Jump to content

அடி...ஆத்தி..நிசம்மாவா..??


Recommended Posts

 

அடி ஆத்தி நிஜமாத்தான். அட்ரா சக்கை அட்ரா சக்கை சக்கை சக்கை.....

கெலியிலிருந்து இஸ்டைலாக கூலிங்க் கிளாசுடன் இறங்குபவரை பார்த்தால் சாட்சாத் பிரிகேடியர். சக்கை சியாம் மாதிரியல்லவா இருக்கிறது?  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படமாக்கலில் 'ரியலிசம்' இல்லையென்றாலும், பாடல் நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் பிறந்த எவணொருவனும் இப்படியான அரவேக்காட்டுத்தனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

இது அபத்தத்தின் உச்சம்.

 

கல்விவியாபாரம் செய்யும் வேந்தர்மூவிஸ் உரிமையாளருக்கு, கலையில் -----  செய்ய ஒரு பிஞ்சின் மரணம் தேவைப்பட்டிருக்கு.

 

இவங்களெல்லாம் சோத்துக்குப்பதிலாக .....யைத் திங்கிறாங்களா?

 

எப்போதடா அந்தப்பையன் சீருடையில தென்பட்டான் உங்கள் கண்களுக்கு. சிங்களவன் கொன்றதுக்குக் நியாயம் கற்பிக்கிறார்கள் ஊடக ----.

Link to comment
Share on other sites

பாலச்சந்திரனை இராணுவ சீருடை அணிந்த போராளியாக சித்திகரித்து, இலங்கை இராணுவத்தின் படுகொலையை நியாயப்படுத்த முயல்கின்றனர் இங்கு. ஒரு போர்க்குற்றத்தினை மலினப்படுத்தி குற்றவாளிகளின் மொழியில் திரைப்படம் எடுக்கின்றனர்.

 

இச் சினிமாவுக்கு எதிராக அனைத்து தமிழ் மக்கள் பிரிவினரும் தம் கடுமையான கண்டனத்தினை பதிவு செய்ய வேண்டும். இப்படியான மலினமான சித்திகரிப்புகள் எதிர்காலத்தில் புதிய தலைமுறையினருக்கு தவறான புரிதல்களைக் கொடுத்து விடும்.

 

எம் கண்ணீரும், இரத்தமும், துயரமும் வெறும் வியாபாரப் பொருட்கள் அல்ல.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுத நினைத்ததை நிழலி எழுதி விட்டார்.சிங்களவன் செய்ததை நியாயப்படுத்த சிங்களவன் தேவையில்லை.இப்படியான கேணைகளே போதும். நம் தமிழர் போன்றவர்கள் இப்படியான படத்தையெல்லாம் எதிர்க்க மாட்டார்கள்.மாறாக ஒரு சிங்களவர் உருப்படியாக ஒரு படம் எடுத்தால் அதில் எங்கே பிழை பிடிக்கலாம் என்று காத்திருப்பார்கள்...இப்படியான படங்கள் எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் அவர்களுக்கு கவலை இல்லை உசுப்பேத்தல் மட்டும் இருந்தால் போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசங்களில் சில்வர் ஜூப்ளிதான் என்று படம் எடுக்கின்றார்களோ என்னவோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலை மதிக்க முடியாத தியாகங்களை இரண்டு தரப்பு.. தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு.. கொச்சைப்படுத்திக் கொண்டு திரிகிறார்கள். இந்த இரு தரப்பினர் குறித்தும் மக்கள் மிக விழிப்போடு இருக்க வேண்டிய காலம் இது.!!!!!

 

1. முன்னாள் இயக்கம்.. இயக்க ஆட்கள்.. (ஒட்டுக்குழுக்களை சார்ந்தோரும்) என்று சொல்லிக் கொண்டு எமக்குள் உள்ள ஒரு குறூப்.

 

2. சினிமா உலகத்தினர். அது.. சிங்கள சினிமாவா இருக்கட்டும்.. மலையாளமா இருக்கட்டும்.. ஹிந்தியா இருக்கட்டும்.. தமிழாக இருக்கட்டும்...

 

தென்னிந்திய தமிழ் சினிமா உலகம்.. இன்னும் எமது போராட்டத்தை மக்களின் உணர்வுகளை சரியாக இனங்காணவும் இல்லை.. இனங்காட்டவும் அதுக்கு திராணி இல்லை.. என்பதை தான் இப்படம் இனங்காட்டுகிறது.

