Jump to content

'கர்ஃப்யூட் நைட்’ - பஷரத் பீர்!


Recommended Posts

A bloodstained label

Stuck to his lapel

Reads: In...

Does it mean 'Indian, Informer, Intruder, Insurgent?'

It bewilders to make it read 'Innocuous Innocent.'

சொந்த ஊர், சொந்த மண் என்பது அங்கே இருக்கும் உங்கள் வீடு மட்டுமானது அல்ல. அல்லது அந்த ஊரில் உங்களுக்கு இருக்கும் நிலங்கள், சொத்துக்கள் என்பவையும் அல்ல. அங்கே குடியிருக்கும் உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. காலம் காலமாக அந்த மண் சந்தித்து வரும் மாற்றங்கள், இழந்து வரும் புராதனங்கள், எதிர்கொள்ளும் துயரங்கள், அமிழ்த்தி வைக்கப்பட்ட சோகங்கள்... இவைகளினூடே இருக்கும் ஒடுக்கப்படல் நிகழ்வுகளும், விடுதலைக்கான கனவுகளுமாகச் சேர்ந்து புவிப்பரப்பில் தனக்கான carfud1.jpgஎல்லைகளை வரைந்து கொண்டு மதம், இனம், கலாச்சாரம் போன்ற உங்களுக்கான அடையாளங்களைத் தருவதுதான் சொந்த ஊர் என்பது. 'இந்த ஊரில் இருந்து வருகிறேன்’ என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் வீட்டு முகவரியைக் குறித்ததானது அல்ல. நீங்கள் வாழும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்பதுதான் பொருள்.

அவ்வாறாக ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன் சமூகத்தில், தன் சொந்த ஊரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி, நமக்கு ஒரு வாழ்வனுபவத்தை அறிமுகப்படுத்துகிறார் பஷரத் பீர். அவரின் சொந்த ஊர்... காஷ்மீர். தன் ஊரைப் பற்றி அவர் சொல்வதற்குத் தேர்வு செய்துகொண்ட தளம் எழுத்து. அந்த எழுத்தில் உருவான அற்புதமான படைப்புதான் 'கர்ஃப்யூட் நைட்’ எனப்படும் இந்தப் புத்தகம்!

'வெள்ளைப் பனி மழை பொழிகிற அழகான ஊர்... ரோஜாக்களும், ஆப்பிள்களும் நிறைந்திருக்கிற அற்புதமான ஊர்...’ என்பன போன்ற எந்த அலங்கார வார்த்தைகளையும் பயன்படுத்தாமல்... 'காஷ்மீரின் ஒரு குளிர்காலத்தில் நான் பிறந்தேன்...’ என்று மிக எளிமையாக ஆரம்பிக்கிறபோதே நமக்குத் தெரிந்துவிடுகிறது... அடுத்து வரும் பக்கங்களில் எல்லாம் உண்மை பொதிந்து ஓர் ஆவணத்திற்கு உண்டான குணாதிசியங்களோடு இருக்கப் போகிறது புத்தகம் என்பது! உண்மை எப்போதும் தன்னை எளிமையாகத்தான் வெளிப்படுத்திக் கொள்கிறது. இல்லையா..?

