Jump to content

கானல் நீராகும் ஜனநாயகம்


Recommended Posts

சிறிலங்கா அரசாங்கம் கால காலமாக இலங்கை ஜனநாயக நாடு இங்கு வாழும் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனக் கூறி வந்தாலும், உண்மையாக நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று தான் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஜனநாயக நாடு எனில் அந்நாட்டில் வாழும் மக்கள் அங்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும், சுதந்திரமான முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுந்தந்திரம் வழங்கப்படும்.

ஆனால் சிறிலங்காவில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஜனநாயக சுதந்திரத்தை வழங்க இந்த அரசு தயாராக இல்லை.

காணமால் போனவர்களை கண்டுபிடித்து தருமாரு கோரி  கொழும்பில் கனவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தத் திட்டமிட்டிருந்தது. எனினும் அப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண மக்கள் செல்ல ஆட்சியிலுள்ள அரசாங்கம் தடைவிதிப்பது போன்று ஒரு செயலைச் செய்துள்ளது.

நேற்றைய தினம் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி கொழும்பில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறீலங்கா பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தடுத்து நிறுத்தியதற்கு சிங்களப் பகுதிகளில் இந்த பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது என சிறிலங்கா பொலிசார் ஒரு நொண்டிச் சாட்டை முன்வைத்தனர்.

அவ்வாறு தாக்குதல் நடாத்தப்படும் என பொலிசாருக்கு தகவல் கிடைத்தது என்றால் ஏன் அவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடாது? "பொலிஸ் உங்கள் நண்பன்" என்று பதாதைகளை அங்கு இங்கும் தொங்க விடுவதால் எந்த விதமான பிரியோசனமும் இல்லை.

அவ்வாறு மக்கள் பிரயாணம் செய்யும் பேருந்துகள் மீது தாக்குதல் நாடத்தப்படும் என்றால் ஏன் அவர்களை பொலிசார் கைது செய்ய முடியாது? ஏன் அந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடாது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு விடயம் நினைவுக்கு வருகின்றது. பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்களை தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் என கோரி ஜனநாயக வழியில் தெல்லிப்பளையில் போராட்டம் நாடாத்தப்பட்டது.

அதனைக் குழப்பும் வகையில் மர்ம நபர்கள் என்ற போர்வையில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மக்கள் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைந்தனர். ஆனால் அவ்வாறு யாரும் கைது செய்யப்படவில்லை என சிறீலங்கா பொலீஸ் பேச்சாளரே மாபெரும் புழுகை கூறியுள்ளார்.

ஆனால் இன்று போராட்டத்தை குழப்ப வந்தவர்களை பொதுமக்கள் பிடித்து தந்தது பொலிசாரிடம் ஒப்படைத்தது உண்மையே என யாழ்ப்பாண பொலிசார் ஒப்புக் கொண்டுள்ளனர் இப்படியான ஒரு சூழ்நிலையில் சிறிலங்கா பொலிசார் மக்கள் பிரயாணம் செய்யும் பேருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைப்பது மாபெரும் தவறு.

இங்குதான் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் போதுதான் கழிவு ஓயில்களும், விலங்கு கழிவுகளும் வீசப்படும். சில சந்தர்ப்பங்களில் மர்ப நபர்கள் என்ற போர்வையில் போராட்டங்களையும் குழப்பப்படும்.

இந்த நாட்டின் வாழும் பெரும்பான்மை சிங்கள உறவுகளும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. ஆனால் அவர்கள் போராட்டங்கள் நடாத்தும் போது இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை.

அது ஒருபுறமிருக்க காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கோரியே இவர்கள் போராட்டம் நடத்த சென்றார்கள். இவர்கள் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தி கவிழ்ப்பதற்காகவோ அல்லது அரசியல் புரட்சி ஒன்று ஏற்படுவதற்காகவோ இவர்கள் போராட்டம் நடத்தவில்லை.

தான் கட்டிய கணவன், தன் பிள்ளை, தனது மனைவி போன்ற உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியே இவர்கள் போராட்டம் நடத்த முனைந்தனர் இது தவறா?

நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என மார்தட்டிக் கொண்டு தமிழ் மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை சர்வதேச நயவஞ்சக நாடுகளுடன் இணைந்து வெற்றி பெற்றுவிட்டு நாட்டில் சாந்தியும், சமாதானமும்  நிலவுகின்றது என்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் நாட்டில் இவ்வாறான சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக தமிழ் மக்கள் இதுவரை நினைத்ததே இல்லை என்று தான் கூற வேண்டும்.

யுத்தத்தை மட்டும் தனது ஒரே ஒரு நோக்காக கொண்டு செயற்பட்ட அரசாங்கம், யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மடித்தும் பல்லாயிரக்கணக்கான உறவுகளை அங்கவீனர்களாக்கியும், ஆயிரக்கணக்கான உறவுகளை காணமல் போக வைத்தும் உள்ளது.

இவ்வாறு காணமல் போனவர்களை மீட்டுத் தரக் கோருவது எந்த விதத்திலும் தவறாகாது. ஆனால் இலங்கை அரசு இதனை தவறாக நினைக்கின்றது. வார்த்தைகளில் மட்டும் தேசிய நல்லிணக்கம் என்று பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படாது.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்க பழகிக் கொள்ள வேண்டும். தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரும் உறவுகளின் மகஜர் ஒன்றை வாங்குவதற்கு  கூட பெரும்பான்மை இன அரச அதிகாரி மறுத்துள்ளார் என்றால் காணாமல் போன உறவுகள் எவ்வாறு திரும்பக் கிடைப்பார்கள்?

எங்கள் பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா? நாங்கள் இறப்பதற்கு முன்னர் தெரியப்படுத்துங்கள் என நடுவீதியில் அமர்ந்திருந்து கத்தும் அந்த தாயின் அவலக் குரல் ஏன் மனித உரிமைகள் என்று கூச்சலிடும் சர்வதேச நாடுகளுக்கு கேட்கவில்லை?

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் நாங்கள் தவறு இழைத்து விட்டதாக கூறும் உலகம், ஏன் தமிழர்களுக்கு நீதியான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க  முன்வரவில்லை. காலத்திற்கு காலம் அறிக்கைகளையும் கண்டனங்களையும் விடுவதால் மட்டும் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கை சர்வதேசம் வழி அமைத்துக் கொடுக்குமா என்பதே தமிழ் மக்களின் தற்போதைய கேள்வியாகவுள்ளது?

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8964447014827328

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.