Jump to content

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்


Recommended Posts

ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் றொபேட் இவென்ஸ் அவர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருந்தார். இவர்களோடு, டேவிட் சுந்தா என்ற அரசியலில் கலாநிதிப் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவரும் கலந்து தமது பங்களிப்புகளை வழங்கினர். முன்னைய பதிவில் இவர்களின் பெயர்கள் விடுபட்டு விட்டது. இவர்கள் அனைவருக்குமான செலவுகளை நாடுகடந்த அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டது.

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தவறுகளை ஏற்கும் பக்குவம்?? எல்லாவற்றையும் இழந்த பிற்பாடு...

முன்பு உங்களிடம் கதைத்த ஒரு விடயம் தான். மாவீரர் தினம் நடத்துவது தொடர்பான கணக்குவழக்குகள்?? இன்று வரை காட்டிவிட்டார்களா என்ன?? அந்தந்த நேரத்தில் சமாளிப்பதினூடாக மறக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்..

தெரியாமல் தான் கேட்கின்றேன். ஒட்டாவாவிலும், சரி ரொரன்ரோவிலும் சரி செய்த நிகழ்வுகளுக்கு மற்றய அமைப்புக்களுடன் சேர்ந்து நின்று இயங்கும் பக்குவம் உங்களின் கருத்துப்படி வந்திருக்கின்றதா என்ன?? அப்போது எப்படி ஒன்றாக நடந்து செல்லலாம் என எண்ணுகின்றீர்கள்..

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசின் சார்பில் (செலவில்) இங்கிலாந்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரையன், சட்டவல்லுநர் கேரன் பார்க்கர், பேராசிரியர்கள் போல் நியூமன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு, தமிழர்களுக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கான அனைத்துச் செலவுகளையும் நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

அந்த 25,000 டொலர்களும் மக்களின் பணம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா அகூதா? அந்த 25,000 டொலர்களும் ஐ.நா. மனித உரிமை அவையின் செயற்பாட்டிற்காகத் தான் செலவிடப்பட்டதா?

தூயவன், நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். ஒருவர் மட்டுமே சொல்லும்போது, அது பக்கச்சார்பானதாகப் பார்க்கப்படும். மக்களை விழிப்படையச் செய்வதே இப்போதைய முக்கிய தேவை.

ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் றொபேட் இவென்ஸ் அவர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருந்தார். இவர்களோடு, டேவிட் சுந்தா என்ற அரசியலில் கலாநிதிப் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவரும் கலந்து தமது பங்களிப்புகளை வழங்கினர். முன்னைய பதிவில் இவர்களின் பெயர்கள் விடுபட்டு விட்டது. இவர்கள் அனைவருக்குமான செலவுகளை நாடுகடந்த அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்த அமைப்புக்கள் யாவும் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு அமைய பதியப்பட்டு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டன. வருடாந்த பொதுக்கூட்டத்தில் அங்கத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் நிறுவனத்தால் வரவு - செலவுகள் வெளியிடப்படல் வேண்டும். அதை உறுப்பினர்கள் உறுதி செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

இவர்கள் செய்வது சரியாக இருக்கும்பட்சத்தில் நாம் ஏன் எதிர்க்கப்போகிறோம்? எமக்குத் தேவை அங்கு வாழும் மக்களுக்கான விடிவு. அதை நோக்கியே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். எமது சுயலாபத்திற்காக அம்மக்கள் வாழும் சூழ்நிலையைப் பயன்படுத்தி எம்மை செம்மைப்படுத்தக்கூடாது. இவர்கள் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் சுயலாபத்திற்கானதாகவே இருக்கிறது. சமீபத்தில் நடத்திய மாநாட்டில்கூட நிதியே முக்கிய குறியாக இருந்ததை மறந்து விட்டீர்களா? அதனைத் தொடர்வதற்கான கண்துடைப்பு நாடகமே நேற்றைய ஆர்ப்பாட்டம்.

Link to comment
Share on other sites

தவறுகளை ஏற்கும் பக்குவம்?? எல்லாவற்றையும் இழந்த பிற்பாடு...

முன்பு உங்களிடம் கதைத்த ஒரு விடயம் தான். மாவீரர் தினம் நடத்துவது தொடர்பான கணக்குவழக்குகள்?? இன்று வரை காட்டிவிட்டார்களா என்ன?? அந்தந்த நேரத்தில் சமாளிப்பதினூடாக மறக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்..

