Jump to content

நீங்கள் இரசித்த பாடல் வரிகள்


Recommended Posts

நீங்கள் இரசித்த பாடலை முழுமையாக எழுதி அந்த பாடலில்

உங்களுக்கு பிடித்த வரிகளை அடையாளப்படுத்தி விடுங்கள்

உங்களது இரசனைகள் எவ்வாறு இருக்கின்றன பார்க்கலாம்

குறிப்பு :உங்கள் அபிப்பிராயங்களைத் தவிர்த்து பாடல் வரிகளை மட்டும் எழுதிவிடுங்கள்

முடிந்தால் பாடல் விபரத்தையும் குறிப்பிடவும் இந்த முயற்சிக்கு தயவு செய்து இடையூறாக செயற்பட வேண்டாம்

இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்குறேன் .

படம்:பூவே உனக்காக

பாடியவர்:உன்னிகிருஷ்ணன்

நடிகர்:விஜய்

இசை: எஸ் எ ராஜ்குமார்

வருடம் :1996

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோசம் தந்திட வேண்டும்

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்

சேர வேண்டும் சொந்தங்கள்

காதலோடு வேதங்கள்

ஐந்து என்று சொல்லுங்கள்

தென்பொதிகை சந்தனக் காற்று

உன் வாசல் வந்திட வேண்டும்

ஆகாய கங்கைகள் வந்து

உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும் .

http://www.youtube.com/watch?v=K4vvq7vRjC4

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

படம்:இதயக்கமலம்

பாடியவர்: பி சுசீலா

இசை: கே வி மகாதேவன்

கவிஞர் :கண்ணதாசன்

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல....

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல (உன்னைக்காணாத...2)

இதில்நீ ஒரு பாதி

நான் ஒரு பாதி

இதில் யார் பிரிந்தாலும்

வேதனை பாதி............(2)

காலங்கள் மாறும்

காட்சிகள் மாறும்

காதலின்முன்னே

நீயும்நானும்வேறல்ல...

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

ஒரு தெய்வம் இல்லாமல்

கோவிலும் இல்லை

ஒரு கோவில் இல்லாமல்

தீபமும் இல்லை ...(2 )

நீ எந்தன் கோவில்

நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே

நீயும் நானும் வேறல்ல.....

உன்னைக்காணாத.........

Link to comment
Share on other sites

படம் : சூரியகாந்தி

இசை : MS விஸ்வநாதன்

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : கண்ணதாசன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்

அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்

உனை போலே அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

பி.கு.: பாடல் முழுவதுமே அர்த்தம் நிறைந்தது. ஒன்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்..! :(

Link to comment
Share on other sites

நீங்கள் இரசித்த கவிதை வரிகள் என்றால் இதைக் கூறலாம். இந்தக் கவிதையை ஓர் மிகவும் பழைய சஞ்சிகையில் யாழ்ப்பாணத்தில் வாசித்தேன். இதை வடித்தவர் யார் என்று தெரியவில்லை. கவிதையின் முழுப்பகுதியும் நினைவில் இல்லை. கீழ்வரும் பகுதி பசுமையாக நினைவில் உள்ளது:

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை

முன்னி அரவணைத்து முலைத்தடத்தில் முகம்புதைத்து,

கன்னிச் சிறையுடைத்து கருப்பாதைக் காரிருட்டில்

என்னையே யானிழந்து ஏதுமிலா தாகிவிட..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்...

குய்யத்துக் கும்மிருட்டில் குருமணலாய் சிறுதுளியாய்

பையக் குடிபுகுந்து பருத்துத் திரண்டுருண்டு,

கையாகிக் காலாகி கண்மூக்குத் தானாகி

வையத்தில் ஒருநாளில் வந்தே விழுந்தேனை,

கையெடுத்து மெய்யணைத்து கனகமகிழ் அமுதூட்டி,

நெய்யலைந்த சிறுசோற்றை நிலாக்காட்டி வாயூட்டி,

என்னை வளர்த்தாளின் இடைநீங்கி மடிநீங்கி,

தன்னை மெல அறிந்து, தாய்ப்பாலின் சுவை மறந்து

என்னையே யானறியும் இளைஞனென மாறியபின்,

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: பயணங்கள் முடிவதில்லை

பாடல்: இளைய நிலா பொழிகிறது.