 

தமிழக சினிமா மோக மக்களிடம் மாயை உணர்ச்சிகளை கிளறிவிட்டு.. காசு பார்ப்பது எல்லாம் வரலாற்றுப் பதிவைச் செய்வதாகி விடாது.

 

இப்படத்துக்கு.. வை.கோ.. நெடுமாறன் ஐயா.. சீமான்.. போன்றவர்களிடம் ஆலோசனை பெறப்படுவதாக நக்கீரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. உண்மையில் ஆலோசனைகள் பெறப்படுகின்றனவா.. அல்லது அப்படிச் சொல்லி.. இந்தப் படத்தை புரமோட் பண்ணுகிறார்களா..???!

 

விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு இனத்தின் தேச விடுதலைக்காக போராடிய அமைப்பு. காந்தி தாத்தா தலைமையிலான.. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான ஒன்று. ஏன் அதைவிட அதிக தியாகங்களை வழிகாட்டுதலை மக்களின் விடுதலைக்காக வழங்கிய ஒரு அமைப்பு.

 

அதனை.. எதிரியின்.. ஒரு போர்க்குற்ற நிகழ்வை மக்களுக்கு காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு... சினிமா.. ஹீரோ வில்லத்தனமாக.. சித்தரிப்பது.. போர்க்குற்றங்கள் தொடர்பிலான மதிப்பீட்டை தமிழ் சினிமா உலகம் இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்றே அடையாளப்படுத்துகிறது.

 

மேலும் தேசிய தலைவரை.. யாரும் பிரதியீடு செய்ய முடியாது. அது சினிமாவிலும் கூட. பிரபாகரன் துப்பாக்கி எடுத்து சும்மா.. சுட்டுக்கொண்டு திரிந்த மனிதர் அல்ல. ஒவ்வொரு ரவைக்கும்.. பாவனைக்கும்.. காரணம்.. கணக்குத் தேடும்.. ஒரு விடுதலை அமைப்பின் தலைவர்.  பாலச்சந்திரன் தேசிய தலைவரின் மகனாக இருந்த போதும்.. சாதாரண பள்ளி மாணவனாகவே இறக்கும் வரை வளர்ந்துள்ளார்... வளர்க்கப்பட்டுள்ளார்.

 

தென்னிந்திய சினிமா உலகத்தவர்களே. உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.  ஆனால்.. தவறான தரவுகள் அடங்கிய படங்களை தயாரித்து சர்ச்சைகளையும்.. வாதப் பிரதிவாதங்களையும் வளர்த்துக் கொண்டிருப்பதிலும்.. தயவுசெய்து உங்களால் முடிந்தால்... திறமை இருந்தால்.. சனல் 4 போல் ஆவணங்களை வெளியிடுங்கள். உலகிற்கு தமிழ் மக்களின் நிஜமான உணர்வுகளை பிரதிபலித்து நில்லுங்கள். இனப்படுகொலையாளனை தண்டிக்கத்தக்க... நிஜமான உண்மைகளை திரையில் காட்டி.. உங்களை ஆற்றலையும்.. திறமையையும் உலகம்.. உதாரணமாக்கிக் கொள்ள.. அது எமது இன மக்களின் துன்பங்களை நீக்கி.. விடுதலைக்கு உதவ பக்க பலமாக இருங்கள்..!

 

வை.கோ.. நெடுமாறன்.. சீமான்.. இவர்களை மட்டுமல்ல.. வெளிநாடுகளில்.. எத்தனையோ ஆயிரம் ஈழத்தமிழர்கள்.. போர்க்களத்தில் வாழ்ந்த..நிஜ சாட்சியங்களாக உள்ளனர். அவர்களை அணுகுங்கள்.. அவர்களின் உணர்வுகளை.. சாட்சியங்களை பதிவு செய்யுங்கள். ஈழக் களத்தில் இருந்தான எத்தனையோ நிஜ காட்சிகள் பதிவுகள் உள்ளன. அவற்றை பெறுங்கள்... ஒருங்கிணையுங்கள்.. திரைக்கு மட்டுமல்ல.. உலகின் முன் ஒரு ஆதார ஆவணமாக்கிப் போடுங்கள். அது தான் இன்றைய தேவை. நாளைய சந்ததிக்கும் நிஜத்தை காட்ட உதவும்.

 

சும்மா டூப்பு..  டோப்பு மூலம்.. நிஜத்தை.. போலியாக்க உதவாதீர்கள்..! அதுவே ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.....

