Jump to content

என்.சண்முகதாசன் – தத்துவமும் கோட்பாடும் நடைமுறையும்…? –


Recommended Posts

நண்பர்களுக்கு...
பின்வரும் கட்டுரைகள் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நா.சண்முகதாசன் மற்றும் மாவோவின் கலாசாரப்புரட்சி ஜே வி பியிலிருந்து பிரிந்து சோசலிச முன்ணி மற்றும் ஆயூதப் போராட்டங்கள் தொடர்பான குறிப்புகளைக் கொண்டவை....
இது தொடர்பான உங்கள ;விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.....
சற்றுப் பெரிய கட்டுரைகளே.... ஆகவே நேரமிருக்கும் பொழுது வாசித்து கருத்துக் கூறவூம்...
நன்றிகள்
நட்புடன் மீராபாரதி

மேலும் வாசிக்க...

என்.சண்முகதாசன் – தத்துவமும் கோட்பாடும் நடைமுறையும்…? – பகுதி 2

இன்றைய சூழலில் சண்முகதாசனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்கின்றோம் என்பதே முக்கியமானது…. இவரது கருத்துக்களும் செயற்பாடுகளும் அதாவது தத்துவமும் நடைமுறையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்தியும்… முரண்பட்டும் சென்றன…என்பதை அறிவது பயனுள்ளது. இதன் நேர் எதிர் மறை விளைவுகள் என்ன என்பதையும் குறிப்பாக இவரது கட்சியும், மக்களும், நாமும்  இழந்தவை என்ன…. என்பதையும் ஆய்வு செய்வது அவசியமானது. இவ்வாறான அறிதலின் அடிப்படையில் நமது இன்றைய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் திட்டமிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம்… ஆகவே இவர் என்ன கூறுகின்றார் என்பதை அறிய முற்படுவோம்… அதேவேளை இவை தொடர்பாக சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. அவற்றையே இங்கு முன்வைக்கின்றேன்…

மேலும் வாசிக்க...

http://meerabharathy.wordpress.com/2013/03/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/

நா.சண்முகதாசன் – விடுதலை… சமூக மாற்றம்… நடைமுறை – பகுதி 3

சண்முகதாசன்  அவர்களின் ஜேவிபி தொடர்பான தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன் அடிப்படையில் இன்றைய சோசலிச முன்னணியினர் மற்றும் சம உரிமை இயக்கத்திடம் சில கேள்விகளை முன்வைக்கலாம். உண்மையிலையே ரோகண விஜயவீர செய்தது இலங்கையில் புரட்சி ஒன்று நடைபெறுவதற்கும் சண்முகதாசனுக்குமான “துரோகம்” எனக் கூறலாம். ஆகவே இன்றைய முன்னணியினர், அடக்கப்பட்ட மக்களின் சார்பாக செயற்படுகின்றவர்கள் எனின் முதலாவது ரோகண விஜயவீரவிற்கு துரோகம் செய்யவேண்டும். இதன் மூலம் ஆகக் குறைந்தது சண்முகதாசன் அவர்களின் இறுதிக்கால கருத்துக்களின் அடிப்படையிலாவது செயற்பட முன்வரவேண்டும். இரண்டாவது சிங்கள மக்களின் மனதுகளின் புதைந்திருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தியலை களைவதற்கான செயற்பாட்டுகளுக்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். இதன் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசின் சிங்கள பௌத்த பிரதிநிதித்துவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் மீது ஈழத் தமிழர்களுக்கு ஒரளவாவது நம்பிக்கை ஏற்படும்.


 

இதன் பின் வேண்டுமானால் இவர்கள் தமிழ் மக்களிடம் வந்து அரசியல் வேலை செய்வதில் ஒரு நியாயம் இருக்கும். இவ்வாறு செய்யாமல் தொடர்ந்தும் ரோகண விஜயவீரவின் கருத்துக்களைத்தான் முன்னெடுத்து செல்வார்களெனின் இவர்களின் இவர்களுடன்; உரையாடல்களை மட்டுமே நடாத்தலாம். மற்றுபடி வெறுமனே இன்றைய அரசாங்க (அரசுக்கு எதிரானதல்ல) எதிர்ப்புக்கான கூட்டணி மட்டுமே அமைக்கத் தகுதியானவர்கள் இவர்கள். இன்றைய அரசாங்கத்தை விழுத்துவதற்கு இவ்வாறான கூட்டணி அவசியமானது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. இதற்கு மேல் இவர்களிடம் ஒன்றும் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் இதனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் இன்றைய அரசாங்கத்தை விழுத்துவதன் மூலம் மாற்றம் ஏதுவும் ஏற்படப்போவதில்லை. மற்றது இவர்கள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு மாற்றாக எவ்வாறான அரசை முன்வைக்கின்றார்கள் என்பதில் தெளிவான நிலைப்பாடுகளில்லை. ஆகவே ஈழத் தமிழர்கள் இவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டியது அவசியமானது.

மேலும் வாசிக்க...

http://meerabharathy.wordpress.com/2013/03/12/%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணே...ஆனால் இதெல்லாம் 50 வருசத்துக்கு முற்பட்டது...இதிலை ஒரு துளியாவது எமது இன விடுதலைக்கு உதவுமா....இங்கை கனடாவிலையும் விழவெடுத்து கொண்டாடினவை....இறந்தகாலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தையும் ..எதிர்காலத்தையும் சிந்தியுங்கள்....மேதாவிதனங்கள்...புத்தக அறிவுகள்.....,,.இவையொன்றும் எம்மினத்தை அழிவிலிருந்து காப்பாற்ற போவதில்லை....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.