வரி: வைரமுத்து

பிடித்த வரிகள்:

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y

Link to comment
Share on other sites

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே

போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

மொத்தத்தில் பாடலின் முழுவரிகளும் என்னை கவர்ந்தவை. :rolleyes::wub:

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Atho antha Paravai - Ayirathil Oruvan - Ayirathil Oruvan.mp3

Link to comment
Share on other sites

படம்: திருடாதே

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : -நாமக்கல் கவிஞர்-

திருடாதே பாப்பா திருடாதே

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே....

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ -தவறு

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ...(2 )

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா

அது திரும்பவும் வராம பார்த்துக்கோ ...(2 )

திருடாதே பாப்பா திருடாதே.......

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது -அதை

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது .....(2)

திருடாதே பாப்பா திருடாதே......

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்....

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

பொறுக்கிற வேலையும் இருக்காது....

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

மனம் கீழும் மேலும் புரளாது

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

பாப்பா திருடாதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ............................நல்ல அர்த்தமுள்ள பாடல் .

பாப்பா ........( சிறு குழந்தை) என் திருத்துங்க.

உங்கள் பதிவுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

இசை : MS விஸ்வநாதன்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ....

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்

தப்பு செய்தவன் வருந்தியாகணும்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பெயரை வாங்கலாம்

பெயரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

பொறுமை இருந்தால் மனிதனாகலாம்

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.....இந்த

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல் ......ஒ ஒ ..ஒ

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்....ஆ.ஆ ..ஆ

கவிதைகள் வழங்கு பாரதியை போல்... ஆ.ஆ ..ஆ

மேடையில் முழங்கு திரு வி கா போல் .......

மேடையில் முழங்கு திரு வி கா போல்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி .....

Link to comment
Share on other sites

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள் வசந்தம்…)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள் வசந்தம்…)

படம்: பாவ மன்னிப்பு

உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி

உடல்: கவியரசு கண்ணதாசன்

குரல்: P.B. ஸ்ரீனிவாஸ்

பாடலில் கவிஞரின் உவமான உவமேயம் என்னை கவர்ந்தது.

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Kalangalil Aval - Paava Mannippu - Pbs.mp3

Link to comment
Share on other sites

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

http://www.lankanesan.com/Enthiran/Kilimanjaro%20Malai.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இயற்கை அழுதால்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

பெரும்பேரின்பம்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே.....

http://fr.kendincos.net/video-pnpnrftdf-pirakkum-pothum-alukinrai.html

Link to comment
Share on other sites

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

[b]தரம்கெட்ட பாடல் வரிகள்.

இப்படியும் எழுதி ஈனப் பிழைப்பு நடத்தும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்

ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை

பொன் மகளின் புன்னகைப்போல்

யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த

இலக்கண கவிதையும் நடந்ததில்லை

முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு

உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல

அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்

தெய்வ மகள் தூங்கயிலே

சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்

சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை

பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்

மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்

மிசையில்லாத மகள் என்று சொன்னேன்

பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே

ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு…. நான் இடவா…

http://www.youtube.com/watch?v=5mhVnsP7qcQ&feature=fvst

Link to comment
Share on other sites

திரைப் படம்: சுமைதாங்கி

குரல்: P B ஸ்ரீநிவாஸ்

வரிகள்: கண்ணதாசன்.

http://www.youtube.com/watch?v=OsWdxKw7-YI

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஏழை மனதை மாளிகையக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

கண்ணதாசனின் தத்துவப் பாடல் வரிகள் பொதுவாக எனக்குப் பிடிக்கும். அதிலும் இந்தப் பாடல் வரிகளை சிறு வயதிலையே எனது தந்தையாரிடம் அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான் பாடல் . தந்தை மகள் பாசம் அருமை.

பதிவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: காற்று வந்தால் தலை சாயும் பெ: நாணல்!

ஆ: காதல் வந்தால் தலை சாயும் பெ: நாணம்!

ஆ: ஆற்றினிலே கரை புரளும் பெ: வெள்ளம்!

ஆ; ஆசையிலே கரை புரளும் பெ: உள்ளம்!

பெ: ஆடை தொட்டு விளையாடும் ஆ: தென்றல்!

