Jump to content

France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்   + நேசக்கரம்  =  35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி

 

 

அன்பார்ந்த உறவுகளே

 

35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரமாகத்தேவை  என

யாழ்களத்தில்  நேசக்கரத்தின்   பொறுப்பாளர் சாந்திக்கா அவர்களால் கோரப்பட்ட கோரிக்கையை

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் Saspanithi SUPPIAH

மற்றும்    பொருளாளர் Logeswaran KANDASAMY  

ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன்.

 

செயலாளர் சாந்தியக்காவினுடன் பேச்சுக்களை நடாத்தி

அதற்கான பத்திரங்களை  தயார் செய்தபடியிருக்க

பொருளாளர் தனது வீட்டில் இதைப்பார்த்தபடி இருந்தபோது

அதைக்கவனித்த அவரது மகன்  Logeswaran  சந்துரு (பட்டதாரி -  கணக்காளர்)

மக்களுக்கு தண்ணீர் தானே

நானே  செய்கின்றேன் என அதை தனியே  செய்ய  ஒத்துக்கொண்ட விடயம்

இன்று எமது செயலாளரால்

நிர்வாகக்கூட்டத்தில் இத்திட்டம்   அறிமுகப்படுத்தப்பட்டு

உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதும்

உடனடியாகவே அறிவிக்கப்பட்டு

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கு அறியத்தருவதில்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பெருமகிழ்வு அடைகிறது.

ஒரு குளாய்கிணறு அமைக்க – 20000ரூபாய். 
12 கிணறுகளுக்கும் – 240000.00ரூபாய் (அண்ணளவாக 1400€)

 

 

இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு 

உருவாக்கித்தந்த திரு.  Logeswaran  கந்தசாமி

                                திருமதி.  Logeswaran   சசிகலா

தம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..

 

செல்வன் Logeswaran  சந்துருவை

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  வாழ்த்தி நிற்கிறது

வாழ்க வளமுடன்.

 

 

சாந்தியக்காவுடன்  France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் தொடர்பு கொண்டு

பணத்தை அனுப்புவதற்கு தேவையான  ஒழுங்குகளை  கவனிப்பார்.

நன்றி.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142802

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு  உருவாக்கித்தந்த திரு. லோகேஸ்வரன் கந்தசாமி  திருமதி.  லோகேஸ்வரன்  சசிகலாதம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
 
செல்வன் லோகேஸ்வரன்  சந்துருவை யாழ்களத்தினூடாக  வாழ்த்துவதில் நிறைவடைகின்றோம்.
 
எல்லா நலமும் எல்லா வளமும் இனிதே பெற்று இiறையருள் சூடி வாழியவே!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும், அவரது பெற்றோருக்கும்.....
இந்த விடயத்தை France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு....

கொண்டு சென்ற... விசுகுவிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.
 

இளைய சமுதாயத்தை நினைக்க, பெருமையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு  உருவாக்கித்தந்த திரு. லோகேஸ்வரன் கந்தசாமி  திருமதி.  லோகேஸ்வரன்  சசிகலாதம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
 
செல்வன் லோகேஸ்வரன்  சந்துருவை யாழ்களத்தினூடாக  வாழ்த்துவதில் நிறைவடைகின்றோம்.
 
எல்லா நலமும் எல்லா வளமும் இனிதே பெற்று இiறையருள் சூடி வாழியவே!

 

 

 

நன்றி நொச்சி

 

நேற்று நேரம் இல்லாதபோதும்

உடனடியாக இந்த செய்தியை  இங்கு அறிவிக்கணும் என்பதற்காகவே ஓடிவந்து எழுதினேன்

அத்துடன் திட்டத்தை நிறைவேறிய  செய்தியை  சாந்தியக்காவுக்கும் உடனே  அறிவித்தேன்

 

உண்மையில் அடுத்ததலைமுறையிடம் நாம் எமது கவலைகளை

சுமைகளை  சரியாக கொண்டு சென்றோமா?

