Jump to content

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிங்கள், நீங்கள் தான் என்பது விடுதலைப்புலிகளின் தலைச்செயலகத்தின் அரசியல் பிரிவினர் என்று கூறாமல் கூறுவது எமக்கு புரிகிறது!!! .. இதற்குதானே நா.க.த.அ இருக்கிறது!! யார் இயக்குகிறார்கள்? எவர் எவர் இதன் பின் புலம் இருக்கிறார்கள்?? ... என ஆயிரம் கேள்விகள் கேட்க்கப்பட்டும் பதில்கள் இன்றுவரை இல்லை!!!

பதில் கேட்டு அதனை என்ன.. சிங்களவனுக்கு கடத்தப் போறீங்களா..! உங்களுக்குத்தானே எதிலும் நம்பிக்கை இல்லையே. பிறகெதற்கு.. கேள்வி.. பதில் எதிர்பார்க்கிறீங்களோ..??! எதிலும் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு பதில் அளிப்பதும் முட்டாள் தனம்..! :lol:

... இங்கு நா.க.த.அ இன் பிரச்சார பீரங்கியான GTV நிர்வாகம், யமனுக்கு ஆப்படித்த கேபியுடன் தொடர்புகளை வைத்திருக்கிறதென்று ஆதாரங்களுடன், ஒரு பேப்பர் செய்தி வெளியிட்டது!!!!! ... அச்செய்தி பொய்யாயின், ஏன் வழக்கு வைக்கவில்லை?

இதை நீங்கள் ஜி ரி வி நிர்வாகத்திடம் போன் போட்டுக் கேளுங்கோ..! ஒரு பேப்பர் வழக்குப் போட செய்தி போடவில்லை. இப்படியும் நடக்கிறதா என்ற கேள்வியை மக்களிடம் கொண்டு வந்தது. அதற்கான பதிலை ஜி ரி வி செயலில் காட்டி விட்டது. ஏமாந்தது நீங்கள்..! ஊரல்ல..! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

Link to comment
Share on other sites

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

மாவீரர்கள்.. தேசியக் கொடி.. தேசியம்.. தமிழீழம்.. தமிழர்கள்.. இவை தொடர்பில் உங்களோடு கருத்தாடுவது.. அநாகரிமானதாகவே தென்படுகிறது. உங்களுக்கும் இவற்றிற்கும் வெகு தூரம். பொறுமையாக பதிலிறுக்க முடியாதவர்கள்.. போர்த்திக்கிட்டு சுருண்டு தூங்குவது நல்லது.

உங்களோடு இதற்கு மேல் கருத்தாட நீங்கள் இராஜதந்திரியும் அல்ல.. நான்.. நாடு கடந்த அரசின் பிரதமரும் அல்ல..! அது அது தன்பாட்டில இயங்கிக் கிட்டு தான் இருக்கும். நீங்கள் திட்டிக்கொண்டே கிடவுங்கோ..!

நன்றி. :)

Link to comment
Share on other sites

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும் இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

Link to comment
Share on other sites

முதலாவது விடயம். எல்லோரும் குழப்பிக் கொள்ளுகின்றீர்கள் போலுள்ளது. தேசியக் கொடி பிடித்தல், பிடிக்காமல் இருத்தல் பற்றியதான தலைப்பு இதுவல்ல. தேசியக் கொடி பிடிக்க வேண்டியதை நானே பல தடவை இங்கே வலியுறுத்திக் கூறியுமுள்ளேன். அது எங்களின் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், முன்பு 2009களில் யுத்தம் நடந்தபோது, மக்களின் படுகொலைகளை நிறுத்த வேண்டிய தருணத்தில் கொடி தொடர்பாக பிரச்சனைகளை முதன்மைப் பிரச்சனையாக உருவாக்கி தங்களை மட்டுமே விடுதலைப் போராட்டத்திற்கான விசுவாசத் தளம் என்றும், கொடி பிடிக்காத மற்றவர்கள் துரோகிகள் என்றும், அவர்களின் சொத்துக்களுக்கு சேதாரம் ஏற்படுத்தியதுமான செயற்பாடுகளின் அடிப்படையில், கடந்த ஒட்டாவா நன்றி கூறலின் போது கொடி பிடிக்காத இவர்கள் எப்படித் துரோகிகள் ஆகவில்லை என்பதே கேள்வி.

அது தான் இங்கு கேட்க முனைந்ததே தவிர, மற்றும்படி எவ்விதத்திலும் தேசியக் கொடி தொடர்பான விவாதமாக இருக்கவில்லை. அது இக்காலத்தில் தேவையுமற்றது.