பெ: ஆசை தொட்டு விளையாடும் ஆ: கண்கள்!

பெ: ஒருவர் மட்டும் படிப்பதுதான் ஆ: வேதம்!

பெ: இருவராக படிக்கச் சொல்லும் ஆ: காதல்!

பெ: மழை வருமுன் வானை மூடும் ஆ: மேகம்!

பெ: திரு மனத்துக்கு முன் மனதை மூடும் ஆ: மோகம்!

ஆ : ஓடிவரும் நாடிவரும் உறவு கொண்டு

தேடிவரும் உயிர் கலந்து சேர்ந்து விடும் பெ: மானும்!

பெ: பாடிவரும் பருவமுகம் பக்கம்வந்து நின்றவுடன்

பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் ஆ: நானும்!

பெ: நானும் ஆ: நானும்!

ஆ: அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெ: அன்னம்!

ஆ: அச்சத்திலே சிவந்துவிடும் பெ: கன்னம்!

ஆ: கொஞ்சி கொஞ்சி வஞ்சிமுகம் கோபுரத்து கலசமென

அந்திவெயில் நேரத்திலே பெ: மின்னும்!

ஆ: மின்னிவரும் நேரத்திலே மேனிகொண்ட பருவத்திலே

முன்னிருந்தால் தோற்றுவிடும் பெ: பொன்னும்!

ஆ: உள்ளம்! பெ: துள்ளும்!

அத்தனையும் பிடிச்சிருக்கு!! :o:unsure:

Link to comment
Share on other sites

படம்: மதராசபட்டினம்

பாடியவர் :ஹரிணி, Andrea

பாடல் வரிகள் : நா. முத்துக்குமார்

இசை :G V பிரகாஷ்

பூக்கள் பூக்கும் தருணம்- ஆருயிரே

பார்ததாரும் இல்லையே

புலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

இது எதுவோ...... ?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால் பகலும்

முடியவில்லையே

பூந்தளிரே..... !

வார்த்தை தேவையில்லை

வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழி பேசுமே !

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று இந்த நொடி போதுமே !

வேரின்றி விதையின்றி

விண்தூவும் மழையென்று - இது

என்ன இவன் தோட்டம் பூ பூக்குதுதே ?

வாளின்றி போரின்றி

வலிக்கின்ற யுத்தமின்றி

இது என்ன இவனுக்குள்

என்னை வெல்லுதே ?

இதயம் முழுக்க இருக்கும்

இந்த தயக்கம் , எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்

அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

முந்தளிரே……

எந்த மேகம் இது ?

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈர மழை தூவுதே !

எந்த உறவு இது ?

எதுவும் புரியவில்லை

என்றபோதும் இது நீளுதே !

யாரென்று அறியாமல்

பேர்கூட தெரியாமல்

இவனோடு ஒரு சொந்தம் உருவானதே !

ஏனென்று கேட்காமல்

தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழியெங்கும்

மனம் போகுதே !

பாதை முடிந்த பிறகும் - இந்த

உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை

மறைந்து பிறகே - இல்லை

தொடங்கும் நடனம் முடிவதில்லையே !

இது எதுவோ .......!

பூக்கள் பூக்கும் தருணம்

ஆதவனே பார்ததாரும் இல்லையே

உலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

என்ன புதுமை....?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால்

பகலும் முடியவில்லையே

இது எதுவோ.... !!

http://www.youtube.com/watch?v=VinvhUE2864&feature=related

Link to comment
Share on other sites

படம் : பயணங்கள் முடிவதில்லை

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

இளைய நிலா பொழிகிறது!

இதயம் வரை நனைகிறது!

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே!

விழாக்காணுமே! வானமே!

(இளைய நிலா.............)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்.

முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்.

வான வீதியில் மேக ஊர்வலம்!

காணும்போதிலே ஆறுதல் தரும்!

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்!

(இளைய நிலா.............)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்!

ஓடுகின்றதே என்ன ஜாடைகள்!

விண் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்?

