Jump to content

France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்   + நேசக்கரம்  =  35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி

 

 

அன்பார்ந்த உறவுகளே

 

35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரமாகத்தேவை  என

யாழ்களத்தில்  நேசக்கரத்தின்   பொறுப்பாளர் சாந்திக்கா அவர்களால் கோரப்பட்ட கோரிக்கையை

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் Saspanithi SUPPIAH

மற்றும்    பொருளாளர் Logeswaran KANDASAMY  

ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன்.

 

செயலாளர் சாந்தியக்காவினுடன் பேச்சுக்களை நடாத்தி

அதற்கான பத்திரங்களை  தயார் செய்தபடியிருக்க

பொருளாளர் தனது வீட்டில் இதைப்பார்த்தபடி இருந்தபோது

அதைக்கவனித்த அவரது மகன்  Logeswaran  சந்துரு (பட்டதாரி -  கணக்காளர்)

மக்களுக்கு தண்ணீர் தானே

நானே  செய்கின்றேன் என அதை தனியே  செய்ய  ஒத்துக்கொண்ட விடயம்

இன்று எமது செயலாளரால்

நிர்வாகக்கூட்டத்தில் இத்திட்டம்   அறிமுகப்படுத்தப்பட்டு

உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதும்

உடனடியாகவே அறிவிக்கப்பட்டு

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கு அறியத்தருவதில்

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பெருமகிழ்வு அடைகிறது.

ஒரு குளாய்கிணறு அமைக்க – 20000ரூபாய். 
12 கிணறுகளுக்கும் – 240000.00ரூபாய் (அண்ணளவாக 1400€)

 

 

இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு 

உருவாக்கித்தந்த திரு.  Logeswaran  கந்தசாமி

                                திருமதி.  Logeswaran   சசிகலா

தம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..

 

செல்வன் Logeswaran  சந்துருவை

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம்  வாழ்த்தி நிற்கிறது

வாழ்க வளமுடன்.

 

 

சாந்தியக்காவுடன்  France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் தொடர்பு கொண்டு

பணத்தை அனுப்புவதற்கு தேவையான  ஒழுங்குகளை  கவனிப்பார்.

நன்றி.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142802

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு  உருவாக்கித்தந்த திரு. லோகேஸ்வரன் கந்தசாமி  திருமதி.  லோகேஸ்வரன்  சசிகலாதம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
 
செல்வன் லோகேஸ்வரன்  சந்துருவை யாழ்களத்தினூடாக  வாழ்த்துவதில் நிறைவடைகின்றோம்.
 
எல்லா நலமும் எல்லா வளமும் இனிதே பெற்று இiறையருள் சூடி வாழியவே!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும், அவரது பெற்றோருக்கும்.....
இந்த விடயத்தை France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு....

கொண்டு சென்ற... விசுகுவிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.
 

இளைய சமுதாயத்தை நினைக்க, பெருமையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை  சமூகத்துக்கு  உருவாக்கித்தந்த திரு. லோகேஸ்வரன் கந்தசாமி  திருமதி.  லோகேஸ்வரன்  சசிகலாதம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..
 
செல்வன் லோகேஸ்வரன்  சந்துருவை யாழ்களத்தினூடாக  வாழ்த்துவதில் நிறைவடைகின்றோம்.
 
எல்லா நலமும் எல்லா வளமும் இனிதே பெற்று இiறையருள் சூடி வாழியவே!

 

 

 

நன்றி நொச்சி

 

நேற்று நேரம் இல்லாதபோதும்

உடனடியாக இந்த செய்தியை  இங்கு அறிவிக்கணும் என்பதற்காகவே ஓடிவந்து எழுதினேன்

அத்துடன் திட்டத்தை நிறைவேறிய  செய்தியை  சாந்தியக்காவுக்கும் உடனே  அறிவித்தேன்

 

உண்மையில் அடுத்ததலைமுறையிடம் நாம் எமது கவலைகளை

சுமைகளை  சரியாக கொண்டு சென்றோமா?

