Jump to content

தியாக தீபம் திலீபனின் 25ஆவது நினைவுநாள் இன்று எழுச்சியுடன் ஆரம்பம் !!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

09-1211-298x300.jpg

[size=4]தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.[/size]

[size=4]பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.[/size]

[size=4]தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.[/size]

[size=4]லண்டன், கனடா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளில் திலீபனின் நினைவுவாரம் என்றுமில்லாதவாறு இம்முறை மிகவும் பிரமாண்டமாக அனுஷ்டிக்கப்படுகிறது.[/size]

[size=4]இந்த நிகழ்வில் தமிழ் மக்களை அணிதிரண்டு வந்து பங்கேற்குமாறு தமிழகத்து ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். ஒருசொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து உயிரை விட்டு உலகத்திற்கே அஹிம்சையைப் போதித்துச் சென்ற தியாகி திலீபனின் வழியில் தமிழர்களாகிய நாம் எமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, பிளவுகள் இன்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுதலை நோக்கிய பாதையில் செல்லவேண்டும் என்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size]

[size=4]1987 செப்டெம்பர் 15ம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்\க் கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.[/size]

[size=4]* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.[/size]

[size=4]* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.[/size]

[size=4]* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.[/size]

[size=4]* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.[/size]

[size=4]* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.[/size]

[size=4]இந்த 5 கோரிக்கைகளையும் முன்வைத்தே உண்ணாவிரதம் இருந்தார் திலீபன். ஆனால், அஹிம்சையைப் போதித்த பாரததேசம் இறுதிவரை மனமிரங்கவில்லை. அதனால் செப்டெம்பர் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் வீரச்சாவடைந்தார்.[/size]

[size=4]http://eelampresse.com/?p=8353[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]“யாழ். கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தின் ஆரம்பம்” – திலீபன்[/size]

Picture-8-300x297.png

[size=4]“யாழ். கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தின் ஆரம்பம்.மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”[/size]

[size=4] *பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில் மற்றும் சிறைகளில் உள் ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.[/size]

[size=4]*புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்ப டும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.[/size]

[size=4]*இடைக்கால அரசு நிறுவப்படும்வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.[/size]

[size=4]*வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் புதிதாகத் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.[/size]

[size=4]* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, பாடசாலைகள், தமிழ்க் கிராமங்கள் ஆகியவற்றில் உள்ள இராணுவ மற்றும் பொலிஸ் நிலைகள் மூடப்படல் வேண்டும்.[/size]

[size=4]எமது அரசியல் தலை விதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்? பேரினவாத சிங்கள அரசு மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்கமாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.[/size]

[size=4]இந்த நம்பிக்கையின் அடிப்படையி லேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர் மானித்துள்ளோம். ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்க வில்லையானால் நாம் இந்தியப் படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.[/size]

[size=4]நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம்.எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக் கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.[/size]

[size=4]எமது ஆயுதங்களை நாம் இந்தியப் படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசு ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.[/size]

[size=4]இந்திய அரசு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை”[/size]

[size=4]04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஆயுத ஒப்படைப்பு நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உதிர்த்த வார்த்தைகள் இவை.[/size]

[size=4]ஆனாலும் இந்த நம்பிக்கையை இந்தியா துளியேனும் காப்பாற்றவில்லை. தமிழர்களின் பாதுகாப்புக் கவசங்களாக விளங்கிய ஆயுதங்களை களைவதில் காட்டிய அக்கறையை அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் காட்ட மறுத்தது. இலங்கை இராணுவத்தை விடவும் வெறித் தனமான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியது.[/size]

[size=4]எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மீது பிடிப்பு அதிகம். அவர்கள் இலங்கையை நேசிப் பதை விடவும் இந்தியா மீதான நேசிப்பையே அதிகம் கொண்டிருந்தனர். அதனாற்றான் இலங்கை வானொலியை விடவும் இந்திய ஆகாசவாணியின் செய்திகளையே நம்பியிருக்கத் தொடங்கினர். தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமாக இருந்தால் அது இந்தியாவால் மட்டுமே சாத்தியம் என்பது அநேகரின் அசைக்க முடியாத நம்பிக்கை.[/size]

