Jump to content

தமிழ் மொழி கற்றுத் தேர்ச்சியடைந்த 1600 இராணுவத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிப்பு! Photo's


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரில் தமிழ் மொழியை கற்று தேர்ச்சி அடைந்த படை அதிகாரிகள் உட்பட படை வீரர்கள்  1600 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம் பெற்றது.
 

army_tamil_language.1.png

நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தின் துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதயபெரெராவும் கலந்து கொண்டார்கள்.
 

army_tamil_language.2.png

விருந்தினாகள் கிளிநொச்சி மாவட்ட சிவில் பாதுகாப்பு படையினரின் நடன நிகழ்வு மற்றும் கண்டியன் நடன நிகழ்வுகளுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
 

army_tamil_language.3.png

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படையினரின் நடன நிகழ்வுகள் மற்றும் பெண்கள் படையணியினரின் நடன் நிகழ்வுகள் நாடகம் என்பன  இடம்பெற்றன.
 

army_tamil_language.4.png

சான்றிதழ்களை மதத் தலைவர்களான  இந்து சமயக்குரு ஜெகதீஸ்வரக்குருக்கள், கிறிஸ்தவ மதகுரு ஜேசுதாசன் மற்றும் இஸ்லாமிய மதகுரு றிஸவின் மற்றும் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரா யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துனை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரெரா ஆகியோர் சான்றிதழ்களை மேடையில்  வழங்கி கௌரவித்ததுதுடன் ஏனையவாகளுக்கு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள் படையினர் தங்கியிருந்த இடத்தில் வைத்தே சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.
 

army_tamil_language.5.png

http://www.pathivu.com/news/33515/57/1600/d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ் கதைக்கிறன் நீ ஏண்டா சிங்களம் கதைக்கிறாயில்லை எண்டு கேட்டு எங்கடை சனத்தை அடிக்கப்போறாங்கள்  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூருக்கு.... பத்தாயிரம் இராணுவம், வேட்டியுடன் தரிசனம்.
1600  இராணுவத்தினர் தமிழ் மொழியில் தேர்ச்சி.
 

சிங்களம்.... வலு நாசுக்காக, காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது.
இங்கிருந்து, ஜனநாயகம் சொல்லி.... புலி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் ஆட்கள்,

கொஞ்சம் கவனத்தில் எடுத்தால்...நல்லது.

இது... சிங்களத்தின், சர்வதேசத்தை ஏமாற்றும், நீண்ட தூர திட்டம் என்பது,

உங்களது மர மண்டைக்கு ஏற, இன்னும் பத்து வருஷம் பிடிக்கும்.
 

அதற்கிடையில்.....
.
.

.
.
.
.
.
உங்க.... ஆத்தா, மண்டையை போட்டுடுவா.... மக்கா.

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் தமிழர்களை கொலைசெய்தவங்கள்(இனப்படுகொலை) இனி நிமல் தெமிழையும் கொலசெய்யப்போறதுதானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம்ம்

நான் டமில் பேசுறது

நீங்க  சிங்களம்பேசும்

நாம்ல ஒற்ருமையா இரந்திடுலம்..

சரியோ..

 

பிரபாகரன்

இப  இல்ல

எங்ளுக்கு பயமும் இல்ல

என்ன நான் செர்ல்றது..?


இவ்வளவும் சொன்னால் தேர்ச்சிப்பத்திரம் தரப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ இப்ப சிங்களம் தொிந்தால் தமிழ் வர்தக நிலையங்களில் வேலை வாய்ப்பு பெறுவது இலகு.இதுல உள்ள சரி பிழை வேற விடையம்.

Link to comment
Share on other sites

தலைவரே சொன்னவர் தானே சிங்கள மக்களோட எங்களுக்கு பிரச்னை இல்லை என்று... :)

 

கூடிவாழதெரியாதவர்களுக்கு தான் பிரச்சனை..மற்றவர்களுகில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.