சென்றால் நிச்சயம் தாயகம் செழிக்கும் என்பதற்கு இந்த இளைஞன் ஒரு எடுத்துக்காட்டு.......

 

நன்றி  உங்களது வாழ்த்துக்கும்

பாராட்டுக்கும்  நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும், அவரது பெற்றோருக்கும்.....

இந்த விடயத்தை France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் கவனத்திற்கு....

கொண்டு சென்ற... விசுகுவிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.

 

இளைய சமுதாயத்தை நினைக்க, பெருமையாக உள்ளது.

 

 

நன்றி  சிறி

 

அண்மையில்  யெனீவா வந்திருந்த  தாயக அரசியல் பிரமுகரை  சந்தித்த

எமது உறுப்பினர் என்ன  எதிர்பார்க்கின்றீர்கள்  எம்மிடமிருந்து எனக்கேட்டதற்கு

அவர் சொன்னது

என்ன என்று இல்லை

எவ்வளவு என்று இல்லை

எதுவாகிலும் செய்யுங்கோ

எவ்வளவாகினும் செய்யுங்கோ

தயவு செய்து சும்மா  மட்டும்  இருந்துவிடாதீர்கள்

தாயக  மக்களது நிலை அந்தளவுக்கு பரிதாபகரமானது

ஆபத்தானது

அழிவுப்பாதையிலுள்ளது என்றாராம்.......

 

அந்தவகையில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தன்னால்  முடிந்ததை நிச்சயம் செய்து

ஒரு முன்னுதாரணமாக நிற்கும்.......

 

நன்றி  நண்பரே

வாழ்த்துக்கும்  பாராட்டுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 

 சாந்தியக்காவுக்கு   France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள

இணையக்கடிதம்

 

 

வணக்கம்,

தங்கள் தகவல்களுக்க நன்றி. நேற்றய எமது ஒன்றிய ஒன்றுகூடலில் மேற்படி 35குடும்பங்களுக்கான நீாத்தேவைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு எமது இளையதலைமுறையினைச்சேர்ந்த அன்பர் எங்கள் ஒன்றியத்தினூடு செய்வதற்கு முன்வந்தள்ளாா் என்பதினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்கான முதற்கட்ட கொடுப்பனவை 1000€வினையும் மீதியினை தங்களின் திட்டமுன்னேற்ரத்தினை அடிப்படையாகக் கொண்டு அதாவது தங்களால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்படும் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நாங்கள் இவ்வுதவியினை அனுப்புவதற்கான குறிப்புக்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.


 nesakkaram <nesakkaram@googlemail.com>:
Link to comment
Share on other sites

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினருக்கு வணக்கம், எம்மால் தங்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட செய்திக்கு தாங்கள் வழங்கிய ஆதரவுக்கு முதலில் எமது நன்றிகள். ஏற்கனவே தேசத்திற்கான தங்களது பணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழவு போன்ற நடவடிககைகளில் தாங்கள் ஆற்றிவரும் பணிகளின் வரிசையில் நேசக்கரம் முன்னெடுக்கும் பணிகளுக்கு உதவ முன்வந்தமையையிட்டு நாம் மகிழ்கிறோம்.

 

எம்மால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முழுமையான நிதியுதவியும் ஆதவும் தர முன்வந்து தங்கள் அமைப்பின் பொருளாளா திரு லோகேஸ்ரன் அவர்களின் புதல்வர் சந்துரு அவர்வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது நன்றிகள்.

