Jump to content

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-1


Recommended Posts

ஆரம்ப உரை;-

முதலிலே சொல்லி விடுகிறேன் நான் எந்த வித அரசியல் கட்சியிலோ அரசியல் இயக்கங்களிலோ அங்கத்தவனாக இருக்கவில்லை.ஆனால் நான் கடந்த வந்த வாழ்வின் பாதையில் சந்தித்த பார்த்த கேட்ட அறிந்த அரசியல் நிகழ்வுகளை தொகுத்து எழுதுவுது தான் நோக்கம் .இதன் நம்பக தன்மை அல்லது சரியானது பிழையானது என்ற விமர்சனம் இருக்குமாயின் அவர் அவர்களின் கருத்து என்று நினைத்து அதை தாண்டி எனக்கு பட்டதை எழுத முனைகிறேன் .பெரும்பாலும் இத் தொடரை புனைவாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது தகவலகளின் தொகுப்பாகவும் எடுத்து கொள்ளலாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு நினைவு தெரிந்து அது ஒரு அரசியல் நிகழ்வாக கணித்து தொடங்கும் காலத்தை எனது பத்தாவது வயதில் இருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.எனது அரசியல் குடும்ப பின்னனி தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்தது .தமிழ் காங்கிரஸ் கட்சி பிரபல சட்டதரணி ஜீஜீ பொன்னம்பலம் தலைமையில் இருந்தது என்று பலருக்கு தெரிந்து இருக்கும் .அந்த கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாரளுமன்றம் சென்று உப சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட உடுப்பிட்டி சிங்கம் என்று பலரால் அழைக்கப்பட்ட சிவசிதம்பரம் அவர்களும் அப்பொழுது உள்ளூராட்சி அமைச்சருமாக இருந்த பிரமதாசாவும் கலந்து கண்ட வைபவத்தினை கண்ட நிகழ்விலிருந்து இந்த கட்டுரையை தொடரலாம் என்று நினைக்கிறேன்.எமது ஊரில் உள்ள கோயில் ஒன்றுக்கு மின்சாரம் வழங்கலை தொடங்கி வைப்பதற்குக்கு இவர்கள் அழைத்து வரும் பொழுது நூல் நாடா வெட்டும் பொழுது பிரமேதாசா ,சிவசிதம்பரம்,எனது உறவினர் ஆகியோரை எடுக்கும் புகைபடத்தில் நானும் ஒரு பத்துவயது சிறுவனாக நான் அகப்பட்டு இருந்தேன்.அது அடுத்த நாள் வீரகேசரி முதல் பக்கத்தில் வந்தது அதில் தெளிவாக எனது முகமும் இருந்தது .

இதன் மூலம் அந்த வயதிலே எனக்கு கிடைத்த அரசியல் அந்தஸ்த்து என்று அக மகிழ்ந்தேன்.உடுப்பிட்டி சிவசிதம்பரம் ஆரம்ப காலங்களில் ஒரு இடதுசாரி சிந்தனை பட்டவராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்றாலும் பின் ஒரு படு வலதுசாரி போக்கு கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சி மூலம் பாரளுமன்றம் சென்றவர் .தமிழ் காங்கிரஸ் கட்சி அப்பொழுது யாழ் மேட்டுகுடிகளின் பலத்த ஆதரவு பெற்ற கட்சியாகவே இருந்தது. அது வட மாகணத்தை தவிர்த்து வேறு தமிழ் பிரேதசங்களில் வெற்றி பெற்று பாரளுமன்ற உறுப்பினர்களை ஒரு பொழுது கொண்டிருக்கவில்லை.ஒப்பீட்டளவில் அன்று தந்தை செல்வா தலைமையில் இருந்த தமிழரசு கட்சியின் போட்டிக் கட்சியாக தோற்றமளித்தாலும் மூன்று இடங்களுக்கு மேல் பாரளுமன்றத்துக்கு தெரிவானதாக எனக்கு ஞாபகமில்லை.

யாழ்ப்பாண தொகுதியில் தெரிவாகி ஜீஜீ பொன்னம்பலமும் உடுப்பிட்டி தொகுதியில் இருந்து மு .சிவசிதம்பரமும் வவுனியா தொகுதியில் இருந்து தா.சிவசிதம்பரமும் மட்டும் தான் நான் பார்த்த காலத்தில் தெரிவாகி இருந்திருந்தார்கள் .இந்த தா .சிவசிதம்பரம் என்பவர் வவுனியாவில் யாழ் பாணத்தவரின் மேலாதிக்கம் அதிகம் இருக்கு என்று சொல்லி முதல் முதலில் யாழ் அகற்று சங்கம் என்று உருவாக்கினவராவார்.60 களில் நடந்த பிரபல சத்தியாக்கிர போராட்டத்தை தமிழரசு கட்சியினர் நடத்திய பொழுது அப்பொழுது ஒரேயொரு எம்பியாக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மு.சிவசிதம்பரம் இணைந்து செயல் பட்டிருந்தார் என்று கேள்விபட்டிருந்தேன் .இதை பிற்கால தமிழ் காங்கிரஸ் அரசியல் மேடையில் சிவசிதம்பரத்தை வைத்து கொண்டு ஜீஜீ இந்த விடயம் பற்றி குத்தி பேசியதை நேரில் கேட்டு இருக்கிறேன்,தமிழரசு கட்சி அதிகமான தொகுதிகளில் வென்றாலும் தமிழ் காங்கிரஸுக்கு குடாநாட்டில் பரவலாக செல்வாக்கு இருந்தது.இந்ந தமிழ் காங்கிரஸ் கட்சி மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பதுக்கு உறுதுணையாக நின்றது குறிப்பாக ஜீஜீயை சாடுவோர் உளர்.அதே நேரத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியினரில் ஜீஜீ புகழ் பாடுவோர் ஜீஜீ இலங்கையின் முதல் மந்திரிசபையில் கைத்தொழில் மந்திரியாக இருந்த காரணத்தினால் அதை பயன்படுத்தி எந்த வித தொழிற்சாலையும் இல்லாத தமிழ் பிரேதசத்தில் மூன்று தொழிறசாலைகள் அமைத்திருந்தார் என்று பெருமை கொள்வர், அந்த மூன்று தொழிற்சாலைகள் அவையாவன காங்கேசன்துறையில் அமைந்த சீமேந்து தொழிற்சாலை ,பரந்தனில் அமைந்த இரசாயன தொழிற்ச்சாலை கிழக்கில் வாழைச்சேனையில் அமைந்த காகித தொழிற்சாலை ஆகும். மேலும் ஜீஜீ பொன்னம்பலமும் பிரபல சட்டத்தரணியாக இருந்தமையால் அவரின் மிக விவேகமான வாதங்களை கதை வடிவில் கூறி பெருமையும் கொள்வர்.

இடம் இருந்து வலமாக மு,.சிவசிதம்பரம், ஜீ ஜீ பொன்னம்பலம், தா.சிவசிதம்பரம் sivasithampuram.jpg

50க்கு 50க்கு என்ற கோசத்துடன் ஜீஜீயின் தமிழ்காங்கிரஸும் .சமஸ்டி அரசியல் என்னும் மாநில சுயாட்சி கோரிக்கையுடன் செல்வாவின் தமிழரசு கட்சியும் அரசியல் நடத்தி கொண்டிருந்தனர் .அதே நேரத்தில் உது ஒன்று சரிவராது தமிழர் சுயாட்சி கழக நவரத்தினம் என்பவர் தனித் தமிழ் நாடு என்ற கோசத்துடனும் இருந்தார் .அவருடைய கட்சியில் சிங்கள தனி சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து இருந்த கோடிஸ்வரன் என்பவரும் இருந்தார்

70 களில் நடைபெற்ற இலங்கை பொது தேர்தல் தான் எனக்கு முதன் முதலாக ஞாபகத்தில் இருந்த தேர்தலாகும் .அந்த தேர்தலில் தமிழர்களின் முக்கிய கட்சிகளான தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் மக்கள் முன் வைத்த கோசம் . தமிழரசு கட்சி தமிழர்களின் தாயகத்தின் தலை நகராகா திருகோணமலையில் பல்கலைகழகம் அமைக்க வழி வகை செய்வோமோனவும் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் யாழ்ப்பாண்த்தில் அமைக்க வழிவகை செய்வோமென தேர்தலில் மேடைகளின் பிரச்சாரம் செய்தனர்.