சென்றால் நிச்சயம் தாயகம் செழிக்கும் என்பதற்கு இந்த இளைஞன் ஒரு எடுத்துக்காட்டு.......

 

நன்றி  உங்களது வாழ்த்துக்கும்

பாராட்டுக்கும்  நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும், அவரது பெற்றோருக்கும்.....

இந்த விடயத்தை France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு....

கொண்டு சென்ற... விசுகுவிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.

 

இளைய சமுதாயத்தை நினைக்க, பெருமையாக உள்ளது.

 

 

நன்றி  சிறி

 

அண்மையில்  யெனீவா வந்திருந்த  தாயக அரசியல் பிரமுகரை  சந்தித்த

எமது உறுப்பினர் என்ன  எதிர்பார்க்கின்றீர்கள்  எம்மிடமிருந்து எனக்கேட்டதற்கு

அவர் சொன்னது

என்ன என்று இல்லை

எவ்வளவு என்று இல்லை

எதுவாகிலும் செய்யுங்கோ

எவ்வளவாகினும் செய்யுங்கோ

தயவு செய்து சும்மா  மட்டும்  இருந்துவிடாதீர்கள்

தாயக  மக்களது நிலை அந்தளவுக்கு பரிதாபகரமானது

ஆபத்தானது

அழிவுப்பாதையிலுள்ளது என்றாராம்.......

 

அந்தவகையில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தன்னால்  முடிந்ததை நிச்சயம் செய்து

ஒரு முன்னுதாரணமாக நிற்கும்.......

 

நன்றி  நண்பரே

வாழ்த்துக்கும்  பாராட்டுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 

 சாந்தியக்காவுக்கு   France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள

இணையக்கடிதம்

 

 

வணக்கம்,

தங்கள் தகவல்களுக்க நன்றி. நேற்றய எமது ஒன்றிய ஒன்றுகூடலில் மேற்படி 35குடும்பங்களுக்கான நீாத்தேவைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு எமது இளையதலைமுறையினைச்சேர்ந்த அன்பர் எங்கள் ஒன்றியத்தினூடு செய்வதற்கு முன்வந்தள்ளாா் என்பதினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்கான முதற்கட்ட கொடுப்பனவை 1000€வினையும் மீதியினை தங்களின் திட்டமுன்னேற்ரத்தினை அடிப்படையாகக் கொண்டு அதாவது தங்களால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்படும் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நாங்கள் இவ்வுதவியினை அனுப்புவதற்கான குறிப்புக்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.


 nesakkaram <nesakkaram@googlemail.com>:
Link to comment
Share on other sites

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினருக்கு வணக்கம், எம்மால் தங்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட செய்திக்கு தாங்கள் வழங்கிய ஆதரவுக்கு முதலில் எமது நன்றிகள். ஏற்கனவே தேசத்திற்கான தங்களது பணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழவு போன்ற நடவடிககைகளில் தாங்கள் ஆற்றிவரும் பணிகளின் வரிசையில் நேசக்கரம் முன்னெடுக்கும் பணிகளுக்கு உதவ முன்வந்தமையையிட்டு நாம் மகிழ்கிறோம்.

 

எம்மால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முழுமையான நிதியுதவியும் ஆதவும் தர முன்வந்து தங்கள் அமைப்பின் பொருளாளா திரு லோகேஸ்ரன் அவர்களின் புதல்வர் சந்துரு அவர்வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது நன்றிகள்.