 

தங்கள் வேண்டுதலுக்கு அமைய எம்மால் சேகரிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் நீங்கள் உதவி செய்ய வேண்டிய வங்கி விபரங்கள் யாவும் முதலாவது உரையாடலின் பின்னர் என்னால் எழுதப்பட்ட முதலாவது மடலிலும் இரண்டாவது மடலிலும் குறிப்பிட்டிருந்தேன். என்னால் வழங்கப்பட்ட வங்கிவிபரத்துக்கு தங்கள் உதவியை அனுப்பி வையுங்கள். தங்கள் உதவி கிடைத்ததும் முதல்கட்ட வேலைகளை ஆரம்பிப்போம். உடனுக்குடன் ஏற்கனவே எம்மால் கூறப்பட்டபடி வேலைகள் பற்றிய விபரங்கள் தகவல்கள் தங்களுக்கு அறியத்தரப்படும். அத்தோடு தங்கள் எதிர்பார்ப்புகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

(விசுகு அவர்கள் கவனத்துக்கு:- ஏற்கனவே திண்ணை உரையாடலில் போது நான் குறிப்பிட்டபடி 30திகதிதான் யேர்மனி திரும்புவேன். அதன் பின்னர் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். நீங்கள் போடும் மின்னஞ்சல் மற்றும் இங்கு பகிரப்படும் தகவல்களை பார்ப்பேன். ஆனால் பதில் தான் கொஞ்சம் தாமதமாகும் குறைவிளங்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள்.கடந்த இரண்டு நாட்களும் பதில் எழுதக்கூடிய நிலமை இல்லாதிருந்தது. இணையப்பக்கம் வரமுடியாது போனால் உங்கள் தகவலை தொலைபேசியில் அறியத்தருமாறு பகலவனுக்கு தெரிவித்திருந்தேன். உங்கள் செய்தியை பார்த்ததும் தொலைபேசியில் தம்பி பகலவன் அறியத்தருந்திருந்தர். உங்கள் ஆதரவுக்கும் பணிகளுக்கும் எங்கள் சிறப்பான நன்றிகள்.இரவுக்கு உங்கள் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்)

 

நன்றி அன்புடன் சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் சந்துருவிற்கும் அவரது பெற்றோருக்கும்
 நன்றிகளும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(விசுகு அவர்கள் கவனத்துக்கு:- ஏற்கனவே திண்ணை உரையாடலில் போது நான் குறிப்பிட்டபடி 30திகதிதான் யேர்மனி திரும்புவேன். அதன் பின்னர் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். நீங்கள் போடும் மின்னஞ்சல் மற்றும் இங்கு பகிரப்படும் தகவல்களை பார்ப்பேன். ஆனால் பதில் தான் கொஞ்சம் தாமதமாகும் குறைவிளங்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள்.கடந்த இரண்டு நாட்களும் பதில் எழுதக்கூடிய நிலமை இல்லாதிருந்தது. இணையப்பக்கம் வரமுடியாது போனால் உங்கள் தகவலை தொலைபேசியில் அறியத்தருமாறு பகலவனுக்கு தெரிவித்திருந்தேன். உங்கள் செய்தியை பார்த்ததும் தொலைபேசியில் தம்பி பகலவன் அறியத்தருந்திருந்தர். உங்கள் ஆதரவுக்கும் பணிகளுக்கும் எங்கள் சிறப்பான நன்றிகள்.இரவுக்கு உங்கள் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்) நன்றி அன்புடன் சாந்தி

 

 

வணக்கம்  சாந்தியக்கா

 

செயலாளருக்கு சொல்லியுள்ளேன் நீங்கள் மாதம் முடியத்தான் வருவீர்கள் என்று.

அதனால்தான் ஈமெயில் அவரும்

நானும் தங்களுக்கு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறியத்தந்தோம்

மேலும்

யாழ்  இணையத்தில் தொடக்கப்பட்ட இத்திரியையும் தங்களுக்கு அறியத்தந்திருந்தேன்

 

அத்துடன் இந்த திரி சம்பந்தமாகவும்

இதைப்பார்வையிடுமாறும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றிய  நிர்வாகிகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்

இதன் மூலம் மேலும் இரு பகுதிக்குமான

தொடர்புகளும் பரிச்சயமும் நம்பிக்கைகளும் விரிவாகி

தாயக மக்களின் வாழ்வுயர

ஏதாவது செய்யவேண்டும் என விளையும் இருசாராரும் 

தொடர் உதவிகளுக்கு வித்திடவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  உறவுகளே

நேற்று சாந்தியக்காவால்  நேரக்கரத்தின்  இலங்கை  வங்கிக்கணக்கு எமது செயலாளருக்கு ஈமெயில் மூலம் தரப்பட்டது

சாந்தியக்காவின் ஈமெயில் கடிதம்..