[size=4]அந்த நம்பிக்கையை மெய்ப்பிப்பது போல இந்தியாவும் சில காரியங்களில் இறங்கியிருந்தது. தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குதல், அந்தக் குழுக்களுக்கான தளங்களை தமிழகத்தில் அமைத்துக் கொடுத்தல், நிதி உதவி செய்தல் என்று இந்தியாவின் “அக்கறைகள்’ ஈழத் தமிழர்களை ஆனந்தக் கடலுக்குள் இறக்கிவிட்டன. இந்திய அக்கறையின் உச்சக்கட்டமாக, இலங்கை அரசின் பொருளாதாரத் தடையால் ஈழமக்கள் பட்டினிச் சாவை எதிர் கொண்டிருந்த சமயத்தில், “ஒப்ரேசன் பூமாலை’ என்ற பெயரில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.[/size]

[size=4]வானதிர எங்கும் பறந்த “மிராஜ்’ விமானங்கள் ஆங்காங்கே உணவுப் பொட்டலங்களை வீசி, “இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நடந்தால் நாம் சும்மா இருக்க மாட்டோம்” என்ற செய்தியை இலங்கை அரசுக்குச் சொல்லிப்போயின. அதன்பின் அரண்டுபோன இலங்கை இந்தியாவிடம் சரணாகதியடைந்தது.[/size]

[size=4]இலங்கைஇந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழர் பகுதிகளுக்குள் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவம், பெரும் படைத்தளங்களுக்குள் முடங்கிக்கொள்ள இந்திய ஜவான்களின் பிரசன்னம் நிகழ்ந்தது.[/size]

[size=4]வந்தவர்களை ஆராத்தி எடுத்து மகிழ்ந்தனர் தமிழர்கள். தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மகிழாமல் இருக்கமுடியுமா? ஆனாலும் புலிகளுக்கு இந்தியாவின் உண்மை முகம் நன்றாகவே தெரிந்திருந்தது. மக்களின் நம்பிக்கையோ வேறு விதமாக இருந்தது. தன் கோர முகத்தை மறைக்க இந்தியா பூசியிருக்கும் அரிதாரத்தை, இயல்பாகவே அழிந்துபோக வைக்க புலிகள் எடுத்த முடிவுதான் ஆயுத ஒப்படைப்பு.[/size]

[size=4]ஆயுதங்கள் அற்ற புலிகளோடும், பாதுகாப்பு இழந்த மக்களோடும் சீண்டி விளையாடத் தொடங்கியது இந்தியா. தாம் முன்வைத்த அரைகுறைத் தீர்வை தமிழர்கள் விழுங்கியே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றது. மெல்ல மெல்ல அதன் அரிதாரப்பூச்சு அழியத் தொடங்கியது. இந்தியாவின் கடைவாயில் துருத்திக்கொண்டிருக்கும் வேட்டைப் பற்களையும் மக்கள் உணரச் செய்வதற்காக புலிகள் இன்னொரு போராட்ட வடிவத்துக்கு புகுந்தனர்.[/size]

[size=4]உலகத்துக்கே அஹிம்சையை போதித்ததாக மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவை அதே அஹிம்சையை ஆயுதமாக வைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என புலிகள் நம்பினர். தலைவரின் தீர்மானத்துக்கு செயல் கொடுத்தவன்தான் படுகாயம் அடைந்திருந்தான்.[/size]

[size=4]இந்தியாவின் கோரமுகத்தைக் கிழிக்க 25 வருடங்களுக்கு முன்னர் இதேநாளில் (15.09.1987) நல்லூரின் வீதியில் உண்ணா நோன்பு யாகத்தில் ஆகுதியாக தன்னை ஈடுபடுத்துவதற்காக மேடையில் ஏறினான் திலீபன். அஹிம்சையின் அனலில் வேகத் தொடங்கியது பாரதம்.[/size]