தமிழரசுகட்சியின் முக்கிய பொறி பறக்கு பேச்சளாராக ஆலாலசுந்தரமும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரகா ஆனந்த சங்கரியும் கொடிகட்டி பறந்தனர் ..70 களில் நடைபெற்ற தேர்தலில் பல முறை வென்ற தனது கோட்டையாக கருதிய உடுப்பிட்டி தொகுதியில் சிவசிதம்பரம் தோல்வியுற்றார் .அதே போல் வட்டுகோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தியாகராஜா என்பவரால் தோல்வி யடைந்தார். காங்கிரஸ் கட்சியில் மேலும் இருவர் தெரிவாகி இருந்தனர் நல்லூர் தொகுதியில் இருந்து அருளம்பலம் என்பவரும் கிளிநொச்சி தொகுதியில் இருந்து ஆனந்தசங்கரியுமாகும் ..70களில் பெரும் சிறிமா தலைமயிலான சுதந்திர கட்சி பெரு வெற்றியீட்டியது அந்த அரசாங்கத்தில் பீட்டர்கெனமென் தலைமையிலான சோவியத் சார்பு கம்னீயூஸ் கட்சி ட்ரொக்சிய கட்சியான என்.எம் பெரேரா வின் தலைமையிலான சமசமாஜகட்சி அங்கம் வகித்து இருந்தனர்

( தொடரும்)

http://www.yarl.com/...ndpost&p=739454 பாகம் -2

http://www.yarl.com/...ndpost&p=739617 பாகம் -3

http://www.yarl.com/...ndpost&p=740096 பாகம்-4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=99522&view=findpost&p=741662 பாகம் -5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அரக்கன்....பார்ப்போம் உங்கள் அரசியலையும்...

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-2)

1960_Sirimavo_Bandaranaike.jpg70 களில் சிறிமாவின் ஆட்சி காலம்

சிறிமாவின் அரசாங்கத்தில்அமைச்சர்களாக நிதி மந்திரியாக என்.எம் பெரேராவும் கல்வி அமைச்சராக பதியூதின் முகமத்தும் தபால் தந்தி அமைச்சராக குமாரசூரியர் என்ற தமிழரும் இருந்தார்கள். என் .எம் பெரேரா என்பவர் ட்ரொஸ்கிய சிந்தனை அடிப்படையாக கொண்டவர் .இவரது கட்சியில் இருந்த இன்னொருவரும் அமைச்சராக இருந்தார் அவரின் பெயர் கொல்வின் ஆர் டி சில்வா ..அவர் தான் 1972 ஆம் வருடம் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரைந்தவர் .பிரித்தானிய அரசாங்கத்தால் தமிழருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை இல்லாமால் செய்தவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

1960_Sirimavo_Bandaranaike.jpg

என்.எம் பெரேரா போன்றோர் மேற்கத்தை ய பல்கலை கழகத்தில் படித்து திரும்பியமையால் இடதுசாரி வயப்பட்டு சுதந்திரத்துக்கு முன்பே பல போரட்ட வடிவங்களை முன்னெடுத்தவர் என்று கூறப்படுகிறது.

என்.எம் பெரேரா ,போன்றோர் சுதந்திர போராட்ட காலங்களில் தேடப்பட்ட பொழுது ..எல்லையற்ற காவலை உடைக்க கூடிய துறைமுகமாக இருந்த வல்வெட்டி துறை துறைமுகம் மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது ,இந்த என்.எம் பெரேரோ நிதி மந்திரியாக இருந்த பொழுது நில உச்ச வரம்பு பண உச்ச வரம்பு சட்டங்கள் மற்றும் சீர் திருத்தங்களை கொண்டு வந்து தேசிய பொருளாதார திட்டத்தை கட்டி எழுப்பு நோக்கில் பல திட்டங்களை வகுத்தார்.இவரின் சில திட்டத்தால் மணியோடர் பொருளாதரத்தை நம்பி இருந்த இன்னொரு மாதிரி சொல்ல போனால் குறனோமேர்ந்து உத்தியோகத்தை நம்பி இருந்தவர்கள் மிகவும் கஸ்டப்பட்டார்கள்

..பணவீக்கம் குறைந்திருந்தது ..டச்சு காலத்து பயிரான புகையிலை உற்ப்த்தியால் மட்டுமே விவசாயத்தில் பணத்தை கண்ட யாழ் விவசாயிகள் மிளகாய் வெங்காயம் முதலானவற்றை பயிருட்டு வரலாற்றில் முதன் முறையாக லாபமீட்டினர்..ஏனெனில் இந்தியாவில் இருந்து இறக்குமதியான பம்பாய் வெங்காயம் மிளகாய் போன்றவை நிறுத்தபட்டிருந்தது அல்லது குறைக்க பட்டிருந்தது என்று கொள்ளலாம்.இவை எல்லாம் அன்னியசெலவாணியை குறைக்கும் நோக்கில் என்று சொல்லி கொண்டார்கள் . வன்னி ,மட்டகளப்பில் உற்பத்தியாகும் குறிப்பாக அரிசி யாழ் குடாவிற்க்குள் முற்றும் முழுவதாக வந்து நுகர்வதுக்கு தடை விதிக்கப்பட்டது ...ஆனையிறவு பகுதி ஒரு சுங்க பகுதி போல் தோற்றமளித்தது

..இந்த அரிசி தடைக்கு காரணத்தை அவர்கள் முற்போக்காக வேறு காரணங்களை கூறினாலாம் தமிழர்களுக்கு மேலுள்ள தடை போல் பார்க்கும் பொழுது தோற்றமளித்தது .விவசாயிகளுக்கு ஒரு மரியாதையும் பண வருவாயும் ஒரு தொழிலாக பரிமணிபதை கண்ட வேலையற்ற பட்டதாரிகள் கூட வன்னி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து காடு களை அழித்து விவசாயம் செய்ய தொடங்கி இருந்தனர்.அந்நிய செலவாணியை மட்டுபடுத்து நோக்கில் தமிழ் நாட்டு திரைபடங்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மிகவும் மட்டுபடுத்தப்பட்டளவிலேயே இறக்குமதி செய்யப்பட்டன் ..இவர்கள் நாட்டுக்கு முற்போக்காக செய்வதாக கூறினாலும் பார்க்கும் பொழுது தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையாகவே தோற்றமளித்தது.