 

தங்கள் வேண்டுதலுக்கு அமைய எம்மால் சேகரிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் நீங்கள் உதவி செய்ய வேண்டிய வங்கி விபரங்கள் யாவும் முதலாவது உரையாடலின் பின்னர் என்னால் எழுதப்பட்ட முதலாவது மடலிலும் இரண்டாவது மடலிலும் குறிப்பிட்டிருந்தேன். என்னால் வழங்கப்பட்ட வங்கிவிபரத்துக்கு தங்கள் உதவியை அனுப்பி வையுங்கள். தங்கள் உதவி கிடைத்ததும் முதல்கட்ட வேலைகளை ஆரம்பிப்போம். உடனுக்குடன் ஏற்கனவே எம்மால் கூறப்பட்டபடி வேலைகள் பற்றிய விபரங்கள் தகவல்கள் தங்களுக்கு அறியத்தரப்படும். அத்தோடு தங்கள் எதிர்பார்ப்புகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

(விசுகு அவர்கள் கவனத்துக்கு:- ஏற்கனவே திண்ணை உரையாடலில் போது நான் குறிப்பிட்டபடி 30திகதிதான் யேர்மனி திரும்புவேன். அதன் பின்னர் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். நீங்கள் போடும் மின்னஞ்சல் மற்றும் இங்கு பகிரப்படும் தகவல்களை பார்ப்பேன். ஆனால் பதில் தான் கொஞ்சம் தாமதமாகும் குறைவிளங்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள்.கடந்த இரண்டு நாட்களும் பதில் எழுதக்கூடிய நிலமை இல்லாதிருந்தது. இணையப்பக்கம் வரமுடியாது போனால் உங்கள் தகவலை தொலைபேசியில் அறியத்தருமாறு பகலவனுக்கு தெரிவித்திருந்தேன். உங்கள் செய்தியை பார்த்ததும் தொலைபேசியில் தம்பி பகலவன் அறியத்தருந்திருந்தர். உங்கள் ஆதரவுக்கும் பணிகளுக்கும் எங்கள் சிறப்பான நன்றிகள்.இரவுக்கு உங்கள் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்)

 

நன்றி அன்புடன் சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும் அவரது பெற்றோருக்கும்
 நன்றிகளும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(விசுகு அவர்கள் கவனத்துக்கு:- ஏற்கனவே திண்ணை உரையாடலில் போது நான் குறிப்பிட்டபடி 30திகதிதான் யேர்மனி திரும்புவேன். அதன் பின்னர் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். நீங்கள் போடும் மின்னஞ்சல் மற்றும் இங்கு பகிரப்படும் தகவல்களை பார்ப்பேன். ஆனால் பதில் தான் கொஞ்சம் தாமதமாகும் குறைவிளங்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள்.கடந்த இரண்டு நாட்களும் பதில் எழுதக்கூடிய நிலமை இல்லாதிருந்தது. இணையப்பக்கம் வரமுடியாது போனால் உங்கள் தகவலை தொலைபேசியில் அறியத்தருமாறு பகலவனுக்கு தெரிவித்திருந்தேன். உங்கள் செய்தியை பார்த்ததும் தொலைபேசியில் தம்பி பகலவன் அறியத்தருந்திருந்தர். உங்கள் ஆதரவுக்கும் பணிகளுக்கும் எங்கள் சிறப்பான நன்றிகள்.இரவுக்கு உங்கள் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்) நன்றி அன்புடன் சாந்தி

 

 

வணக்கம்  சாந்தியக்கா

 

செயலாளருக்கு சொல்லியுள்ளேன் நீங்கள் மாதம் முடியத்தான் வருவீர்கள் என்று.

அதனால்தான் ஈமெயில் அவரும்

நானும் தங்களுக்கு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறியத்தந்தோம்

மேலும்

யாழ்  இணையத்தில் தொடக்கப்பட்ட இத்திரியையும் தங்களுக்கு அறியத்தந்திருந்தேன்

 

அத்துடன் இந்த திரி சம்பந்தமாகவும்

இதைப்பார்வையிடுமாறும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றிய  நிர்வாகிகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்

இதன் மூலம் மேலும் இரு பகுதிக்குமான

தொடர்புகளும் பரிச்சயமும் நம்பிக்கைகளும் விரிவாகி

தாயக மக்களின் வாழ்வுயர

ஏதாவது செய்யவேண்டும் என விளையும் இருசாராரும் 

தொடர் உதவிகளுக்கு வித்திடவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  உறவுகளே

நேற்று சாந்தியக்காவால்  நேரக்கரத்தின்  இலங்கை  வங்கிக்கணக்கு எமது செயலாளருக்கு ஈமெயில் மூலம் தரப்பட்டது

சாந்தியக்காவின் ஈமெயில் கடிதம்..