 

I am not at home at the Moment. Send your help to this account number. I will call you on sunday. Thanks for your help. God bless you.

Shanthy, Nesakkaram organizer...

 

நேற்றே  எமது செயலாளரால்

பணத்தை அனுப்புமாறு 

அதனை வழங்க முன் வந்த சந்துருவுக்கு

நேரக்கரத்தின்  இலங்கை  வங்கிக்கணக்கு எமது செயலாளரால் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு

முதலில் 1000 ஈரோக்களை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் வேலைகளின் முன் மாதிரிகள் கிடைத்ததும்

திட்டம் நிறைவேற மிகுதி  400 ஈரோக்களும் அனுப்பப்படும்.

அதற்காக எமது செயலாளரால் அனுப்பப்பட்ட  ஈமெயில் கடிதம்.

 

வணக்கம் யோகேஸ்,

இத்துடன் வரும் bank of ceylon accountக்கு தண்ணீத்தேவைக்கான நிதியினை அனுப்பலாம்.

முதலில் 1000€ பின்னர் கேட்கும் போது 400€.

நன்றி

 

Link to comment
Share on other sites

விசுகு அவர்களுடன் சற்று முன்னர் தொலைபேசியில் உரையாடினேன். அவரால் கேட்கப்பட்ட விபரங்களை மின்னஞ்சல் மூலம் தருமாறு வேண்டியிருந்தார். அவர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய விபரம் அனுப்பியுள்ளேன். பண உதவி அடுத்தவரும் சிலநாட்களில் விசுகு அவர்களால் அனுப்பப்படும். உதவி கிடைத்ததும் அறியத்தருவேன். பணிகள் நடைபெறத் தொடங்க அனைத்து விவரங்களும் இங்கே பகிரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் 
31.08.2014
 
அன்புடையீர் ,
 
தங்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பானது எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படும் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ஆதரவு தர முன்வந்தமைக்கு நன்றிகள். 
மரண நிகழ்வொன்றுக்கு லண்டன் போயிருந்தமையால் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது போய்விட்டது.
இன்று குகனண்ணாவுடன் கதைத்த போது பணம் அனுப்புவதற்கான தனிநபர் விபரம் கேட்டிருந்தார். எங்களுடைய பணியாளர் ஆனந்தபுரம் திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ...................... அவர்களது விபரத்தை அனுப்புகிறேன்.
 
name :-.........................................
          .........................................
 
 
மேலதிகமாக ஏதேனும் விபரங்கள் தேவைப்படின் அறியத்தாருங்கள்.
 
நன்றி
 
சாந்தி நேசக்கரம் அமைப்பாளர்.
 
 
(தற்பொழுது  சாந்தியக்காவிடமிருந்து கிடைத்த கடிதம்)
 
நன்றி  சாந்தியக்கா
நாளை  பணம்(1000) ஈரோக்கள் அனுப்பி வைக்கப்படும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா...

 

ஒரு  ஈரோ  170 ரூபா 35 சதம் போகின்றது....

என்ன  செய்ய???..

 

அறியத்தரவும்...

நன்றி 

Link to comment
Share on other sites

வணக்கம்,
இதில் என்ன சொல்வதென புரியவில்லை. உங்கள் முடிவுதான் எனது முடிவும். நாணயமாற்று வீதம் நாளுக்கு நாள் மாறுபடும். சிலவேளை இன்றைய பெறுமதியைவிடவும் குறையும் கூடும் சற்று பொறுத்து அனுப்ப நீங்கள் விரும்பின் அதன்படி செய்யுங்கள். கால தாமதம் அவசர தேவையை நிறைவேற்றுவதில் சிரமங்களைத் தந்துவிடுமென்ற அச்சம். 
 