கல்வியே நம்பி இருந்த வரண்ட யாழ் குடா மக்கள் மேல் தரப்படுத்தல் என்ற திட்டத்தையும் அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்ததின் மூலம் இனரீதியான அடக்குமுறை செய்திருந்தது ..பிரேதச ரீதியான தரப்படுத்தலை ஓரளவு ஏற்று கொண்டாலும் இனரீதியான தரப்படுத்தல் செய்தமை பேரினவாத அடிப்படையில் செய்வது மாதிரியே இருந்தது

.தமிழ் பிரதேசத்தில் இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களில் பார்க்க சிறிலாங்க சுதந்திர கட்சியினரால் ஒவ்வொரு தொகுதியில் அமைக்கப்பட்ட அமைப்பாளர்கள் பலமும் செல்வாக்கும் உள்ளவர்களாக காணப்பட்டனர். சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களுக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு முன் வேறு கட்சிகளில் இருந்த பிரமுகர்கள் அத்தருணம் கட்சி மாறினார்கள் .பருத்திதுறை தொகுதியில் தமிழரசு கட்சியில் கேட்கும் துரைரத்தினத்துக்கு போட்டியாக பல காலமாக போட்டியாயிருந்த நடராசா என்பவர் ,மற்றும் உடுவில் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் போட்டியிட்ட சிவநேசன் மருமகள் விநோதன் போன்றோர் ,தமிழ் காங்கிரஸில் இருந்து தெரிவான அருளம்பலம் ,தியாகராஜா போன்றோரும் கட்சி தாவினர் ...சிறுபான்மை மகாசபையில் அங்கம் வகித்த எம்.சி சுப்பிரமணியத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி மூலம் நியமன எம்பியாக்கியும் இருந்தனர் ,,சிறிமா அரசாங்கத்தில் ரஸ்சிய சார்பு கம்னீயூஸ் கட்சியும் அங்கம் வகித்தமையால் வட பகுதியில் இருந்த வி.பொன்னம்பலம் போன்றோரின் ஆதரவும் இருந்தது.இலக்கிய வட்டத்தில் கூட முற்போக்கு என்று கூறிக்கொண்டு ..பிரபல இலக்கிய விமர்சர்களான சிவதம்பி ,கைலாசபதி போன்றோரும் சிறி லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டிருந்தனர்.யாழ் மேயராக இருந்த துரையப்பாவும் அப்போதைய அரசாங்கத்தின் சார்பாளராகவே இருந்தார்

ட்ட்லியின் யூன்பி அரசாங்க காலத்தில் சிறிமாவின் அனுசரணையுடன் ரஸ்ய லும்பிம்பா பல்கலை கழகத்தில் படிக்கவோ அரசியல் நோக்கத்துக்கோ அனுப்பி வைக்கப்பட்ட ரோகண விஜீவரா திரும்பி வந்து சேகுவரா என்று இயக்கத்தை கட்டி வளர்த்து கலக புரட்சி செய்தான்,,,தான் பால் ஊட்டி வளர்த்த பாம்பு சிறிமா அரசாங்கத்தை கொத்தியது ...1971 ஆண்டு ஒரு புரட்சியை சிறிமா அரசாங்கம் சந்தித்து

( தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகளையும் சொல்லவேண்டும்தானே.. சுவாரசியமான அரசியல் விடயங்களை அறிவதற்கு "அரக்கன்" (அது என்ன பெயர்!) துணை புரிவார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்...பழைய சம்பவங்கள் பலவற்றை அறியக்கூடியதாக இருக்கும்...பொய்யையும் கற்பனையையும் கலக்காமல் கவனமாக எழுதுங்கள்...வரலாற்றை எழுதும்போது மிகக் கவனமாக இருக்கவேண்டும்..இது கதை எழுதுவது போல அல்ல...எங்கட வரலாற்றை பாடப்புத்தகங்களில் திரித்தெழுதிய சிங்களத்துக்கு அடிக்கத்தான் கோபத்துடன் போராடினனாங்கள்.. எங்கட வரலாற்றை ஆர் திரித்தாலும் வன்மையாக வன்முறையுடன் அடிப்பம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் அரக்கன். உங்கள் எழுத்துக்கள் கடந்தகாலம் பற்றிய விடயத்தில் நம்பிக்கைக்குரியதாக அமையட்டும். ஏனென்றால் எங்களுக்கு முற்பட்ட காலத்தைப்பற்றி நாங்கள் அறிவதற்கு முயன்றால் அவற்றை எமக்குச் சொல்லக்கூடியவர்கள் தமக்காகவே சில விடயங்களையும் தற்பெருமைகளையும் இட்டுக்கட்டி வெறுக்கப்பண்ணிவிடுகிறார்கள். ஏன்டா கதை கேட்க வெளிக்கிட்டோம் என்று வேதனைப்பட வைத்துள்ளார்கள் சிலர்... உங்கள் வழிப்போக்கன் பதிவு அப்படி அமையாது என்று நம்புகிறோம். :)

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-3)

சேகுவரா இயக்கம் என்று புரட்சி 1971 ஆண்டு செய்தற்கு தலைமை தாங்கியவன் ரோகண விஜேவீரா. நன்கு அறியப்பட்ட சீன சார்பு கம்னீயூஸ் கட்சி சண்முகதாசனின் அரசியல் வகுப்பு மாணவனாக ஆரம்பத்தில் இருந்தார் .தமிழர் சுயநிர்ணயமைக்கு எதிரான மற்றும் இந்திய விஸ்திரிப்பு வாதத்தை இங்குள்ள தமிழர்கள் மேல் புகுத்தி பார்த்தவை என்பவற்றினோடாக சண்முகதாசனுடன் முரண்பட்டு கொண்டு தனிய சென்று இயக்கம் கட்டியது தான் அந்த சேகுவரா இயக்கம். அப்பொழுது அரசாங்கத்துக்கு சோவியத் யூனியனும் சீனாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த கால கட்டத்தில் தான் அந்த புரட்சிக்கான முயற்சி நடந்தது . வட கொரியா புரட்சிக்கான முயற்சி நடைபெற்ற சமயத்தில் நடுக்கடலில் இருந்து ஆயுதம் வெடி பொருட்கள் வழங்கினார்கள் என வதந்தி உலாவினாலும் அவர்கள் நவீன ஆயதங்களை பாவித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரம் இல்லாமால் இருந்தது.

apr1971-300x239.jpg

புரட்சி முற்பட்ட காலத்தில் கொழும்பு ஹைட் பார்க்கில் ரோகண விஜவீரா உரையாற்று பொழுது <

தென்மாகண பகுதியில் அநேகமாகன பொலிஸ் நிலையங்களை புரட்சிக்கு முயற்ச்சியின் கைப்பற்றிய பொழுதும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்ட புரட்சிக்கான முயற்சியும் தலைநகரை நோக்கி நகர்த்தப்பட் முயற்சியும் பிசு பிசுத்து போனது . அது பிசுபிசுத்து போனதுக்கு பல புனை கதைகள் மாதிரி பல கதைகள் உலாவி வந்தன. அதன் உண்மை தன்மை எவ்வளவு என்று தெரியாத போதிலும் .அது உண்மை போல உருவாக்க பட்டு இருந்தன. அப்படியான கதைகள் ஒன்று தான் இது.

ஓரே நேரத்தில் நாட்டை பிடிக்கும் நோக்கில் தான் புரட்சிக்கான வேலைத்திட்டம் இருந்தனவாம்.அதுக்கான நேரத்தை பல பாகங்களாக பல இடங்களுக்கு பிரிக்கபட்ட குழுக்களுக்கு தெரியபடுத்துவதுக்கு இப்படி ஒரு முறையை கையாண்டார்களாம். அந்த நேரத்தில் இப்ப இருக்கு மாதிரியான தொடர்பு சாதன வசதி இருக்கவில்லை என்பது தெரிந்ததே. வானொலிக்கு மரண அறிவித்தல் கொடுத்து இருந்தார்களாம் அதில் அடக்கம் செய்யப்படும் நேரத்தை புரட்சிக்கான நேரமாக கை கொள்ளவேணுமெண்டு தீர்மானித்தார்களாம் ..அந்த மரண அறிவித்தல் ஒரு முஸ்லிமினதை கொடுத்திருந்தார்களாம் .அப்பொழுது அறிவிப்பாளராக இருந்த எச்.எப் முகதீன் என்ற அறிவிப்பாளர் அடக்கம் நேரம் இஸ்லாமியர்களின் அடக்கத்துக்கு உகந்த நேரமாக இல்லாத கருத்தில் கொண்டு சிறிது திருத்தம் செய்து வாசித்தாராம் .