(இளைய நிலா..............)

http://www.tamiljukebox.com/Mp3/Tamil/Old Is Gold/Izhaiya Nila Pozhikirathe.mp3

Link to comment
Share on other sites

படம்: வருஷமெல்லாம் வசந்தம்

இசை: சிற்பி

பாடியவர்: உன்னிமேனன்

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

எனக்கென இருந்தது ஒரு மனசு

அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அது உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன

நீதான் எந்தன் ஒளிவிளக்கு - என்றும்

நீதான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்

வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்

சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்

நதிகளில் மீன்கள் நீத்துதம்மா

அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா

உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா

அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா

நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன

காதல் எனக்குப் போதுமம்மா - என்

காதல் எனக்குப் போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்செயலாக கேட்ட ஒரு பழையபாடல், எனக்கு பிடித்த அதிர்ச்சியான பாடல் வரிகள்

இசை மிகவும் என்னை கவர்ந்த்துள்ளது

Film:Thoondil meen (1977)

Song: Ennodu ennennavo ragasiyam

Singers: P.Jeyachandran. swarnalatha

Music: V. Kumar

Director: R. Sankaran

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு

அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா

அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு

நான் என்ன அறியாப் பெண்ணா

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

நான்கு விழி அல்லவோ

பேசும் மொழி அல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ

தாகம் எடுக்கின்றதோ

ஆ...ஆ..ஆ..ஆ..ஆ லல..லல..லலல..லலலா

லலல.ல்லல லல்ல.லலல் லலல

லா லா லா லா ஆ

சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும்

மன்னிக்கின்ற மனம் வேண்டுமே

குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று

பாராட்டும் குணம் வேண்டுமே

ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்

அந்த உள்ளம் எனக்கில்லையே

நானறிந்த சீதை பாவம் ஒரு பேதை

பூப்போன்ற சிறுபிள்ளையே

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

வாழும் உறவல்லவோ

ஒன்று உயிரல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

http://www.youtube.com/watch?v=pyXAB-iAwVM

Link to comment
Share on other sites

படம்: தென்றலே என்னை தோடு

பாடியவர் : ஜேசுதாஸ் ; ஜானகி

பாடல் வரிகள் : வாலி

இசை : இளையராஜா

தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு ,

இரவே பாய் கொடு

நிலவே...

பன்னீரை தூவி ஓய்வேடு

தென்றல் வந்து எண்ணிடும் ,

ஆஹா சத்தம் வந்து முத்தமிடும்

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு

மார்பில் சாயும் நேரம்

(தென்றல் வந்து....................)

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்

இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

(தென்றல் வந்து ..........................)

http://www.youtube.com/watch?v=_qK9VDvf7zM&feature=related

Link to comment
Share on other sites

படம்: நான் மகான் அல்ல

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் :

இசை : யுவன் ஷங்கர் ராஜா

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

இதுவரையில் எதைக் கேட்டாலும்

தருவாயே மனம் கோணாமல்

துயரம் நான் இதை கேட்காமல்

கொடுத்தே எதற்காக

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

ஒரு நாள் எனைப் பிரிந்தாலும்

வாடிய முகமே உன்னை இனி எங்கு பார்ப்பது

ஒ ..எனதாசைகள் நிறைவேற ஏங்கிய

மனமே உன்னை எதை தந்து மீட்பது

அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய்

அழுகையை நீயே தந்து போனாயே

உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே

நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ

தினம் பேசுவாய் அது என்ன ஆனது

ஒ ,..தலை மேல் சுமை இருந்தாலும்

புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது

நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்

நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன்

எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய்

இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு

http://www.lankanesan.com/Naan%20Mahaan%20Alla/Theaivam%20Illai.mp3

Link to comment
Share on other sites

படம்: நான் கடவுள்

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் : இளையராஜா

இசை : இளையராஜா

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாததா

இம்மையை நான் அறியாததா

சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்

அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா

பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்

புது வினையா பழ வினையா,

கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

போருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பத்தால் தாங்குவாய்

உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

எல்லா வரிகளும் அருமை மது பாலகிருஷ்ணனின் குரலின் இனிமை

இளையராஜா இசை சொல்லியா தெரியவேண்டும்

http://www.youtube.com/watch?v=gp0QbpJWFAs&feature=related

Link to comment
Share on other sites

படம் - அபூர்வராகங்கள்

பாடியவர் - வாணி ஜெயராம்

வரிகள் - கண்ணதாசன்

இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.