மழைகாலம் ஆரம்பிக்கு முதல் வேலைகள் முடிக்கப்பட வேண்டும். காரணம்  மழைகாலம் வந்தால் அந்த மக்களது தண்ணீர் தேவைக்கு சிரமமாக இருக்கும். இதுதவிர அவர்களுக்கான அடுத்த கட்டம் மலசலகூடம் அமைக்கும் பணிக்கான வேலைகளையும் மேற்கொள்கிறோம். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம்,
இதில் என்ன சொல்வதென புரியவில்லை. உங்கள் முடிவுதான் எனது முடிவும். நாணயமாற்று வீதம் நாளுக்கு நாள் மாறுபடும். சிலவேளை இன்றைய பெறுமதியைவிடவும் குறையும் கூடும் சற்று பொறுத்து அனுப்ப நீங்கள் விரும்பின் அதன்படி செய்யுங்கள். கால தாமதம் அவசர தேவையை நிறைவேற்றுவதில் சிரமங்களைத் தந்துவிடுமென்ற அச்சம். 
 
மழைகாலம் ஆரம்பிக்கு முதல் வேலைகள் முடிக்கப்பட வேண்டும். காரணம்  மழைகாலம் வந்தால் அந்த மக்களது தண்ணீர் தேவைக்கு சிரமமாக இருக்கும். இதுதவிர அவர்களுக்கான அடுத்த கட்டம் மலசலகூடம் அமைக்கும் பணிக்கான வேலைகளையும் மேற்கொள்கிறோம். 

 

 

 

நாளை  இரவு வரை பார்க்கின்றேன்

இதற்கு  மேல் தாமதப்படுத்துவது சரியல்ல.....

Link to comment
Share on other sites

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்.
04.09.2014
 
எம்மால் ஒழுங்குபடுத்தப்பட்ட பணியாளர்கள் இன்று குளாய்கிணறு அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார்கள். 
 
மழை பெருத்தால் சகதியில் பணியை தொடர முடியாதென இத்திட்டத்தின் நிர்வாக குழுவினர்  தந்த அறிக்கையின் பிரகாரம் நேற்றைய எமது கலந்துரையாடலின் படி இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினரின் ஆதரவில் கிணறுகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. 
 
அடுத்த ஒருவாரத்தில் தேவையான பொருட்களுக்கான பணம் செலுத்தப்படும் என திட்ட இணைப்பாளரின் சிபாரிசின் பெயரில் பொருட்களின் பாதி கடன் அடிப்படையில் பெறப்பட்டு ஆரம்பமாகியுள்ளது.
 
நன்றி
 
சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
 
(புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தலைவர் , செயலாளர் இருவருக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்தியின் பிரதி)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா...

ஈ மெயில் கிடைத்தது

 

இன்று

ஒரு  ஈரோ  168 ரூபா 00 போகின்றது....

நீங்கள் வேலையை  தொடருங்கள்

 

 

அவசரமாயின் தரவும்...

சனி  ஞாயிறு  பொறுத்துப்பார்ப்போம்

அல்லது திங்கள் கடைசி  நாள்..

நன்றி 

Link to comment
Share on other sites

4ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் இருவருக்கும் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,

தங்கள் அமைப்பின் இலச்சினை மற்றும் கிணறுகளில் பொருத்தப்பட வேண்டிய தங்கள் ஒன்றிய விவரத்தை அனுப்பி வையுங்கள். இலச்சினை பொருத்துவதற்கான செலவு அச்சடித்த பின்னர் அறியத்தருகிறேன்.

நன்றி

சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
-------------------------------------------------------
 

 

7ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் அனுப்பி வைத்த கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,
நாங்கள் வரும் வாரத்தில் எமது உதவியினை அனுப்பி வைக்கின்றோம். அத்துடன் எங்கள் ஒன்றியத்தின் இலட்சனையும் இத்துடன் இனைத்துள்ளேன்.

"கரம் கொடுத்தவர்கள்" 
      இலட்சனை

பதில் அளிப்பது தாமதமாகியதற்கு மன்னிக்கவும்.
நன்றி.