அதனால் தலைமை குழுக்குள் புரட்சிக்கான ஒரு நேரத்தையும் நாட்டின் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பட்ட இன்னொரு நேரத்தையும் தெரிவு செய்வதனால் பிசுபிசுத்து போனதாக இப்படியான பல கர்ண பரம்பரை கதைகள் கூறியிருந்தனர். இந்த புரட்சியை மழுங்கடிப்பதுக்கு உடனடியாக குண்டு வீசும் ஹெலிகொப்டரை இந்தியா அனுப்பியது அனுராதபுர மற்றும் காடுகளில் ஒளிந்திருக்கும் போராளிகளை சரண்டையமாறு துண்டு பிரசுரங்களை வீசியும் குண்டுகளை வீசியும் இந்த கலகத்தை அடக்கியது

apr1971-1-300x220+(1).jpg

71 புரட்சியின் பொழுது சரண்டைந்த அல்லது கைது செய்யப்பட்ட சேகுவரா இயக்கத்தவர்

வெறும் ஆர்ப்பாட்டம் தொழிற்சங்க வேலை நிறுத்தம் போன்றவற்றை மட்டுமே அரசுக்கு எதிரான முறையாக அதுவரையும் கண்ட இலங்கை அரசு இப்படியான கலக புரட்சி முதன்முறையாக கண்டமையால் கலக்க முற்றது ,அந்த பய கலக்கத்தில் பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடி பொது மக்கள் கதைப்பது கூட சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க பட்டது மட்டுமன்றி அப்படி நடந்தால் மூர்க்கமாக அடக்கினார்கள். ஊடகங்கள் ,பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் திரைபடங்களில் புரட்சி அது போன்ற சொற்கள் விடயங்கள் பாவனைகள் சொற்பமாக இருப்பது தெரிந்தால் கூட தணிக்கை செய்யப்பட்டது. உதராணத்துக்கு டைரக்டர் சிறீதர் சிவாஜி வைத்து வெளிநாட்டில் எல்லாம் படமாக்கபட்ட சிவந்த மண் படத்தை தடை செய்ய முனைந்தார்கள் .ஏனெனில் அதில் ஜமீன்தாருக்கு எதிராக புரட்சி செய்வது போல காட்சிகள் வருகின்றன என்று. பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு அத்திரைபடம் இலங்கையில் திரைபட பட்டன என்று நினைக்கின்றேன்

இந்த புரட்சி தோற்கவேணும் என்று வட பகுதி தமிழர்கள் தான் அரசாங்கத்தை விட கூட நினைத்து இருப்பார்கள் .அப்படி சேகுவாரா இயக்கத்தை பற்றி தமிழ் அரசியல் தலைமைகள் அப்படி ஒரு பய பீதியை வளர்த்திருந்தார்கள். புரட்சி தோல்வியின் பின் கைது செய்யப்பட்ட ரோகண விஜை வீராவை யாழ்ப்பாண சிறையில் வைத்திருந்தார்கள் . சில நேரத்தில் நிர்வாணமாக கூட....பிற்ப்பட்ட காலங்களில் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் நணபர்களாக மாறினார்கள் என்று உதவினார்கள் என்று அப்பொழுது கதைகள் உலாவின.இந்த காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் பகுதி பங்களாதேஸாக மாறியது முக்திபானி இயக்கங்களின் புரட்சிகர அணுகுமுறை மற்றும் இந்தியாவின் உதவியுடன்

..மூன்று இரண்டு பெருபான்மையாக இருந்த சிறிமாவோ அரசு சிலோன் என்பதை சிறிலங்காவாக மாற்றிக்கொண்டது மட்டுமன்றி உயர் பீடமாக இருந்த பிரித்தானிய ராணியின் சில சட்ட சரத்துக்களில் இருந்து விடுவித்து கொண்டு இலங்கை குடியரசாகிக்கொண்டது .அது மட்டுமன்றி பிரித்தானியாவின் சோல்பரி என்பரானால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை மாற்றி புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி கொண்டது ..தமிழர்கள் அனுபவித்த கொஞ்ச நஞ்ச உரிமைகளும் இந்த சட்டத்தில் இல்லாமாகபட்டன என்று தமிழ் தலைமகள் குரல் கொடுக்க தொடங்கின...அந்த காலகட்டம் 1972ம் ஆண்டு (தொடரும்)

Link to comment
Share on other sites

நல்ல விடயம் அரக்கன்........... உங்கள் முதல் பதிவில் பின் எழுதும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பதிவுகளுக்கான இணைப்புகளையும் வழங்கினால் வாசிக்கும் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஈழப் போராட்டத்தின் இன்னுமொரு 'சாட்சி' யாக உங்கள் தொடர் வெளி வரட்டும். அது இன்னொரு விவாத வெளியைத் தோற்றுவிக்கட்டும்.

உங்கள் தொடர் வெற்றி அடைய நிர்வாகப் பிரிவில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தாரளமாகக் கேளுங்கள்

Link to comment
Share on other sites

நல்ல விடயம் அரக்கன்........... உங்கள் முதல் பதிவில் பின் எழுதும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பதிவுகளுக்கான இணைப்புகளையும் வழங்கினால் வாசிக்கும் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஈழப் போராட்டத்தின் இன்னுமொரு 'சாட்சி' யாக உங்கள் தொடர் வெளி வரட்டும். அது இன்னொரு விவாத வெளியைத் தோற்றுவிக்கட்டும்.

உங்கள் தொடர் வெற்றி அடைய நிர்வாகப் பிரிவில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தாரளமாகக் கேளுங்கள்

நிழலி அவர்கட்கு நன்றி ..நீங்கள் சொல்லும் இணைப்பு கொடுத்தால் நல்லது தான் எப்படி யாழ் இணையத்தில் கொடுப்பது என்று தெரியவில்லை ...உங்களால் அந்த உதவி செய்ய முடியுமானால் செய்யவும் நன்றி

Link to comment
Share on other sites

நிழலி அவர்கட்கு நன்றி ..நீங்கள் சொல்லும் இணைப்பு கொடுத்தால் நல்லது தான் எப்படி யாழ் இணையத்தில் கொடுப்பது என்று தெரியவில்லை ...உங்களால் அந்த உதவி செய்ய முடியுமானால் செய்யவும் நன்றி

ஒரு திரியில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு தொடர் இலக்கம் இருக்கும். உதாரணமாக உங்கள் மூன்றாவது பதிவு 8 ஆவது post ஆக இருக்கு. அந்த 8 என்பது வலப்பக்க மூலையில் தெரியும். அதை அழுத்தினால் (Click பண்ணினால்) ஒரு link சின்ன சாளரத்தில் திறக்கும். அதை copy பண்ணி போடுங்கள்

click-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புரட்சியை மழுங்கடிப்பதுக்கு உடனடியாக குண்டு வீசும் ஹெலிகொப்டரை இந்தியா அனுப்பியது அனுராதபுர மற்றும்

கொழும்பில் இந்தியா படையினர் காவலில் இடுபட்டிருந்தனர் என் கேள்விபட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி

ஆரம்பத்தில் என்ன நடந்தன? தமிழனது வழிகள் எவ்வாறு தடைப்பட்டன? அவன் ஏன் வன்முறையை தெரிவு செய்தான்? போன்றவற்றுக்கு பலரும் தெளிவு தேடும் நேரமிது. அதை தங்களது இத்திரிமூலம் எமது போராட்டம் பற்றிய ஆரம்ப வரலாற்றை அறிய முடியுமாயின் அது வரலாற்றுப்பொக்கிசமாக இருக்கும். தொடருங்கள்.

