Jump to content

மருமகனை இழந்து தவிக்கும் வாதவூரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் குழந்தையின் தாயாரை இந்த வேதனை மேலும் தாக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.அந்த சகோதரி ஆரோக்கியத்தோடு இருந்தால் அதுவே போதும்..

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

மனத்தை தேற்றிக்கொள்ளுங்கள். அக்காவுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் நீங்கள் இருக்கவேண்டிய நேரம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். தீதும் நன்றும் ஒன்றாய் வரும் கண்டிப்பாக இந்தக்காலத்தோடு அண்மியதாக நன்றும் வரும். ஆண்டவர் சித்தம் கவலையில் தோயாமல் தெம்பாக நிமிர்வதற்கு உங்கள் சகோதரிக்காக பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

அக்காவை மனத்திடத்துடன் வைத்திருப்பது உங்கள் கடன்..! ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன்........உங்கள் குடும்ப் சோகத்தில் நானும்பங்கு கொள்கிறேன். வாங்கி வைத்த ஒவ்வொரு பொருளையும் பார்க்க கவலை பெருகும் அக்காவை ஆறுதல் படுத்தவும் .. மனம் தேற வழி செய்யவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாதவூரான் அண்ணா, உங்களுக்கும் உங்கள் சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். உங்கள் சகோதரியின் மனதைத் தேற்ற முயற்சி செய்யுங்கள். காலம் தான் துயரை ஆற்ற வேண்டும். :( :(

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்!.எல்லாம் நன்மைக்கே! இதில் பலமுறை அனுபவபட்டவன்.இந்தக்குழந்தை ஒரு கூன் செவிடு பேடாக பிறந்தால் என்ன செய்வது?ஆகவே எங்களுக்கு இந்தக்குழந்தைக்கு பலன் இல்லை அல்லது அதிஸ்டம் இல்லை என்று எங்களை நாங்கள் தேற்றி கொள்வதே நன்று.

Link to comment
Share on other sites

வாதவூரன்,

மிகவும் கவலையான செய்தி. உங்கள் துக்கத்திலும் உங்கள் அக்காவின் இழப்பிலும் பங்கு கொள்கின்றோம்

குழந்தை ஒன்று ஆரோக்கியமாக பிறந்தால் கூட பொதுவாக பல பெண்களுக்கு குறைந்த அல்லது கூடிய மன அழுத்தம் வருவது உண்டு. அதுவும் பிறந்த குழந்தை இறப்பின் மன அழுத்தம் (depression) வருவதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். உங்கள் அக்காவை ஊரில் யாராவது மன நல மருத்துவர் இருந்தால் ஒருக்கால் காட்டினால் மிகுந்த பயனளிக்கும். அவரைச் சுற்றியுள்ளவர்களில் அவர் மீது அதிக அக்கறை உள்ளவருக்கு இதனை நீங்கள் தெளிவாக விளங்கப்படுத்தி உணரச் செய்யுங்கள், இது மிக மிக அவசியமும் இன்றே செய்ய வேண்டிய ஒன்றும்.

அக்காவை கண்டிப்பாக கவனிக்கச் சொல்லுங்கள். அத்தான் பக்கத்தில் இருந்தால் அவரை அக்காவை தைரியப்படுத்தச் சொல்லுங்கள், முடிந்தால் கொழும்புக்கு கூட்டி வந்து ஒருக்கால் நல்ல மருத்துவரை அணுகிக் காட்டுவது நல்லது

அக்காவின் ஆரோக்கியமே முதன்மையானது

Link to comment
Share on other sites

வாதவூரன்........உங்கள் குடும்ப் சோகத்தில் நானும்பங்கு கொள்கிறேன். வாங்கி வைத்த ஒவ்வொரு பொருளையும் பார்க்க கவலை பெருகும் அக்காவை ஆறுதல் படுத்தவும் .. மனம் தேற வழி செய்யவும்.

இதற்காகத்தான் எம் முன்னோர்கள் நாள் சரக்கு மட்டும்.உணவுத்தேவைக்காக வாங்குவார்கள்.பிள்ளைக்கு தேவையானவற்றை பிறந்ததின் பின்பு தான் வாங்குவார்கள் நாம் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டோம்.இப்படியான நேரங்களில் எவ்வளவு வேதனையைத்தருகிறது பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி.என்னோடை கூட அக்கா இன்னும் கதைக்கவில்லை.தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார்.அம்மா அப்பாவுடன் இருப்பதால் ஓரளவு ஆறுதல்.நான் ஏற்கனவே அம்மாவுக்கும் அத்தானுக்கும் மன அழுத்தத்தை பற்றி விளங்கப்படுத்தியிருக்கிறேன்.இனி அவா யோசிக்காமல் இருக்கவேண்டும்.முதல் இரண்டுதரம் கருச்சிதைவு வந்தபோதே நிறைய யோசிச்சவா இதுக்கு என்ன செய்யிறாவோ தெரியாது.நாங்கள் எல்லோரும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் அவவுக்கு ஆறுதலுக்கும் ஆளில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை தேற்றிக்கொளுங்கள் வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான், உங்களுக்காகவும் அக்கா குடும்பத்திற்காகவும் பிரார்த்திக்கிறோம். தாய், தந்தை மற்றும் உறவுகளின் ஆதரவு அக்காவைத் தேற்றிப் பழைய நிலைக்குக் கொண்டு வரும். அவர் பழைய நிலைக்கு வந்த பிறகு, அடுத்த கருத்தரிப்பிற்கு முயல்வதற்கு முன்னர் பெயர் போன ஒரு பெண்ணியல் நோய் நிபுணரிடம் காட்டி ஆலோசனை பெற ஊக்குவியுங்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் அக்கா துயரம் விரைவில் தீர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.. மிக விரைவில் குழந்தைச் செல்வம் கிடைத்து மகிழ்ச்சி மீண்டு வர மனதாரப் பிரார்த்திக்கிறேன்...

Link to comment
Share on other sites

வாதவூரான், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தகப்பனார் பிள்ளை வயிற்றில் வந்ததிலிருந்து அதை நினைத்து நினைத்து துன்பமே எமக்கு என்று அடிக்கடி ஒரு பாடல் பாடுவார். அந்தப்பாடலை தற்போது வாதவூரானுக்கு எழுததினால் ஆறுதலாக இருக்கும். ஆனால் மறந்துவிட்டது.

யாராவது தெரிந்தால் பதிந்துவிடுங்கள்.

அந்தப்பாடல் இப்படித்தொடங்கும்

மழலையைப்பெறும் நாள் துன்பம்

அதை வளர்த்திடும் நாளும் துன்பம்....................???????

Link to comment
Share on other sites

வாதவூரான் இப்படியான நேரங்களில் கடவுள் என்று ஒன்று உண்டா என்கிற கேள்வி எழும் இப்படியான தருணங்களில் தான் நீங்கள் அதிகம் உங்கள் சகோதரியுடன் தொடர்பு கொள்ளவேண்டும். அவரின் தனிமையை போக்கி நம்பிக்கை ஊட்டவேண்டும்.

Link to comment
Share on other sites

மிகவும் கவலையான செய்தி வாதவூரான். உங்கள் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன் :( . ஜஸ்டின் சொன்னது போல அடுத்தமுறை கருத்தரிக்கும் முன்னர் ஒரு நல்ல VOG இடம் காட்டுவது நல்லது. உங்கள் அக்காவை மனம் தளராமல் ஊக்கப் படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.