[size=4]தீர்க்க தரிசனம் மிக்க 5 கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் பட்டினிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாரதத்தில் ஆட்சியில் இருந்த நேருவின் பேரன் திலீபனின் தியாகத்தை கண்டும் காணாதவர் போல தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். நல்லூரின் வீதியில் எப்படியும் காந்திய தேசத்துக்கு அஹிம்சையை கற்பித்து, மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற கனவுடன் திலீபன் ஒவ்வொருநாளும் அணுஅணுவாக செத்துக்கொண்டிருந்தான். தன்னை உருக்கி பிறருக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தியாக ஒவ்வொரு கணத்திலும் உருகிக்கொண்டே இருந்தான்.[/size]

[size=4]அருவியாக பெருகத்தொடங்கிற்று. கூடியிருந்த மக்கள் கண்களில் விழி நீர். வானமும் ஊரெழு மைந்தனின் உயிர்கொடையை நினைத்து ஓ என்று கண்ணீரைப் பொழியத் தொடங்கியது பெருமழையாக. கொட்டும் மழையிலும் திலீபனின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தேசமெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நல்லூரில் குவியத் தொடங்கினர்.[/size]

[size=4]“திலீபா எங்களை விட்டுப் போய்விடாதே” [/size]

[size=4]” இந்திய தேசமே! எங்களுக்காக உயிர்க்கொடை செய்தபடியிருக்கும் எங்கள் பிள்ளையைக் காப்பாற்று” பல்லாயிரக்கணக்கான மக்களின் இந்த வேண்டுதல்களை காலால் நசுக்கியது அதிகாரம். இந்தியாவின் காந்திய முகத்தை அர்த்தமிழக்கச் செய்துவிட்டு, உண்ணாநோன்பின் 12 ஆவது நாளில் (26.09.1987) பகல் 10.48 மணிக்கு தன் கடைசி உயிர்த் துளியையும் உதறிவிட்டு விண்ணேறினான் திலீபன்.[/size]

[size=4]“புலிகள் ஆயுதங்களின் மீது மட்டுமே காதல் கொண்ட தீவிரவாதிகள்” என்ற கருத்தியலை, திலீபனின் பன்னிரு நாள் பட்டினிப் போராட்டம் தலைகீழாக மாற்றியிருந்தது. மக்களுக்காக எத்தகைய வடிவங்களிலும் போராடி தங்கள் உயிர்களை ஈகையாக்குவதற்கு புலிகள் தயார் என்ற செய்தியை திலீபனின் சாவு உலகெங்கும் விதைத்தது.[/size]

[size=4]மரணித்த பின்னும் தன் உடல் கூட வீணாகக் கூடாது என்பதில் திலீபன் உறுதியாக இருந்தான். திலீபனின் கோரிக்கையின் படி மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. அவனின் சாவுக்குப் பின்னர் “எங்களை இந்தியாவே காப்பாற்றும்” என்ற மக்களின் நம்பிக்கை தகர்ந்து போனது. தன்னை மூடியிருந்த எல்லா மாயத் திரைகளும் விலக்கப்பட்டுவிட, தன் கொலைகார முகத்தோடு வெளிப்பட்டது இந்தியா. “இத்தனை நாளும் எங்களின் மீட்பர் என்று நம்பியது ஒரு இரத்தக்காட்டேரியைத் தான்” என்ற உண்மையை திலீபனின் மரணம் மக்களுக்கு உறைக்கவைத்தது.[/size]

[size=4]அதன் பின் மக்களின் ஆதரவோடு உலகின் வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக களமாடி வென்றார்கள் புலிகள். அதன் பின்னும் ஒவ்வொரு போராளியும் திலீபனின் கனவுகளை சுமந்துகொண்டிருந்தார்கள்.[/size]