 

I am not at home at the Moment. Send your help to this account number. I will call you on sunday. Thanks for your help. God bless you.

Shanthy, Nesakkaram organizer...

 

நேற்றே  எமது செயலாளரால்

பணத்தை அனுப்புமாறு 

அதனை வழங்க முன் வந்த சந்துருவுக்கு

நேரக்கரத்தின்  இலங்கை  வங்கிக்கணக்கு எமது செயலாளரால் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு

முதலில் 1000 ஈரோக்களை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் வேலைகளின் முன் மாதிரிகள் கிடைத்ததும்

திட்டம் நிறைவேற மிகுதி  400 ஈரோக்களும் அனுப்பப்படும்.

அதற்காக எமது செயலாளரால் அனுப்பப்பட்ட  ஈமெயில் கடிதம்.

 

வணக்கம் யோகேஸ்,

இத்துடன் வரும் bank of ceylon accountக்கு தண்ணீத்தேவைக்கான நிதியினை அனுப்பலாம்.

முதலில் 1000€ பின்னர் கேட்கும் போது 400€.

நன்றி

 

Link to comment
Share on other sites

விசுகு அவர்களுடன் சற்று முன்னர் தொலைபேசியில் உரையாடினேன். அவரால் கேட்கப்பட்ட விபரங்களை மின்னஞ்சல் மூலம் தருமாறு வேண்டியிருந்தார். அவர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய விபரம் அனுப்பியுள்ளேன். பண உதவி அடுத்தவரும் சிலநாட்களில் விசுகு அவர்களால் அனுப்பப்படும். உதவி கிடைத்ததும் அறியத்தருவேன். பணிகள் நடைபெறத் தொடங்க அனைத்து விவரங்களும் இங்கே பகிரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் 
31.08.2014
 
அன்புடையீர் ,
 
தங்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பானது எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படும் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ஆதரவு தர முன்வந்தமைக்கு நன்றிகள். 
மரண நிகழ்வொன்றுக்கு லண்டன் போயிருந்தமையால் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது போய்விட்டது.
இன்று குகனண்ணாவுடன் கதைத்த போது பணம் அனுப்புவதற்கான தனிநபர் விபரம் கேட்டிருந்தார். எங்களுடைய பணியாளர் ஆனந்தபுரம் திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ...................... அவர்களது விபரத்தை அனுப்புகிறேன்.
 
name :-.........................................
          .........................................
 
 
மேலதிகமாக ஏதேனும் விபரங்கள் தேவைப்படின் அறியத்தாருங்கள்.
 
நன்றி
 
சாந்தி நேசக்கரம் அமைப்பாளர்.
 
 
(தற்பொழுது  சாந்தியக்காவிடமிருந்து கிடைத்த கடிதம்)
 
நன்றி  சாந்தியக்கா
நாளை  பணம்(1000) ஈரோக்கள் அனுப்பி வைக்கப்படும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா...

 

ஒரு  ஈரோ  170 ரூபா 35 சதம் போகின்றது....

என்ன  செய்ய???..

 

அறியத்தரவும்...

நன்றி 

Link to comment
Share on other sites

வணக்கம்,
இதில் என்ன சொல்வதென புரியவில்லை. உங்கள் முடிவுதான் எனது முடிவும். நாணயமாற்று வீதம் நாளுக்கு நாள் மாறுபடும். சிலவேளை இன்றைய பெறுமதியைவிடவும் குறையும் கூடும் சற்று பொறுத்து அனுப்ப நீங்கள் விரும்பின் அதன்படி செய்யுங்கள். கால தாமதம் அவசர தேவையை நிறைவேற்றுவதில் சிரமங்களைத் தந்துவிடுமென்ற அச்சம். 
 