உண்மை. பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சனை இது. பெரும்பாலான மக்கள் யாராவது இந்த புனித நிகழ்வை செய்யவேண்டும் என எதிர்பார்கிறார்களே தவிர கணக்குகளை கேட்பதில் அதிகளவு அக்கறை செலுத்துவதில்லை.

தெரியாமல் தான் கேட்கின்றேன். ஒட்டாவாவிலும், சரி ரொரன்ரோவிலும் சரி செய்த நிகழ்வுகளுக்கு மற்றய அமைப்புக்களுடன் சேர்ந்து நின்று இயங்கும் பக்குவம் உங்களின் கருத்துப்படி வந்திருக்கின்றதா என்ன?? அப்போது எப்படி ஒன்றாக நடந்து செல்லலாம் என எண்ணுகின்றீர்கள்..

இவ்வளவு அழிவுக்கும் பின்னரும் தாயகத்திலும் சரி புலத்திலும் சரி ஏன் இந்த யாழ்க்களத்திலும் கூட நாம் எல்லோரும் ஒரே அலைவரிசையில் குரல் கொடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தேசியக் கொடியையோ ...கூடுத்லான மாணவர் களையோ காணாதது அதிர்சி தான்...நான் எப்பவுமே தேசியச் சின்னங்களை மதிப்பவன் ..போற்றிப்

பாதுகாப்பவன்.....அவற்றை அங்கு இல்லாமை எனக்கு கவலைதான்...அங்கு பேசிய ..ராதிகா ..ஒற்றுமை எம்மிடையே வேணும் என்று பேசினார்....எதிர் பாராத

பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதையிட்டு ...மகிழ்சி அடைந்தாலும்....கனடா செய்த உதவிக்கு நன்றி செலுத்தினேன் என்ற திருப்தியோடு வீடு

திரும்பினேன்....என்னைப் பொருத்தவரை...கனடாவில்...போட்டிகள் கூடிவிட்டது...இதனால் தேசியத்தை மதிக்கும் என் போன்றோர் ஏமாற்றப் படுகின்றணர்

என்பதே உண்மை....இதற்காக நான் சோர்வடையப் போவதில்லை...என் தலைவனுக்காகவும்...என்னுயிர் போராளிகளுக்காகவும்...உயிர் னீத்த எம்மினத்துக்காகவும்.

உயிரினும் மேலான தமிழ் மொழிக்காகவும் எந்த நிகழ்வு நடந்தாலும் ..என்னுடைய வசதிக் கேற்ப கலந்து கொள்வேன்.....

Link to comment
Share on other sites

இவர்கள் செய்வது சரியாக இருக்கும்பட்சத்தில் நாம் ஏன் எதிர்க்கப்போகிறோம்? எமக்குத் தேவை அங்கு வாழும் மக்களுக்கான விடிவு. அதை நோக்கியே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். எமது சுயலாபத்திற்காக அம்மக்கள் வாழும் சூழ்நிலையைப் பயன்படுத்தி எம்மை செம்மைப்படுத்தக்கூடாது. இவர்கள் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் சுயலாபத்திற்கானதாகவே இருக்கிறது. சமீபத்தில் நடத்திய மாநாட்டில்கூட நிதியே முக்கிய குறியாக இருந்ததை மறந்து விட்டீர்களா? அதனைத் தொடர்வதற்கான கண்துடைப்பு நாடகமே நேற்றைய ஆர்ப்பாட்டம்.

நானறிந்தவரையில் அனேகமானோர் நல்ல எண்ணத்துடனேயே செயல்பட வருகின்றனர்.

சுயலாபம் என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டால் அதை விமர்சனம் செய்யலாம் என்பது எனது கருத்து.

நேற்று நடந்தது வித்தியாசமான 'ஆர்ப்பாட்டம்' - கனடாவுக்கு நன்றி தெரிவித்து. மக்களும் பணம் செலுத்தியே சென்றனர் என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