‘LoC (Line of Control)'! இதுதான் புத்தகத்தின் அடிநாதம். நம்மைப் பொறுத்தவரை இன்றும் கூட காஷ்மீர் என்பதை வெறும் சுற்றுலா தலமாகவும், சினிமா டூயட் ஷூட்டிங்கிற்கான லொகேஷனாகவும்தான் நமக்குள் படிந்திருக்கிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் ஊடுறுவல் நுழைவாயிலாக அது நமக்குக் காட்டப்படுகிறது. உண்மையில் காஷ்மீரின் வரலாறு ரத்தமும், ஆயுதங்களும், மரண ஓலமும் கலந்த ஒன்று. சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் முயற்சியால் சமஸ்தானங்கள் எல்லாம் ஒன்றிணைந்தன. ஆனால் காஷ்மீர் யோசித்தது. காரணம், அங்கே ஆட்சி செய்வது இந்து மன்னன் ஹரி சிங் ஆக இருந்தாலும், அங்கே இருந்த பெரும்பாண்மை மக்கள் இஸ்லாமியச் சகோதரர்கள். 1947-ல் இந்தியாவில் இருந்து ஜின்னா பாகிஸ்தானைப் பிரிக்கிறார். அப்போது காஷ்மீர் எங்களுக்கு வேண்டும் என்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். ஆனால் காஷ்மீரில் இருந்த மக்களோ இந்தியாவுடன்தான் இணைவோம் என்றார்கள். காஷ்மீரில் இருந்த இஸ்லாமியர்கள் ஷேக் முகமது அப்துல்லா என்பவரின் கீழ் அணி திரள்கிறார்கள். அவரும் இந்தியாவுடன் இணைய, மகாராஜா ஹரி சிங்கிற்கு ஒத்துழைப்புத் தருகிறார். காஷ்மீர் இந்தியாவில் இணைகிறது. ஆனால் அதற்குப் பிறகு பாகிஸ்தான் அவ்வப்போது காஷ்மீரின் மீது உரிமை கொண்டாடுவது தொடர, 1949-ல் ஐ.நா. மக்கள் வாக்கெடுப்பு (plebiscite) ஒன்றை நிகழ்த்துகிறது. அதன் அடிப்படையில் LoC ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. ஆயிரம்தான் ஐ.நா.வே தலையிட்ட பிறகும், தன் வால்தனத்தை பாகிஸ்தான் விடுவதாக இல்லை. காஷ்மீர் இளைஞர்களை 'எல்.ஓ.சி.’ வழியாக வரவழைத்து அவர்களுக்குத் தீவிரவாத பயிற்சி அளித்து, மீண்டும் காஷ்மீருக்குள் ஊடுருவ விடுகிறது பாகிஸ்தான். இதற்கு 'ஹிஸ்புல் முஜாஹிதீன்’ போன்ற தீவிரவாத அமைப்புகளும் உதவி புரிகின்றன. இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு மாற்றாக ''Jammu and Kashmir Liberation Front (JKLF)', எனினும், இந்த அமைப்புகளுக்கு இடையே Insurgent Vs Counter-Insurgent' எனும் வகையில் மோதல் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னையைக் கருவாக எடுத்துக் கொண்டது அதன் பின்னணியில் தன் வாழ்வனுபவத்தைச் சொல்லிச் செல்கிறார் பஷரத். 'ரெடிஃப்’, 'தெஹல்கா’ போன்ற ஊடகங்களில் பத்திரிகையாளராக இருந்தவர் பஷரத் பீர். இணையப் பத்திரிகையில் பணியில் இருந்த போது காஷ்மீர் பகுதிக்கான செய்தியாளராக டெல்லியில் இருந்து பணியாற்றியவர் இவர். அப்போது காஷ்மீர் பற்றி எழுத வேண்டும் என்று அவருக்கு எண்ணம் தோன்றுகிறது. அதனால் தன் பணியை விட்டுவிலகி தன் ஊரான ஆனந்த்நாகிற்குத் திரும்பிச் செல்கிறார். காஷ்மீர், ஸ்ரீநகர், சோஃபியன் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று 'எல்.ஓ.சி.’ தாண்டி தீவிரவாதப் பயிற்சிக்குச் சென்ற இளைஞர்கள், மத அடிப்படைவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கதைகளைத் தொகுக்கிறார். மீண்டும் அவர் பத்திரிகையாளராக, 'தெஹல்கா’வில் சேர்ந்த பிறகு இந்தப் புத்தகம் தோற்றம் கொள்கிறது.

தன் இளவயது வாழ்க்கை, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தல்... என்று இரண்டு பகுதியாக நம்மால் இந்தப் புத்தகத்தைப் பிரிக்க இயலும். ஆனால் அப்படி ஒரு பிரிவு இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தாத வகையில் சம்பவங்களைக் கோர்த்திருக்கிறார் பஷரத். எந்த ஓர் இடத்திலும், எந்த ஒரு சம்பவமும் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. '

ஏ.கே.47-ஐ தீவிரவாதப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் 'கலாஷ்னிகோவ்’ என்று சொல்வது, டெல்லியில் தன்னை ஒருவர் காஷ்மீர் என்று அறிமுகப்படுத்திக் carfud1_gine.jpgகொண்டால் அவர் பெறுகிற புறக்கணிப்பைச் சொல்வது, காஷ்மீரின் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்குச் செல்லும் போது அங்கே வைப்பட்டிருக்கிற செக் போஸ்ட்டில் உடல் தடவி சோதனை செய்வார்கள். அதுவே பழக்கமாக, ஒவ்வொரு முறை தன் வீட்டிற்குள் நுழையும் போதும் வீட்டு நுழைவாயிலில் கைகளைத் தூக்கி நிற்கிறார் ஒருவர். அதை ஒருவித புது நோய் என்று சொல்லி யாராவது அவரை 'செக்’ செய்தால்தான் வீட்டிற்குள் அவர் நுழைவார் என்று சொல்லும் நிகழ்வு என ஏகப்பட்ட டீட்டெய்ல்!