Link to comment
Share on other sites

9ம் திகதி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் இருவருக்கும் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மின்னஞ்சல் பிரதி.

 

வணக்கம்,

 
நீங்கள் அனுப்பிய தங்கள் அமைப்பின் இலச்சினை கிடைத்தது. நன்றிகள். கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது. அவற்றின் சில படங்களை இணைக்கிறேன். கிணற்றுக்கான சுற்று இன்னும் கட்டப்படவில்லை. அனைத்து கிணறுகளும் அமைத்த பின்னரேயே சுற்று அமைக்கப்படும். 
 
கிணறு அமைக்கும் ஒப்பதந்ததாரர்கள் முற்பணம் கட்டுமாறு வேண்டிக் கொண்டார்கள். உடனடியாக செலுத்துவதற்கு எம்மிடம் பணமிருக்கவில்லை. மற்றும் தேவையான பொருட்களில் அரைவாசி கடன் அடிப்படையில் பெற்றுக் கொண்டோம். 
 
எமது இக்கட்டு நிலமையை புரிந்து கொண்ட எமது திட்டங்களில் ஆதரவு வழங்கும் கனடிய நண்பர்கள் றவி , சுரேஷ் ஆகியோர் ஊனமுற்றோருக்கான தொழில் முயற்சிக்கு உதவிய பணத்திலிருந்து அவசர தேவைக்கு பயன்படுத்துமாறு கூறியிருந்தார்கள். 
 
உங்கள் உதவி கிடைத்த பின்னர் நண்பர்கள் றவி  ,சுரேஷ் இருவரினாலும் வழங்கப்பட்ட உதவியானது ஊனமுற்றோர் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தப்படும். 
 
இலச்சினையோடு வேறு ஏதாவது சுலோக வாக்கியம் பதிக்க வேண்டுமா ? அல்லது இலச்சினை மட்டும் போதுமா என்பதனையும் அறியத்தாருங்கள்.
 
நன்றி
 
சாந்தி
நேசக்கரம் அமைப்பாளர்.
 
tubewell1_zps643ab227.jpg

 

tubewell2_zps2db53136.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்மாற்றம் மிகவும்  குறைவடைந்துள்ளது

 

ஆனாலும் இனியும் பொறுக்கமுடியாது..

பணம் அனுப்பிவிட்டு

அறியத்தருகின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

பண்மாற்றம் மிகவும்  குறைவடைந்துள்ளது

 

ஆனாலும் இனியும் பொறுக்கமுடியாது..

பணம் அனுப்பிவிட்டு

அறியத்தருகின்றேன்

நன்றி

மேலும் சில படங்கள் இன்று வந்துள்ளது அவற்றையும் மின்னஞ்சல் செய்கிறேன் பாருங்கள். நாணயப்பெறுமதி வரவர குறைகிறது.உங்கள் வாய்ப்பை பார்த்து செய்யுங்கள். பிரச்சனையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள் இன்று வந்துள்ளது அவற்றையும் மின்னஞ்சல் செய்கிறேன் பாருங்கள். நாணயப்பெறுமதி வரவர குறைகிறது.உங்கள் வாய்ப்பை பார்த்து செய்யுங்கள். பிரச்சனையில்லை.

 

நேற்று மேலும் குறைவடைந்து 167,50 போனது

இன்று 168,30  போகிறது

 

உங்களது  ஈமெயிலை  ஒருமுறை  பாருங்கள்

நன்றி.

Link to comment
Share on other sites

நேற்று மேலும் குறைவடைந்து 167,50 போனது

இன்று 168,30  போகிறது

 

உங்களது  ஈமெயிலை  ஒருமுறை  பாருங்கள்

நன்றி.

மடல் கிடைத்தது. உரியவர் ஊரில் இல்லை வேறொரு இடத்தில் நிற்பதால் பதில் கிடைத்ததும் அறியத்தருகிறேன். நாளை பெரும்பாலும் பதில் வருமென நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.