மழைகாலம் ஆரம்பிக்கு முதல் வேலைகள் முடிக்கப்பட வேண்டும். காரணம்  மழைகாலம் வந்தால் அந்த மக்களது தண்ணீர் தேவைக்கு சிரமமாக இருக்கும். இதுதவிர அவர்களுக்கான அடுத்த கட்டம் மலசலகூடம் அமைக்கும் பணிக்கான வேலைகளையும் மேற்கொள்கிறோம். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம்,
இதில் என்ன சொல்வதென புரியவில்லை. உங்கள் முடிவுதான் எனது முடிவும். நாணயமாற்று வீதம் நாளுக்கு நாள் மாறுபடும். சிலவேளை இன்றைய பெறுமதியைவிடவும் குறையும் கூடும் சற்று பொறுத்து அனுப்ப நீங்கள் விரும்பின் அதன்படி செய்யுங்கள். கால தாமதம் அவசர தேவையை நிறைவேற்றுவதில் சிரமங்களைத் தந்துவிடுமென்ற அச்சம். 
 
மழைகாலம் ஆரம்பிக்கு முதல் வேலைகள் முடிக்கப்பட வேண்டும். காரணம்  மழைகாலம் வந்தால் அந்த மக்களது தண்ணீர் தேவைக்கு சிரமமாக இருக்கும். இதுதவிர அவர்களுக்கான அடுத்த கட்டம் மலசலகூடம் அமைக்கும் பணிக்கான வேலைகளையும் மேற்கொள்கிறோம். 

 

 

 

நாளை  இரவு வரை பார்க்கின்றேன்

இதற்கு  மேல் தாமதப்படுத்துவது சரியல்ல.....

Link to comment
Share on other sites

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்.
04.09.2014
 
எம்மால் ஒழுங்குபடுத்தப்பட்ட பணியாளர்கள் இன்று குளாய்கிணறு அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார்கள். 
 
மழை பெருத்தால் சகதியில் பணியை தொடர முடியாதென இத்திட்டத்தின் நிர்வாக குழுவினர்  தந்த அறிக்கையின் பிரகாரம் நேற்றைய எமது கலந்துரையாடலின் படி இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினரின் ஆதரவில் கிணறுகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 
 
அடுத்த ஒருவாரத்தில் தேவையான பொருட்களுக்கான பணம் செலுத்தப்படும் என திட்ட இணைப்பாளரின் சிபாரிசின் பெயரில் பொருட்களின் பாதி கடன் அடிப்படையில் பெறப்பட்டு ஆரம்பமாகியுள்ளது.
 
நன்றி
 
சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
 
(புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தலைவர் , செயலாளர் இருவருக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்தியின் பிரதி)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா...

ஈ மெயில் கிடைத்தது

 

இன்று

ஒரு  ஈரோ  168 ரூபா 00 போகின்றது....

நீங்கள் வேலையை  தொடருங்கள்

 

 

அவசரமாயின் தரவும்...

சனி  ஞாயிறு  பொறுத்துப்பார்ப்போம்

அல்லது திங்கள் கடைசி  நாள்..

நன்றி 

Link to comment
Share on other sites

4ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் இருவருக்கும் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,

தங்கள் அமைப்பின் இலச்சினை மற்றும் கிணறுகளில் பொருத்தப்பட வேண்டிய தங்கள் ஒன்றிய விவரத்தை அனுப்பி வையுங்கள். இலச்சினை பொருத்துவதற்கான செலவு அச்சடித்த பின்னர் அறியத்தருகிறேன்.

நன்றி

சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
-------------------------------------------------------
 

 

7ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் அனுப்பி வைத்த கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,
நாங்கள் வரும் வாரத்தில் எமது உதவியினை அனுப்பி வைக்கின்றோம். அத்துடன் எங்கள் ஒன்றியத்தின் இலட்சனையும் இத்துடன் இனைத்துள்ளேன்.