எனக்கும் தேசியக் கொடியையோ ...கூடுத்லான மாணவர் களையோ காணாதது அதிர்சி தான்...நான் எப்பவுமே தேசியச் சின்னங்களை மதிப்பவன் ..போற்றிப்பாதுகாப்பவன்.....அவற்றை அங்கு இல்லாமை எனக்கு கவலைதான்...அங்கு பேசிய ..ராதிகா ..ஒற்றுமை எம்மிடையே வேணும் என்று பேசினார்....எதிர் பாராதபாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதையிட்டு ...மகிழ்சி அடைந்தாலும்....கனடா செய்த உதவிக்கு நன்றி செலுத்தினேன் என்ற திருப்தியோடு வீடுதிரும்பினேன்....என்னைப் பொருத்தவரை...கனடாவில்...போட்டிகள் கூடிவிட்டது...இதனால் தேசியத்தை மதிக்கும் என் போன்றோர் ஏமாற்றப் படுகின்றணர் என்பதே உண்மை....இதற்காக நான் சோர்வடையப் போவதில்லை...என் தலைவனுக்காகவும்...என்னுயிர் போராளிகளுக்காகவும்...உயிர் னீத்த எம்மினத்துக்காகவும்.

உயிரினும் மேலான தமிழ் மொழிக்காகவும் எந்த நிகழ்வு நடந்தாலும் ..என்னுடைய வசதிக் கேற்ப கலந்து கொள்வேன்.....

அல்வாயன்,

எமக்குள் இருக்கும் பிரச்சனைகளையும் மீறி நாம் ஆவது ஐ.நா. மனித உரிமை தொடரில் எமக்கு சாதகமாக ஒரு நிலையை சர்வதேசம் எடுக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கி நகரவேண்டியவர்களாக உள்ளோம். இது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

எமக்கென ஒரு அரசியல் தீர்வை பெறுவதன் மூலம் மட்டுமே நாளைய தலைமுறை தாயகத்தில் வாழ வழிசமைக்கலாம். அதற்கு இப்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதே நன்மை தரும் என நம்புகிறேன்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

அகூதா, நீங்கள் அவதாராக வைத்திருக்கும் நாடகத்தின் கணக்கு காட்டப்பட்டு விட்டதா? அந்த கணக்கு விபரங்களை மக்கள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் நேற்றைய ஆர்ப்பாட்டம்.

Link to comment
Share on other sites

ஒன்றும் செய்யாமல் விளம்பரம் செய்வதை எதிர்க்கலாம். பரிகசிக்கலாம். செய்வதை விளம்பரப்படுத்துவது எனக்கு ஒன்றும் தவறாகப் படவில்லை. செய்வதை விளம்பரப்படுத்தாமல் மற்றவர்களை எப்படி செயற்படத் தூண்டுவது அல்லது செயற்பாட்டில் இணைப்பது? ஒன்றுமே செய்யாமல் இருக்கும் எத்தனையோ ஆயிரம் ஈழத்தமிழர்களை விட எந்த இடத்தில் தன்னால் முடிந்ததை செய்ய நினைப்பவர் குறைந்துபோயுள்ளார்? செயற்பாட்டில் இருப்பவர்களையும் விளம்பரத்துக்காக செய்கிறார்கள், பதவிக்காக செய்கிறார்கள், சுயலாபத்திற்காக செய்கிறார்கள் என்று சொல்லி அவர்களைச் சோர்வடையச்செய்து செயற்பாட்டிலிருந்து ஒதுக்கி என்ன செய்யப்போகிறோம்?

தூயவன் சொல்லும் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை இங்குள்ள எந்த அமைப்பும் நூறுசதவீதம் நேர்மையானவை என்று சொல்லமுடியாது. யார் உண்மையானவர்கள் யார் பொய்யானவர்கள் என்ற தெளிவில்லாத நிலையில் நாம் செய்யக்கூடியது அமைப்புகளை பார்க்காமல் அவர்களின் செயற்பாடுகளை விமர்சிப்பது. நல்லவையென்றால் ஊக்குவிப்பதும் எமது நலன்களுக்கு எதிரானவையென்றால் கண்டிப்பதும்தான் நாம் இப்பொழுது செய்யக்கூடியது. அந்தவகையில் இப்பொழுது நடந்த இந்த நன்றிகூறும் ஒன்றுகூடல் ஒரு காத்திரமான முன்னெடுப்பே!

Link to comment
Share on other sites

அகூதா, நீங்கள் அவதாராக வைத்திருக்கும் நாடகத்தின் கணக்கு காட்டப்பட்டு விட்டதா? அந்த கணக்கு விபரங்களை மக்கள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் நேற்றைய ஆர்ப்பாட்டம்.

அறிந்து இன்னும் ஆறு நாட்களுக்குள் உங்களுக்கு தனிப்பட்ட மடலில் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அகூதா, நீங்கள் அவதாராக வைத்திருக்கும் நாடகத்தின் கணக்கு காட்டப்பட்டு விட்டதா? அந்த கணக்கு விபரங்களை மக்கள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் நேற்றைய ஆர்ப்பாட்டம்.