அதே நேரம் இதே வரலாற்றுடன்தான் நாமும் வளர்ந்தோம். எனவே எமக்குத்தெரிந்தவை வரும்போது நாமும் பெருகூட்டுவோம். அல்லது தெளிவுபத்துவோம்.

தெளிவு படுத்துவோம்

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள் -பாகம் -4

72 இல் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சட்டத்துக்கு பின்

1948 சுதந்திரத்துக்கு கிட்டிய காலத்தில் உருவாக்கப்பட்ட சோல்பரி சட்டத்தின் படி இலங்கையின் அதி உயர் பீடம் இராணிக்கு வழங்கபட்டிருந்தது .சட்ட நீதி போன்றவற்றிலும் ஆக கடைசியான அப்பீல் பிரித்தானியாவிடம் இடம் இருந்தது . இதை மாற்றி சிறிலங்காவிற்க்குள் எல்லாவற்றையும் உயர் பீடமாக்கி கொண்டார்கள் .மாவிட்டபுரம் கோயில் உள் நுழைவு போராட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக அடங்கா தமிழர் சுந்தரலிங்கம் பிரித்தானியாவில் உள்ள ராணியிடம் அப்பீல் செய்ய போவதாக பேசப்பட்டது இதை உடனடியாக இல்லாமால் ஆக்கவேண்டும் நோக்கில் அவசரம் அவசரமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்வோரும் உளர்

.இந்த சட்டத்தின் படி சிறிலங்கா குடியரசு மே மாதம் 22 திகதி உருவானது .இதை சிங்கள தரப்பு கோலகாலமாக கொண்டாடியது .இதில் நடைபெற்ற வைபங்களை தமிழர் பிரநிதிகள் பகிஸ்ரித்ததுடோ மட்டுமல்லாது கரி நாளாக பிரகடப்படுத்தியது. இதற்கு காரணம் இவ்வளவு காலமும் சோல்பரி சட்டத்தில் இருந்த சிறுபான்மையிருக்கு உரித்தான பாதுகாப்பான சரத்துக்கள் நீக்கப்பட்டு இருந்தன. இலங்கை பெளத்த நாடு என பிரகனபடுத்த பட்டிருந்தது

சிறிமா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் ஆதரிக்கும் தமிழர்கள் எவரும் துரோகிகள் என்ற கண்ணோட்டத்துனூடனே தமிழர் தரப்பினரால் பார்க்கபட்டன.அப்போதைய தாபல் தந்தி அமைச்சர் குமாரசூரியர், யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா போன்றரை குறி வைத்து உரும்பிராய் சேர்ந்த யாழ் இந்து கல்லூரி மாணவன் சிவகுமார் இயங்கி கொண்டிருந்தார் ..துரையப்பா ,சந்திரசிறி போன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் ...தாக்குதலில் துரையப்பாவுக்கு எதுவும் சேதம் ஏற்படவில்லை .அவருடைய காருக்கு தான் சேதம் ஏற்பட்டது .இன்ஸ்பக்டர் சந்திரசிறி மீது நடத்திய தாக்குதல் காரணமாக தேட படவேண்டியவராக மாறுகிறார் ...தமிழ் தமிழ் என உசுப்பேத்திய தமிழரசு கட்சியின் எம்பியாக சிவகுமாரின் தொகுதியில் இருந்த கதிரேவற்பிள்ளையிடம் நிதி உதவி கேட்கபட்டதாம் அதற்கு அவரிடம் இருந்து உதவி நிராகரிக்கப்பட்டதாம்

நிதி வளத்துக்காக கோப்பாய் வங்கியை கொள்ளை அடிக்க சென்ற பொழுது பொலிசாரல் மடக்கி பிடிக்க முற்பட்ட பொழுது தப்பியோட முயன்று சயன்ட் அடித்து இறக்கும் நிலை ஏற்பட்டது .சிவகுமாரின் தாய் தந்தையர் கால காலமாக தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர்கள். சிவகுமாரின் இந்த இறப்பு இளைஞர் சமுதாயத்தை உசுப்பேத்தி தமிழரசு கட்சியினர் தமக்கு சாதகமான அரசியலை தொடர்ந்து செய்வதற்க்கு வசதியாக இருந்தது.

முதல் உலக தமிழராட்சி மகாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இரண்டாவது தமிழாரட்சி மகாநாடு சென்னையில் நடைபெற்றது. மூன்றாவது தமிழராட்சி மகாநாடு பிரான்சில் உள்ள பாரிஸில் நடைபெற்றது. நான்காவது தமிழராட்சி மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மகாநாடு குழுவினர் தீர்மானித்து இருந்தனர்.இதற்கு அப்போதைய அரசாங்கம் போதிய ஆதரவு கொடுக்காத்து மட்டுமன்றி பல முட்டுகட்டைகளை நிபந்தனைகளை விதித்தது.விழாவை நடத்துவதில் தனிநாயகம் அடிகள் அண்மை காலத்தில் யாழ் உப வேந்தராக இருந்த வித்தியானந்தன் இருந்தனர்.தமிழ நாட்டில் இருந்து அரசியல் ஆர்வலர்கள் வருவதை கட்டு படுத்தியது .குறிப்பாக அப்போதைய உலக தமிழர் இளைஞர் பேரவை தலைவராக இருந்த ஜனார்த்தனத்துக்கு மகாநாட்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.சென்னையில் நடைபெற்ற தமிழராட்சி மகாநாடு ஊர்திகளின் ஊர்வலத்தை தியேட்டர்களில் திரைபட இடைவேளைகளில் அந்த நேரம் காட்டுவார்கள்.பார்த்திருக்கிறேன் பார்க்கு பொழுது கண்கொள்ள காட்சியாக இருக்கும் .அது போல சென்னை ஊர்திகளின் ஊர்வலத்துக்கு வராவிட்டாலும் மகாநாடு நடைபெறும் கடைசி நாளுக்கு முதல் நாள் ஊர்தி ஊர்வலம் யாழ் நகரை சுற்றி வலம் வந்தது கண் கொள்ள காட்சியாக இருந்தது.மகாநாட்டின் கடைசி நாள் கூட்டம் வீரசிங்க மண்டபத்தில் உள் நடைபெறாமால் வெளியில் நடத்துவதற்க்கு தீர்மானித்து இருக்கவேண்டும் அதற்க்கு பொலிஸ் தரப்பிலோ மாநகரசபை தரப்பிலோ போதிய ஒத்துழைப்பு கொடுக்கபடமால் இருந்திருக்க வேண்டும். அதை விட அனுமதி மறுக்க பட்ட ஜனார்தனம் ஏதோவகையில் தமிழ் நாட்டில் இருந்து இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறார் என்று பொலிஸ் தரப்பு மோப்பம் பிடித்திருக்க வேண்டும்.