"கரம் கொடுத்தவர்கள்" 
      இலட்சனை

பதில் அளிப்பது தாமதமாகியதற்கு மன்னிக்கவும்.
நன்றி.

Link to comment
Share on other sites

9ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் இருவருக்கும் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,

 
நீங்கள் அனுப்பிய தங்கள் அமைப்பின் இலச்சினை கிடைத்தது. நன்றிகள். கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது. அவற்றின் சில படங்களை இணைக்கிறேன். கிணற்றுக்கான சுற்று இன்னும் கட்டப்படவில்லை. அனைத்து கிணறுகளும் அமைத்த பின்னரேயே சுற்று அமைக்கப்படும். 
 
கிணறு அமைக்கும் ஒப்பதந்ததாரர்கள் முற்பணம் கட்டுமாறு வேண்டிக் கொண்டார்கள். உடனடியாக செலுத்துவதற்கு எம்மிடம் பணமிருக்கவில்லை. மற்றும் தேவையான பொருட்களில் அரைவாசி கடன் அடிப்படையில் பெற்றுக் கொண்டோம். 
 
எமது இக்கட்டு நிலமையை புரிந்து கொண்ட எமது திட்டங்களில் ஆதரவு வழங்கும் கனடிய நண்பர்கள் றவி , சுரேஷ் ஆகியோர் ஊனமுற்றோருக்கான தொழில் முயற்சிக்கு உதவிய பணத்திலிருந்து அவசர தேவைக்கு பயன்படுத்துமாறு கூறியிருந்தார்கள். 
 
உங்கள் உதவி கிடைத்த பின்னர் நண்பர்கள் றவி  ,சுரேஷ் இருவரினாலும் வழங்கப்பட்ட உதவியானது ஊனமுற்றோர் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தப்படும். 
 
இலச்சினையோடு வேறு ஏதாவது சுலோக வாக்கியம் பதிக்க வேண்டுமா ? அல்லது இலச்சினை மட்டும் போதுமா என்பதனையும் அறியத்தாருங்கள்.
 
நன்றி
 
சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
 
tubewell1_zps643ab227.jpg

 

tubewell2_zps2db53136.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்மாற்றம் மிகவும்  குறைவடைந்துள்ளது

 

ஆனாலும் இனியும் பொறுக்கமுடியாது..

பணம் அனுப்பிவிட்டு

அறியத்தருகின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

பண்மாற்றம் மிகவும்  குறைவடைந்துள்ளது

 

ஆனாலும் இனியும் பொறுக்கமுடியாது..

பணம் அனுப்பிவிட்டு

அறியத்தருகின்றேன்

நன்றி

மேலும் சில படங்கள் இன்று வந்துள்ளது அவற்றையும் மின்னஞ்சல் செய்கிறேன் பாருங்கள். நாணயப்பெறுமதி வரவர குறைகிறது.உங்கள் வாய்ப்பை பார்த்து செய்யுங்கள். பிரச்சனையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள் இன்று வந்துள்ளது அவற்றையும் மின்னஞ்சல் செய்கிறேன் பாருங்கள். நாணயப்பெறுமதி வரவர குறைகிறது.உங்கள் வாய்ப்பை பார்த்து செய்யுங்கள். பிரச்சனையில்லை.

 

நேற்று மேலும் குறைவடைந்து 167,50 போனது

இன்று 168,30  போகிறது

 

உங்களது  ஈமெயிலை  ஒருமுறை  பாருங்கள்

நன்றி.

Link to comment
Share on other sites

நேற்று மேலும் குறைவடைந்து 167,50 போனது

இன்று 168,30  போகிறது

 

உங்களது  ஈமெயிலை  ஒருமுறை  பாருங்கள்

நன்றி.

மடல் கிடைத்தது. உரியவர் ஊரில் இல்லை வேறொரு இடத்தில் நிற்பதால் பதில் கிடைத்ததும் அறியத்தருகிறேன். நாளை பெரும்பாலும் பதில் வருமென நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.