நானறிந்தவரையில் இந்த நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்து. நன்கொடை வாங்கினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தநிகழ்வின் கணக்கு ஏன் மக்களுக்கு காட்டப்படவேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா

நீங்கள் அவர்கள் சார்பாகப் பதிலளிக்கின்றீர்கள் என்றால் முழுமையான பதிலாகத் தர வேண்டும். இல்லை, எனக்குச் சம்பந்தமில்லை என்பதில் விட்டு விட வேண்டும். நழுவுகின்ற மீனாகவே உங்களின் பதில் தென்படுகின்றது.

--------

Link to comment
Share on other sites

எல்லா அமைப்புகளிலும் உண்மையான உணர்வாளர்களும் தேசியத்தை முழுமையாக நேசிப்பவர்களும் இருக்கின்றார்கள். அதை உணர்ந்துகொள்ளாமல் அவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லி நீங்களும் ஒரு அமைப்பையே தாக்குவது எந்தவகையில் எமது போராட்டத்தை முன்னகர்த்தப்போகின்றது என்பது எனக்குத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

நானறிந்தவரையில் இந்த நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்து. நன்கொடை வாங்கினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தநிகழ்வின் கணக்கு ஏன் மக்களுக்கு காட்டப்படவேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை.

உண்மை, ஆனால்:

காரணம் ஒன்று: மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பகிரங்கமான அமைப்பு

காரணம் இரண்டு : நமபத்தன்மையை வளர்க்கும். தேவையில்லாத சந்தேகங்களை தவிர்க்க உதவும்.

இது பாரிய செலவில் நடாத்தப்பட்ட நிகழ்வு என்பதால் முழு கணக்கு வழக்குகளையும் முடிப்பது சில மாதங்களே எடுக்கலாம். ஆனால், முடிப்பது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு கொடி பிடித்தல் தொடர்பான கேள்வியில் இருந்து திசை திருப்பப்பட்டள்ளது....

Link to comment
Share on other sites

அகூதா

நீங்கள் அவர்கள் சார்பாகப் பதிலளிக்கின்றீர்கள் என்றால் முழுமையான பதிலாகத் தர வேண்டும். இல்லை, எனக்குச் சம்பந்தமில்லை என்பதில் விட்டு விட வேண்டும். நழுவுகின்ற மீனாகவே உங்களின் பதில் தென்படுகின்றது. --------

அவர்கள் சார்பாக பதிலளிக்க எனக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் இங்குள்ள சகல அமைப்புக்களுடனும் வெளிப்படையாக ஆதரவையும் உள்ளக தொடர்புகளையும் கொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gary Anandasangaree Legal Counsel for Canadian Tamil Congress (CTC) on behalf of Lawyers Rights Watch Canada (LRWC) made the following intervention at the UN Human Rights Council meeting today (March 2nd 2012) after the Sri Lankan government's permanent representative to the UN made her statement.

http://www.canadiant...=eng&cat=&id=34

ஆமாம். வாணி என்பவரும் வழக்கறிஞர் சபை ஊடாகத் தான் சென்றிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா...நீங்கள் என் பெயர் குறிப்பிட்டு சொன்ன கருத்தை நான் ஆதரிக்கின்றேன்...எம்மினத்திற்கு விடிவு வரும்வரை என்னால் ஆன பங்களிப்பை எந்த இடத்திலும்

என் வசதிக்கு ஏற்ப செய்ய தயாராக உள்ளேன்....அதற்காக இங்குள்ள எந்த அமைப்பையும் சார்ந்து நிற்க விரும்பவில்லை....நம்பிக்கையும் கிடையாது....என் தேசத்தின்

விடிவே என்னுடைய இலட்சியம்....தலைவன் என்னுடைய கட்வுள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டாவா நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