நமக்கு ஏதோ காஷ்மீர் என்பது ஹரி சிங் எனும் மன்னரால் ஆட்சி செலுத்தப்பட்ட ஒரு சமஸ்தானமாகத்தான் நமது பள்ளி வரலாற்று நூல்கள் சொல்லி இருக்கின்றன. உண்மையில், 16-ம் நூற்றாண்டில் தன் சுயத்தை முகலாயர்களிடத்தில் இழந்தது காஷ்மீர். பிறகு 18-ம் நூற்றாண்டில் ஆப்கன் அரசன் அஹமத் ஷா அப்தாலியிடம் வருகிறது. அதன் பிறகு 19-ம் நூற்றாண்டில் ரஞ்சித் சிங் எனும் சீக்கியரிடத்தில் வருகிறது. இறுதியாக 1846-ல் ஆங்கிலேயரிடத்திற்கு வருகிறது. சில சமரசங்கள், ஏமாற்றுதல்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிடமே சேர்கிறது எனும் வரலாற்றை இந்தப் புத்தகத்தின் வழியே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

காஷ்மீரைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவர்கள் வந்தார்கள், இவர்கள் வந்தார்கள் என்று பழங்கதைகளைப் பேசாமல், கிலானியின் வழக்கு, நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற 'கன்டெம்பொரரி’யான நிகழ்வுகளையும் இணைத்து எழுதி இருப்பதால், இந்தப் புத்தகத்தின் உண்மைத்தன்மை படிக்கப் படிக்க உயருகிறது.

1990-க்கு முன்பு வரை காஷ்மீர் பகுதி இஸ்லாமியர்கள் திருமணச் சடங்குகளை இரவிலும் தொடர்ந்திருந்தார்கள். ஆனால் அந்த வருடத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், இரவு நடக்க இருந்த மணமகள் வீட்டுப் புறப்பாடு நிகழ்ச்சி எனும் சடங்கின் போது அந்தப் பயணத்தில் இந்திய ராணுவம் மணப்பெண்ணைக் கற்பழிக்கிறது. இது நடந்து சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அந்தத் தம்பதியினரைச் சந்திக்கிறார் பஷரத். அவர்கள் மட்டுமல்ல... ஊரடங்கு இரவுகளின் போது ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டிச் சோதனை செய்து, விசாரணை என்று கொண்டு சென்ற தம் மக்களைக் காணாமல் போகச் செய்த இந்திய ராணுவத்தை எதிர்த்து தன்னைப் போன்று மக்களைத் தொலைத்தவர்களுக்காக இந்திய ராணுவத்தால் 'காணாமல் போனவர்களின் பெற்றோர் கூட்டமைப்பு’ எனும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப் போராடி வரும் ப்ரவீணா அஹாங்கர், இந்திய ராணுவத்தின் விசாரணை என்ற பெயரில் நடைபெற்ற கொடூரங்களில் தங்களின் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, அதனால் உயிரணுக்களை இழந்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நண்பர்களின் உறவுகள், இந்தப் பிரச்னைகளால் இடப்பெயர்வுக்கு உள்ளான 'பண்டிட்’ குடும்பங்கள்... அப்படி ஒரு குடும்பத்தில் இருக்கும் தன் ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கச் செல்கையில் அந்த ஆசிரியர் தான் எழுதிய 'எடர்னல் சின்’ எனும் கவிதைப் புத்தகத்தை பஷரத்துக்குப் பரிசளிக்கிறார். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு கவிதைதான் மேலே நீங்கள் கண்டது!

இப்படிப் பல நிகழ்வுகளைச் சொல்லி, இறுதியில் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீரில் இருந்து பேருந்து சேவை விடப்படுகிறது. 'எல்.ஓ.சி.’யைத் தாண்டி இருபக்க மக்கள் தங்களின் உறவுகளைச் சந்திக்கிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் ஒருவரின் சுயசரிதை அல்ல. இது ஒரு நரேட்டிவ் ஜர்னலிஸம்! நினைவலைகள்.... ரிப்போர்டேஜ் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எப்படிச் சொன்னாலும் இந்தப் படைப்பு மிக ஆழமான ஒன்று. அழகான ஒன்று!

http://news.vikatan.com/index.php?nid=7472

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.