறுகின்ற பேரணியில் கனடாவாழ் தமிழ் மக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமெனக் கனடியத் தமிழர்தேசிய அவை வேண்டிநிற்கிறது.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

தொலைபேசி :– 1.866.263.8622 - 416.646.7624

மின்னஞ்சல் :- info@ncctcanada.ca

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.