கடைசி நாள் வைபவத்தில் ஒரு முஸ்லீம் பேராசிரியர் பேசி கொண்டிருக்க தவறுதலாக அவர் தான் ஜனார்த்தனம் என்று கைது செய்ய முனைந்த பொழுது ஏறப்பட்ட களேபரத்துக்கு பின் ஏற்பட்ட பொலிஸ் தாக்குதலில் சன நெரிசலில் சிக்குண்டு மின்கம்பிகளுக்குள் அகப்பட்டும் மக்கள் இறந்தனர் .அப்பொழுது யாழ் மேயராக இருந்தவர் அல்பிரட் துரையப்பா

CB27_EX_MLC_JANARTH_135137f.jpg

மேலே உள்ள படத்தில் உள்ளவர் தான் அந்த ஜனார்த்தனம்

துரையப்பாவை அரசாங்கத்துக்கு ஆதரவனாவர் என்று தமிழர் தலைமைகளால் துரோக பட்டம் கொடுக்கப் பட்டாலும் யாழ் மாநகரத்துக்குட்பட்டவற்றில் வாழும் உழைக்கும் மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார் எனவும் அவரை கதாநாயகனாக கணிக்கும் பிரிவினர் இருந்து தான் உள்ளார்கள் .யாழ் நகரத்தின் மையத்தில் இன்றும் அமைந்துள்ள நியூ மார்க்கட் கட்டிடத்தை உருவாக்கின பங்கில் துரையப்பா இருப்பதினால் அதை பாரட்டுவோர் சிலர் உள்ளனர்.

துரையப்பா ஒரு ஸ்தீரிலோலன் அவரை விட்டு விட்டு டாக்டரான அவரது மனைவி மலேசியாவுக்கு சென்று விட்டதகாக கூறுவர் .சிறிமாவின் மகன் அநுரா பண்டராநாயக்கா அந்த காலக்கட்டத்தில் இளைஞன் அதோடை ஒரு பிளே போய் அவருக்கு யாழ்ப்பாணம் வரும் போது எல்லாம் தமிழ் பெண்களை ருசி பார்த்தால் என்ன என்று எண்ணம் வரும் போலும் .அந்த நாட்களில் பத்திரிகைகளில் கிசு கிசு செய்திகளாக வந்தது அநுரா குடித்துவிட்டு யாழ் பெரியாஸ்த்பரி அண்மையிலுள்ள தாதி பயிற்சி கல்லூரி மதிலையும் யாழ் பிரபல பெண்கள் கல்லூரி விடுதி மதிலையும் தாண்ட முற்பட்டார் என்று .இதற்க்கு அவசியம ஏற்படாத வகையில் துரையப்பா அநுராவுக்கு மாமா வேலை பார்த்துள்ளார் என்று கூறுவர் .குறிப்பாக இலங்கையில் வெளியான தமிழ திரைபடத்தின் நடித்த தென்னிந்தய நடிகை போல் தோற்றத்தை கொண்ட அவரை அநுராவுக்கு தீனியாக வழங்கினார் துரையப்பா என்று கூறுவோரும் உளர்.ஆனால் இச்செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கியது ஏனெனில் அநுரா ஓரின சேர்க்கை ஆர்வலர் அதனால் அவர் திருமணம் செய்யமாலே கடைசி காலம் மட்டும் இருந்தவர் .இரு பால் சேர்க்கை விருப்பம் உள்ளோரகளும் இருக்கிறார்கள் என்று பின்னர் வாசித்து இருக்கிறேன்

துரையப்பாவை முடிப்பதற்கு அப்பொழுது அங்கு அங்கு சிறு சிறு இளைஞர் குழுக்களில் இருந்தவர்கள் பல முனைகளில் பல பேர் முயன்று கொண்டிருந்தனர்.

பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் வழியில் சுட்டு கொல்லப்பட்டார்... அரியாலையை சேர்ந்த கிருபாகரன் வல்வெட்டித்துறைய சேர்ந்த கலாபதி பொலிஸில் மாட்டி கொண்டதை தொடர்ந்து பிரபாகரன் என்பவர் தான் சுட்டுக் கொண்டார் பொலிஸ் தரப்பு அறிந்து கொண்டது.

அன்று தமிழ் பிரதேசங்களில் போட்டி கட்சிகளாக போட்டி போட்டு கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சி மற்று இதொக போன்றவை இணைந்து வல்வெட்டித்துறையில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர் வீட்டில் தமிழ்ர் விடுதலை கூட்டணி கட்சியை உருவாக்கினார்கள்

வட்டுக்கோட்டை தீர்மான பிரகடனத்தை செய்தார்கள் தமிழர் விடுதலை கூட்டணியர் செய்த ஆண்டு 1976(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பகால அரசியல். அதுகும்... படங்களுடன்.

அவசரப்பட்டு எழுதாமால்..... ஆற அமர யோசித்து, பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து எழுதுங்கள். அரக்கன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு, ஆனால் நீங்கள் மிகவும் வேகமாகப் போகின்றீர்கள் எதோ தெரியாத்தனமாக தொடங்கிற்ரன் முடிச்சுப்போடவேணும் என்பதுபோல்.

மேலும் சிவகுமார் அவர்கள் கோப்பாய் கதிரவேல் அவர்களிடம் உதவி கேட்டது உண்மை, மற்றும் சாவகச்சேரி நவரத்தினம் அவர்களிடமும் உதவியை நாடினார் அதற்கு அவர் கூறுய பதில் இந்தியாவுக்குப் போங்கோ அங்கு நான் ஏதாவது உதவி செய்ய முயர்சிக்கிறேன் என. அவ்வேளைகளில் அல்பிரட் துரையப்பா சிவகுமாரனை மிகவும் அடையாளம் கண்டே இருந்துள்ளர், அதாவது யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள யாழ் வாடிவீட்டுக்கு துரையப்பா மாலை வேளைகளில் வருவது வழக்கம், அங்குதான் சிவகுமாரன் அவரைக் கொலைசெய்ய இடத்தைத் தேர்ந்தெடுத்தார் விடையம் தோல்வியடைந்து உடனடியாக உர்ம்பிராய் திரும்பிய சிவகுமார் தனது மாமனாரை எந்தவிதக் கேள்விமுறையுமோ அல்லது காரணமோ இல்லாது அடித்துள்ளார் அவர் கோவத்தில கோப்பாய் காவற்துரைக்குப் போய் சிவகுமார்மீது முறைப்பாடு கொடுத்துள்ளார், எதிர்காலத்தில் எதாவது சிக்கலாக வருமாகவிருந்தால் வழக்கில் தப்பிக்கொள்ள . மேலும் யாழ் கோவில் வீதியில் அப்போதைய சிங்கள் காவற்துறை அதிகாரி சந்திரசேகரா தங்கியிருந்தார் அதாவது யாழ் கைலாசபிள்ளையார் கோவிலியிருந்து நல்லூர்ப்பக்கமாக ஐந்து அல்லது ஆறாவது வீட்டினில் என நினைவிருக்கின்றது அதுவும் ஒரு மாலைவேளை தாக்குதல் நடந்தது கைக்குண்டுத்தாக்குதலின் பின்பு தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சிவகுமாரன் சுட முயன்றார். அனால் அக்கைத்துப்பாக்கி அவ்வேளையில் வேலைசெய்யவில்லை (பதட்டமோ என்னவோ தெரியாது) அழித்தொழிப்பு முயற்சி தோல்வியடைந்ததும் நேரடியாக வீட்டிற்குபோய் பின்வளவில நிண்டு கைத்துப்பாக்கியை மீண்டும் இயக்கிப்பார்த்திருக்கிறார் முதலாவது கிளிக்கர் தட்டும்போதே குண்டு சீறிப்பாய்தது. சிவகுமாரன் வீட்டிற்குப் போனதும் அவருக்கு எதிர் வந்த அவரது தாயார் முதலில் கேட்டகேள்வி "என்னடாப்பா என்னமாதிரிப் போச்சு" என சந்திரசேகரா மீதான தாக்குதல் திட்டத்தை அவரது தாயார் முதலே அறிந்திருந்தார். அடுத்த நாள் சிவகுமார் தனது நண்பருடன் கைலாசபிள்ளையா கோவிலடிக்குப் போயிருக்கிறார் சம்பவம் நடந்த இடத்தினைப்பார்க்க அந்த இடத்துக்கு இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை சிறிதுனேரத்துக்கு முன்புதான் இரண்டாவது தடவையாக வந்துவிட்டுப் போனவர். பின்பு சிவகுமாரது நண்பன் "முல்லை " கைதின்பின்னதான விசாரணயில் வஸ்தியாம்பிள்ளை முல்லையிடம் கூறியிருக்கிறார். முல்லையைக் கைது செய்தது பஸ்தியாம்பிள்ளை அவருடன் கூஅ இருந்தது ரஞ்சன் எனும் புலனாய்வு அதிகாரி. பூலோகசிங்கம் எனும் ஒருவர் சிங்களத்துக்கு விசுவாசமானவர் கனடா இலங்கைத் தூதரகத்தில் இரண்டாம் நிலை அல்லது முதலாம் நிலை அதிகாரியாக வேலை செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன் அவர் முல்லையின் தய்மாமனாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அரியாலையை சேர்ந்த இன்பமும்
இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....
Link to comment
Share on other sites