தூயவனின் கருத்தே எனதும். 2009இல், எமது ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தபோது, அவர்கள் வரமறுத்ததற்கான காரணமே தாங்கள் "புலி முத்திரை" குத்தப்பட்டுவிடுவோம் என்பதுதான். அதனால்தான் அவர்கள் தேசியக் கொடியைத் தவிர்க்கச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அன்று அப்படிச் சொன்னவர்களைத் துரோகியாக்கிவிட்டு இன்று அவர்களே முற்றாக தேசியக் கொடியினைத் தவிர்த்து வருகிறார்கள். அப்படியானால், இப்போது இவர்களும் துரோகிகள்தானே? அவர்களது நிகழ்வுகளில் தேசியக் கொடி இருப்பதில்லை. அலுவலகத்திலாவது இருக்கிறதா என்பதும் சந்தேகமே. யாராவது உறுதிப்படுத்த முடியுமானால் உறுதிப் படுத்துங்கள்.

இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற தமிழ் எம்.பி.யான ராதிகா சிற்சபைஈசன்கூடத் "தமிழீழம்" என்ற சொல்லைத் தவிர்த்து வருகிறார். இதற்கு வாழும் புலம் பகுதியில் அகூதா கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது, இவர்களைப் பொறுத்தவரையில் ராதிகாவும் துரோகியாகத்தான் பார்க்கப்படவேண்டும். ஆனால், தங்கள் நிகழ்வுகளில் இவரை முன்னிலைப்படுத்தியே வருகிறார்கள்.

ராஜ்குமார் சுப்பிரமணியம் அவர்களுக்கு,

நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது மனிதஉரிமைகள் ஆர்வலராகவோ அங்கு சென்றிருந்தால் பயன் இருந்திருக்கும். நீங்கள் ஒரு தமிழ் அமைப்பின் பிரதிநிதி மட்டுமே. அத்தோடு, உங்களின் நுழைவுச்சீட்டு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியைக் கொண்டது. அந்த அனுமதியுடன் அங்கு சாதிப்பதும் மட்டுப்படுத்தப்பட்டதே. உங்களின் இந்தத் தகுதி எத்தகைய பலனைத் தரும் என்று வாசகர்களே தீர்மானிக்கட்டும். இதன்மூலம் நீங்கள் சாதித்ததின் அளவையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

இதே வேளை, கனேடியத் தமிழ் காங்கிரசிலும் அரசியல் தெரிந்தவர்கள், மனிதஉரிமைகள் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சு வல்லமையும் நிறைய உண்டு. அவர்கள் நினைத்திருந்தால் நீங்கள் பெற்றுக் கொண்ட அதே நுழைவுச் சீட்டுடன் அவர்களும் அங்கு சென்றிருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் ஜெனிவாவிற்குச் செல்ல முயற்சிக்கவில்லை. ஏனெனில் இந்த நுழைவுச் சீட்டுடன் அவர்கள் சென்று சாதிப்பதை விட அந்தத் துறையிலுள்ளவர்களை அனுப்பினால் அதிக பலனைத் தரும் என அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால்தான், அந்த துறையைச் சார்ந்தவர்களையே அனுப்பி வைத்தார்கள். நான் உங்களின் தனிப்பட்ட தகுதியைப் பற்றி இந்தக் கருத்துக்களத்தில் குறிப்பிடவில்லை என்பதை இந்த விளக்கத்திற்குப் பின்னராவது விளங்கிக் கொள்ளுங்கள். அது எனக்குத் தேவையுமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொடியை பிடிக்கக்கூடாது என்பார்கள் நாளை நாம் கடந்த முப்பது ஆண்டு காலப்போரட்டம் தவறு என்பார்கள் இவைகளை இன்று அனுமதித்தால் நாளை மறுநாள் கூறினாலும் கூறுவார்கள் எமது மாவீரர்கள் மடிந்ததும் தவறு இப்படியே எல்லாவற்றையும் தவறு என்றுகூறி நாம் எந்த இலக்கை அடைவதக்காக பயனித்தாமோ அதுவே தவறு என்று சொல்லி தங்களின் கருத்தை எம்மீது திணிக்கவும் முயற்சிப்பார்கள்.

என்னைபொறுத்தவரை எந்த கொடியுடன் என்ன இலட்சியத்துக்காக புறப்பட்டோமோ அதில் இருந்து விலகிச்செல்வதென்பது எங்களை நம்பி தங்கள் உயிரை துறந்த மாவீரகளுக்கு செய்யும் துரோகமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு  ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும்  இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

ஐயா! இப்படி இந்த விவகாரங்கள் எல்லாம் உங்கள் காதுக்குள் போட்டு முன்னோட்டம் பார்த்த பிறகுதான் இவர்கள் கதைப்பார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.