புரியவில்லை. இதைத் தானே யுத்தம் நடக்கும்போது பலர் சொன்னார்கள். கொடியே பிடிக்காதீர்கள். வெளியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று. அன்று கவனயீர்ப்பு எதற்காகச் செய்தோம்?? வன்னியில் மக்கள் படுகொலையைத் தடுப்பதற்காகத் தானே?? அப்போது ஞான உதயம் வரவில்லையா? இன்று அகூதா கற்பிக்கின்ற நியாயம் உற்பட, பல விடயங்களைப் பிறர் சொன்னார்கள். அவர்களை இவர்கள் வர்ணித்த விதம் எப்படியா??உலகத் தமிழர் தடை செய்யப்பட்டபோது, குறித்த பிரிதொரு அமைப்பின் அலுவலகத்தில் தான் இவர்கள் கூட்டங்கள் வைத்தார்கள். அன்று, அந்த அமைப்பு, கொடி பிடிக்க வேண்டாம். மக்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னதற்காக, அந்த அமைப்பின் அலுவலகத்தில் இவர்கள் அலுவலக நேரத்தில் பிற்பாடு கால் வைத்ததில்லை.( அலுவலக நேரம் என்று சொன்னது புரியவில்லை எனில் தனிமடல் போடுங்கள்.)உண்மையில் நேற்றுத் தான் கொடி பிடித்திருக்க வேண்டும். யார், இதற்கு நன்றி சொல்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக.... யார் குத்தினாலும் அரிசியானச் சரி எனலாம். ஆனால் இவர்கள் குத்துவது கொஞ்ச். வீணாக்குவது பல மடங்கு!!

மிகச்சரியான கேள்வி..! இங்கே சில நிகழ்வுகளைத் தரவாக முன்வைக்கிறேன்..!

  • மக்கள் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் எவரும் எட்டிப்பார்க்கவில்லை.
  • ஒரு நாள் கொடியில்லாமலும் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தனர். கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் எவரும் எட்டிப்பார்க்கவில்லை.
  • மறைந்த ஜாக் லெய்ட்டன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வந்து பேசிவிட்டுப் போனார்.
  • அமெரிக்கா போரை நிறுத்த இலங்கையை இறுதிநேரத்தில் வற்புறுத்தியது.
  • சிவசங்கர் மேனர் ஓடிச் சென்று இம்முயற்சியைத் தடுத்தார்.

மக்கள் போராட்டம் நடைபெற்றது போரை நிறுத்தவே.. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் தெரிந்ததே.. ஆனால் கொடி பிடித்திருந்தாலும் பிடித்திராவிட்டாலும் மேனன் அஎரிக்காவின் முயற்சியைத் தடுத்தேதான் இருப்பார் என்பது இப்போது தெரியவருகிறது..

அன்று அவர்கள் கொடி பிடிக்காதே என்று சொல்லும்போது எமக்காக எதையும் தந்துவிட்டுக் கேட்கவில்லை..! தடைகளை மட்டுமே போட்டார்கள்..!

இன்று சர்வதேச அளவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து எமக்கான சமிக்கைகள் தென்படும்போது, நாமும் சிறிது நெருங்கி வருதல் நன்மையே..! :rolleyes:

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே..! யாழுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் கொடி இல்லாமல் என்பதை முழுமையாக ஏற்கமுடியவில்லை. அங்கே கொடி இடையிடையே தூக்கிப் பிடிக்கப்பட்டதும், பின்னர் பலத்த இழுபறி, வாக்குவாதம் நடந்ததும் உண்மை. ஒரே மக்கள், கொடியோடு நின்றார்கள். அதே மக்கள் அடுத்தநாள் கொடி இல்லாமல் நின்றார்கள். எவ்வகையான மாற்றத்தை இதில் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தி விடப் போகின்றது.

இதே இந்தியா அன்று அமெரிக்காவின் முயற்சியைத் தடுத்தது என்கின்றீர்கள். இன்றும் பின்னுக்கு நின்று அமெரிக்காவின் பிரேரணையை மலினப்படுத்த முயன்றதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அப்படி எனில் இது பிரியோசமில்லை என்கின்றீர்களா?

உங்களுக்குப் புரிய வைக்க்ககூடியது இது தான். கொடி பிடிக்காவிடின் வாய்ப்புக் கிடைக்கும் என அன்று சொன்னபோது, அதைத் துரோகம் என்று வாதாடியவர்கள், இன்று கொடியில்லாமல் நிற்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?? அதைச் சாட்டி, எத்தனை பேரை நிகழ்வுகளில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் ஒதுங்க வைத்தார்கள்.

----------------

முதலவாதாக ஒட்டவாவாவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், வன்னிச் சங்கம் சார்ந்த கூட்டமைப்பாக இருக்கலாம். அன்று அவர்கள் கொடி பிடிக்கவில்லை. வீதியில் இறங்கவுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.