//எதோ தெரியாத்தனமாக தொடங்கிற்ரன் முடிச்சுப்போடவேணும் என்பதுபோல்.//

#

நீங்கள் சொல்வது தான் உண்மை போல என் மனகிடங்கு சொல்லுது :lol:...மற்றுமு உங்கள் விவரணமான கருத்துக்கு நன்றி ...நான் என்ன செய்யிறது எனக்கு தெரிந்த அல்லது கேள்விப்ட்டதை தானே சொல்லமுடியும் ....நன்றி

Link to comment
Share on other sites

இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....

நன்றி உங்கள் தகவல் சரி ...அரியாலை சேர்ந்த இன்பம் என்ற இடத்தில் ..அரியாலை சேர்ந்த கிருபாகரன் என்று வர வேண்டும் இப்ப திருத்தி இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....

இன்பம் நவாலி தான்.

Link to comment
Share on other sites

ஆரம்பகால அரசியல். அதுகும்... படங்களுடன்.

அவசரப்பட்டு எழுதாமால்..... ஆற அமர யோசித்து, பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து எழுதுங்கள். அரக்கன்.

நல்ல அறிவுரை சிறி அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் தகவல் சரி ...அரியாலை சேர்ந்த இன்பம் என்ற இடத்தில் ..அரியாலை சேர்ந்த கிருபாகரன் என்று வர வேண்டும் இப்ப திருத்தி இருக்கிறேன்

இன்பத்தை சித்திரவதைமூலம் கொலை செய்து பண்ணைபாலத்திற்க்கு அருகான்மையில் போட்டார்கள்....சிங்கள இராணுவத்தினர்,,,40 வருடங்களின் பின்பும் அதே பாணியை கடைப்பிடித்து தளபதி ரமேசையும் கொலை செய்துள்ளார்கள்.....கொலை செய்தது மட்டுமல்லாமல் அதை படம் பிடித்து பகிரங்கமாக வெளியிடுகிறார்கள்......

Link to comment
Share on other sites

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக் கூத்துக்கள்-5

வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 ம் ஆண்டு

யூன்பி அரசாங்கத்துடன் ட்ட்லி செல்வா ஒப்பந்தம் என்றும் சிறிலாங்க சுதந்திரகட்சியுடன் பண்டா -செல்வா ஒப்பந்தம் என்றும் செய்து அவை கிழிக்கபட்டு இருந்தன .சமஸ்டி மாநில சுயாட்சி என்ற கோசங்கள் தொடர்ந்து வைத்தாலும் இலங்கை அரசாங்கம் அதற்கு எள்ளவும் மரியாதை கொடுக்கு நிலையில் இருக்கவில்லை ..தமிழ் மக்களுக்கு பேரினவாத அரசாங்கம் செய்யும் பாரபட்சத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக தமிழ் இளைஞர்கள் கிளர்ந்து எழுந்தனர் .அவர்களை திருப்தி படுத்த தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல் தலைமையை தக்கவைக்க ஒன்றிணைந்த கட்சியின் பெயரான தமிழர் கூட்டணியை தமிழர் விடுதலை கூட்டணியாக மாற்றுவதோடு தமிழ் ஈழம் என்ற கோசத்தை கையில் எடுத்தனர்.தமிழ்த்தலைமைகள்

வட்டுக்கோட்டையிலுள்ள அமிர்தலிங்கத்தின் ஊரான பண்ணாகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானம் என தமிழர் தரப்பால் கூறப்படுகின்ற தமிழீழ பிரகடனம் நடைபெற்றது .தமிழ் இளைஞர்களின் ஏகோபித்த ஆரவாவரத்துடன் பிரகடனப்படுத்த பட்டது .

இந்த தமிழீழ பிரகடனத்தை தந்தை செல்வா பிரேரிக்க மு. சிவசிதம்பரம் வழி மொழிந்தார்.வரலாற்று சிறுப்பு மிக்க பிரகடனம் என்று சொல்லபடுகின்ற இந்த பிரகடனத்தில் உள்ளடக்க வாசகங்கள் யாதெனில்

ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.''

வட்டுக்கோட்டை தீர்மானம் அதே காலத்துக்கு கிட்டத்தட்ட தான் புதிய தமிழ் புலிகள் செட்டி என்பவரின் தலைமையில் கீழ் குழுவாக இயங்கி வந்த பிரபாகரனும் மற்றவர்களும் சேர்ந்து தமிழ் ஈழ விடுதலை புலிகள் என்ற இயக்கத்தை தொடக்கினார்கள்.புதிய தமிழ் புலிகள் தலைவராக இருந்த செட்டி பிற்காலத்தில் கொள்ளை போன்ற விடயங்களுக்காக சுட்டு கொல்லப்பட்டதை அறிந்திருக்க கூடியதாயிருந்தது . இந்த செட்டி விடுதலை புலிகளில் இருந்த செல்லக்கிளி டெலோ இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்துக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

தமிழ விடுதலை புலிகளை உருவாக்கியவர்கள் இறுக்கமான கட்டுபாடுகளை சட்டத்திட்டங்களை வகுத்து கொண்டு தமிழ் ஈழ இலட்சியத்துக்காக இயங்க வேண்டுமென்று பிரகடனபடுத்தி கொண்டனராம் .அதற்க்காக மது அருந்துதல் காதல் செய்தல் இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு இயக்கத்துக்கு செல்வது போன்றவற்றிக்கு அதி உட்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று தீர்மானித்து கொண்டார்களாம் .இயக்கத்தை இறுக்கமாக வழிநடத்த மத்திய குழு போன்றவற்றை உருவாக்கி மிக நம்பக தன்மையான லட்சிய வேட்கையுடைய மேலே உள்ள கட்டுபாடுகளை இதய சுத்தியுடன் கடைப்பிடிக்கூடியவர்கள் மட்டுமே உள்வாங்கி மிக குறுகிய எண்ணிகை உடையவர்களாக மட்டுமே இருந்தார்களாம்.வேறு விதமாக சொன்னால் எவரையும் விரைவில் உள் வாங்குவதை தவித்து கொண்டிருந்தார்களாம்.பிற்காலத்தில் இயக்கங்கள் தமிழ் நாட்டில் இருந்த பொழுது ஒரத்த நாட்டில் நடந்த பண்ணையார் கொலையில் சம்பந்த பட்ட விச்சு அண்மையில் புத்தகம் வெளி\யிட்ட ஜயர் ,இலங்கை வானொலியில் பணியாற்றி பிற்கால இயக்களில் ஒன்றான தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவைக்கு ஆலோசகராக இருந்த நாகராசா போன்றவர்கள் அக்காலங்களில் மத்திய குழுவில் இருந்ததாக பேசிக் கொள்வர்.