[size=4]“யாழ். கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தின் ஆரம்பம். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று அடிக்கடி திலீபன் தன் சக போராளிகளிடமும் மக்களிடமும் தனக்குள் இருக்கும் கனவை விபரிப்பதுண்டு. அந்தக் கனவை சரியாக நான்கு வருடங்கள் கழித்து திலீபன் உயிர் நீத்த நாளில் நனவாக்கினர் புலிகள். நூற்றாண்டுக் கணக்கில் அந்நியர்களின் குறியீடாக நிமிர்ந்து நின்ற கோட்டையில் புலிக்கொடி பறந்தது.[/size]

[size=4]ஆயினும் திலீபன் யாகத்தில் ஆகுதியாகி 25 வருடங்கள் கழிந்த பின்னரும்கூட அவனது கோரிக்கைகள் எந்தவொரு ஆட்சியாளராலும் நிறைவேற்றப்படவேயில்லை. இந்தக் கோரிக்கைகள் இன்னமும் ஆத்மசாந்தி அடையாமல் அலைந்துகொண்டே இருக்கின்றன.[/size]

[size=4]“நிறைவேற்றப்பட முடியாததேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக சமாதான நடவடிக்கைகளை குழப்புவதே புலிகளின் வாடிக்கை. திலீபனின் கோரிக்கைகளும் அப்படியானவையே ‘என்று இன்றைக்கும் கிளிப்பிள்ளை போல் சொல்லிக்கொண்டிருக்கும் “அதிகார அடிவருடிகளும்’ இருக்கவே செய்கிறார்கள்.[/size]

[size=4]ஆனால் அவனது கோரிக்கைகளில் இருந்த தீர்க்க தரிசனமும், அவசியத்தன்மையும் இப்போது தெரிகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் அறுவடையாலேயே கிழக்கில் தமிழர்களால் ஆட்சியமைக்க முடியாமல் போயுள்ளது. அதிகரித்த படைத்தரப்பின் பிரசன்னத்தால் தமிழினம் தொடர்ந்தும் அழுந்திக்கொண்டே இருக்கிறது.[/size]

[size=4]அரசியல் கைதிகள் விடுதலை நாள் எதுவென்று தெரியாமல் இன்னமும் சிறைப்பறவைகளாக்கப்பட்டு கூண்டுகளுக்குள்ளேயே அடித்துக்[/size]

[size=4]கொலை செய்யப்படுகிறார்கள். பாடசாலைகள், ஆலயங்கள்,கிராமங்கள் என்பன உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் படைத்தரப்பால் விழுங்கப்பட்டு வருகின்றன.[/size]

[size=4]ஒட்டுக்குழுக்களிடம் மறைந்திருக்கும் ஆயுதங்கள் களையப்படவேயில்லை துப்பாக்கி முனைகள் இன்னமும் மக்களைக் குறிவைத்தபடியேதான். தாகமடங்கா நினைவுகளாக அலைதலுக்கு உள்ளாகின்றன திலீபனின் கோரிக்கைகள். அவையே மக்களின் மனங்களிலும், அவனுக்கான அஞ்லிப்புகளையும் உற்பத்திசெய்கின்றன. ஆயிரம் ஆயிரம் காலங்களுக்கு நல்லூரின் வீதியில் நடந்த யாகத்தில் ஆகுதியானவனின் நாமத்தை தமிழ் மக்கள் உச்சரித்துக்கொண்டிருப்பார்கள்.[/size]

[size=4]http://eelampresse.com/?p=8364[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/0TdD467MDOc

http://youtu.be/s_nXrJA-BcE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கங்கள்

Link to comment
Share on other sites

நினைவுநாள் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நினைவுநாள் வணக்கங்கள். [/size]

Link to comment
Share on other sites

வீரவணக்கம்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]வீரவணக்கங்கள்[/size]

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

545709_283360698434516_954609585_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள், வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

264320_423219501067632_1158114205_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.