 

தென்னிந்திய சினிமா உலகத்தவர்களே. உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.  ஆனால்.. தவறான தரவுகளை அடங்கிய படங்களை தயாரித்து சர்ச்சைகளையும்.. வாதப் பிரதிவாதங்களையும் வளர்த்துக் கொண்டிருப்பதிலும்.. தயவுசெய்து உங்களால் முடிந்தால்... திறமை இருந்தால்.. சனல் 4 போல் ஆவணங்களை வெளியிடுங்கள். உலகிற்கு தமிழ் மக்களின் நிஜமான உணர்வுகளை பிரதிபலித்து நில்லுங்கள். இனப்படுகொலையாளனை தண்டிக்கத்தக்க... நிஜமான உண்மைகளை திரையில் காட்டி.. உங்களை ஆற்றலையும்.. திறமையையும் உலகம்.. உதாரணமாக்கிக் கொள்ள.. அது எமது இன மக்களின் துன்பங்களை நீக்கி.. விடுதலைக்கு உதவ பக்க பலமாக இருங்கள்..!

 

வை.கோ.. நெடுமாறன்.. சீமான்.. இவர்களை மட்டுமல்ல.. வெளிநாடுகளில்.. எத்தனையோ ஆயிரம் ஈழத்தமிழர்கள்.. போர்க்களத்தில் வாழ்ந்த..நிஜ சாட்சியங்களாக உள்ளனர். அவர்களை அணுகுங்கள்.. அவர்களின் உணர்வுகளை.. சாட்சியங்களை பதிவு செய்யுங்கள். ஈழக் களத்தில் இருந்தான எத்தனையோ நிஜ காட்சிகள் பதிவுகள் உள்ளன. அவற்றை பெறுங்கள்... ஒருங்கிணையுங்கள்.. திரைக்கு மட்டுமல்ல.. உலகின் முன் ஒரு ஆதார ஆவணமாக்கிப் போடுங்கள். அது தான் இன்றைய தேவை. நாளைய சந்ததிக்கும் நிஜத்தை காட்ட உதவும்.

 

சும்மா டூப்பு..  டோப்பு மூலம்.. நிஜத்தை.. போலியாக்க உதவாதீர்கள்..! அதுவே ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்..! :icon_idea:

 

Good one. :icon_idea:

 

மேற்கண்ட காணொளியில் தொழில் நுட்பம் சார்த்த பார்வை பார்க்கத் தெரிந்த எனக்கும், அதன் பின்னால் உணர்வுபூர்வமான வரலாற்று உண்மையை நோக்க தவறிவிட்டேன். :(

கவனச் சிதறலுக்கு வருந்துகிறேன்.

 

Link to comment
Share on other sites

http://cinema.dinamani.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82/   போர்க்களத்தில் ஒரு பூ  

porkalathil-oru-poo-movie-300x200.jpgஈழத்தில் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது. ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் கு.கணேசன். இவர் கர்நாடகாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா நடிக்கிறார். இவர் இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக கே.சி.குருநாத் சல்சானி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பார்த்திபன் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கலை துறையை கவனிக்க, சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கு.கணேசனிடம் கேட்டோம்

இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் குழந்தை பருவம் முதல் இளமைப் பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலைவரை கதையாக்கப்பட்டிருகிறது. நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கொண்ட படமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ உருவாகிறது. படத்தின் கதையோட்டத்திற்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இசைப்பிரியாவின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது..” என்றார் கு.கணேசன்.

இந்தப் படத்திற்கு இசைப்பிரியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்பது இன்னுமொரு விஷயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இநத் கேப்பில "கத்தி"யை ரெம்ப கூர்மையா தான் தீட்டுறாங்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள எந்த உணர்வாளர்களாலும் ஈழப்போராட்டம் பற்றி படம் எடுக்க முடியாது ஏனெனில் அவர்கள் அதனை சினிமாவாக பார்க்கிறார்கள் எங்களின் உணர்வுகளை மதிப்பதைவிட அந்த சினிமாவினால் எப்படி பணம் சம்பாதிப்பது என்றுதான் பார்க்கின்றார்கள் இப்படி இருக்கும்போது எப்படி எமது உணர்வு பூர்வமான விடுதலைப் போராட்டத்தை சினிமாவில் சித்தரிப்பார்கள் நாமும் அவர்களிடம் எப்படி அதனை எதிர்பார்க்கமுடியும் 


இவர்களிடம் ஒரு வேண்டுகோள்: உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாது இருங்கள் சகோதரர்களே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.