வட்டுக்கோட்டை பிரகடனம் செய்த தமிழர் விடுதலை கூட்டணியினர் தாங்கள் பிரகடனம் செய்த தமிழ் ஈழம் சம்பந்த மாக யாழ் பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த பொழுது கைது செய்யப்பட்டனர் .துண்டு பிரசுரம் செய்தவர்களில் தந்தை செல்வாவை தவிர மற்றவர்களான சாவகச்சரி நவரத்தினம் ,அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் துரைரத்தினம் போன்றவர்களை தேச துரோகம் செய்ததாக கூறி அவசர கால விதிகள் கீழ் கைது செய்து சிறையில் தள்ளினர் .

TC_KI_T_0210_1.jpgட்ரயல் அற் பார் வழக்கில் மேலே உள்ள படத்தில் குற்றுவாளி கூட்டில் அமிர்தலிங்கத்தை பார்க்கலாம்

இவர்கள் பற்றிய வழக்கு மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் வெளிநாட்டு சட்ட பிரமுகர் பார்வையாளர்ளாக இருக்க ட்ரயல் அற்பார் அடை மொழியொடன் நடை பெற்றது ..அந்த நாட்களில் நடைபெற்ற வழக்குகளில் பிரபலமான வழக்காக கொள்ளப்படுகிறது.இந்த வழக்கில் இவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளாக முன்னாள் உள்ளுராட்சி அமைச்சர் தமிழரசுகட்சி பிரமுகரமான திருச்செல்வம் (நீலன் திருச்செல்வத்தின் தந்தையார்). செல்வநாயகம், ஜீ ஜீ பொன்னம்பலம் வாதிட்டனர் .ட்ரயல் அற்பார் வழக்கின் தீர்ப்பில் அவசர காலவிதி சரியான முறையில் அமைக்கப்படவில்லை அதனால் அதனூடாக அமைக்க பட்ட இந்த ட்ரயல் அற் பார் என்ற வழக்கு மன்றம் செல்லாது என்று சட்ட நுணுக்கத்துடன் வாதாடினது மூலம் கைது செய்ய பட்டவர்கள் விடுவிக்க பட்டதுடன் ஒரு அரசியல் வெற்றியாகவும் தமிழர் தரப்பினால் பார்க்கப் பட்டது.தமிழர் அரசியல் சம்பந்தமாக எந்த விதமான வழக்கில் இதுவரை ஆஜராகாத ஜீஜீ இதில் கடைசி நேரம் ஆஜரானது குறிப்பிடதக்கது.இதே காலகட்டத்தில் தான் கலைஞர் கருணாநிதி செய்த ஊழல் பிரபல வழக்கான சன்சோனி கமிசன் போன்றவற்றில் இருந்து காப்பற்ற ஜீஜீ ஆஜாராகிறார் என்று பத்திரிகைகளில் வெகுவாக பிரபலபடுத்த பட்டிருந்தது

பெரிய தேசிய முற்போக்கு அரசாங்கத்த்தை அமைப்பதில் புரட்சி செய்வதாக பெரிய தம்பட்டம் அடித்து கொண்டு செயல் பாடுகளை செய்த சிறிமா அரசாங்கம் அப்படி அதை நோக்கி போக முடியாத நெருக்கடி ஏற்பட்டது .நிதியமைச்சராக இருந்த என் எம் பெரேரா மாற்றப்பட்டு பீலிக்ஸ் டயஸ் பண்டராநாயக்காவுக்கு வழங்கபட்டு நாட்டின் பொருளாரதிட்டத்தை பழைய பாணிக்கு திருப்பினர் . இது சிறிமா அரசாங்கத்தின் பாரளுமன்ற ஆட்சி காலத்தின் கடைசி காலமாகும் . இந்த காலகட்டத்தில் தான் முற்போக்கு தமிழ் இலக்கிய மகாநாடு ஒன்று நடைபெற்றது .அரசாங்கத்தின் தமிழ் இலக்கிய ஆதரவாளரான இலக்கிய பிரமுகர் பிரேம்ஜி தலைமையில் கைலாசபதி சிவத்தம்பி ஆதரவு இருக்க மிக அரிதாகவே தமிழர்களின் கூட்டம் நடக்கும் மிக இறுக்கமான பண்டராயக்கா சர்வதேச மண்டபத்தில் வெகு கோலாலமாக நடைபெற்றது.இதில் முற்போக்கு இலக்கியவாதிகள் என்று அழைக்கப்ட்டவர்கள் மட்டுமே அழைக்க பட்டு பங்கு பெற்றி இருந்தனர்..

இதே நேரத்தில் தமிழ்ஈழ விடுதலை புலிகள் தலை மறைவு இயக்கத்தை சுதந்திரமாக ஆரம்பித்து இருந்தாலும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையின் ஆலோசனையை கேட்டு நடந்து கொண்டார்கள் என்று கூறுவர் .அப்போதைய எகிப்திய இளம் அதிபர் கடாபி நாடுகளில் நடைபெறும் தேசிய விடுதலை போரட்டங்களில் ஆதரவு வழங்கி கொண்டிருந்தார் . அந்த அடிப்படையில் அமிர்தலிங்கத்துக்கு கடாபிக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறுவர் .அதன் மூலம் தலைமறைவு இயக்கத்துக்கு உதவி செய்ய முனைந்தார் என்றும் கூறுவர்.ஆரம்ப காலங்களில் நடைபெற்றதை பார்க்கும் பொழுது தமிழர் விடுதலை கூட்டணி தலைமை கூறிய ஏவலை நிறைவேற்றவேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. என்றாலும் அக்காலத்தில் தமிழ் விடுதலை புலிகளால் அறிக்கை பரவலாக விநியோகிக்கப்பட்டிருந்தது அதில் ஒரு வாசகம் இருந்தது நிபந்தனையற்ற குறுகிய காலகட்டத்துக்கு அரசியல் தேவை கருத்து கொண்டு தமிழர் விடுதலை கூட்டணிக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்று .துண்டு அறிக்கை வெளியிட்ட காலகட்டங்களில் ஒருசில வெகுஜனத்தினரின் பார்வையில் உப்பிடி ஒரு தலை மறைவு இயக்கம் இல்லை எனவும் வேறு சில பொது மக்களின் பார்வையில் பொடியள் என்று அழைக்கப்பட்டு உச்ச திறமை வாய்ந்த சாகசம் நிறைந்த அதி உயர் மனித நிலையில் வைத்து மகிழ்ந்து மிகைபடுத்தி கொண்டார்கள்.

சிறிமா அரசாங்கம் 47 தமிழ் இளைஞர்களை பல்வேறு காரணங்களை சொல்லி சிறையில் நீண்ட காலம் வைத்திருந்தது .தனது பதவி காலம் முடிவடைய அண்மிக்க இன்னொரு பொது தேர்தல் வர இருக்கும் தருணம் பார்த்து அவ் இளைஞர்களை விடுதலை செய்தது .அதில் காசி ஆனந்தன் மாவை சேனாதிராசா போன்றோரும் அடக்கம் ....1977 பொது தேர்தல் அண்மித்தது ...தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடிக்க தொடங்கின........

[

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.